30 நவ., 2021

வாவ்! படங்கள்


நன்றி :

KATA BON,
AMAZING NATURE PICTURES group, 
FACEBOOK 

இன்று ஒரு தகவல்

சிரித்து வாழவேண்டும்!

ஆன்மீக மந்திரங்கள் : சந்திர காயத்ரி

அருள்வாக்கு

இன்றைய தினம் : நவம்பர் 30, 2021

நூல் நயம் : ஆ மாதவன் கதைகள்

#ReadingMarathon2021 
RM018
71/100

ஆ மாதவன் கதைகள் முழுத்தொகுப்பு 
நற்றிணை பதிப்பகம் 
640 பக்கங்கள் 

ஆ மாதவனின் அறுபத்தி ஆறு கதைகளைக் கொண்ட முழுத் தொகுப்பு நூல் இது. நாஞ்சில் நாடனின் முன்னுரை இந்நூலின் மற்றுமொரு சிறப்பு.

 தாய்மொழியான தமிழை பள்ளி அளவில்கூட கற்காதவரின் படைப்புகளில் தனித்துவம் பெருமிதத்துடன் மிளிர்கிறது. கிடைத்திருக்க வேண்டிய நியாயமான விருதுகள்கூட அவருக்கு மிக தாமதமாகவே அளிக்கப்பட்டிருக்கின்றன.

 விருதுகள் அவருக்கு அளிக்கப்பட்டமையாலேயே தமது மதிப்பினை நிலைநிறுத்திக் கொண்டிருந்திருக்கும். மறுக்காமல் அவற்றை ஏற்றுக் கொண்ட செயல் அக்கலைஞனின் பெருங்குணம்.

 தமிழின் முன்னோடி எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா, கு. அழகிரிசாமி , தி.ஜானகிராமன், அசோகமித்திரன், சார்வாகன் ஆகியோரது முழுத்தொகுப்பு நூல்களை வாசித்து இருந்தபோதும் இத்தொகுப்பில்  அமைந்துள்ள கதைகள் முற்றிலும் தனித்ததொரு வாசிப்பு அனுபவம் அளித்தவை.

 சாலைக் கடை  மாந்தரை புனைவில் அழகியலுடன் உலவ விட்டிருக்கிறார் மாதவன். சாலைக் கடையில் உலவித் திரியும் மாடு, நாய் முதற்கொண்டு இரந்து வாழும் மாற்றுத்திறனாளி வரை கதைகளில் வரிசைகட்டி வருகின்றனர்.

 கல்லூரி நிகழ்விற்காக நன்கொடை வசூலிக்க வருபவர்களிடம் கவனமுடன் இருப்பவர், இலக்கியம் பேச வருபவரிடம் வெகு சுலபமாக ஏமாந்து விடுகிறார்.

 தொகுப்பின் ஆரம்ப கதைகளில் காமரசம் ததும்புகிறது. மரண வாயிலில் இருக்கும் மனைவியின் அருகாமையிலேயே உதவிக்காக வந்த எதிர் வீட்டுப் பெண்ணின் மீது மோகம் கொள்பவன்,  மனிதாபிமானத்துடன் கிடைக்கும் உதவியை இழக்கிறான்.

 மனப் போராட்டங்களின் விவரணையாகவே அமையும் 'மூட சொர்க்கம்', மலிவில் காணும் அவலம், விரதகாலத்தில் மோகத்தைத் தூண்டும் 'தேவதரிசனம்', பெருந்திணை, பொருந்தாக் காமம் இவைகளை நினைவுபடுத்தும் 'தியானம்', வாசுப் போற்றியை கோயிலிலிருந்து விரட்டும் கார்த்தியாயினியின்  கதையாக வரும் 'பாம்பு உறங்கும் பாற்கடல்', எளிதாக வாசித்து கடக்க இயலாத புனைவுகள் இவை.

//நியதியும், ஏற்பாடுகளும் வாழ்க்கையின் கட்டுத் திட்டங்களும் மனிதப் பிறவியின் அடிப்படைக் கோடுகளாக இருந்தாலும், அநேக சமயங்களில் இந்த கோட்டை மீறித் துள்ளுவதிலேயே சுகம் காணுகிறான் மனிதன்//.

 //ஒரு வகையில் வரம்புக்கோடுகளை மீறி சுகம் காணுவதிலும், அந்த எல்லை மீறலை ஆதியற்ற சுகமாகக் கருதி ரகசியமாக, கனவு காணுவதிலும்தான் வாழ்க்கையின் ரசாவஸ்தை நிர்ணயிக்கப்படுகிறது//.

 எல்லைமீறல்களின் புரிதல்களை கூறும் 'பறக்க வேண்டும் என்ற ஆசை' கதையில் இடம்பெறும் வரிகள் மேற்கண்டவை.

 பின்சீட் அத்துமீறல்களை கூறும் 'சினிமா', நாயுடு-ஜானகி  இணையரின் வாழ்வை விளக்கும் 'ராஜா தெரு', பரஸ்பர துரோகங்களை விளக்கும் 'மாதவி', தன்னை அறியும் பரவசமாக காமம் நீங்கிய கதை 'நான்', பத்திரிகையாளனின் அனுபவங்களைக் கொண்ட 'உண்மைக் கதை' ஆகியன வாசிப்பின் முடிவில் நம்மை சிந்தனையில் ஆழ்த்துபவை.

 தொகுப்பின் நீண்ட கதையாக இடம்பெறும் 'எட்டாவது நாள்', செய்யது பட்டாணி என்ற சாளப் பட்டாணியை, அந்த சாகசக்காரனை மறக்கவே இயலாமல் செய்து விடுகிறது.

 தங்குமிடத்தில் விதிகளின் பேரில் கடுமையாக நடந்து கொள்ளும் வாட்ச்மேன், அவ்விடத்தில் நீண்ட காலம் தங்கியிருக்கும் கண்டக்டர் ஒருவனால் விளையாட்டுத்தனமாக அல்லது வன்மத்துடன் பழிவாங்கப்படுதலை எளிய வார்த்தைகளில் சொல்லி செல்கிறது 'காமினி மூலம்'

 யானையின் முழு உருவத்தை காண்கையில் கிடைக்கும் மகிழ்வைவிட, தும்பிக்கை, வால், காதுகள், கால்கள் போன்ற தனித்தனியான பாகங்கள் மீதான பார்வைகள் அளிக்கும் மகிழ்வு அதிகம்.

 பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பகை பாராட்டுபவர், நான்கு தெரு தள்ளி இருப்பவனுடன் நல்லுறவு கொண்டிருப்பதை இங்கு நினைவு கூரலாம். பாதுகாப்பான இடைவெளி, உறவுகளின் நீடிப்பில் பெரும் பங்காற்றுகிறது.

 'கிட்ட உறவு முட்டப் பகை' என்பது போன்ற பாஸ்கரன் மீதான தமயந்தியின் வியப்பு மாற்றமுடியாத வெறுப்பாக, ஏமாற்றமாக உருமாறி விடுகிறது.

 7 வயது மகன் கொதிக்கும் தார்ச்சட்டியில் விழுந்து மரணிக்க, ஈட்டுத் தொகைக்காக பெற்றவன் அலைவதும், கையூட்டுகளும் பெரிதும் வருந்த வைப்பவை.

 'பாச்சி' என்ற நாய், 'கோமதி' என்ற மாடு கதைவுகளில் மிக இயல்பாக அமைந்து விடுகின்றன. உண்மையில் அவை மனிதர் அல்லாத பாத்திரங்கள் என்பதையே சில பக்கங்களின் வாசிப்புக்கு பின்பே உணரமுடிகிறது.

 உணவிற்காக  பிரயத்தனத்துடன் அலையும் தாயை விஷம் வைத்து கொன்று விடுபவன், தன் மனசாட்சியின் உறுத்தலுடன் போராடுவதை 'தூக்கம் வரவில்லை' கதை விளக்குகிறது.

 வாழ்வில் சந்திக்கும் மிகச் சில நபர்கள் மிக சாதுவானவர்களாக தோன்றுவதும், குறிப்பிட்ட ஒரு தருணத்தில் நம்பவியலாத அவர்தம் விஸ்வரூப உணர்வுப் பெருவெழுச்சியையும் ஏக்கியம்மா வெளிப்படுத்துகிறார்.

 தன்னையே மறந்து விட்டு அலைந்து திரியும் நபரைப்பற்றிய 'மானசீகம்', அழையா திருமணத்தில் உணவருந்தும் ஆவலுடன் சென்று வெளியேற்றப்படுபவனின் 'வேஷம்', மரண வீட்டின் சிந்தனைகளாக புனையப் பட்டிருக்கும் 'நாலுமணி', கதைகளும் வியப்பளிக்கத் தவறாதவை.

 'கைத்தடி பண்ணையார்' குறித்த தகவல் இதுபோன்ற மனிதர்களை எளிதாக நினைவுபடுத்தி செல்கிறது.

 மரண வீடுகளுக்குச் செல்கையில் பண்ணையார் சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு தனது கைத்தடியை மட்டும் விட்டுச் சென்று விடுகிறார். சடங்குகளின் முடிவில் அங்கு வரும் அவர், தன்னிடம் தெரிவிக்காமல் நிகழ்வுகள் முடிந்துவிட்டதாக கோபம் கொள்கிறார்.

 அப்பண்ணையாரின் மரணத்தின்போது மனிதர்களுக்கு பதிலாக அவர்தம் கைத்தடிகளே நிறைந்திருக்கின்றன அவ்விடத்தில்.

 மலர்ந்த முகமும், இனிய சொற்களுமே பிறர் மனதில் நமது இருப்பை உறுதி செய்து கொள்ளப் போதுமானவை என்று தோன்றுகிறது.

 'பூனை' கதையில் மனைவிக்கு மிகவும் பிடித்த பூனை அவள் இல்லாத நேரங்களில் அவளது கணவனை கண்காணிக்கவும் செய்கிறது.

 காலவோட்டத்தில் அத்துமீறல்கள் நாற்றமாக உருமாறி அச்சுறுத்துகிறது. எப்போதும் அழுபவள், ஒவ்வொரு முறையும் வேறுபட்ட காரணங்களை கொண்டிருப்பதும் இக் கதையில் சொல்லப்படுகிறது.

 உணவகங்களில் இறைச்சி உணவுகளில் நிகழக்கூடிய சாத்தியங்களை விளக்கும் கதையொன்று பெரும் சோகத்துடன் நிறைவு கொள்கிறது.

 பெருநோய் கண்டவள் பகலில் இரக்கமுடன் பார்க்கப்படுபவள், சில மாதங்களுக்குப் பிறகு பிள்ளை பெற்று விடுகிறாள். அவ்வகையில் அம்மனிதர்களின் பண்பாடு எடுத்தாளப்படுகிறது.

 'புனித யாத்திரை' என்ற கதை தொகுப்பின் பிற கதைகளுடன் ஒப்பிடுகையில் மிக மிக சாதாரண புனைவாக தோன்றுகிறது.

 தமிழ் மனசு, கோழை மனசு, சஞ்சல மனசு, சந்தேக மனசு எனக் குற்றம் சாட்டுபவள் கவலையுடன் படிகளில் இறங்கிச் செல்கையில் அந்நபரை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

 ரயிலில் உடன் பயணிப்பவர் உறக்க கலக்கத்தில் சாய்ந்துவிட, எரிச்சலடையும் அடுத்த இருக்கைப் பயணி வன்மத்துடன் அவரது காலனி ஒன்றை, யாரும் பார்த்திராத ஒரு தருணத்தில், சன்னல் வழியே வீசி விடுகிறார்.

 இறங்கும் நேரத்தில் தேடிக் களைப்புற்று வருத்தமுடன் அவர் செல்வதை காண நேர்கையில் பரிதாபப்படுவதில் என்ன பயன் இருக்க முடியும்?

 இலக்கியம் பேசி படைப்பாளியை ஏமாற்றுபவன், ஃபாரின் சேலை சிதை  நெருப்பில் எரிந்தாலும் சரி, பிறர் அனுபவிக்க மனம் கொள்ளாதவன், மாய யதார்த்த வாதங்களுடன் எழுதப்பட்டிருக்கும் இரு கதைகள், சாகசத்துடன் உயரத்துக்கு செல்பவன், தரையை அடைய இயலாமல் விழுந்து மரணிக்கும் கதை என ஆ.மாதவன் தனது படைப்புகளின் வழியே இம்மாதத்தின் பெரும்பான்மையான நாட்களில் வாசம் செய்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

நன்றி :

திரு சரவணன் சுப்பிரமணியன், 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல்

இன்றைய திருமந்திரம் - பாடல் #1321


திருமந்திரம் - பாடல் #1321: நான்காம் தந்திரம் - 15. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நவாக்கிரி யாவது நானறி வித்தை
நவாக்கிரி யுள்ளெழும் நன்மைக ளெல்லாம்
நவாக்கிரி மந்திரம் நாவுள்ளே யோத
நவாக்கிரி சத்தி நலந்தருந் தானே.

விளக்கம்:

ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட நவாக்கிரி சக்கரமாவது யான் அறிந்து கொண்ட கலைகளாகிய கர்மாக்களை அழித்து பிறவி அறுத்தல், இனியும் கர்மங்கள் சேராமல் தடுத்தல், இறைவனை தமக்குள் உணர்ந்து அடைவது ஆகியவை ஆகும். இந்த மூன்று விதமான நன்மைகளும் இந்த சக்கரத்திற்குள்ளிருந்தே கிடைக்கும். அதனை அடைய வேண்டுமென்றால் இந்த மந்திரத்தை நாக்கை மட்டும் அசைத்து சத்தமில்லாமல் ஓதினால் இந்த சக்கரத்தில் வீற்றிருக்கும் சக்திகள் அனைத்து நலங்களையும் தானே கொடுத்து அருளுவார்கள்.

இப்பாடலை திருமந்திர சுவடி எழுத்துக்கள் மற்றும் பதப்பொருள் விளக்கத்துடன் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

https://kvnthirumoolar.com/song-1321/

நன்றி :

இன்றைய குறள்


நன்றி :

சுற்றுச்சூழல் : மரம் வளர்ப்போம்!

தினம் ஒரு மரம் 🌳
நாள் 114
இடம் - R.N புதூர் 

நன்றி :

மனிதம் பசுமை இயக்கம், 
முகநூல் 

இயற்கையை நேசிப்போம்!

Have a wonderful day🌹✨❄️🍁✝️!
Grateful thanks to 

Liang Puchu, 
NATURE BEAUTIFUL WORLD group,
FACEBOOK 

இனிய காலை வணக்கம்!

29 நவ., 2021

வாவ்! படங்கள்


Wow.... amazing !

நன்றி :

Mr BRIJESH TIWARI, 
AMAZING NATURE PICTURES, 
FACEBOOK 

ஆன்மீக மலர்கள்

கார்கலந்த மேனியான் கைகலந்த
                                                            ஆழியான் 
பார்கலந்த வல்வயிற்றான்
                     பாம்பணையான் -- சீர்கலந்த
சொல் நினைந்து போக்காரேல்
                            சூழ்வினையின் ஆழ்துயரை 
என்நினைந்து போக்குவர்இப் போது  ?(2670)

பொருள் :

உலக மக்கள் இறைவன் திருக்குணங்களை சொல்லி அனுபவியாமல் வீணே பொழுது போக்குகின்றார்களே !

அப்பெருமான் மேகம் போன்ற திருமேனி உடையவன் ;
பிரளய காலத்தில் உலகமெல்லாம் வந்து சேரப்பெற்ற வலிய திருவயிற்றை உடையவன் ;
கையோடு சேர்ந்தத திருச் சக்கரத்தை உடையவன் ல
ஆதிசேடனை படுக்கை ஆக கொண்டவன் ;
இப்படிப்பட்ட பெருமானின் திருக்குணங்களை சொல்லிசைத்த வண்ணம் துதித்து வந்தால் நம் பாவங்களால் வரும் துயர் தொலையும். இவற்றை போக்கிக் கொள்ளாமல் இவ்வுலகத்தவர் வீணே கழிக்கிறார்களே.! 
பகவத் குணம் பேசாமல் இவரகள் பொழுதை எப்படித் தான் கழிக்கிறார்களோ?.... 

சிறப்பு பொருள் :
---------------------------
1).கார் கலந்த மேனியான் =இராம பிரான் 
   அவன் சீர் கலந்த சொல் =இராமாயணம் 
2).கை கலந்த ஆழியான்= கண்ண பிரான் 
அவன் சீர் கலந்த சொல் = பாகவதம், 
            மகா பாரதம், அரிவம்சம் முதலியன. 
3).பார் கலந்த வல் வயிற்றான் 
அவன் சீர் கலந்த சொல் =புராணங்கள். 
4).பாம்பணையான் =திருவரங்கன். 
அவன் சீர் கலந்த சொல் =திருவரங்கனின் பெருமை பேசும் திருவாய் மொழி.. 

இது ஒரு 
சாற்றுப் பாசுரம்...

நன்றி:

திரு கருணா மூர்த்தி, 
முகநூல்

நலக்குறிப்புகள் : ஆரோக்கியமாக வாழ ஆயுர்வேதம் சொல்லும் இரகசியம்

ஆயுள் உள்ள வரை ஆரோக்கியமாக வாழ ஆயுர்வேதம் சொல்லும் இரகசியம்

1)  வாதம் பித்தம் கபம் அறியும் முறை
2) தண்ணீரீல் உறைந்து இருக்கும் ஆரோக்கிய ரகசியம்
3) ஒரே பழக்கம் மூலம் 100 க்கும் மேற்பட்ட நோய்களை தடுக்கும் முறை
4) நோய்கள் அனைத்திற்கும் காரணம் என்ன.
5) ஆரோக்கிய எடை குறைப்பு
6) என்றும் இளமை

இது போன்ற தகவல்களை இலவசமாக அறிய விரும்பினால் comment ல் உள்ள குழுவில் இணையவும்

நன்றி :

கருத்து மேடை : சுய ஒழுக்கம் (Self Discipline)

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது 

1. *தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள்*. அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2. *திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்*. இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.

3. *Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள்.* அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.

4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
*இன்னும் கல்யாணம் ஆகலயா?*
*குழந்தைகள் இல்லையா?*
*இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?*
*ஏன் இன்னும் Car வாங்கவில்லை?*
இது நமது பிரச்சினை இல்லைதானே!"

5. *தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது* அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!

6. நண்பருடன் Taxiயில் சென்றால. *இம்முறை இயலாவிட்டால் மறுமுறை* நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

7. *மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள்*. மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.

8. *அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள்*. அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

9. *நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள்*. அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

10. யார் உதவினாலும் பாரபட்சமின்றி *நன்றி சொல்லுங்கள்*.

11. பொதுவில் புகழுங்கள். *தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்*.

12. *உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.*
"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

13. *யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள்*. அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

14. *யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள்*. அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். *விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்* என்று கூறலாம்.

15. *நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்*.

16. *கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்*.

17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் *சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள்*. அவர்களாகவே சொன்னால் தவிர.

18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், *Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள்*. கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

19. யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக *வலிய போய் தலையிடாதீர்கள்.*

20. இறுதியாக ஒன்று. இதுபோன்ற தகவல்கள் *மற்றவர்களுக்கும்* பயன்தரும் என்றால் நன்றி

#Self #Discipline

நன்றி :

உங்கள் கவனத்திற்கு : இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்

மூன்று நாள் இயற்கை வேளாண்மை பயிற்சி : 03.12.2021- 05.12.2021

இப் பயிற்சியில் :
↣ இயற்கை வழி வேளாண்மை
↣ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்
↣ மழை நீர் அறுவடை
↣ உயிர்வேலி
↣ ஒருங்கிணைந்த பண்ணை
↣ இடுபொருள் செய்முறை பயிற்சி
↣ களப்பயிற்சி
↣ வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்
↣ கால் நடை பராமரிப்பு
↣ நிலங்களைதேர்வு செய்தல், காடு வளர்ப்பு
↣ மரபு விளையாட்டு
ஆகியவை இடம்பெறும்.

⇒ பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.
⇒ பயிற்சி வருகிற 03, டிசம்பர் 2021 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி
⇒05 டிசம்பர் 2021 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது.
⇒ பயிற்சி நிகழ்விடம் :
“வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,
சுருமான்பட்டி, கடவூர்,
கரூர் மாவட்டம்.
⇒ பயிற்சியில் 30 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
⇒ பயிற்சி நன்கொடை : ரூ 2,300/- (non-refundable)
⇒ தங்குமிடம் உணவு வழங்கப்படும்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்

Nammalvar Ecological Foundation
A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu

⇒ (வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
⇒ முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .
⇒ முன்பதிவுக்கு: +91 94458 79292

குறிப்பு : அரசு அறிவு ருத்தும் பெருந்தொற்று விதி முறைகளை பின்பற்ற வேண்டும்.
வெளியிலிருந்து கொண்டுவரும்
⇛ உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
⇛ பாலித்தின் பைகள்
⇛ சோப்பு 
⇛ ஷாம்பு
⇛ பேஸ்ட்
⇛ கொசுவர்த்தி
போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .
களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.
பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
நன்றி.

https://vanagam.org
https://vanagam.page.link/app

நன்றி :

இன்றைய தினம் : நவம்பர் 29, 2021

நூல் நயம் : சோளகர் தொட்டி - ச.பாலமுருகன்


பலத்த கனத்த இதயத்துடன் இதனை எழுதுகிறேன்.

இந்த புத்தகத்தினை எழுதியவர், இதனை பிழைகள் சரி பார்த்தவர், அச்சிட்டவர்கள் என இந்த புத்தகத்திற்கு சம்மந்த பட்டவர்கள் அனைவரும் எப்படி இதனை எழுதி, வாசித்து கடந்து வந்தார்கள் என்று என்னால் யோச்சிக்க கூட முடியவில்லை.

சோளகர் தொட்டியைச் சேர்ந்த மக்களும், இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த அப்பாவி மக்களும், இந்த உலகத்தில் எந்த விதமான சித்ரவதைகள் இருக்கின்றனவோ என்று எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு துன்புருத்தப்பட்டிருக்கின்றனர்.

ஜெய் பீம், கர்ணன், விசாரனை என சில படங்கள் lockup death பற்றி பேசியுள்ளது. போலீசாரின் வெறியாடலை பற்றி வெளிச்சம் போட்டும் காட்டியுள்ளது. இந்த படத்தையே பார்த்து முடித்து வெளியே கடந்து வர ஒரு வாரம் எடுத்துக்கொண்டேன். இந்த புத்தகத்திலுள்ள கால் பாகம் கூட அந்த படங்களில் காட்டவில்லை. அதுவே என்னை மனதளவில் மிகவும் பாதித்திருந்தது.
இப்போது நான் இருக்கும் மன நிலையை என்னால் எழுத்துக்களால் எழுத முடியவில்லை. 

பாகம் இரண்டு ஆரம்பித்தபோது வேகமாக துடிக்கத் தொடங்கிய என் இதய துடிப்பு இன்னும் நிற்கவில்லை. மாலை 8.15 போல ஆரம்பித்தேன். இப்போது இரவு 2.16 இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னமும் என் இதய துடிப்பு சத்தம் என் காதுகளில் கேட்கின்றது. என்னால் அழ கூட முடியாத ஓர் மன அழுத்தத்தை இந்த புத்தகம் தந்துள்ளது.

என் மனதிற்குள் வெற்றிமாறனா யார் என்று சரியாக நினைவில்லை. அவர்தான் என்று நினைக்கிறேன். அவர் சொன்ன இந்த வார்த்தைகள் மட்டும் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒருவர் அவரிடம் ஏன் நீங்கள் உங்கள் படங்களில் போலீசாரை கெட்டவர்களாகவே காட்டுகிறீர்கள்? போலீசார்கள் அனைவரைமே கெட்டவரகள் தானா? அதில் நல்லவர்கள் யாரும் இல்லாயா? என்று கேட்பார்.

அதற்கு அவர் “நான் என் வாழ்க்கைல எத பாத்தேனோ அத தான் படமா எடுக்க முடியும்.  இது வரைக்கும் என் வாழ்க்கைல பாத்த போலீசெல்லாம் இப்டி தான் இருந்திருக்காங்க. சப்போஸ் நல்ல போலீஸ பாத்தா நான் என்ன மாத்திக்குறேனு” சொல்லுவார்.

இது நிதர்சனமான உண்மையும் கூட. இங்கு பலர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களாகத் தான் இருக்கிறார்கள். ஜெய் பீம் படத்தில் பல காட்சிகள் இந்த புத்தகத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து காட்சி படுத்தியிருக்கிறார்கள். அதில் வரும் ராஜாகண்ணு, சுவாதியின் வழக்கில் கொல்லப்பட்ட ராம்குமார், ஜெயராஜ், பெனிக்ஸ் என் நமக்கு தெரிந்த சில. நமக்கு தெரியாத எத்தனை சோளகர் தொட்டி அழிக்கப்பட்டிருக்க வேண்டும்? எத்தனை ராஜாகண்ணுக்களும் அவர்களின் மனைவிமார்களும் மகள்களும் மானபங்கம் படுத்தப்பட்டு புணரப்பட்டு ரத்தத்தை உரிந்து வெரும் சக்கைகளாக வீசப் பட்டிருக்க வேண்டும்?

என் கைகள் எல்லாம் நடுங்குகிறது 💔

நன்றி :

இன்றைய திருமந்திரம் - பாடல் #1320


திருமந்திரம் - பாடல் #1320: நான்காம் தந்திரம் - 15. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

சௌம் முதல் வெளவொடு ஹெளவுளுமீறிக்
கௌவுளு மையுளுங் கலந்தி றீசிறீயென்
றொவ்வி லெழுங்கிலீ மந்திர பாதமாச்
செவ்வி லெழுந்து சிவாய நமவென்னே.

விளக்கம்:

'ஸௌம்' எனும் அட்சரம் முதலாக 'ஔம்' எனும் அட்சரத்தோடு சேர்த்து 'ஹௌம்' எனும் அட்சரத்தின் உள்ளும் இறுதியில் 'கௌம்' எனும் அட்சரத்தின் உள்ளும் 'ஐம்' எனும் அட்சரத்தின் உள்ளும் ஒன்றாகக் கலந்து 'ஹ்ரீம்' எனும் அட்சரமாகவும் ஸ்ரீம்' எனும் அட்சரமாகவும் வெளிப்பட்டு 'ஓம்' எனும் அட்சரத்திலிருந்து எழுகின்ற 'க்லீம்' எனும் அட்சரம் வரை உள்ளது. இந்த ஒன்பது அட்சரங்கள் கொண்ட மந்திரத்தை முதலாகக் கொண்டு மந்திரத்தை செபிப்பதற்கு ஏற்ற சமயத்தில் மனதை ஒருநிலைப் படுத்தி இந்த மந்திரத்தை சொல்லி பின்பு சிவாய நம என்று தொடர்ச்சியாகச் சொல்லுங்கள்.

இப்பாடலை பதப்பொருள் விளக்கத்துடன் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

https://kvnthirumoolar.com/song-1320/

நன்றி :

இன்றைய குறள்


நன்றி :

சுற்றுச்சூழல் : மரம் நடுவோம்!

தினம் ஒரு மரம் 🌳
நாள் 97
இடம் -  ஈங்கூர்.

நன்றி :

மனிதம் பசுமை இயக்கம், 
முகநூல் 

இயற்கையை நேசிப்போம்!


#naturechallenge 
So sweet !

Grateful thanks to 

Mr ANIL PURI, 
NATURE BEAUTIFUL WORLD, 
FACEBOOK 

இனிய காலை வணக்கம்!

28 நவ., 2021

வாவ்! படங்கள்


நன்றி :

Ms Rubeena Munir, 
AMAZING NATURE PICTURES, 
FACEBOOK 

சிரிப்புத்தான் வருகுதையா!

ஆன்மீக மந்திரங்கள் : வருண காயத்ரி

ஆன்மீக மலர்கள்



உங்கள் கவனத்திற்கு : வேலைவாய்ப்பு முகாம்

அருள்வாக்கு

இன்றைய தினம் : நவம்பர் 8, 2021

நூல் நயம் : பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் - வெ.இறையன்பு

RM_2021:    0167:     26/50
நூல்: பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்
ஆசிரியர்: வெ. இறையன்பு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
முதல் பதிப்பு 2006

கல்வியாளர், கட்டுரையாளர், கவிஞர், இளையோர் திறன் மேம்பாட்டாளர் என பன்முகத் தன்மை பெற்ற சிறந்த மனிதரின் கவிதைத் தொகுப்பு பூபாளத்திற்கொரு புல்லாங்குழல். 

தனது ஐ.ஏ.எஸ். பதவி மூலம் என்னென்ன சமூக நலன்களைச் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்தவர். மகளிர் முன்னேற்றத்துக்கும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்கும் பல திட்டங்களைக் கொண்டு வந்தவர். 
பெண் விடியலுக்காக பல கவிதைகள் இந்நூலில் உள்ளன. அதனால் தானோ இந்தத் தலைப்பை வைத்தாரோ. 

"சின்ன வயதிலிருந்தே சாப்பாட்டுடன் 
உங்களுக்கு ( பெண்களுக்கு) பொறுமைக் குணமும் போதிக்கப் பட்டதால் உங்களை அடிமைப் படுத்தும் ஆளுகைகள் உங்களுக்கு அக்கிரமமாய் படவில்லையோ!"
என்று கேட்கிறார் விழியின் விரிசல்கள் என்ற பாடலில்.

நிற வெறிக்குக் கருப்புக் கொடி என்ற தலைப்பில் காகத்தைப் பற்றி பாடி இருப்பார். 
"காக்கையே! 
உன்னை எப்படியெல்லாம் அவமானப் படுத்துகிறோம்.
காக்காய் குளியலெனவும்
காக்காய் பிடிப்பதெனவும்
காக்காய் வலிப்பெனவும்
காரணமில்லாமல் வைகின்றனர் வையகத்தில்.
அகத்தியன் கமண்டலத்தை
அன்று நீ கவிழ்த்திருக்கா விட்டால் காவிரி ஏது? கல்லணை ஏது?.
கவிழ்த்ததுதான் கவிழ்த்தாயே
தமிழக எல்லையில்
கவிழ்த்திருக்கக் கூடாதா!"
என கேள்வி கேட்கிறார். 

விரதம் என்ற தலைப்பில்
"உனக்குத் தெரியாது,
நான் உளிகளைப்
பொறுத்துக் கொள்வதெல்லாம் 
சிற்பமாவதற்கு என்று"
என்று உழைத்து முன்னேற வேண்டும் என துடிக்கும் இளையோருக்கு வழிகாட்டுகிறார்.

இறையன்பு அவர்களின் இன்னும் பல சிறந்த கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அவருடைய 'வையத் தலைமை கொள்' மற்றும் 'போர்த்திறம் பழகு' நூல்கள் எல்லாம் இளைஞர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடிய நூல்கள். படித்துப் பயன் பெறுவோம்.

-சிவக்குமரன்

நன்றி :

திரு சிவ குமார், 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல்

இன்றைய திருமந்திரம் - பாடல் #1319


திருமந்திரம் - பாடல் #1319: நான்காம் தந்திரம் - 15. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நவாக்கிரி சக்கரம் நானுரை செய்யில்
நவாக்கிரி யொன்று நவாக்கிரி யாக
நவாக்கிரி யெண்பத் தொருவகை யாக
நவாக்கிரி யாகக்கிலீஞ் சௌம் முதலீறே.

விளக்கம்:

ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட நவாக்கிரி சக்கரத்தைப் பற்றி யான் உங்களுக்கு எடுத்துக் கூறினால் அது ஒரே சக்தியாக இருக்கின்ற இறைவியின் திருமேனியாக விளங்கும் அட்சரமே ஒன்பது அட்சரங்களாக மாறி இருக்கின்ற சக்கரமாகும். இந்த சக்கரத்தில் இருக்கின்ற ஒன்பது அட்சரங்களையும் ஒன்பது அறைகளில் மாறி மாறி எழுதினால் மொத்தம் எண்பத்தொன்று அறைகளைக் கொண்டு விரிவடைந்து இருக்கும். ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற இந்த ஒன்பது அட்சரங்களும் நேராகப் பார்க்கும் போது 'ஸெளம்' எனும் அட்சரத்தில் ஆரம்பித்து 'க்லீம்' எனும் அட்சரத்தில் முடிவதாக இருக்கின்றது. ஆனாலும் தலை கீழாகப் பார்க்கும் போது 'க்லீம்' எனும் அட்சரத்தில் ஆரம்பித்து 'ஸெளம்' எனும் அட்சரத்தில் முடிவதாகவும் இருக்கின்றது.

குறிப்பு: அக்கிரி என்ற சொல்லுக்கான விளக்கும்

அக்ஷரி - சமஸ்கிருதம் - சக்தியின் திருமேனியாக எழுத்து இருக்கும் வடிவம்
அட்சரி - தற்காலத் தமிழ்
அக்கிரி - திருமந்திரத் தமிழ்

இப்பாடலை பதப்பொருள் விளக்கத்துடன் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

https://kvnthirumoolar.com/song-1319/

நன்றி :

இன்றைய குறள்


நன்றி :

சுற்றுச்சூழல் : மரம் வளர்ப்போம்!


இன்றைய மரக்கன்று பிறந்தநாள் மரக்கன்று

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மௌனித்

தினம் ஒரு மரம் 🌳
நாள் 123
இடம் - கருமாண்டி செல்லிபாளையம் .

நன்றி :

மனிதம் பசுமை இயக்கம், 
முகநூல்