8 செப்., 2020

கவிதை நேரம் : கவிக்கோவின் வரிகள்

தீக்குச்சி    
விளக்கை ஏற்றியது  

எல்லோரும் 
விளக்கை வணங்கினார்கள் 

பித்தன்  
கீழே எறியப்பட்ட  
தீக்குச்சியை  வணங்கினான்

"ஏன் தீக்குச்சியை 
வணங்குகிறாய்?"
என்று கேட்டேன்   

"ஏற்றப்பட்டதை விட 
ஏற்றி வைத்தது 
உயர்ந்ததல்லவா" என்றான்.

(கவிக்கோவின் வரிகள்)

படித்ததில் பிடித்தது.

கருத்துகள் இல்லை: