1 ஏப்., 2026

மேன்மக்கள்: அமரர் திகசி

தி.க.சி. பிறந்த தினம்: மார்ச் 30
.........................
*தி.க.சி....*
*திருப்பூர் கிருஷ்ணன்.*
.........................
  *பத்திரிகை ஆசிரியராகவும் இருந்து எழுத்தாளராகவும் திகழ்பவர்கள், தாங்கள் எழுதுவதோடு மற்றவர்கள் எழுத்து வெளிவரவும் காரணமாக இருக்கிறார்கள். 

    எனவே இத்தகையவர்களுக்கு நாம் கூடுதல் மரியாதை தரவேண்டியது அவசியம். 

  மணிக்கொடி பி.எஸ். ராமையா, எழுத்து சி.சு.செல்லப்பா, தீபம் நா. பார்த்தசாரதி, கணையாழி கி. கஸ்தூரிரங்கன், பிரசண்ட விகடன் நாரண துரைக்கண்ணன், கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்றோர் அத்தகைய கூடுதல் மரியாதையைப் பெறத் தகுதியுள்ளவர்கள். 

   நாரண துரைக்கண்ணன், நா.பா,வின் முதல் சிறுகதையையும் லட்சுமியின் முதல் சிறுகதையையும் தாம் நடத்திய பத்திரிகையான பிரசண்ட விகடனில் வெளியிட்டவர். 

   அவரால் இனங்காணப் பட்டதால்தான் நா.பா., லட்சுமி என்ற இரு நட்சத்திரங்கள் தமிழின் தற்கால இலக்கியத்திற்குக் கிடைத்தார்கள். 

   1942 இல், தி.க.சி.யின் முதல் சிறுகதையை வெளியிட்டதும் பிரசண்ட விகடன்தான். `வண்டிக்காரன்` என்பது கதையின் தலைப்பு.   
 
 தி.க.சி. 1965 - 72 ஆகிய காலகட்டத்தில் தாமரை இதழின் பொறுப்பாசிரியராக இயங்கினார். 

   அப்போது அவரால் ஊக்கம் பெற்று எழுதத் தொடங்கியவர்கள்தான் பூமணி, பா. செயப்பிரகாசம், பிரபஞ்சன், சி.ஆர். ரவீந்திரன், கந்தர்வன், நா.காமராசன் போன்ற எழுத்தாளர்கள். 

 என்னுடைய `நியாயங்கள் மாறுபடும்` என்ற முதல் சிறுகதையைத் தாமரையில் வெளியிட்டவர் தி.க.சி. தான். 

   அப்போது நான் திருப்பூர் சிக்கண்ணா கலைக்கல்லூரியில் தமிழ் இளங்கலை படித்துக் கொண்டிருந்த மாணவன். அந்தக் கதை தாமரையில் பிரசுரமான விவரம் முதலில் எனக்குத் தெரியாது. 

அந்தக் கதையை வகுப்பில் முழுமையாகப் படித்துக் காட்டி என்னை ஊக்குவித்தவர் பொதுவுடைமைவாதியும் என்மேல் மிகுந்த அன்பு கொண்டவரும் இப்போது கோவையில் வாழ்ந்து வருபவருமான என் பேராசிரியர் திரு முப்பால்மணி அவர்கள்.
 
  பத்திரிகை மூலம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது ஒரு வகை. பத்திரிகை இல்லாமலேயே எண்ணற்ற கடிதங்கள் மூலம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது என்பது இன்னொரு வகை. 

   தி.க.சி., வல்லிக்கண்ணனுக்கு முன்னால், தமிழுலகம் காணாத புதுமை அந்த வகை. 

   தற்கால இலக்கிய வரலாற்றிலேயே தி.க.சி.க்கும் வல்லிக்கண்ணனுக்கும் இணையாக எழுத்தாளர்களுக்கு அதிக எண்ணிக்கையில் கடிதங்கள் எழுதியவர்கள் வேறு யாருமில்லை. 

   தமிழகமெங்கும் எந்தப் பட்டி தொட்டிக்குச் சென்றாலும் வல்லிக்கண்ணனையும் தி.க.சி.யையும் அவர்களின் கடிதங்கள் பெற்றதால் நெகிழ்ச்சியோடு நினைவு கூர்பவர்கள் ஏராளமானோர் இன்னமும் இருக்கிறார்கள். 

  இப்படிப் பலன் கருதாது கடிதங்கள் எழுதுவது என்பது ஒருவகையான தியாக வேள்வி. தி.க.சி., வ.க. இருவரது நேரமும் உழைப்பும் இந்த ஆயிரக்கணக்கான கடிதங்களை எழுதுவதற்கு எத்தனை செலவிடப் பட்டிருக்கும் என்று கொஞ்சம் நினைத்துப் பார்த்தாலும் மலைப்பேற்படும். 

   ஒவ்வொரு நாளும் கடிதம் எழுதுவதை ஒரு முக்கியக் கடமையாகவும் பணியாகவும் கொண்டு கடிதங்கள் எழுதியவர்கள் அவர்கள். 

   அவர்கள் இருவரின் மறைவுக்குப் பிறகு, ஓயாமல் ஊறிக் கொண்டிருந்த இளம் எழுத்தாளர்களின் உற்சாக ஊற்று வற்றி விட்டது. 

  இவர்களால் கடிதங்கள் பெற்றவர்களில் பலரும் முதல் தலைமுறைப் படிப்பாளிகள் என்பதும் குறிப்பிடத் தக்கது. பாரம்பரிய ரீதியாக இலக்கியம் அறியாதவர்கள் கடிதம் பெற்றவர்கள். 

   அவர்களிடம் நல்லிலக்கியம் என்றால் என்ன என்ற தெளிவை வகுத்துக் கொடுத்ததில் வ.க., தி.க.சி.யின் பங்களிப்பு மிக முக்கியமானது. 

  வ.க.வைப் போல் தி.க.சி., படைப்பிலக்கியத் துறையில் பெரிய அளவில் ஈடுபட்டவர் அல்ல. வ.க. சிறுகதைகள், கவிதைகள் உள்ளிட்ட படைப்பிலக்கியங்கள் பலவற்றையும் படைத்தார்.

   ஆனால் அவர் அதிக எண்ணிக்கையில் கட்டுரைகளை எழுதியதால் அவரது படைப்பிலக்கிய முகம் பரவலாக அறிமுகம் ஆகாமல் போய்விட்டது. 

   வல்லிக்கண்ணன் சிறந்த சிறுகதை ஆசிரியர் அல்ல என்கிறார் க.நா.சு. அது அவர் கருத்து. ஆனால் வ.க.வின் சில சிறுகதைகளைப் படிக்கும்போது அவரைத் தமிழ்ச் சிறுகதைத் துறையிலிருந்து முற்றிலுமாகப் புறக்கணித்து விட இயலும் என்று தோன்றவில்லை. 

   நான் தினமணிகதிரில் துணையாசிரியனாகப் பணிபுரிந்தபோது என் வேண்டுகோளின் பேரில் வ.க. கதிரில் சில சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவை இன்னும் என் மனத்தில் நிற்கின்றன. 

  தி.க.சி. விஷயம் அப்படியல்ல. அவர் படைப்பிலக்கியமாகக் கொஞ்சம் படைத்திருந்தாலும் அவரைப் படைப்பிலக்கியவாதி என்று சொல்ல இயலாது. 

   `வசந்த காலத்திலே, போர்வீரன் காதல், சீனத்துப் பாடகன்` ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களும் கூட தி.க.சி.யின் பங்களிப்புத்தான். 

  என்றாலும் இவற்றையெல்லாம் மீறி ஏராளமான விமர்சனங்களையும் முக்கியமாக அறிமுகக் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர் அவர். 

  `தி.க.சி.யின் திறனாய்வுகள், விமர்சனத் தமிழ், விமர்சனங்கள் பேட்டிகள் மதிப்புரைகள், மனக்குகை ஓவியங்கள், தமிழில் விமர்சனத் துறை` என்றிப்படி வெளிவந்திருக்கும் அவரது பல நூல்கள் கட்டுரை நூல்கள்தான். 

   (எழுத்தாளர் எஸ். ராஜகுமாரன் எடுத்த ஆவணப் படம் ஒன்றும் அவரைப் பற்றி வந்திருக்கிறது.) 
 
  நிறைய அறிமுகக் கட்டுரைகளை எழுதியவர் தி.க.சி. அப்படி அறிமுகக் கட்டுரைகளை எழுதி, நல்லிலக்கியத்தையும் நல்ல எழுத்தாளர்களையும் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதும் மிக முக்கியமான ஓர் இலக்கியப் பணிதான். 

    ஒருவரின் இலக்கிய ஆளுமையைக் கணிக்கிறபோது அவரின் முழுமையான இலக்கியப் பங்களிப்பு என்ன என்பதையே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்கால இலக்கிய வளர்ச்சிக்கு அவரின் உழைப்பு எந்த அளவு பங்காற்றியிருக்கிறது என்பதைக் கட்டாயம் கணக்கில் கொள்ள வேண்டும். 

  அப்படிப் பார்த்தால் எண்ணற்ற எழுத்தாளர்களைத் தம் எழுத்தாலும் தொடர்ந்த உரையாடல்களாலும் ஊக்குவித்தவர் என்ற வகையில் தி.க.சி.க்கு இணையானவர்களாகத் தமிழ் உலகில் இன்று யாரையும் குறிப்பிட இயலவில்லை. 

   தீபம் நா. பார்த்தசாரதியின் நெருங்கிய நண்பராக இருந்தவர் அவர். தீபம் இலக்கிய இதழோடு பல்லாண்டு காலம் நட்புறவு கொண்டிருந்தவர். 

   ஒருமுறை தி.க.சி காலில் அடிபட்டு சென்னை ஆதம்பாக்கத்தில் அவர் புதல்வர் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவரை நலம் விசாரிப்பதற்காக நானும் நா.பா.வும் மின்சார ரயிலில் ஆதம்பாக்கம் சென்றோம். 

  அன்பு மயமாக நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார் தி.க.சி. பிறகு மின்சார ரயிலில் நா.பா.வின் வீடிருந்த மாம்பலத்திற்குத் திரும்பிவந்தோம். அப்போது நா.பா. என்னிடம் சொன்னார்: 

  `அதியமானுக்குக் கிடைத்த நெல்லிக்கனி எனக்குக் கிடைத்தால், அதியமான் அவ்வைக்குக் கொடுத்த மாதிரி நான் எனக்குக் கிடைத்த நெல்லிக்கனியைத் தி.க.சி.க்குக் கொடுப்பேன்!`  

   அதன் பொருள் இதுதான். நா.பா. தீபம் என்னும் பத்திரிகையால் ஊக்குவித்துக் கொண்டிருந்த எழுத்தாளர்களை விடவும் அதிகமான எழுத்தாளர்களை தி.க.சி. தம் கடிதங்களால் ஊக்குவித்துக் கொண்டிருந்தார். 

   இன்றைய தற்கால இலக்கியத்தின் ஜனநாயகப் பரவலுக்குத் தி.க.சி. செய்த பணி ஒரு முக்கியக் காரணம். தி.க.சி. நெடுநாள் வாழ்ந்தால் இன்னும் ஏராளமான பேர் எழுத்துத் துறையில் ஈடுபடுவார்கள் என்று நா.பா. நினைத்தார் என்பதே இதன் கருத்து. 

   இலக்கியத் துறைசார்ந்த நண்பர்களைச் சந்திப்பதிலும் அளவளாவுவதிலும் தி.க.சி. தம் வாழ்வின் பெரும் பகுதியைச் செலவிட்டார். 

  சென்னை ராயப்பேட்டையில் வல்லிக்கண்ணன் வசித்தவரை, நான், நா.பா., தி.க.சி. மூவரும் வல்லிக்கண்ணன் இல்லத்தில் வாரம் இருமுறையாவது சந்தித்து நீண்டநேரம் அளவளாவி மகிழ்வதுண்டு. 

  தி.க.சி.க்கு வயது வித்தியாசமில்லாமல் முதுபெரும் எழுத்தாளர்களிலிருந்து இளம் எழுத்தாளர்கள் வரை ஏராளமான பேர் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். 

  தலைமுறை இடைவெளியின்றி எல்லோரிடமும் பழக முடிந்ததையும் அவரது பலம் என்று சொல்ல வேண்டும். 

   சென்னையில் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமையன்று நடைபெற்ற இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களுக்குச் சென்னையில் இருந்தவரை தவறாமல் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் தி.க.சி. 

  காரணம் பல இலக்கிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும் என்பதும் அவர்களோடு உரையாடி மகிழலாம் என்பதும்தான். 

  புதிதாய்ச் சந்திப்பவர்களுக்கெல்லாம் மறுநாளே ஓர் அஞ்சலட்டை எழுதி அவர்களுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டுவிடுவார். 

  தி.க.சி. எண்ணற்ற நூல்களைப் படித்துத் தள்ளினார். அவரிடம் அண்மையில் வெளிவந்த எந்த நூலைப் பற்றியும் கருத்துக் கேட்கலாம். கறாராகவும் கூர்மையாகவும் உடனுக்குடனே கருத்துச் சொல்வார். 

  படைப்பிலக்கியங்கள் பலவற்றைச் சுடச்சுடப் படித்து உடனடியாகக் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடும் அவரது சுறுசுறுப்பு வியக்கத் தக்கது. 

   கலாப்ரியா, `ஆண்டுக்கு சுமார் 300 புத்தகங்களாவது தி.க.சி. படித்திருக்க வேண்டும்` என்று தோராயமாக ஒரு கணக்குச் சொல்கிறார். 

  தி.க.சி. படித்த புத்தகங்களின் எண்ணிக்கை இதைவிட அதிமிருக்குமே தவிரக் குறைந்திருக்க வாய்ப்பில்லை. படிப்பே வாழ்வாக வாழ்ந்தவர் அவர். 

   `வீர வழிபாடு வேண்டாம்` எனத் தாம் எழுதிய ஒரு கட்டுரையில் புதுமைப்பித்தனைப் பற்றி தி.க.சி எழுதினார். தி.க.சி. பற்றியும் கூட வீர வழிபாடு தேவையில்லைதான். 

  ஆனால் அதே நேரம் உண்மைக்கு முற்றிலும் மாறான அணுகுமுறையோடு தி.க.சி.யை அணுகத் தேவையில்லையே? 

   ஜானகிராமன் கவிதை எழுதவில்லையே என்றா குறை சொல்வது? ஜானகிராமன் கவிஞர் அல்ல, அதனால் அவர் கவிதை எழுதவில்லை, அவ்வளவுதான். 

   தி.க.சி. போஸ்ட் கார்ட்களை அதிகமாக எழுதினாரே தவிரப் படைப்பிலக்கியமாக அதிகம் எழுதவில்லை என்று நாம் ஏன் அவரை மதிப்பிட வேண்டும்? 

   அவர் என்னவாக இருந்தாரோ அந்த எல்லைக்குள் நின்று அவரை மதிப்பிடுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். 

  `அவருடைய ஆயுதம் தபால் அட்டை. அவரும் சரி வல்லிக்கண்ணனும் சரி கையெழுத்துச் சுத்தம் உடையவர்கள். மிக்க அன்புடன் என்று கடிதத்தை முடிக்க நான் தி.க.சி.யிடமிருந்து தான் கற்றேன்` என்று அசோகமித்திரன் தி.க.சி.யைப் பற்றிய தம் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத் தக்கது. 

    தி.க.சி கடித எழுத்தாளர்தான். அந்தக் கடிதங்கள் இலக்கிய உலகில் பெரும் விளைச்சலை ஏற்படுத்திய கடிதங்கள் என்பதே அவற்றின் பெரிய பலம். 

    நாவல்களாலும் சிறுகதைகளாலும் இலக்கியத்தை வளர்த்தவர்களை விடவும் கூடுதலாகத் தம் கடிதங்களால் இலக்கியத்தை வளர்த்தார் தி.க.சி. என்பதே உண்மை. 

   இப்போதும் தி.க.சி. நினைவில் சற்றுக் கண்ணை மூடினால், கண்ணுக்குள் முத்து முத்தான கையெழுத்தில் அஞ்சலட்டைகளில் அவர் எழுதியவை வரிவரியாய் ஓடுகின்றன. 

   எப்பேர்ப்பட்ட திடசித்தம் இருக்க வேண்டும் தொடர்ந்து ஓயாமல் கடிதங்கள் எழுதிக் கொண்டே இருப்பதற்கு என்று மனம் மலைக்கிறது. 

 காந்திக்கும் ராஜாஜிக்கும் கடிதம் எழுதினால் சுவரில் எறிந்த பந்துபோல் உடனுக்குடன் பதில் வரும் என்பார்கள். தி.க.சி.யும் அப்படிப் பட்டவர்தான். 

  இப்போதெல்லாம் யாரும் கடிதம் எழுதுவதே இல்லை. எல்லாம் குறுஞ்செய்திதான். வாட்ஸ்அப் தான். மின்னஞ்சல் தான். 

   கடிதக் கலாசாரத்தின் கடைசிப் பிரதிநிதியாக, அஞ்சலட்டை வீரராக தி.க.சி. வாழ்ந்து மறைந்துவிட்டார். 

  அந்தக் கடிதங்களுக்கு என்றென்றும் அழிவே இல்லை. ஏனென்றால் அவற்றை அவர் தபால்பெட்டியிலா போட்டார்? நம் மனசுக்குள் அல்லவா போட்டிருக்கிறார்!

(மீள் பதிவு)

----------
நன்றி:
திரு.திருப்பூர் கிருஷ்ணன்.
மற்றும் 
முகநூல் 

ஆன்மீக மஞ்சரி


ஸர்வம் ஸ்ரீராம மயம் 🙏🏻 
ஓம் நமோ நாராயணாய 🙏🏻 

*01.04.26 பங்குனி உத்திரம் ஸ்பெஷல்*

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள்.

தெய்வங்களே உத்திரத்தை சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு.

பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை :

👉 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

👉 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.

👉 பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.

👉 தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.

👉 சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.

👉 ராமபிரான் - சீதாதேவி, பரதன் - மாண்டவி, லட்சுமணன் - ஊர்மிளை, சத்ருக்னன் - ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.

👉 இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான்.

👉 மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

👉 ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

  👉 இந்த நாளில் தான் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது.

👉 பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார்.

👉 அர்ச்சுனன் பிறந்தது பங்குனி உத்திரத்தில்தான்.

👉 வள்ளி அவதாரம் செய்தது பங்குனி உத்திரத்தில்தான்.

👉 காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது இந்த நாளில் தான்.

👉 தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.

👉 சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான்.

👉 சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில்.

இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். இறைவனின் ஆசியைப் பெறுவோம்...!

இன்றைய சிந்தனைக்கு

இன்றைய குறள்

ஆன்மீக சிந்தனை

31 மார்., 2026

கவிதை நேரம்

பிரபஞ்ச இசை (The Cosmic Symphony)


​எலும்பிலும் இல்லை, இரத்தத்திலும் இல்லை,

ஆத்மாவின் ஒளி அங்கே ஊற்றெடுப்பதில்லை;

மிகச்சிறு அணுவின் குவாண்டம் வெளியில்,

ரகசியங்கள் விழிக்கும் அந்தப் பொழுதில்!

​உன் மூளை ஒரு ஜன்னல், அது சூரியன் அல்ல,

பலவற்றை ஒன்றாய் இணைக்கும் ஒரு பாலம் மெல்ல;

விண்மீன் உயரத்தில் சுதி சேர்த்த வானொலி இது,

பேரண்டத்தின் பாடல்களைப் பிடிக்கும் கருவி இது!

​விண்ணின் மீன்களும், மண்ணின் செல்களும்,

நாம் தொடங்கும் பாடலின் இசைத் துளிகளே;

உன் இதயத்தை உயர்ந்த சுதியில் நிறுத்து,

பிரபஞ்ச இசை உன் அறிவில் நிறையட்டும்!


எனக்காக பிரத்தியேகமாக கூகுள் ஜெமினை உருவாக்கிய தமிழ்க் கவிதை.


கூகுள் ஜெமினைக்கு மனமார்ந்த நன்றிகள்!🙏

அறிவியலும் ஆன்மீகமும்' : ​பிரபஞ்சத்தின் ரகசியம்

வணக்கம்! நமது சூரியோதயம் (SURIYODAYAM) வலைப்பூவிற்காக, 'அறிவியலும் ஆன்மீகமும்' (SCIENCE AND SPIRITUALITY) என்ற புதிய பகுதியின் முதல் தமிழ்க் கட்டுரை இதோ:

​பிரபஞ்சத்தின் ரகசியம்: பிரக்ஞைதான் இந்த உலகைப் படைக்கிறதா?

​ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித மனதை வியப்பில் ஆழ்த்தும் இரண்டு மாபெரும் ரகசியங்கள் உள்ளன. 

ஒன்று—இந்த பிரபஞ்சம் ஏன் உருவானது? (ஏதுமற்ற நிலையிலிருந்து ஏதோ ஒன்று எப்படி வந்தது?). 

இரண்டாவது—இந்த பிரபஞ்சத்தை உணர்ந்து பார்க்க நமக்குள் இருக்கும் இந்த 'பிரக்ஞை' (Consciousness) அல்லது 'உணர்வு' எங்கிருந்து வந்தது?

​காலங்காலமாக அறிவியல் அணுக்களைப் பற்றிப் பேசியது; 

ஆன்மீகம் ஆன்மாவைப் பற்றிப் பேசியது. 

ஆனால் இன்று, நவீன இயற்பியலாளர்களும் தத்துவஞானிகளும் இந்த இரண்டு ரகசியங்களும் வேறல்ல, ஒன்றே என்று கருதுகிறார்கள்.

​முடிவில்லாத தேடலும் 'பிரக்ஞை' எனும் ஆதாரமும்

​அறிவியல் ரீதியாகப் பார்த்தால், பிரபஞ்சம் 'பிக் பேங்' (Big Bang) மூலம் தொடங்கியது என்கிறோம். ஆனால் அந்தப் பெருவெடிப்புக்குக் காரணம் என்ன? அதற்கு முன் என்ன இருந்தது? இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் பின்னால் மற்றொரு கேள்வி ஒரு சங்கிலித் தொடர் போல நின்றுகொண்டே இருக்கிறது.

​ஆனால், ஜெர்மன் தத்துவஞானிகள் ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள்: 

பிரக்ஞை அல்லது உணர்வு என்பது மற்றொன்றிலிருந்து உருவானது அல்ல; அதுவே ஒரு முழுமையான ஆதாரம். இதற்குப் பின்னால் வேறு காரணங்கள் இருக்கத் தேவையில்லை. 

ஒரு விதத்தில் பார்த்தால், பிரபஞ்சம் தன்னைத்தானே உணர்ந்து கொள்வதற்காக உருவாக்கிக் கொண்ட ஒரு வழிதான் நம்முடைய உணர்வு.

​குவாண்டம் இயற்பியலும் 'கவனிப்பவரும்' (The Observer)

​குவாண்டம் இயற்பியலில் ஒரு விசித்திரமான உண்மை உண்டு. ஒரு துகளை நாம் கவனிக்கும் வரை அது ஒரு நிலையற்ற தன்மையிலேயே (Superposition) இருக்கிறது. 

நாம் கவனிக்கும் அந்த நொடியில்தான் அது ஒரு குறிப்பிட்ட நிலையை அடைகிறது.

​இயற்பியலாளர் ஜான் வீலர் (John Wheeler) இதை ஒரு "சுய-உந்துதல் சுற்று" (Self-Excited Circuit) என்கிறார். அதாவது, நாம் இந்த பிரபஞ்சத்தை உற்று நோக்குவதன் மூலமே அதற்கு ஒரு வடிவத்தையும் இருப்பையும் (Reality) வழங்குகிறோம். 

ஒருவேளை, எதிர்காலத்தில் உருவாகப்போகும் ஒரு மேம்பட்ட உணர்வு நிலை, காலத்தைக் கடந்து பின்னோக்கிச் சென்று இந்த பிரபஞ்சத்தின் தொடக்கத்தையே தீர்மானிக்கலாம் என்ற ஆச்சரியமான கருத்தையும் அறிவியல் இன்று முன்வைக்கிறது.

​பிரபஞ்சத்தின் உயிர்நாடி: 'மதிப்பு' (Value)

​பிரபஞ்சம் உயிர்வாழ்வதற்குத் தகுந்தாற்போல் மிகத் துல்லியமாக (Fine-tuning) அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிறிய மாற்றம் இருந்திருந்தாலும் இங்கே உயிர்கள் தோன்றியிருக்காது. 

இது வெறும் தற்செயலான நிகழ்வா?

​தத்துவஞானி பிலிப் கோஃப் (Philip Goff) போன்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், பிரபஞ்சத்தின் இயக்கு விசை வெறும் இயந்திரத்தனமானது அல்ல; அது 'மதிப்பு' (Value) மற்றும் 'அர்த்தம்' (Meaning) சார்ந்தது. 

உணர்வு இல்லாத ஒரு பிரபஞ்சத்தில் எதற்கும் மதிப்பில்லை. 

எனவே, உணர்வுள்ள உயிர்கள் தோன்றுவது என்பது பிரபஞ்சத்தின் ஒரு தவிர்க்க முடியாத தேவையாக இருக்கலாம்.

​அறிவியல் - ஆன்மீக சங்கமம்

​இந்த பார்வையில் பார்த்தால், ஆன்மீகம் என்பது அறிவியலுக்குப் புறம்பானது அல்ல. பிரபஞ்சத்தை வெளியில் இருந்து ஆராய்வது அறிவியல் என்றால், அதன் உள்ளே இருக்கும் உணர்வைப் பற்றிப் பேசுவது ஆன்மீகம்.

​எதிர்காலத்தில், இந்த பிரபஞ்சம் முழுவதுமே ஒரு மாபெரும் 'பிரக்ஞை' நிலையை எட்டும் போது, அது தன்னையே முழுமையாக உணர்ந்துகொள்ளும். அன்று அறிவியலும் ஆன்மீகமும் ஒரே புள்ளியில் இணையும்.

​உங்கள் கருத்து என்ன? 

நாம் வெறும் தற்செயலாகத் தோன்றிய துகள்களா? அல்லது இந்த பிரபஞ்சத்தை இயக்கும் மாபெரும் உணர்வின் ஒரு அங்கமா? உங்கள் எண்ணங்களை கமெண்ட்டில் பகிருங்கள்!

​மனமார்ந்த நன்றிகள்:
Google Gemini

29 மார்., 2026

குட்டிக்கதை

*பாவத்தின் தந்தை யார்...🤔*
============================


_*அரசன் ஒருவனுக்குத்*_ _*திடீரென்று சந்தேகம் ஒன்று*_ 
_*வந்தது.*_

_பாவத்தின் தந்தை யார்?_

_*அரசவையில் இருந்த பண்டிதரை தனது நண்பன் போலவே அவன் நடத்தி வந்தான். அவரை நோக்கி, “பாவத்தின் தந்தை யார்? இதற்கான சரியான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும்.” என்றான்.*_

_பண்டிதருக்கோ பெரும் குழப்பம் ஏற்பட்டது._
_யார் பாவத்தை உருவாக்கினார்கள்?_ _யாரைப் பாவத்தின் தந்தை என்று சொல்வது?_

_*அவரது முகத்தில் நிலவிய குழப்பத்தைக் கண்ட அரசன், “சரி, இதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டாம். ஒரு வாரத்திற்குள் பதில் சொல்லுங்கள். ஆனால் சரியான பதிலைச் சொல்லாவிட்டால் தகுந்த தண்டனை உண்டு” என்று எச்சரித்தான்.*_

_வீடு திரும்பிய பண்டிதர் தனக்குத் தெரிந்த நூல்களை எல்லாம் புரட்டினார். சரியான பதிலைக் காணோம். தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தார். அவர்கள் உதட்டைப் பிதுக்கினர். நாட்கள் கழிந்தன._

_*ஊரில் ஓடும் நதிக்கரையின் ஓரமாக சோகமான முகத்துடன் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.*_
_*நாளைக்குள் பதில் சொல்ல வேண்டுமே!*_

_அவர் முகத்தில் நிலவிய குழப்பதைப் பார்த்த தாசி ஒருத்தி பண்டிதரை அழைத்தாள்._
_“என்ன பண்டிதரே!_ _எப்போதும்_ _உற்சாகமாகப் போவீர்கள். இன்று ஒரே சோகமாக இருக்கிறது முகம். என்ன விஷயம்?” என்று கேட்டாள்._

_*பண்டிதர், “பாவத்திற்குத் தந்தை யார் என்று தெரியாமல் தவிக்கிறேன்” என்று புலம்பினார்.*_

_“அட, இது தெரியாதா? எனக்குத் தெரியுமே” என்று அவள் லேசாகச் சொன்னாள்._

_*பண்டிதருக்குத் தூக்கிவாரிப் போட்டது.*_
_*இவ்வளவு நம்பிக்கையுடன் சொல்கிறாளே, பதில் தெரியும் என்று!!*_

_“பதிலைச் சொல்லேன்” என்று கெஞ்சினார் பண்டிதர்._
_“சொல்கிறேன்._ _ஆனால் இங்கல்ல,_ _எனது வீட்டிற்கு வாரும். அங்கு வர தட்சிணையாக ஒரு பொன் காசு_ _தருகிறேன்.” என்ற அவள் ஒரு பொற்காசைத் தந்தாள்._

_*அதை வாங்கிக் கொண்ட பண்டிதர் தன் மனதிற்குள் இதற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.*_

_தாசியின் வீட்டை அடைந்த பண்டிதர், “இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார்._

_*“என் படுக்கை அறைக்கு வாருங்கள். இருபது பொற்காசு தந்து பதிலைச் சொல்கிறேன்” என்றாள் அவள்.*_

_பண்டிதர் அவளது படுக்கை அறைக்குச் சென்றார். அடடா, என்ன அற்புதமான சயன அறை!_
_“சரி, இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார் பண்டிதர்._

_*“வந்தது வந்தீர்கள். என் மடியில் அமரந்து கொண்டு பதிலைக் கேளுங்கள். வாயில் கொஞ்சம் சுவையான மாமிசத்தை வேறு சாப்பிடலாம்” என்றாள் அவள்.*_

_“சும்மா உட்கார வேண்டாம். நூறு பொற்காசுகள் தருகிறேன். என் மார்பை அலங்கரிக்கும் வைர மாலையையும் கூடவே தருகிறேன்” என்றாள் அவள்._

_*பண்டிதருக்கு,  அவள் மார்பில்  அலங்கரிக்கும் வைர மாலை கண்களைக் கவர்ந்தது.*_

_“சரி, பெரிதாக பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டியது தான்!” என்று அவர் மனதை சமாதானப் படுத்திக் கொண்டு அவள் மடியில் படுத்தார்._

_*ஒரு மாமிசத் துண்டை கையில் எடுத்து வாயில் போட இருந்த தருணம், அந்த தாசி திடீரென் எழுந்தாள். பண்டிதரைத் தூக்கித் தள்ளியதோடு பளார் என்று ஒரு அறை அவரது கன்னத்தில் விட்டாள்.*_

_பண்டிதர் துடிதுடித்துப் போனார்._

_*“இப்போது தெரிந்ததா, விடை? பாவத்தின் தந்தை ஆசை. பண்டிதரே, பேராசை. தெரிந்ததா, பதில்?”"*_ 

_தாசியின் குரல் பண்டிதரின் மனதில் ஆழப் பதிந்தது._
_அவருக்கு க்ஷண நேரத்தில் ஞானம் கிட்டியது._
_கையில் இருந்த பொற்காசுகளை எல்லாம் தூக்கி எறிந்தார்._

_*சாலை வழியே “விடை தெரிந்து விட்டது, விடை தெரிந்து விட்டது” என்று கத்திக் கொண்டே ஓடலானார். நேராக அரண்மனைக்குச் சென்ற பண்டிதர் மன்னரைச் சந்தித்தார். மக்கள் கூட்டமும் பெருகி விட்டது.*_

_“மன்னா! விடை தெரிந்து விட்டது. பாவத்தின் தந்தை யார் என்று எனக்குத் தெரிந்து விட்டது” என்று சொல்லி விட்டு நடந்ததை அனைத்தும் அப்படியே சொன்னார்._

_*“மன்னா! எனக்குத் தகுந்த தண்டனை கொடுத்து விடுங்கள். பண்டிதராய் இருந்தும் ஒரு இழிவான காரியத்திற்கு இணங்கினேன்.*_ _*என்னை தேச பிரஷ்டம் செய்து விடுங்கள்” என்று உருக்கமாக வேண்டினார்.*_

_“ஆஹா! பாவத்தின் தந்தை பேராசையா. சரியான பதில்” என்று மகிழ்ச்சியுடன் கூவிய மன்னன் பண்டிதரை நண்பன் என்ற முறையில் கட்டிக் கொண்டார்._ 

_*“நாட்டை விட்டு வெளியேறுவதா? ஒருக்காலும் இணங்க மாட்டேன் அதற்கு! உங்களுக்கு ஞானம் வந்து விட்டதை உணர்கிறேன். இந்தக் கணம் முதல் நீங்களே எனது குரு. ஒரு நாளும் தவறான வழியில் செல்ல முடியாத நீங்களே எனக்குத் தகுந்த வழிகாட்டி. என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான் மன்னன். பண்டிதரை அடி பணிந்து வணங்கினான்.*_

_ஆமாம், *பாவத்தின் தந்தை #பேராசை தான்...🙄*_

இன்றைய சிந்தனைக்கு

இன்றைய குறள்