திருமந்திரம் -பாடல் #1317: நான்காம் தந்திரம் - 14. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)
தோற்போர்வை நீகத் துதித்தடைவிற் பூசித்துப்
பாற்போ னகமந் திரத்தாற் பயின்றேத்தி
நாற்பாய னாரதா யாசுவா காவென்றுச்
சீற்பாகச் சேடத்தை மாற்றிப் பின்சீவியே.
விளக்கம்:
பாடல் #1316 இல் உள்ளபடி இறைவனோடு சேர்ந்து இருக்கும் இறைவியானவள் சாதகரின் முன்பு தோன்றிய பின் போர்வை தோலால் ஆகிய போர்வை போல் முடியிருக்கும் உடம்பின் உணர்ச்சி (உடல் உணர்ச்சி அற்ற நிலை) போகும் வரை போற்றி வணங்க வேண்டும். அதன் பிறகு தமது உள்ளத்திற்குள் இறைவியின் உருவத்தைப் பதிய வைத்து உள்ளே வீற்றிருக்கும் இறைவிக்கு மானசீகமாக பூஜைகள் செய்ய வேண்டும். பூஜையின் பலனாக நான் எனும் பாலுணர்வு போன பின்பு உள்ளுக்குள் இருந்து எழுந்து வரும் மந்திரத்தை செபித்து போற்றி வணங்க வேண்டும். பின்பு மனதிற்குள் நான்கு திசைகளையும் காத்தருள்பவளே அனைத்து உயிர்களாலும் ஆராதிக்கப் படுபவளே உனக்கு இந்த மந்திரத்தை அர்ப்பணிக்கின்றேன் என்று நினைத்து உருவமாக இருக்கின்றவளை மாற்றி சிறப்பான அருவமாக இறைவியை பாவித்துக் கொண்டு அவளையே போற்றி வணங்குங்கள்.
இப்பாடலை பதப்பொருள் விளக்கத்துடன் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
https://kvnthirumoolar.com/song-1317/
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக