11 ஆக., 2008

'கனவுச்சிப்பி'

'கனவுச்சிப்பி'

* கனவுகள் பிறக்காத இதயம் என்பது கண்கள் திறக்காத சிலையைப் போன்றது.
* கனவுகள், உற்சாகத்தின் ஊற்றுக் கண்கள். களைப்பும் சலிப்பும் அண்டவிடாமல், மனதைக் காக்கும் மந்திரத் திரைகள். "நடக்க முடியுமா"" என்று தவிக்கும் மனிதனுக்கு, "பறக்க முடியும் பார்" என்று சிறகுகளைப் பரிசளிப்பவை கனவுகள்.
* கனவுகள் வெற்றிக் கோலம் வரைவதற்காக வைக்கப்படுகிற புள்ளிகள். அவற்றை செயல் என்னும் கோடுகளால் சேர்ப்பவர்களே பெரும்புள்ளிகள். * கனவுகள் இலட்சியங்களாகலாம். இலட்சியங்கள், வெறும் கனவுகளாக விரயமாகி விடக்கூடாது.
* கனவாய் முளை விட்டு, முயற்சியில் துளிர்விட்டு, செயலாய் வேர்பிடிக்கும் விருட்சங்களே இலட்சியங்கள்.
* கனவென்னும் சிப்பிக்குள் கலையழகோடு கண் சிமிட்டுகிறது சாதனை என்னும் ஆணி முத்து. முயற்சியின் கடலுக்குள் மூழ்குங்கள், முத்தெடுங்கள்.

('மரபின் மைந்தன்' ம.முத்தையாவின் "கனவுச் சிப்பியைத் திறந்து பார்" என்ற கட்டுரையிலிருந்து தேர்ந்த ஒரு பகுதி.)

"வெற்றிச் சிறகுகள் விரியட்டும்"
'மரபின் மைந்தன்' ம.முத்தையா
விஜயா பதிப்பகம், கோவை.
128 பக்கங்கள்
விலை: ரூபாய் முப்பத்தைந்து மட்டும்

கருத்துகள் இல்லை: