31 ஆக., 2022

அஞ்சலி!

பள்ளத்தூர் சீதாலெட்சுமி ஆச்சி கல்லூரி முன்னாள் ஆங்கிலத்துறை தலைவரும் சிறந்த போராளியும் சமூக சேவகியும், வழக்கறிஞர் கமல் தயாளனின் தாயாருமான  ஆவுடையம்மாள்  காரைக்குடியில் மறைவு 

      பேராசிரியை ஆவுடையம்மாள்  சீதாலட்சுமி மகளிர் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் இருந்தார் கல்லூரியில்  பிரச்சினை ஏற்பட்டபோது  MUTA  தொழிற்சங்கத்தின் சார்பில் சாலை ஒரக்   கல்லூரி 4  மாத காலம்   நடைபெற்றது .இந்த சாலையோர கல்லூரியின் முதல்வராக இருந்து சாதனை படைத்தவர். பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்த போதும் அஞ்சாமல் பணிசெய்த பெண் சிங்கம் அவர். உரிமைக்காக குரல்  கொடுத்தவர் காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தக கண்காட்சியில் சிறப்பான பங்காற்றுபவர். சிறந்த தொழிற்சங்கவாதி. மனித நேயம்   மிக்கவர். 
பத்து நாட்களுக்கு முன்பு மகன் வீட்டில் சென்று அவரைப் பார்த்தோம் அப்பொழுது அவர் யாரையும்  பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை  படுத்த படுக்கையாக இருந்தார். அவரது மகனும் மருமகளும் அவரைமிக நன்றாகப பார்த்துக் கொண்டனர்.  இன்று செவ்வாய்க்கிழமை  மாலை ஆறரை மணிக்கு அவர் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் அடைந்தார். நீண்டநாள் நண்பர். அவர் மறைவதற்கு முன் நேரில் பார்த்ததில் சற்று நிம்மதி. 
அவர்கள் மறைவு தொழிற்சங்கங்களுக்கு பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அவரது மகன் வழக்கறிஞர் கமல், மருமகள், பேத்திகள் கணவர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். 

கருத்துகள் இல்லை: