25 பிப்., 2010

என்ன நடக்கிறது?-13: "அதிர்ச்சித் தகவல்"

நேற்றுத்தான் பி.டி.கத்திரி பற்றி அவள் விகடனில் வெளியான ஜக்கி வாசுதேவ் அவர்களது எச்சரிக்கையைப் பதிவு செய்தேன். இன்று இமெயிலில் பேராசிரியர் சுப்பையா அருணாச்சலம் அவர்கள் அதிர்ச்சி தரும் அந்தச் செய்தியை அனுப்பியிருந்தார். அதன் விபரம் வருமாறு:

இந்திய அரசின் பயோடெக்னாலஜித் துறை சட்டம் ஒன்றை வடிவமைக்கிறது. அதன்படி மரபணு மாற்றம் செய்யப்பட உணவுகள் அல்லது மருந்துகளை எதிர்த்துப் பேசுவதோ, எழுதுவதோ தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இது சட்டமாக்கப்பட்டால் ஆறு மாத சிறைத்தண்டனையும், இரண்டு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம்.

தேவீந்தர் ஷர்மா அவர்களது வலைப்பூவில் பதிவு செய்யப்பட்ட தகவலை பேராசிரியர் எனக்கு அனுப்பியிருந்தார். நீங்களும் அந்தத் தகவலைப் படிக்கலாம்.

http://devinder-sharma.blogspot.com/2010/02/india-seeks-jail-for-gm-food-critics.html

இது குறித்து மெயில் டுடேயில் முதற் பக்கத்து செய்தியாக தினேஷ் ஷர்மா அவர்களது கட்டுரையையும் அவசியம் படியுங்கள்.

http://epaper.mailtoday.in/epaperhome.aspx?issue=1922010

நாட்டில் என்ன நடக்கிறது? ஒன்றுமே புரியவில்லை.

மேலே குறிப்பிட்ட இரண்டு செய்திகளையும் ஜூனியர் விகடன் போன்ற இதழ்களுக்கு அனுப்ப எண்ணியுள்ளேன். நீங்களும் இவற்றை அனைவரின் கவனத்திற்கும் கொண்டுசெல்வீர்கள் என்று நம்புகிறேன். நம் அனைவரின் எதிர்காலமும் பாதிக்கப்படலாம். உடனே செயல்படுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி: பேராசிரியர் சுப்பையா அருணாச்சலம், திரு தேவீந்தர் ஷர்மா, திரு தினேஷ் ஷர்மா மற்றும் மெயில் டுடே.

கருத்துகள் இல்லை: