2 மார்., 2009

கடிதம்-13: "மக்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம்"

ஐகோர்ட் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்பவர்கள், நீதிமன்றத்தை அவமதிப்பவர்கள் தானே? முன்பெல்லாம் குறுக்கே, நெடுக்கே நடந்தாலோ, வெளி வரண்டாவில் சத்தம் செய்தாலோ, 'நீதிமன்றத்தின் மாண்புக்கு இடையூறு நேர்ந்துவிட்டது' என்று உடனுக்குடன் தண்டனை வழங்கும் நீதியின் மாண்பு, இப்படி மலினப்பட்டு விட்டதே! சாதாரண பொதுமக்களுக்கு எஞ்சி இருக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரம், 'விடிவெள்ளி' நீதித்துறைதான். அதன் மாட்சியும், எல்லையற்ற அதிகாரமும் கொச்சைப்படுத்தப் பட்டு விட்டதே! இங்கே அடி வாங்கியது சுப்ரமணிசாமியா, காவல்துறை உயரதிகாரியா என்பது முக்கியமல்ல! நீதிமன்றத்தின் மாண்பை நம்பித்தானே, இஜட் பிளஸ் பாதுகாப்பை வெளியே நிறுத்திவிட்டு நுழைந்திருக்கிறார்? காவல்துறை உயர் அதிகாரி உடுப்பு, ரேங்க், அடையாளச்சின்னங்களுடன் பணிந்து நின்றது, கோர்ட்டின் மாண்பை நம்பித்தானே? கருப்பு அங்கி உடையினுள் புகுந்துகொண்டு, இரு நீதிபதிகளின் கண் முன்னேயே அராஜகம் செய்ததும், கோர்ட் அவமதிப்புத்தானா என்று விசாரித்துத்தான் நடவடிக்கை தொடர வேண்டுமா? - ச.ராசன், திருச்சி.
- 'இது உங்கள் இடம்', தினமலர், மதுரை, 26.2.2009.
நன்றி: திரு ச.ராசன் & தினமலர்.

கருத்துகள் இல்லை: