30 டிச., 2015

அன்றாட வாழ்வில் அபாயங்கள்-1: குளோரின் நச்சுவாயுவால் ஏற்படும் பாதிப்புக்கள்




சென்னை வெள்ளம் குப்பைகூளங்களையும், சாக்கடைகளையும் வீட்டினுள்ளும், நடமாடும் தெருக்களிலும் கொண்டு குவித்துள்ளது. எனவே சகட்டுமேனிக்கும் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்படுகிறது. அதனால் குளோரின் என்ற நச்சுவாயு வெளியாவதால் சுவாசக் கோளாறுகள், ஜீரணக் கோளாறுகள், தோலில் ஒவ்வாமை, குறிப்பாக குழந்தைகளுக்கு பாதிப்பு போன்ற பல பாதிப்புகள்  நேர்கின்றனமேலும் இந்த வாயு நம் நாசியில் புகுந்து, நம் உடலிலுள்ள பயனுள்ள நுண்ணுயிர்களையும் அழிக்கிறது. இதற்கு மாற்றாக நல்ல நுண்ணுயிர்க்கரைசலைப் (Good Micro-organisms) பரிந்துரைக்கின்றனர். இதுபற்றி விரிவான கட்டுரை தி இந்து தமிழ் நாளிதழில் (டிசம்பர் 19, 2015), “ஆரோக்கியத்தைப் பாதிக்கும் குளோரினிலிருந்து விடுதலைஎன்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. தி இந்து தளத்திற்குச் சென்றால் இக்கட்டுரையை வாசிக்க முடியும்.

கருத்துகள் இல்லை: