29 மார்., 2026

குட்டிக்கதை

*பாவத்தின் தந்தை யார்...🤔*
============================


_*அரசன் ஒருவனுக்குத்*_ _*திடீரென்று சந்தேகம் ஒன்று*_ 
_*வந்தது.*_

_பாவத்தின் தந்தை யார்?_

_*அரசவையில் இருந்த பண்டிதரை தனது நண்பன் போலவே அவன் நடத்தி வந்தான். அவரை நோக்கி, “பாவத்தின் தந்தை யார்? இதற்கான சரியான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும்.” என்றான்.*_

_பண்டிதருக்கோ பெரும் குழப்பம் ஏற்பட்டது._
_யார் பாவத்தை உருவாக்கினார்கள்?_ _யாரைப் பாவத்தின் தந்தை என்று சொல்வது?_

_*அவரது முகத்தில் நிலவிய குழப்பத்தைக் கண்ட அரசன், “சரி, இதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டாம். ஒரு வாரத்திற்குள் பதில் சொல்லுங்கள். ஆனால் சரியான பதிலைச் சொல்லாவிட்டால் தகுந்த தண்டனை உண்டு” என்று எச்சரித்தான்.*_

_வீடு திரும்பிய பண்டிதர் தனக்குத் தெரிந்த நூல்களை எல்லாம் புரட்டினார். சரியான பதிலைக் காணோம். தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தார். அவர்கள் உதட்டைப் பிதுக்கினர். நாட்கள் கழிந்தன._

_*ஊரில் ஓடும் நதிக்கரையின் ஓரமாக சோகமான முகத்துடன் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.*_
_*நாளைக்குள் பதில் சொல்ல வேண்டுமே!*_

_அவர் முகத்தில் நிலவிய குழப்பதைப் பார்த்த தாசி ஒருத்தி பண்டிதரை அழைத்தாள்._
_“என்ன பண்டிதரே!_ _எப்போதும்_ _உற்சாகமாகப் போவீர்கள். இன்று ஒரே சோகமாக இருக்கிறது முகம். என்ன விஷயம்?” என்று கேட்டாள்._

_*பண்டிதர், “பாவத்திற்குத் தந்தை யார் என்று தெரியாமல் தவிக்கிறேன்” என்று புலம்பினார்.*_

_“அட, இது தெரியாதா? எனக்குத் தெரியுமே” என்று அவள் லேசாகச் சொன்னாள்._

_*பண்டிதருக்குத் தூக்கிவாரிப் போட்டது.*_
_*இவ்வளவு நம்பிக்கையுடன் சொல்கிறாளே, பதில் தெரியும் என்று!!*_

_“பதிலைச் சொல்லேன்” என்று கெஞ்சினார் பண்டிதர்._
_“சொல்கிறேன்._ _ஆனால் இங்கல்ல,_ _எனது வீட்டிற்கு வாரும். அங்கு வர தட்சிணையாக ஒரு பொன் காசு_ _தருகிறேன்.” என்ற அவள் ஒரு பொற்காசைத் தந்தாள்._

_*அதை வாங்கிக் கொண்ட பண்டிதர் தன் மனதிற்குள் இதற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.*_

_தாசியின் வீட்டை அடைந்த பண்டிதர், “இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார்._

_*“என் படுக்கை அறைக்கு வாருங்கள். இருபது பொற்காசு தந்து பதிலைச் சொல்கிறேன்” என்றாள் அவள்.*_

_பண்டிதர் அவளது படுக்கை அறைக்குச் சென்றார். அடடா, என்ன அற்புதமான சயன அறை!_
_“சரி, இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார் பண்டிதர்._

_*“வந்தது வந்தீர்கள். என் மடியில் அமரந்து கொண்டு பதிலைக் கேளுங்கள். வாயில் கொஞ்சம் சுவையான மாமிசத்தை வேறு சாப்பிடலாம்” என்றாள் அவள்.*_

_“சும்மா உட்கார வேண்டாம். நூறு பொற்காசுகள் தருகிறேன். என் மார்பை அலங்கரிக்கும் வைர மாலையையும் கூடவே தருகிறேன்” என்றாள் அவள்._

_*பண்டிதருக்கு,  அவள் மார்பில்  அலங்கரிக்கும் வைர மாலை கண்களைக் கவர்ந்தது.*_

_“சரி, பெரிதாக பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டியது தான்!” என்று அவர் மனதை சமாதானப் படுத்திக் கொண்டு அவள் மடியில் படுத்தார்._

_*ஒரு மாமிசத் துண்டை கையில் எடுத்து வாயில் போட இருந்த தருணம், அந்த தாசி திடீரென் எழுந்தாள். பண்டிதரைத் தூக்கித் தள்ளியதோடு பளார் என்று ஒரு அறை அவரது கன்னத்தில் விட்டாள்.*_

_பண்டிதர் துடிதுடித்துப் போனார்._

_*“இப்போது தெரிந்ததா, விடை? பாவத்தின் தந்தை ஆசை. பண்டிதரே, பேராசை. தெரிந்ததா, பதில்?”"*_ 

_தாசியின் குரல் பண்டிதரின் மனதில் ஆழப் பதிந்தது._
_அவருக்கு க்ஷண நேரத்தில் ஞானம் கிட்டியது._
_கையில் இருந்த பொற்காசுகளை எல்லாம் தூக்கி எறிந்தார்._

_*சாலை வழியே “விடை தெரிந்து விட்டது, விடை தெரிந்து விட்டது” என்று கத்திக் கொண்டே ஓடலானார். நேராக அரண்மனைக்குச் சென்ற பண்டிதர் மன்னரைச் சந்தித்தார். மக்கள் கூட்டமும் பெருகி விட்டது.*_

_“மன்னா! விடை தெரிந்து விட்டது. பாவத்தின் தந்தை யார் என்று எனக்குத் தெரிந்து விட்டது” என்று சொல்லி விட்டு நடந்ததை அனைத்தும் அப்படியே சொன்னார்._

_*“மன்னா! எனக்குத் தகுந்த தண்டனை கொடுத்து விடுங்கள். பண்டிதராய் இருந்தும் ஒரு இழிவான காரியத்திற்கு இணங்கினேன்.*_ _*என்னை தேச பிரஷ்டம் செய்து விடுங்கள்” என்று உருக்கமாக வேண்டினார்.*_

_“ஆஹா! பாவத்தின் தந்தை பேராசையா. சரியான பதில்” என்று மகிழ்ச்சியுடன் கூவிய மன்னன் பண்டிதரை நண்பன் என்ற முறையில் கட்டிக் கொண்டார்._ 

_*“நாட்டை விட்டு வெளியேறுவதா? ஒருக்காலும் இணங்க மாட்டேன் அதற்கு! உங்களுக்கு ஞானம் வந்து விட்டதை உணர்கிறேன். இந்தக் கணம் முதல் நீங்களே எனது குரு. ஒரு நாளும் தவறான வழியில் செல்ல முடியாத நீங்களே எனக்குத் தகுந்த வழிகாட்டி. என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான் மன்னன். பண்டிதரை அடி பணிந்து வணங்கினான்.*_

_ஆமாம், *பாவத்தின் தந்தை #பேராசை தான்...🙄*_

இன்றைய சிந்தனைக்கு

இன்றைய குறள்

அருள்வாக்கு

27 மார்., 2026

ஆன்மீக மஞ்சரி

நாடி மருத்துவம்

குட்டிக்கதை

Author: Stasyan117
licensed under the Creative Commons Attribution-Share Alike 4.0 International license.
Via WIKIMEDIA COMMONS 


ஒரு மனிதன் தன் குரங்குகளுடன் ஒரு படகில் பயணம் செய்து கொண்டிருந்தான். அந்தப் படகில் இருந்த மற்ற பயணிகளில் ஒரு தத்துவஞானியும் இருந்தார். அந்தக் குரங்கு இதற்கு முன் படகில் பயணம் செய்ததில்லை, அதனால் அது சங்கடமாக உணர்ந்தது. அது கத்தவும் மேலும் கீழும் குதிக்கவும் தொடங்கியது, படகில் இருந்த யாரையும் நிம்மதியாக உட்கார விடவில்லை. படகோட்டி எரிச்சலடைந்தார், மேலும் இந்தக் குழப்பத்தால் படகு மூழ்கிவிடுமோ என்று பயணிகள் கவலைப்பட்டனர்.  குரங்கு அமைதியாகவில்லை என்றால், அது படகை மூழ்கடிக்கக் காரணமாகிவிடும்.

அந்த மனிதன் இந்தச் சூழ்நிலையால் கலக்கமடைந்தான், ஆனால் குரங்கை அமைதிப்படுத்த எந்த வழியையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தத்துவஞானி எல்லாவற்றையும் கவனித்துவிட்டு உதவ முடிவு செய்தார்.
அவர், “நீங்கள் அனுமதித்தால், இந்தக் குரங்கை ஒரு வீட்டுப் பூனையைப் போல என்னால் அமைதியாக்க முடியும்,” என்றார்.

அந்த மனிதன் உடனடியாக ஒப்புக்கொண்டான். இரண்டு பயணிகளின் உதவியுடன், தத்துவஞானி குரங்கைத் தூக்கி ஆற்றில் வீசினார். தண்ணீரில் மிதக்கப் போராடிய குரங்கு, வெறித்தனமாக நீந்தத் தொடங்கியது.

அது சாகும் தருவாயில் இருந்தது, தன் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, தத்துவஞானி குரங்கை மீண்டும் படகிற்குள் இழுத்தார். இப்போது குரங்கு அமைதியாகி ஒரு மூலையில் சென்று அமர்ந்தது.
குரங்கின் மாறிய நடத்தையைக் கண்டு அந்த மனிதனும் அனைத்துப் பயணிகளும் ஆச்சரியப்பட்டனர்.

அந்த மனிதன் தத்துவஞானியிடம், “முன்பு அது அமைதியின்றி அங்குமிங்கும் குதித்துக் கொண்டிருந்தது. இப்போது அது ஒரு வளர்ப்புப் பூனையைப் போல அமர்ந்திருக்கிறது. ஏன்?” என்று கேட்டான்.

தத்துவஞானி பதிலளித்தார், “நான் இந்தக் குரங்கைத் தண்ணீரில் வீசியபோது, ​​அது நீரின் சக்தியையும், தன் வாழ்வின் மதிப்பையும், படகின் பயனையும் புரிந்துகொண்டது.”

இந்தியாவில் எல்லாவற்றையும் தொடர்ந்து விமர்சித்து, கருத்துரைத்து, எதிர்க்கும் நபர்களை ஆறு மாதங்களுக்கு வட கொரியா, ஆப்கானிஸ்தான், சோமாலியா, தெற்கு சூடான், சிரியா, ஈராக், பாலஸ்தீனம், பாகிஸ்தான், இலங்கை அல்லது சீனாவிற்கு அனுப்ப வேண்டும். இந்தியாவிற்குத் திரும்பிய பிறகு, அவர்கள் தானாகவே ஒரு வளர்ப்புப் பூனையைப் போல அமைதியாகி, நாடு முன்னேற வழிவகுப்பார்கள்.

“இந்தியா”வைத் தவறாகப் பயன்படுத்தி அவதூறு பரப்பும் அனைத்து நண்பர்களுக்கும் அர்ப்பணம்.

 ஜெய்ஹிந்த் 🇳🇪🇳🇪

26 மார்., 2026

இன்றைய புத்தகம்

முன்வெளியீட்டு விலைத்திட்டம்

ஞானக்கூத்தன் கட்டுரைகள் (முழுத் தொகுப்பு)

நூலைப் பெற:

https://books.kalachuvadu.com/catalogue/GnaanakoothanKatturaikal_1959/

@followers TopFans D.i. Aravindan Kannan Sundaram

#kalachuvadubooks #TamilBookReview #PreBookingOffer
#gnanakoothankavithaigal #gnanakoothan #tamilliterature #தமிழ்literature #tamilbookstore #தமிழ்நூல்கள் #kalachuvadubooks #prereleaseprice #tamilreaders #bookloverstamil #ReadTamil

இன்று ஒரு தகவல்

நலக்குறிப்புகள்