"பூவுலகின் நண்பர்கள்" அமைப்பை தோற்றுவித்த அமரர் நெடுஞ்செழியன் அவர்களின் பிறந்த நாள் இன்று.
சுற்றுச்சூழல் கருத்தாக்கங்கள் அதிகம் பேசப்படாத காலகட்டத்தில் சூழல் குறித்த முக்கியத்துவங்களை தமிழகத்தில் விதைத்து சென்றதில் நெடுஞ்செழியன் அவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது, தனித்துவமானது.
இன்றைக்கு தமிழகத்தில் சூழல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள பலருக்கும் "பூவுலகின் நண்பர்கள்" அமைப்புதான் தாய்வீடு; அமரர் நெடுஞ்செழியன் அவர்கள்தான் வழிகாட்டி. அவர்தான் எங்கள் முன்னோடி. அவர் விட்டுச்சென்ற பணிகளை தொய்வில்லாமல், காலத்திற்கேற்ற மாற்றங்களுடன், அனைவரின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்து செல்கிறோம் .
அவரை முன்னோடியாக கொண்டு அவர் புகழ்பாடுவதென்பது ஆண்டிற்கு ஒருமுறை கூடி அவர் புகழ் பாடுவதல்ல; அவர்விட்டு சென்ற பணிகளை ஆண்டு முழுமைக்கும் தொடர்வதே என்பதை நாங்கள் அறிவோம்.
அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் தமிழகத்தின் சூழலை காக்கும் பணியில் "பூவுலகின் நண்பர்கள்" தொடர்ந்து பயணிக்கும்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக