ஆரோக்கிய முத்திரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆரோக்கிய முத்திரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 ஏப்., 2019

ஆரோக்கிய முத்திரைகள்-25: நரம்பு தளர்ச்சி சரியாகும் சுமண முத்திரை


நரம்பு தளர்ச்சி சரியாகும் சுமண முத்திரை  

யோகா குரு


133,231 views
Minaliya Tv
Published on Dec 25, 2018

நன்றி: யோகா குரு அவர்கள், "Minaliya Tv" மற்றும் யூடியூப். 

13 ஏப்., 2019

ஆரோக்கிய முத்திரைகள்-24: தைராய்டு குணமாகும் சூன்ய முத்திரை



தைராய்டு குணமாகும் சூன்ய முத்திரை : 

யோகா குரு

67,313 views
"Minaliya TV"
Published on Dec 17, 2018

நன்றி: "Minaliya TV",  யோகா குரு மற்றும் யூடியூப். 

  

27 பிப்., 2019

ஆரோக்கிய முத்திரைகள்-23:கருட முத்திரை


கருட முத்திரை

கருடன், ஆகாயம் எனும் காற்றுமண்டலத்தில் சுற்றி, அதை ஆள்வதைப் போல, உடலில் உள்ள காற்றைக் (வாயுவை) கட்டுப்படுத்தும் என்பதால், இந்த முத்திரைக்கு ‘கருட முத்திரை’ என்று பெயர். இந்த முத்திரையைச் செய்வதால் உடலில் உள்ள வாயுக்கள் சீராகும்.

*எப்படிச் செய்வது?*
நிமிர்ந்து அமர்ந்த நிலையில், கைகளை அடிவயிற்றுப் பகுதியில் வைத்து, உள்ளங்கை உடல் நோக்கியபடி, இடது கை மீது வலது கையை வைத்து, கட்டைவிரல்களைக் கோக்க வேண்டும். பார்க்க சிறகுகள் விரித்ததுபோல இருக்கும். இப்போது, விரல்களைச் சிறகு போல விரித்து அசைக்கவும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும். பிறகு, 20 விநாடிகள் அமைதியாக இருக்கவும். பிறகு, தொப்​புள் பகுதி, மேல் வயிறு, மார்புக்கூட்டுக்கு  நடுவில் என ஒவ்வொரு பகுதிக்கும், நேராக கைகளை வைத்து இதேபோல் செய்ய வேண்டும். முத்திரையை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம்.

*கவனிக்க*
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முத்திரையைத் தவிர்க்கவும்.

*பலன்கள்*

*உடலின் நான்கு பாகங்களிலும் இந்த முத்திரையைச் செய்வதால், முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், வயிறு, நுரையீரல் மற்றும் இதயம் பலப்படும்.

*கழிவுநீக்க மண்டலம், செரிமான     மண்டலம், சுவாச மண்டலம் செயல்​பாடு சீராகும். ரத்த ஓட்டம் சீராக பாயும்.

*வேலைப் பளுவின் காரணமாக ஏற்படும் சோர்வில் இருந்து விடு​பட்டு, உடனடி உற்சாகம் மற்றும் புத்துணர்வு கிடைக்க உதவும். 

*அடிவயிற்றுப் பகுதியில் செய்வதால்,  சீரற்ற மாதவிலக்கு, அடிவயிற்று வலி, ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் ஆகிய பிரச்னை​களின் வீரியம் குறையும்.

*தொப்புளுக்கு நேராக வைத்து இந்த முத்திரையைச் செய்வதால், உடலில் உள்ள வாயுக்கள் சமன்​படுகின்றன. உடலில் ஒரு பக்கம் மட்டும் ஏற்படும் வலி, மத​மதப்பு, உணர்ச்சியற்ற தன்மை சரியாகின்றன.

*மேல் வயிற்றுக்கு நேராக செய்வதால், பசியின்மை, செரிமானப் பிரச்னைகள்  சரியாகும்.

*நெஞ்சுப் பகுதிக்கு நேராக செய்வதால், குறைந்த ரத்த அழுத்தம், ஆஸ்துமா பிரச்னைகள்  கட்டுக்குள் வரும்.

21 நவ., 2018

ஆரோக்கிய முத்திரைகள்-8: சிவலிங்க முத்திரை

சிவலிங்க முத்திரை

      🗿அளவிடமுடியாத இந்தப் பிரபஞ்ச வெளியில், பல்லாயிரக்கணக்கான வடிவங்களும், வஸ்துக்களும் இடம்பெற்றுள்ளன. எனினும், சிவலிங்க வடிவம் தனக்குள் அனைத்து வடிவங்களையும் அடக்கியுள்ளதோடு, ஆராய்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மாபெரும் சக்தியையும், பல்வேறு ரகசியங்களையும் பொதிந்து வைத்துள்ளது. சுயம்புவாகத் தோன்றியும், தேவர்களாலும், மனிதர்களாலும் பிரதிஷ்டை செய்யப்பட்டும் வணங்கப்பட்டு வருகின்றது. இந்த சிவலிங்க வடிவில் காணப்படும் சிவலிங்க முத்திரை அனைத்து நல்ல பலன்களையும் அளிக்கவல்லது.

எப்படிச் செய்வது?

    👍 ஆசனத்தில் அமர்ந்து, இடது கையை கிண்ணம் போல் லேசாகக் குழித்து, உள்ளங்கை மேல்நோக்கி இருக்குமாறு, தொப்புள் பகுதிக்கு நேரே வைக்கவும். அதன்மேல், மற்றொரு கையை நான்கு விரல்களையும் மூடிய நிலையிலும் கட்டைவிரல் நேராக இருக்கும்படியும் வைக்க வேண்டும். கண்களை மூடி அமர்ந்து கொள்ளவும். ஒரு நாளைக்கு இருமுறை என 5 நிமிடங்கள் இதைச் செய்யலாம்.

பலன்கள்

     😊சிவலிங்க வடிவம் இடம் பெற்றிருக்கும் இடத்தில் பஞ்ச பூதங்களும் லயத்தோடு செயல்படுகின்றன. அதேபோல், சிவலிங்க முத்திரை செய்யும்போது, நமது உடலில் பஞ்ச பூதங்களும் அதனதன் அளவீடுகளில் நிலைத்து, ஆக்க சக்தியை வெளியிடுகின்றன. உயிரோட்டத்தின் மொத்த வடிவமாக நமது உடல் மாறுவதால் தீய எண்ணங்கள், அவநம்பிக்கை போன்ற எதிர்மறை எண்ணங்கள் அழிந்து, தன்னம்பிக்கையும், மனோ தைரியமும் உண்டாகிறது.

     💪 உடலில் உள்ள உஷ்ணம் நீங்கினால், மரணம். அதாவது, சிவம் உடலிலிருந்து அகன்றுவிட்டால் சவம். உடலில் உள்ள குளிர்ச்சி என்னும் கபத்தை வெளியேற்றி, உஷ்ணத்தைத் தக்க வைக்க சிவலிங்க முத்திரை உதவும். எந்தவித நோயாக இருந்தாலும், விரைவில் விடுபட வேண்டுமென்றால் சிவலிங்க முத்திரையை உட்கார்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ செய்யலாம். குளிர், நடுக்கம், அவநம்பிக்கை, சோர்வு ஆகியவை பறந்தோடும்.

      💖 சிவம் தேவையற்றதை எரித்துச் சம்பலாக்கிச் சம்ஹாரம் செய்வதைப்போல், சிவலிங்க முத்திரை நம் உடலில் குடியிருக்கும் பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை அழித்து, நல்ல சக்தியை நிலைநாட்டுகிறது.

       ⛪ யோக முறையில் விடாமுயற்சியுடன் இறைவனை அடைய விரும்புவோரும், புனித வாழ்க்கை வாழ விரும்புவோரும் சோர்வின்றித் தங்கள் பயணத்தைத் தொடர, சிவலிங்க முத்திரையைத் தொடர்ந்து செய்து வரலாம்.