22 செப்., 2023

சுற்றுச்சூழல்

#மூங்கில் தினம்

பச்சைத் தங்கம்... ஆக்சிஜன் உருளை மூங்கில் 24 நான்கு மணிநேரமும் ஆக்ஸிஜன் தருகிறது சிறந்த காகிதம் தயாரிப்புக்கு உகந்த மரம்

(குறிப்பு #தைலமரங்கள் காகித பயன்பாட்டிற்காக வளர்க்க படுகிறது அதற்கு மாற்றாக இம்மரங்களை அரசு வளர்க்க வேண்டும்)

செப்டம்பர் 18. உலக மூங்கில் தினம். 2009-ம் ஆண்டு பாங்காக்கில் உலக எட்டாவது மூங்கில் மாநாடு (world bamboo congress- WBC) நடந்தது. அன்று முதல் இந்த நாளை உலக மூங்கில் தினமாகக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தினம் உலக மூங்கில் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மூங்கிலின் பயனைச் சொல்லிக்கொண்டே போகலாம். கிட்டத்தட்ட 1500 வகையான பயன்களை மூங்கில் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிட்டுள்ளனர். இந்தியாவில் வளரும் மூங்கில்கள் தொழிற்சாலைகளுக்குத்தான் பெரும்பாலும் பயன்படுகின்றன. 40 சதவிகிதம் மூங்கில்கள் காகிதத் தொழிற்சாலைகளிலும், மரக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால், பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம் என அழைக்கப்படுகிறது மூங்கில்.

புல் வகையைச் சேர்ந்தது மூங்கில். புல் வகைகளில் அதிக உயரமாக வளர்வது மூங்கில் மட்டுமே. மூங்கிலின் வயது 60 ஆண்டுகள். ஆனால், அந்த உயரத்தை சில ஆண்டுகளிலேயே அடைந்துவிடும். இது, மலைவாழ் மக்கள், விவசாயிகளுக்கு வருமானம் ஈட்டித் தரும் மரமாகவும் இருக்கிறது

இதனால் மூங்கில் சார்ந்த பல தொழில்கள் உருவாகியுள்ளன. சில பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாகவும் மூங்கில் பயன்படுகிறது. WBC-யின் முக்கிய குறிக்கோள், மூங்கிலை வைத்துப் பல புதுப்பிக்கக்கூடிய பொருள்கள் செய்து, பிளாஸ்டிக் போன்ற மக்கும் தன்மையற்ற பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பதுதான்.

மூங்கிலை வைத்து, பல புதுப்பிக்கக்கூடிய பொருள்கள் செய்து, பிளாஸ்டிக் போன்ற மக்கும் தன்மையற்ற பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பதுதான் WBC-யின் முக்கிய குறிக்கோள்.
அழகு சாதன பொருள்கள் தயாரிக்க இதன் திரவம் பயன்படுகிறது. விளையாட்டுப் பொருள்கள், மூங்கில் சைக்கிள், ஹெல்மெட், ஆடைகள் போன்றவை மூங்கிலால் தயாரிக்கப்படுகின்றன.

நம் நாட்டில் மூங்கில் பயன்பாடு இன்னும் குறைவாகத்தான் இருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் 'மார்டிரிட்' நகர விமான நிலையத்தில் பயணிகள் பகுதியின் ஒரு பகுதியின் கூரையை மூங்கிலால் செய்துள்ளனர்.

பல நாடுகளில் பள்ளிகள் மூங்கிலால் அமைக்கப்படுகின்றன. உலகளவில் மூங்கில் வீடுகள் பிரபலமாகி வருகின்றன. சமீபத்தில் சில நாடுகள் சாலை அமைக்க மூங்கிலைப் பயன்படுத்துகின்றன. சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத சாலைகளாக இவை இருக்கின்றன. இந்தச் சாலைகளில் 16 டன் எடைகொண்ட வாகனம் செல்ல முடியும் எனவும் கண்டுபிடித்துள்ளார்கள்.
பல நாடுகளில் பள்ளிகள் மூங்கிலால் அமைக்கப்படுகின்றன. உலகளவில் மூங்கில் வீடுகள் பிரபலமாகி வருகின்றன. சமீபத்தில் சில நாடுகள் சாலை அமைக்க மூங்கிலைப் பயன்படுத்துகின்றன. சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத சாலைகளாக இவை இருக்கின்றன. இந்தச் சாலைகளில் 16 டன் எடைகொண்ட வாகனம் செல்ல முடியும் எனவும் கண்டுபிடித்துள்ளார்கள். சீனாவில் உள்ள மின் சியாங் மூங்கில் பாலம் உலகளவில் நீளமான பாலமாக இருக்கிறது.

மூங்கில் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. உலக அளவில் 10 பில்லியன் டாலர் மூங்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. இதில், சீனா சுமார் 50% பங்கைப் பெற்று முன்னணியிலுள்ளது. 2015-ம் ஆண்டு இதன் அளவு 20 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போதைய உள்ளூர் வர்த்தகம் ரூ.6,505 கோடி. அது 2015-ம் ஆண்டில் ரூ.26,000 கோடியாக வளர வாய்ப்புள்ளதாக இந்திய விவசாயத்துறை அமைச்சகம் கூறுகிறது.

மூங்கில்மூங்கில்
வீட்டில் இடம் இருந்தாலும் மூங்கில் வளர்க்கலாம். அதற்காக முள்ளில்லா மூங்கில் ரகங்கள் கிடைக்கின்றன. சூழலுக்கு இத்தனை பயன்களைத் தரும் மூங்கிலைப் போற்ற வேண்டும் என்பதே இந்த நாளின் நோக்கம்.

நன்றி :

நூல் நயம்

"தகவல் தொடர்பு கலை".
 டாக்டர். அ .விநாயகமூர்த்தி பொற்கொடி புத்தகம் நிலையம்.
முதல் பதிப்பு 2006 மொத்த பக்கங்கள் 320 விலை ₹125.

  # இது ஒரு துறை சார் நூல் .

     தகவல் தொடர்புத்துறை சார்ந்த புத்தகம்.தகவல் தொடர்புத்துறை என்று சொன்னால் பலவித துறையில் இதிலே அடக்கம் .எல்லாவற்றையும் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்தமாக தொடர்புகளை தகவல் தொடர்புகலை என்று இந்த புத்தகம் அமைந்திருக்கிறது.

    பொறியியலின் பல்வேறு பிரிவுகளில் தகவல் தொழில்
நுட்பவியல் சிறப்பிடம் பெறுவதாகும். பொறியியல்
கல்லூரிகளில் இவ்வியலைப் படித்துப் பட்டம் பெறுவோர்
பலர். அவர்களுக்கான இத்துறை நூல்கள் பல ஆங்கிலத்தில்
உள்ளன. தமிழிலும் இவை எழுதப் பெறல் வேண்டும். 

     தகவல்தொடர்பின் தொடக்க நாள் முதலாக இன்று வரையில் பெற்றுள்ள வளர்ச்சி எண்ணிப் பார்க்கத் தக்கது.
      தமது கருத்தை அடுத்தவருக்குப் புலப்படுத்துவதாகிய தொடர்பும் அதற்கான சாதனங்களும் தகவல் பழங்காலத்திலிருந்தே சிந்தனை வளர்ச்சியால் விரிவடைந்து வந்துள்ளன. குறிப்பாகக் கடந்த சில நூற்றாண்டுகளில் இத்துறை பெற்றுள்ள முன்னேற்றம் பிரமிப்பூட்டுவது.

       புத்தம் புதிய கலைகள் தமிழில் எளிமையாகச் சொல்லப்பட வேண்டும்; இன்றைய தலைமுறையினரும் எதிர்காலத் தலைமுறையினரும் மேலும் ஓரடி முன்னெடுத்து வைக்க உதவ வேண்டும் என்ற கருத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.

**
       இந்தப் புத்தகம் கீழ்க்கண்ட 9 தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கிறது.

1. அறிமுகம் : சில தகவல்கள்

2. தகவல் தொடர்பின் பழமை

3. புத்தகமும் பத்திரிகையும்

4. தபால், தந்தி, தொலைபேசி, செல்போன்

கயம் 5. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம்

தகவல் தொடர்பும் விளம்பரங்களும் 

7. தகவல் தொடர்பில் எழுத்தும் பேச்சும்

8. தகவல் தொழில் நுட்பம்

9. தகவல் தொடர்பும் சட்டங்களும் 

***
       "சென்றிடு வீர்எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்"

      என்ற பாரதியின் ஆசையினை இந்நூலாசிரியர் திரு.அ.விநாயகமூர்த்தி அவர்கள் தம் அரிய இப்புத்தகத்தின் வாயிலாக நம் மக்களுக்குத் தந்திருக்கிறார். 

      ஒரு கிராமத்தில் பிறந்த இவர், கிராமபோன், கணினி ஆகிய தொழில் நுட்ப வளர்ச்சியைப் பற்றித் தம் நூலுள் அழகாகக் கூறியுள்ளார்.

      தொழில்நுட்ப வளர்ச்சிகளுள் ஒன்றான தகவலியல் அனைத்து வகையான மக்கள் சமூகத்திற்கும் சென்று சேரவேண்டும் என்ற ஒப்பற்ற குறிக்கோள் இந்நூலின் ஒவ்வோர் எழுத்திலும் வெளிப்படுகிறது.

       'தகவல்' என்பது பற்றிக் கூறும்போது, முதன்முதலில் மனிதன் தன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளச் 'சைகை' செய்தான். அப்போது ஆரம்பித்த தகவல் இன்று தன் விஸ்வரூபத்தைக் காட்டுகிறது. இப்போது 'உள்ளங்கைக்குள் உலகம்' என மனித எண்ணங்களின் வளர்ச்சியைக் காட்டுகிறது. மனிதன் தன் எண்ணங்களை மற்றவருக்கும் பரிமாறிக்கொண்டு, அவர்களையும் தன்னையும் உயர்த்திக்கொள்ள ஒரு சிறந்த ஊடகமாக இருப்பதனை ஆசிரியர் சிறப்பாக விரித்துச் செல்கிறார். மனிதஇனம் முன்னேற்றமடைந்ததற்கு இத்தகவல் ஊடகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை ஆசிரியர் தம் தேடல் உணர்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

          சங்க காலத்தில், தூது மூலம் மன்னர்கள் தங்கள் தகவலைப் பரிமாற்றம் செய்தனர். மக்களுக்கு அதனைப் பறையறைந்து அறிவிப்பதன் மூலம் தெரிவித்தனர் இன்று உலகத்தின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் வீட்டின் மூலையில் உட்கார்ந்து இருப்பவனுக்குத் தெரிகிறது அதற்குக் காரணம் தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியே என்பதனை ஆசிரியர் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறார்.

       பழங்காலப் புலவர்கள், மருத்துவர்கள் தங்களின் எண்ணங்களை ஓலைச்சுவடியில் எழுதிவிட்டுச்சென்றனர். அவை கறையான்களுக்கு இரையாகி விட்டன. அச்சுஇயந்திரம் வந்த பிறகு புத்தகங்களின் வளர்ச்சி அசுர வேகத்தில் முன்னேற்றம் பெற்றது இதன் மூலம் மக்களின் அறிவு விரிவடைந்தது. அதனால், இந்த உலகத்தினைத் தன் கைக்குள் அடக்கப் பற்பல சாதனங்களைக் கண்டுபிடித்தான் மனிதன்.

      தகவல் மேன்மேலும் வளர்ச்சி பெறுவதற்குக் காரணம் ஊடகங்களே. மக்கள் இந்த ஊடகங்களால் ஊக்கமடைந்து, அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்.

      கருத்துக்களைத் தாம் கற்ற கல்வியின் மூலம், திரம். எழுத்துக்களாக்க... மேடைச்சொற்பொழிவுகளாக்க...
மனிதனின் மூளை ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தது கண்டுபிடிப்புக்களைநோக்கி
எனும் உயரிய கருத்தினை ஆசிரியர் தமது பாணியில் வெளிப்படுத்தியுள்ளார்.

       'விளம்பரம்' எனும் ஓர் உன்னதமான ஊடகத்தைப் பற்றித் தாம் தேடியவற்றை அரியதொரு கருவூலமாக்கியிருக்கிறார். 
        தாம் கண்டுபிடித்ததைப் பிரபலமாக்கப் பயன்படும் மிகச்சிறந்த ஊடகம் விளம்பரம் என்பதனை ஆசிரியர் விளம்பரமாகவே விவரிக்கிறார். விளம்பரத்தின் நன்மையும் தீமையும் பற்றித் தெளிவாகக் கூறியிருப்பது போற்றத்தக்கது.

         தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி, மனிதனின் மூளையைக் கசக்க ஆரம்பித்தது.

       "காசி நகர்ப்புலவர் பேசும்உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய்வோம்"

           என்ற பாரதியின் கனவு இன்று நனவாகியிருக்கிறது என்பதனை ஆசிரியர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். 

       வானொலி, பின் கணிப்பொறி, அதன்பின் மின்னஞ்சல் என மிக விரிந்து பரந்த தொழில்நுட்ப வளர்ச்சியினைப் பற்றிச் சிறந்ததொரு கருத்துக் கருவூலமாக்கியுள்ளார். 

"வருங்காலத்தில், மொழிச்செம்மையே தகளியாக, இலக்கியச்சுவையே நெய்யாக, எளிமைப்பண்பே இடுதிரியாக, சிந்தனையே சுடராகக் கொண்டு தமிழ்க்கட்டுரை விளக்கு ஏற்றப்படுதல் திண்ணம்" எனக்கூறிய அறிஞர் ந.சஞ்சீவி அவர்களின் கூற்றிற்கேற்ப, ஆசிரியரின் இந்நூல் தகவல் தொடர்புக் கலைக்குச் சிறந்ததொரு சான்றாகக் குன்றிலிட்ட விளக்காகத்திகழும்.

உங்கள் கவனத்திற்கு

நாளையில் இருந்து துவங்கும் இந்த முகாமில் செயற்கை , கால் , வீல்சேர், மூன்று சக்கர சைக்கிள், பார்வையற்றோர் ஸ்டிக், காது கேட்கும் கருவி.போன்ற அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது  எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணம். மாற்றுத்திறனாளியின் ஆதார் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் பெரம்பூர் பகுதி

14 செப்., 2023

சிவனருட் செல்வர்

இன்றைய சிந்தனைக்கு

இன்றைய குறள்

கோபுர தரிசனம்

அருள்வாக்கு

13 செப்., 2023

சிரித்து வாழவேண்டும்

அபூர்வமான படம்

கக்கன்ஜியுடன் அன்றைய முதல்வர் மக்கள் திலகம் 

முன்னேற்றப் பாதை

இன்று ஒரு தகவல்

இன்றைய சிந்தனைக்கு

சிவனருட்செல்வர்

இன்றைய குறள்

கோபுர தரிசனம்

அருள்வாக்கு

12 செப்., 2023

குட்டிக்கதை

ஒரு நீதிபதியின் ஒப்புதல் வாக்குமூலம்!

நீதியரசர் சூரியமூர்த்தி  கூறுகிறார்,

"எனக்கு அப்போது ஒரு பதினைந்து பதினாறு வயது இருக்கும், தீவிர கடவுள் மறுப்பாளராக(!!) இருந்தேன். அந்த சமயத்தில், எங்கள் கிராமத்தில், எங்களுக்கு சொந்தமாக ஒரு தென்னந் தோப்பு இருந்தது. அதில், ஒரு இஸ்லாமிய குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த குடும்பத்தில், ஒரு நபரிடம், மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட விஷக்கடி கண்ட மக்கள் வருவார்கள். அப்படி வரும் அவர்களிடம், அந்த நபர் அவர்கள் தலையின் மீது ஒரு வேப்பிலை கொத்து வைத்து, ஏதோ உச்சரிப்பார் ,பிறகு அந்த நோயாளி நலமுடன் வீடு திரும்புவார்!!! இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. அந்த இஸ்லாமிய நபரிடம், நீங்கள் முனுமுனுக்கும் விஷயம்தான் என்ன?? என்று நான் கேட்டபொழுது, உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, உன்னிடம் இதை கூற முடியாது. ஒருவேளை உனக்கு நம்பிக்கை வந்தால்!! பிறகு வா பார்க்கலாம் என்று கூறி அனுப்பிவிட்டார்.

    காலங்கள்  உருண்டோடின. நான் சட்டம் பயின்று, வேலை கிடைத்து, படிப்படியாக பாண்டிச்சேரியின் நீதிபதியாக  உயர்ந்துவிடடேன். இந்த காலங்களில் நான் தீவிர சமய நம்பிக்கையாளனாகவும் மாறி இருந்தேன். ஒரு நாள் எனக்கு அந்த இஸ்லாமிய நபரின் நினைவு வந்தது!!! உடனடியாக நேரில் எங்கள் தென்னந்தோப்புக்கு சென்று, அவரிடம், இப்பொழுதாவது கற்றுத் தருவீர்களா??? என்று கேட்க, ஆச்சரியத்துடன் என்னை நோக்கிய அவர், போய் குளித்துவிட்டு வா உனக்கு உபதேசிக்கிறேன் என்றார்.

 நான் குளித்து முடித்து வந்ததும், என்னைக் கீழே அமரச் செய்து என் காதில் அவர் அந்த மந்திரத்தை சொல்லச் சொல்ல எனக்கு ஆச்சரியம் தாளவில்லை!!! ஏனெனில்  அவர் ஓதியது திருநாவுக்கரசர், விஷம் கண்டு இறந்து விட்ட அப்பூதியடிகளின் மகனை காப்பாற்ற பாடிய தேவாரப் பாடல்!!!.

 அவர் அந்த முழு பதிகத்தையும் என் காதில் ஓதி முடித்தவுடன், இது எங்கள் தேவாரப்பாடல் ஆயிற்றே எனக்கேட்க?? அவர் எனக்கு இதெல்லாம் தெரியாது. என் குருநாதர் எனக்கு சொல்லி கொடுத்தார் அதைக்கொண்டு நான் வைத்தியம் செய்கிறேன் என்று கூறி எனக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்''.

இன்னதென்று தெரியவில்லை!!, அதன் அர்த்தமும் தெரியவில்லை!! அதன் மூலமும் உணரவில்லை!!! ஆனாலும் நம்பிக்கையுடன் ஓதுபவர்களுக்கு அதன் பலன்கள்  கிடைக்கிறது. 

 "தேவாரப் பாடல்கள் அனைத்தும் மந்திரச் சொற்களால் நிரம்பியவை. அவைகள் தமிழ் வேதத்தின் ஒரு அங்கம். நம் தமிழ் மக்கள் குறைதீர்க்க இறைவன் நமக்கு அளித்த பொக்கிஷம்''' இது நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும்?!!

11 செப்., 2023

அபூர்வமான படம்

இன்று ஒரு தகவல்

ஆன்மீக மஞ்சரி

சுற்றுச்சூழல்

இன்றைய புத்தகம்

ஆன்மீக சிந்தனை

மகாகவி நினைவு தினம்

இன்றைய சிந்தனைக்கு

இன்றைய குறள்

சிவனருட்செல்வர்

கோபுர தரிசனம்

அருள்வாக்கு