20 நவ., 2017

நெல்லையப்பன் கவிதைகள்-89: இலக்கு

இலக்கு
.
கருத்தரங்கில் கைகலப்பு.
தலைப்போ வள்ளுவம்.
காரணம் ஆய்வறிக்கை.
.
வள்ளுவன் திருக்குறளில்
அதிகம் பயன்படுத்திய சொல்
எதுவென்ற ஆய்வில்
அறிஞர் பெருமக்கள்
ஆளுக்கு ஒன்றை  முன்மொழிய,
.
சொல்லுக்காக சொற்களால்
அடித்துக் கொண்டவர்கள்,
சொற்கள் தீர்ந்து போனதும்,
கைகளால் அடித்துக் கொள்ள,
.
கிழிந்தன சட்டைகள்,
பறந்தன புத்தகங்கள்,

மிதிபட்டது திருக்குறள்.

கருத்துகள் இல்லை: