3 ஆக., 2020

இன்றைய குறள் : குறள் 460

குறள் : 460

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்.

மு.வ உரை :
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை  தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

கலைஞர் உரை :
நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.

சாலமன் பாப்பையா உரை :
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.

நன்றி: கண்ணன் ஆதிதேவி, முகநூல்.

கருத்துகள் இல்லை: