4 நவ., 2014

நெல்லையப்பன் கவிதைகள்-87: பகுத்தறிவு



பகுத்தறிவு


அகால மரணமடைந்த
பகுத்தறிவுப் பகலவனை
புதைப்பதா, எரிப்பதா
என தொண்டர்படை
இரண்டுபட,
கட்டவிழ்ந்த வன்முறையில்,
உயிருடன்-
புதைக்கப்பட்டனர் மூவர்
எரிக்கப்பட்டனர் ஐவர்.

கருத்துகள் இல்லை: