18 ஆக., 2015

தாயுமானவரின் பராபரக்கண்ணி-64:

பரமுனக்கென் றெண்ணும் பழக்கமே மாறா

வரமெனக்குத் தந்தருள்என் வாழ்வே பராபரமே

ஆன்மீக சிந்தனை-63:

நீயே உனக்கு நண்பனாகவும், பகைவனாகவும் இருக்கிறாய் - பகவத்கீதை 

இன்றைய சிந்தனைக்கு-190: வள்ளலாரின் அமுதமொழிகள்

வள்ளலாரின் அமுதமொழிகள்

நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே!
தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே!
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே!
ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே!
பொருளை இச்சித்து பொய் சொல்லாதே!
பசித்தோர் முகத்தைப் பார்த்திராதே!
இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே!
குருவை வணங்கக் கூசி நிற்காதே!
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே!
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே!