25 பிப்., 2010

என்ன நடக்கிறது?-12: "ரூபாய் 59,000 கோடி வீண்: அமைச்சகங்களின் அலட்சியம்"

"ஒதுக்கியும் செலவழிக்காததால் ரூபாய் 59,000 கோடி வீண்: அமைச்சகங்களின் அலட்சியம்" என்ற தலைப்பில் தினமலர் நாளிதழில் (தினமலர், மதுரை, 21.2.2010) வெளியாகியிருந்த செய்தியை வேதனையுடன் படித்தேன். அதன் சுருக்கத்தை இங்கே தருகிறேன். என்ன நடக்கிறது?

"மக்களுக்காகப் போடப்படும் அரசு திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை, பல அமைச்சகங்கள் அலட்சியப்படுத்தி, அவற்றைப் பயன்படுத்தாது வீணாக்குகின்றன. மத்திய கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இவ்வுண்மை வெளிவந்துள்ளது. மோசமான திட்டமிடல், சரியான கண்காணிப்பின்மை போன்ற காரணங்களால் இந்த வீணடிப்பு நடந்திருக்கிறது. அதிலும் நலவாழ்வு, கல்வி, கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம், உணவு, பொது விநியோகம், காவல்துறை, பாதுகாப்புத்துறை, அணுசக்தித்துறை ஆகிவற்றின் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில்தான் இது நடந்திருக்கிறது.

என்ன நடக்கிறது?

நன்றி: தினமலர் நாளிதழ்.

கருத்துகள் இல்லை: