தீக்குச்சி
விளக்கை ஏற்றியது
எல்லோரும்
விளக்கை வணங்கினார்கள்
பித்தன்
கீழே எறியப்பட்ட
தீக்குச்சியை வணங்கினான்
"ஏன் தீக்குச்சியை
வணங்குகிறாய்?"
என்று கேட்டேன்
"ஏற்றப்பட்டதை விட
ஏற்றி வைத்தது
உயர்ந்ததல்லவா" என்றான்.
(கவிக்கோவின் வரிகள்)
படித்ததில் பிடித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக