9 செப்., 2021

கவிதை நேரம் : கவி காளமேகத்தின் கணக்கு

கவி காளமேகப் புலவரின் சிறப்பான தமிழ் சிவஸ்துதி. 
காளமேகத்தின் கணக்கு தமிழில் !

முக்காலுக்கு ஏகாமுன் முன்னரையில் வீழாமுன் 
அக்காலரைக் கால் கண்டு அஞ்சாமுன் - விக்கி 
இருமாமுன் மாகாணிக்கேகாமுன் - கச்சி 
ஒரு மாவின் கீழரை இன்று ஓது ... !!!

பதவுரை : --

முக்காலுக்கு ஏகா முன் - தள்ளாமையால் மூன்றாவது காலாகக் கைத்தடியை நாடு முன்னர் ,

முன் நரையில் வீழாமுன் -  தலையில் நரை முடி தோன்றும் முன்னதாக 
 ,
அக்காலரைக் கால் கண்டு அஞ்சாமுன் -  காலதேவனின் கால் நம்மை நாடி வரும் முன் ,

விக்கி இருமாமுன் - வயதாகி விக்கல் , இருமலுடன்  நோய்கள் வரும் முன்னால் ,

மாகாணிக்கு ஏகாமுன் - உயிர் நீத்து இறுதி யாத்திரைக்குச் செல்லா முன் 

கச்சி ஒரு மாவின் கீழரை - காஞ்சிபுரத்தில் ( கச்சியில் ) மாமரத்தின் கீழ் உள்ள சிவபெருமானாகிய திரு ஏகாம்பரநாதனை 
இன்று ஓது - இன்றே சென்று வணங்குவீராக !

அது சரி ! கணக்கு எங்கே ? பாடலை மீண்டும் பாருங்கள் !
ஒன்றை விட சிறிய பின்னங்கள் ! (இறங்கு வரிசையில்)

முக்காலுக்கு ஏகாமுன் முன் அரையில் வீழாமுன் 
அக்கால் , அரைக் கால் கண்டு அஞ்சாமுன் - விக்கி 
இருமாமுன் மாகாணிக்கேகாமுன் - கச்சி 
ஒரு மாவின் கீழரை இன்று ஓது 

முக்கால் 3/4
அரை 1/2
கால் 1/4
அரைக்கால் 1/8
இருமா 1/10
மாகாணி 1/16
ஒரு மா 1/20
கீழரை 1/256.

என்னே தமிழின், தமிழ் புலவரின் சிறப்பு.

நன்றி :

கருத்துகள் இல்லை: