20 நவ., 2017

திருமந்திரம்,-19: போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை...

போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை
மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாங்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே. 

     இறைவனைப் புகழ்ந்து பாடி நான் உரைக்கின்றேன். இனிமையான உயிரிலே பொருந்தியிருக்கும் தூயவனாகவும் நான்கு திசைகளுக்கும் பராசக்திக்கும் தலைவனாகவும், மேல் சொல்லப்பட்ட திசைகளுள் தெற்குத் திக்கிற்குரிய இயமனை உதைத்தவனாகவும் அவ்விறைவனை புகழ்ந்து நான் பாடுகின்றேன்.

பத்தாம் திருமுறை: திருமூலர் அருளிய திருமந்திரம்


கருத்துகள் இல்லை: