ஆன்மீக சிந்தனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீக சிந்தனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 ஆக., 2021

ஆன்மீக சிந்தனைகள் : கீதை கூறும் வாழ்க்கையின் தத்துவங்கள்

SORRY, THE VIDEO HAS BEEN DISABLED BY THE OWNER.
TO SEE THE VIDEO IN YOUTUBE KINDLY CLICK THE URL BELOW:
https://www.youtube.com/watch?v=cJoRG1s9OH0

பகவத்கீதை கூறும் 

15 வாழ்க்கையின் தத்துவங்கள்

Life Change | Tamil Motivation

287,426 views

May 15, 2020

Tamil Motivation Studio

4.92K subscribers

Hi friends

This videos for life change video

Channel : Tamil motivation studio

#பகவத்கீதை#tamil Motivation#life change#

 

Grateful thanks to Tamil Motivation Studio

and YouTube and all the others who made this video possible 

9 ஆக., 2021

ஆன்மீக சிந்தனைகள் : மதமும் விஞ்ஞானமும்

           தத்துவஞானி
     வேதாத்திரி மகரிஷி


          வாழ்க வையகம்! 
          வாழ்க வளமுடன்!!

வாழ்க்கை மலர்கள்....
ஆகஸ்ட்,09 -
மதமும் விஞ்ஞானமும்

கடவுளைப் பற்றி இதுவரை எல்லா மதங்களிலும் என்ன சொன்னார்கள்? எங்கும் உள்ளவன் (Omnipresent) என்றார்கள். எல்லாவற்றுக்குள்ளும் ஊடுருவி அணுவுக்குள்ளும் இயக்க சக்தியாக இருப்பவன். அவன் தான் எல்லாம் அறிந்தவன் (Omniscient) எல்லாம் வல்லவன் (Omnipotent) என்றார்கள். இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு அவரவர் மதத்தில் என்னென்ன சொல்லிக் கொடுக்கிறார்களோ அதற்கும் இந்தக் கடவுள் தன்மைக்கும் ஒத்துக் கொள்கிறதா என்று பாருங்கள்.

எந்த இடத்தில் யார் சொல்வது ஒத்துக் கொள்கிறதோ அதுதான் சரி. ஆனாலும் அதை அப்படியே எடுத்துக் கொண்டால் போதாது. இன்றைக்கு உலகில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. இந்த விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலமாக அந்தக் கடவுள் தன்மையானது இந்தப் பிரபஞ்சத்தை எந்த முறையிலே நடத்துகிறது என்பதையும், அதன் இயக்கம், நோக்கம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது தெரியாமல் அப்படியே பழைய கருத்துக்களையே வைத்துக் கொண்டால், மீண்டும் மனித அறிவு முன்னேற்றத்தில் முரண்படும். இப்பொழுது நம் உடலில் இந்த மாதிரி நடக்கிறது என்று சொன்னால் அது கடவுளால் நடக்கின்றது என்று சொல்லி விட்டால் போதாது. அந்தக் கடவுள் இந்த அணுவுக்குள்ளும் எம்மாதிரியாக இருந்து கொண்டு அதை நகர்த்துகிறான், சுற்றுகிறான், விளங்குகின்றான் அல்லது தோற்றப் பொருட்களைக் கூட்டுகின்றான், குறைக்கின்றான் என்பதைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு ஒரு அறிவு இக்காலத்தில் வளர வேண்டும்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * 

விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்:

"விஞ்ஞானம் விளக்கைப் போல் இயற்கையில் நிகழ்ந்திடும்
விந்தைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒளியென்றால்
மெய்ஞ்ஞானம் சூரியன் போல் எங்கும் எக்காலத்தும்
மேல் நிலையை அறிவெய்த மிகச் சிறந்த ஒளியாகும்".

"விஞ்ஞான அறிஞர்களே! நம் குலத்தை
வேரறுக்க, வாழவைக்க உங்களுக்கு
எந்நாளும் மென்மேலும் திறமை கூடும்,
இனிதுணர்ந்து உலகநலப் பொறுப்பை ஏற்று
அஞ்ஞான முடையோர்கள் அறிவில் கூட
அணுநிலையோ டாதிநிலை இரண்டும் காட்டி
மெய்ஞ்ஞானம் ஊட்டுதற்கு முயல வேண்டும்
மிக எளிது உங்களுக்கு இதைச் சாதிக்க!."

விஞ்ஞானிகளுக்கு :

"அறிவினிலே மிக உயர்ந்து நுட்பத்தோடு
அணுவினிலும் நின்றொடுங்கி ஆழ்ந்தாராய்ந்து
அறிவாலே அண்டம், பிண்டம், அரூபம், ரூபம்
அறிந்து விட்டீர் விஞ்ஞான நிபுணரே! நம்
அறிவு எது? எங்குள்ளது? அந்தமென்ன?
அணுவினிலே உள சக்தி பிறந்த தெங்கே?
அறிவாலே ஒன்றி ஒன்றி ஆய்ந்து பாரீர்!
அணுநிலைக்கு அப்பாலே இரண்டும் ஒன்றாம்".

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

நன்றி :

5 ஆக., 2021

ஆன்மீக சிந்தனைகள்

         வாழ்க வளமுடன்

தாகம் எடுக்கிறது,
கையில் ஒரு பெரிய சொம்பில் ( பாத்திரத்தில் ) தண்ணிர் உள்ளது.
நீரை குடிக்கிறோம்.
பாதி நீரை குடித்த உடனே தாகம் தீர்ந்து விடுகிறது. மீதி தண்ணீரை கீழே வைத்து விடுகிறோம்.
ஏன் அந்த நீரையும் குடித்தாலென்ன ?
தேவையில்லை. 
தாகம் தீர்ந்து விட்டது.

தண்ணீர் இருக்கிறது என்பதற்காக,
இனிமேல் வரப்போகிற தாகத்திற்கு 
நாம் இப்போதே நீர் அருந்த முடியாது.

பசியும் அது போலதான்.
உணவு இருக்கிறது என்பதற்காக,
தேவைக்கு மேல் நம்மால் சாப்பிட முடியாது.

தாகம், பசி இவை இரண்டுமே உடல் தேவைகள்.
தானே தனது தேவைகளை சீரமைத்துக் கொள்கின்றன.

ஆனால்,
மனதில் தோன்றுகிற வேட்கை, ஆசைகள் அப்படியல்ல.
அது கட்டுக்கடங்காதது.

அறிவைக் கொண்டு, நாம்தான் நமது மன ஆசைகளை சீரமைத்துக் கொள்ள வேண்டும்.
ஏன் என்றால், நிம்மதியான வாழ்க்கை நமக்கு வேண்டும்.

உடல், மனம் இரண்டுமே நம்மிடம் ( அறிவு வசம்) தான், உள்ளது. பின், ஏன் இந்த வித்தியாசம் ? ஏன் இந்த முரண்பாடு ?

பசி, தாகம் இவை இரண்டும் உடல் தேவையாக இருந்தாலும், 
உயிருடன் நேரடி தொடர்பில் உள்ளதால், தேவை தீர்ந்ததும்  மன நிறைவு உண்டாகி விடுகிறது.

ஆனால்,
மனதில் தோன்றுகிற ஆசைகள் ( நகை வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், அருகில் வசிப்பவர்களை விட, நிலை (status ) உயர்ந்தவர்களாக வாழ வேண்டும் ) இவையெல்லாம் உயிர் சம்பந்தப் பட்டவை அல்ல.
ஆனால்,
மனம், ( ஆசை எழும் போது )அறிவையே மயக்கி விடுகிறது.

மனதில் எழுகின்ற ஆசைகளை, நாம் நிறைவேற்றி விட்டாலும், அதனால் ஏற்படுகிற இன்ப உணர்வின் மீது அறிவு மயங்கி விடுகிறது. 
அதனால், மனம் ( அடக்க ஆளில்லாததால் ) மீண்டும் தேட ஆரம்பித்து விடுகிறது.

தேவைக்காக செய்து முடித்த எந்த செயல் இன்பத்தைத் தந்ததோ, அந்த காரியத்தை தேவை இல்லாமலே, ( அறிவின் மயக்கத்தை சாதகமாக்கிக் கொண்டு) மனம் மீண்டும், மீண்டும் செய்ய விழைகிறது.

அறிவு மயக்க நிலையில் உள்ளதால், பின் நாட்களில் ஏற்பட போகும் அல்லல், துன்பத்தை, முன்பே உணர்ந்து கொள்ள அறிவுக்கு திறணற்றுப்போகிறது.

அல்லல், துன்பம், மன இறுக்கம் நிறைந்த வாழ்க்கையே  நமக்கு நெருங்கிய சொந்தமாகி போய்விடுகிறது.

இதிலிருந்து மீள்வதற்கு, அறிவு திடமானதாக இருக்க வேண்டும்.

அதற்கு ஒரே வழி அகத்தாய்வு பயிற்சி மட்டுமே.

 வாழ்க வளமுடன்.

   _ ஆசை சீரமைத்தல் தலைப்பில் அருட் தந்தை.


நன்றி :