31 மார்., 2024

நூல் நயம்

#reading_marathon2024
24RM070
12/75
#எஸ்ராமகிருஷ்ணன் 

புத்தகத்தின் பெயர்: யாமம் ஆசிரியர் பெயர்: எஸ் ராமகிருஷ்ணன் 
பதிப்பகம்: தேசாந்திரி மொத்த பக்கங்கள் 408 விலை ரூ400

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நாவல்கள், மொழிபெயர்ப்பு, சினிமா, கட்டுரைத் தொகுப்புகள், உலக எழுத்தாளர்கள் மற்றும் அவருடைய படைப்புகள் குறித்த கட்டுரை தொகுப்புகள் என இவர் எழுதிக் குவித்த எழுத்துக்கள் அளவற்றது..  நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை இயற்றியுள்ளார்.. இவருடைய "யாமம்" என்ற இந்த நாவல் பக்கம் பக்கமாக எழுத்துகளின் குவியல்கள்! கதைகளின் ஊடாக இவர் எவ்வளவு தகவல்களை கொடுத்திருக்கிறார்.. படிக்க படிக்க தீரா பக்கங்கள்!!  பக்கங்கள் என்று சொல்வதை விட அவ்வளவு தகவல்கள், மனித மனதின் விசித்திரங்கள்,அவற்றின் அலைகழிப்பு, போராட்டங்கள், ஏமாற்றங்கள்,துயரங்கள், சந்தோஷங்கள்...  

இந்த நாவலில் மொத்தம் நான்கு கதைகள் ஒவ்வொரு கதையின் ஓட்டமும் ஒரு தெளிந்த நீரோடையின் ஓட்டம் போல நகர்கிறது.. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் நகரும் கதைகள்.. எந்த ஒரு இடத்திலும் கதையோ கதை மாந்தர்களோ தொடர்பு கொள்வதே இல்லை.. ஒரே நாவலுக்குள் நான்கு குரு நாவல்கள் தனித்து இயங்குவதை போல தான் கதை சொல்லப்பட்டு இருக்கிறது இந்த நான்கு கதைகளும் "யாமம்" என்ற ஒற்றை புள்ளியில் தொடர்பு கொள்கிறது.. யாமம் என்பது காமம் என்பது குறியீடாகவே அனைத்து கதைகளிலும் தொடர்கிறது... இந்த நான்கு கதைகளின் பின்புலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மதராசபட்டணம் உருவான வரலாறு அமைந்திருக்கிறது நான்கு கதைகளுக்கும் ஆதாரமாக விளங்குவதும் இந்த வரலாறு தான்.. 

மதராசபட்டினம் உருவான காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு இஸ்லாமிய குடும்பம் மிகுந்த வாசனை கொண்ட ஒரு அத்தரை பிரத்தியேகமாக தயாரித்து விற்பனை செய்கிறது.. அந்த அத்தர் பெயர் தான் யாமம்.. 

" சொல்லின் வழியாக இரவை அறிந்து கொள்ள முடியாது. பகலும் இரவும் ஒன்றுக்கொன்று எதிரானதும் அல்ல, உறவானதும் அல்ல. பகல் தீட்டும் சித்திரங்கள் யாவையும் இரவின் கரங்கள் அழித்து மறுஉருவாக்கம் செய்கின்றன.”  

அதனால் இரவு என்னும் ரகசிய நதி எப்போதுமே நம்மை சுற்றி ஓடிக்கொண்டே இருக்கிறது.. இரவை ஒரு சுகந்தம் என உருவாக்குவதும் உங்கள் கையில் என்று சொல்லி ஒரு சூஃபி ஞானி அத்தர் தயாரிக்கும் தொழிலை கரிமின் குடும்பத்திற்கு சொல்லிக் கொடுக்கிறது.. இந்த குடும்பத்தின் ஆண் வாரிசுகளின் மூலம் வழிவழியாக அத்தர் தயாரிக்கும் தொழில் தொடர்ந்து வருகிறது.. கரீம் தன்னுடைய ஆண் வாரிசுக்காக மூன்று பெண்களை மணக்கிறான்.. ராஜ்மானி, வஹிதா மற்றும் சுரையா.. ஆனால் இவர்கள் யாராலும் ஒரு ஆண் வாரிசை பெற்றெடுக்க முடியவில்லை... இதையே நினைத்து தன்னுடைய குடும்பத்தொழில் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல ஆண் வாரிசு இல்லை என்று வெறுத்து கரீம் சூதாட்டத்திலும் குதிரை பந்தயத்திலும் தன்னுடைய செல்வங்களை எல்லாம் இழக்கிறான்.. அதன் பிறகு அவனுடைய மனைவிகள் எவ்வாறு தன்னுடைய வாழ்க்கையை கடக்கிறார்கள் என்பது மீதிக் கதை...

இவர்கள் தயாரிக்கும் யாமம் மனிதனின் அடிப்படை காமம் என்ற இச்சையின் குறியீடாகவே அனைத்து கதைகளிலும் வெளிப்படுகிறது... இரவினை சுகந்தமாக்கும் யாமம் (காமம்) அந்த சுகந்தத்தினால் ஆட்கொள்ளப்படும் மனிதர்கள் இப்படி மற்ற அனைத்து கதைகளும் நகர்கிறது... 

இன்னொரு கதையில் வரும் பத்ரகிரி தன்னுடைய தகப்பனாரால் புறக்கணிக்கப்பட்டு தன்னுடைய சித்தியால் பேணி வளர்க்கப்பட்டவன் இவருடைய மனைவி விசாலா.. இவனுடைய தம்பி திருச்சிற்றம்பலம் அவனுடைய மனைவி தையல்நாயகி.. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் லாம்ப்டன் தலைமையில் நில அளவை குழுவில் இணைந்து பணியாற்றும் பத்ரகிரி.. கணிதத்தில் மேதையாக திகழும் திருச்சிற்றம்பலம்.. தன்னுடைய மேற்படிப்பிற்காக பல லண்டன் சென்றும் தன்னுடைய பிரம்மச்சரிய வாழ்க்கையை மிகவும் கட்டுக்கோப்பாக கடைபிடித்து வருகிறான்.. உறவுகளின் பிறழ்வுகளில் ஏற்படும் சிக்கல்களை இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் மீதிக்கதை மிக அருமையாக சித்தரிக்கின்றன... 

நீலகண்டம் என்ற நாயை பின்தொடர்ந்து செல்லும் சதாசிவ பண்டாரம் இன்னொரு கதை.. இந்த கதையின் மூலம் மனிதர்களின் வாழ்வு பெரும்பாலும் அவர்களின் மனங்களில் தோன்றிக்கொண்டே இருக்கும் சிலஅக காரணங்களுக்காக அலைபாய்ந்து கொண்டே செல்வதை மிக நுண்ணியமாக சித்தரித்துக் காட்டுகிறார்,. ஆன்மீக வாழ்வினை ஏற்றுக்கொண்ட பண்டாரத்தின் வாழ்விலும் காமம் இல்லாமல் இல்லை.. இரவு என்பது நாம் நினைத்தவாரில்லை.. அது மனிதனின் அகத்தை நெகிழச் செய்து நம்மை அறியாமலேயே அதன் ஆழத்திற்கு இழுத்துச் சென்று தன் மாயவலையில் சிக்கிக் கொள்ள வைக்கிறது... அந்த நெகிழ்வான இரவில் பண்டாரமும் ஆட்கொள்ளப்படுகிறார்.. 

அடுத்து கிருஷ்ணப்ப கரையாளரின் கதை.. சொத்து பிரச்சனை வழக்கில் உழன்று கொண்டிருக்கும் இவர் தன்னுடைய ஊதாரித்தனத்தால் நிறைய சொத்துக்களை இழக்கிறார்.. வாழ்வின் நிறைய அலைகழிப்புக்குப் பிறகு எலிசபத் என்ற வேசியுடன் தனக்கு சொந்தமான மலைக்குச் சென்று தங்குகிறார்.. மலையின் மீது இருக்கும் காடும் இயற்கையும் எப்பேர்ப்பட்ட மனதினையும் கரைத்து விடும்.. அப்படித்தான் கிருஷ்ணப்பனும்.. மலையின் மீது குடியேறியதில் இருந்து தன்னுள் ஏற்பட்ட மனமாற்றம் கடைசியில் தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விட்டுக் கொடுத்து அவர் தங்கியிருக்கும் அந்த மலையை மட்டும் எடுத்துக் கொண்டு அதையையும் எலிசபத்திற்கு எழுதிக் கொடுக்கிறார்.. அதன் பின்பு அந்த மலை சரிவில் தேயிலை தோட்டம் உருவான கதையையும் கூறியுள்ளார்.. இந்த கதையின் எலிசபெத் என்னவானாள் என்பதை வாசகர்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. 

இப்படி ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத இந்த நான்கு கதைகளிலும் இதுதான் முடிவு என்று இல்லாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கை பயணங்களாக தொடர்கிறது... கரிமின் கதை பேராசையையும் , சதாசிவ பண்டாரத்தின் கதை ஆன்மீகப் பாதையையும், பத்ரகிரியின் கதை சபலத்தினால் ஏற்படும் சிக்கல்களையும்,  கிருஷ்ணப்ப கரையாளரின் கதை பல்வேறு சலனங்களுக்குப் பிறகு ஏற்படும் அமைதியையும் உணர்த்துகிறது.. மனித மனங்களின் எண்ண ஓட்டங்களுக்கு நாம் எப்படி எதிர்வினை புரிந்தால் எந்த இடத்தை அடையலாம் என்பதை தெளிவாக விளக்கும் கதைகள் அற்புதமான வாசிப்பு அனுபவம்...

நன்றி:

சுற்றுச்சூழல்

ஹோமியோபதி

கவிதை நேரம்

நலக்குறிப்புகள்

இன்றைய சிந்தனைக்கு

வீட்டுக்குறிப்புகள்

ஹோமியோபதி

அன்றாட வாழ்வில் அபாயங்கள்

அருள்வாக்கு

24 மார்., 2024

ஹோமியோபதி

கவிதை நேரம்

இன்றைய புத்தகம்

பாரதி சிந்தனை

சுற்றுச்சூழல்

நலக்குறிப்புகள்

இன்றைய சிந்தனைக்கு

ஆன்மீக மஞ்சரி

12 மார்., 2024

இன்றைய புத்தகம்

நலக்குறிப்புகள்

இன்றைய சிந்தனைக்கு

அருள்வாக்கு

சுற்றுச்சூழல்

9 மார்., 2024

கவிதை நேரம்

The Bliss of Solitude - பிழைத்த தென்னந்தோப்பு 
Amidst the green fields, along the bank of a pond
With not a soul in sight, I came to be alone.
In the storm that had passed - trees,innumerable
like transplanted seedlings, were strewn around.
In a small patch of land - a grove of coconut trees, 
a sharecropper's livelihood - the storm had left alone.
A few had fallen, but many trees were untouched
let them live, had decided the God of Winds.
I have found solitude - it has its own meaning.
Solitude I've often found - has an essence of its own.
The ray that drives away the cold - is it not the nectar of life? 
Majestic was the sun in the sky, spreading rays of happiness 
that cheered the grains to sway in a song
I stood in the shade, amongst the trees that were left,
And understood, that in verse do I find eternal bliss. 
Praise thee, goddess, those that praise thee live on,
Praise thee goddess, these are my words, forget not.


வயலிடையினிலே - செழுநீர் மடுக் கரையினிலே, 
அய லெவருமில்லை - தனியே, ஆறுதல் கொள்ள வந்தேன். 
காற்றடித் ததிலே - மரங்கள் கணக்கிடத் தகுமோ? 
நாற்றி நைப்போல - சிதறி நாடெங்கும் வீழ்ந்தனவே, 
சிறிய திட்டையிலே - உளதோர், தென்னஞ் சிறு தோப்பு 
வறியவ னுடைமை - அதனை வாயு பொடிக்கவில்லை 
வீழ்ந்தன சிலவாம் - மரங்கள், மீந்தனபலவாம்; 
வாழ்ந்திருக்க வென்றே அதை வாயு பொறுத்துவிட்டான் 
தனிமை கண்டதுண்டு- அதிலே, சார மிருக்கு தம்மா! 
பனிதொலைக்கும் வெயில் - அதுதேம் பாகுமதுர மன்றோ? 
இரவி நின்றதுகாண் விண்ணிலே, இன்பவொளித்திரளாய் 

மகாகவி பாரதி 

இன்று ஒரு தகவல்

நலக்குறிப்புகள்

வீட்டுக்குறிப்புகள்

இன்றைய சிந்தனைக்கு

அருள்வாக்கு

8 மார்., 2024

ஆன்மீக சிந்தனை

இன்று ஒரு தகவல்

நலக்குறிப்புகள்

குட்டிக்கதை

ஆன்மிக அமுதம்:
............................
 *அந்தக் கணத்தை மாற்ற முடியாது!*
*திருப்பூர் கிருஷ்ணன்*
............................
  *மனைவியோடும் கைக்குழந்தையோடும் அந்தக் கணவன், தான் வசிக்கும் திருப்புத்தூரிலிருந்து, மதுரையை நோக்கி நடந்து கொண்டிருந்தான். 

  மதுரையில் அவன் மாமன் வீட்டிற்குத்தான் குடும்பத்தோடு சென்று கொண்டிருந்தான். மதுரையை குலோத்துங்க பாண்டியன் ஆண்டுகொண்டிருந்த காலம் அது. 

  அப்பா! நடந்து நடந்து கால்கள் என்னமாய் வலிக்கின்றன! நண்பகல் வெய்யில் வேறு பாதங்களைச் சுடுகிறது. 

 மரங்களடர்ந்த கானகத்தின் வழியே அவர்கள் நடக்க வேண்டியிருந்தது. என்றாலும் மரக் கிளைகளையும் இலைகளையும் தாண்டி வெய்யில் இப்படித் தரையை வறுத்துக் கொண்டிருக்கிறதே!

 ஓர் ஆலமரத்தின் அடியில் சற்று அமர்ந்து இளைப்பாறிவிட்டுச் செல்லலாமே என்றாள் மனைவி. குழந்தையோடு அவர்கள் ஆலமரம் ஒன்றின் அடியில் அமர்ந்தார்கள். 

  மனைவி விரைவில் விளையப் போகும் விபரீதத்தை அறியாதவளாய் `நாதா! எனக்குத் தாகத்தால் உயிரே போகும்போல் இருக்கிறது. எங்கேனும் தண்ணீர் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?` என வினவினாள். 

  கணவனுக்கும் கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தேவலாம் என்றுதான் தோன்றியது. வெகுதூரம் நடந்த களைப்பு. 

 `இங்கேயே குழந்தையோடு பத்திரமாக இரு. அருகே ஏதாவது சுனை இருக்கிறதா பார்த்து வருகிறேன்!` எனச் சொல்லிப் புறப்பட்டுச் சென்றான். 

  அருகில் எந்த நீர்நிலையையும் காணோம். சற்று தூரத்தில் எப்படியோ ஒரு பொய்கையைக் கண்டுபிடித்த அவன், தாகம் அடங்க முதலில், தான் தண்ணீர் குடித்தான். 

  பின் பொய்கையிலேயே படர்ந்திருந்த பெரிய தாமரை இலை ஒன்றைப் பறித்து தொன்னைபோல் செய்து, அதில் பொய்கை நீரை எடுத்துக் கொண்டான். 

  நீர் சிந்திவிடாமல் இரு கரங்களிலும் இலையைத் தாங்கி, மனைவி வீற்றிருக்கும் ஆலமரத்தடியை நோக்கி நடந்தான். 

  மரத்தடியில் அவன் கண்ட காட்சி! என்ன கொடுமை இது! அவன் மனைவி உயிரிழந்து கீழே சாய்ந்திருந்தாள். அவள் உடலில் அம்பு பாய்ந்திருந்தது. 

  குழந்தை, தாய் இறந்ததை அறியாமல் விளையாடிக் கொண்டிருந்தது. 

  தாமரை இலையில் தேங்கியிருந்த தண்ணீரும் அவன் விழிகளிலிருந்து வழிந்த கண்ணீரும் ஒருசேரத் தரையை நனைத்தன. 

  வாழ்க்கையே தாமரை இலைத் தண்ணீர்தானா? பிடிப்பற்று உருள்கிறதே? மனைவியை இழந்த நான் இனி என்ன செய்வேன்? எப்படி உயிர்வாழ்வேன்? எப்படி என் சின்னஞ்சிறு குழந்தையை வளர்ப்பேன்?

 பெண்கொலை பெரும் பாவமல்லவோ? இவள்மேல் அம்பெய்து இந்த மாபாதகச் செயலைச் செய்தது யார்? 

  சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் தென்படவில்லை. அந்தப் பெரும் ஆலமரத்தைச் சுற்றி வந்தான். 

 மரத்தின் அந்தப் புறத்தில் ஒரு வேடன் வில்லோடும் அம்போடும் நின்றுகொண்டிருந்தான். அவனையன்றி அந்தப் பிரதேசத்தில் வேறு மனித வாடையே இல்லை. 

   பிறகு அவன்தான் அம்பெய்து மனைவியைக் கொன்றான் என்பதற்கு வேறு சாட்சி வேண்டுமா?

  அவன் பிடரியைப் பிடித்து இழுத்துவந்து தன் மனைவியின் உடல்முன் நிறுத்தினான். 

 `ஒரு பாவமும் அறியாத என் மனைவியை ஏன் அம்பெய்து கொன்றாய்? என் பச்சிளங் குழந்தையைத் தாயில்லாக் குழந்தையாக்கி விட்டாயே? அவள் என்ன கெடுதல் செய்தாள் உனக்கு?` - சீற்றத்தோடும் கண்ணீரோடும் அதட்டினான். 

  அவள் இறந்துகிடந்த காட்சியைப் பார்த்து, வேடன் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது. அடேயப்பா, என்ன நடிப்பு என அந்தத் துயரத்திலும் வியந்தது கணவன் மனம். 

  `ஐயா! உங்கள் மனைவியின் உடலில் பாய்ந்திருப்பது என் அம்புதான். அந்த அம்பின் அமைப்பைப் பார்த்தவுடனேயே அது என் அம்புதான் என்பதைப் புரிந்துகொண்டேன். 

  ஆனால் நான் அவள்மேல் அம்பெய்யவில்லை. நான் வேட்டைக்காக அவ்வப்போது இவ்விடம் வருவேன். இன்று நான் வந்தே சில கணங்கள்தான் ஆகின்றன. என்னை நம்புங்கள்!` 

  `ஆகா! பொய் சொல்வதற்கும் ஓர் அளவு வேண்டும். சொல்கிற பொய் நம்புகிற மாதிரியாவது இருக்கவேண்டும். நீ மட்டும்தான் இங்கிருக்கிறாய். அம்பும் உன்னுடையதுதான் என்கிறாய். ஆனால் நீ கொல்லவில்லை என்கிறாய். 

   என்னுடன் வா. மதுரையை நெருங்கிவிட்டோம். அரசவைக்குச் சென்று மன்னனிடம் நீதி கேட்போம். உனக்குத் தண்டனை வாங்கித் தராமல் நான் விடப் போவதில்லை.`

 மனைவியின் உடலைத் தோளில் சுமந்துகொண்டு குழந்தையைக் கூட்டிக்கொண்டு முன்நடந்தான் அவன். அச்சத்தோடு பின் நடந்தான் வேடன்.

 *அன்று அரசவைக்கு வந்த வழக்கைப் பார்த்து மன்னனுக்கு ஆச்சரியம். 

  வேடன்தான் கொன்றான் என்பது சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிகிறது. ஆனால் வேடனோ தான் கொல்லவில்லை என்று சாதிக்கிறான். என்ன செய்வது இப்போது? 

  மன்னன் மனத்தில் பலவிதச் சிந்தனைகள் எழுந்தன.

  அந்த அம்பு தன்னுடையதுதான் என வேடன் ஒப்புக்கொள்ளத் தேவையே இல்லையே? இது என் அம்பு இல்லை என்று அவன் சொன்னால் யார் மறுக்க முடியும்? 

  அப்படியிருந்தும் வேடன் அந்தப் பெண்ணின்மேல் பாய்ந்துள்ள அம்பு தன் அம்புதான் என்கிறான். அவன் பொய் பேசுபவனாக இருந்தால் அதை மறைத்திருப்பானே?

  கொல்லப்பட்ட பெண்ணுக்கும் வேடனுக்கும் முன்விரோதம் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படியிருக்க அவளை அவன் கொல்ல எந்த முகாந்திரமும் இல்லையே?  

  ஆனால் அந்த இடத்தில் வேறு யாரும் இல்லாதபோது வேடன் தானே கொன்றிருக்க வேண்டும்? 

  என்ன முடிவெடுப்பது என்றறியாமல் மன்னன் மனம் மயங்கியது. வேடனைத் தற்காலிகமாகச் சிறையிலடைக்க உத்தரவிட்ட மன்னன், நீதி விசாரணை நாளை மறுபடியும் தொடரும் என அறிவித்தான்.

   இறந்த பெண்ணின் ஈமச் சடங்கிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவள் கணவனுக்கு வழங்குமாறு காவலர்களிடம் அறிவுறுத்தினான். 

 சிம்மாசனத்திலிருந்து எழுந்து அரண்மனை உள்ளே செல்வதற்கு முன் மறுபடியும் வேடனின் முகத்தைப் பார்த்தான்.

 `பசிக்காகப் பறவைகளையும் விலங்குகளையும் கொல்பவன் நான். காரணமே இல்லாமல் மனிதர்களைக் கொல்வேனா?` என வேடனின் கண்கள் பரிதாபமாக மன்னனிடம் கெஞ்சின. 

 ஒரு பெருமூச்சுடன் மன்னன் அரண்மனையின் உள்ளே நடக்க, அன்றைய சபை அத்துடன் கலைந்தது. 

 *அன்று மாலை தான் வழிபடும் மதுரை சோமசுந்தரக் கடவுள் ஆலயத்திற்குச் சென்றான் மன்னன். சிவலிங்கத்திற்கு முன் கைகூப்பி நின்றான். 

 `தெய்வமே! வேடனைப் பார்த்தால் அப்பாவியாக இருக்கிறான். ஒருவேளை அந்தக் கணவனே மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடுகிறானா? அப்படியிருக்க வாய்ப்பே இல்லை. 

   கணவனின் துயரக் கண்ணீர் நடிப்பல்ல. அங்கு வேறு யாரும் வரவுமில்லை. அப்படியானால் யார் குற்றவாளி? நான் சரியான நீதி வழங்க நீதான் உதவ வேண்டும்!` 

 மன்னன் மனமுருகிப் பிரார்த்தித்த போது திடீரென சன்னிதியிலிருந்து அசரீரி எழுந்தது. 

 `நாளை காலை இறந்த மனைவியின் கணவனை அழைத்துக் கொண்டு மாறுவேடத்தில் செட்டித் தெருவுக்குச் செல். அங்கே திருமணம் நடக்கும் இல்லமொன்று தென்படும். 

   விருந்தினரோடு விருந்தினராய் அந்த இல்ல மணவிழாவில் கலந்துகொள். உனக்கு உண்மை புலப்படும்!`

 மன்னன், சிவலிங்கத்தை வணங்கி அரண்மனை திரும்பினான்....

 *மறுநாள் அதிகாலையில் மாறுவேடத்திலிருந்த மன்னனும் இறந்த பெண்ணின் கணவனும் செட்டித் தெருவிலிருந்த திருமண வீட்டிற்குச் சென்றார்கள். விருந்தினரோடு விருந்தினராய் அமர்ந்தார்கள். எங்கும் மணவிழாக் கோலாகலம். 

 அவர்கள் இருவரின் கண்ணுக்கு மட்டும் இரு எம தூதர்கள் காட்சி தந்தார்கள். எம தூதர்கள் பேசிக் கொண்ட பேச்சு அவர்கள் காதில் மட்டும் விழுந்தது. எம தூதர்களில் ஒருவன் மற்றவனிடம் சொன்னான்:

 `மனத்தைத் திடப் படுத்திக் கொள்! தர்மராஜா சொன்ன வேலையைச் செய்து முடிப்பதுதான் நம் கடமை. இன்னும் சில நொடிகளில் இந்த மணமகன் இறக்க வேண்டும் என்பது அவன் விதி. 

  ஒருவருக்கு இறப்பு நிகழ்வதற்கு அவரவரின் முன்வினைதான் காரணமே அன்றி வேறு யாரும் காரணமல்ல. எப்படி மணமகனின் உயிரை எடுப்பது என்பதை மட்டும் யோசி.`

 `அதுதான் புரியவில்லை. மணமேடையில் ஆரோக்கியமாக அமர்ந்திருக்கும் மணமகனை இறக்கச் செய்வது எப்படி?`

 `நேற்று நண்பகலில் கானகத்தில் ஆலமரத்தடியில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் உயிரை வாங்கினோமே? ஞாபகமிருக்கிறதா? 

   ஏற்கெனவே ஒரு வேடன் எப்போதோ எய்த ஓர் அம்பு அந்த ஆலமரக் கிளையில் சிக்கியிருந்தது. காற்றால் அந்த அம்பை அசைத்து சரியாக அவள் மார்பில் அம்பு விழுமாறு செய்து அவளைக் கொன்றோமே? விதிக்கப்பட்ட மரணக் கணத்தைத் தாண்டி ஓர் உயிரும் உடலில் இருக்க இயலாது. 

  இந்த இல்லத்தின் கொல்லையில் கட்டப்பட்டுள்ள பசுமாட்டின் வாலை முறுக்குவோம். அது அச்சமடைந்து கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடோடி வந்து இந்த மணமகனை முட்டிச் சாய்க்கட்டும். 

  அப்போது மணமகன் உயிரை வாங்கிவிடுவோம். நம் தொழிலில் இரக்கத்திற்கு இடமே இல்லை என்பதை நீ அறிவாய்தானே?`

 `சரி. அப்படியே செய்வோம்!`

 இந்தப் பேச்சு நிகழ்ந்த மறுகணம் அந்தப் பசுமாடு மிரண்டு மணமேடை நோக்கி ஓடி வந்தது. யாரும் தடுப்பதற்குள் மணமகனை முட்டிச் சாய்த்தது. 

  இறந்து விழுந்த மணமகனைக் கண்டு கூட்டம் கதறியது. மன்னனும் மனைவியை இழந்த கணவனும் தலைகுனிந்தவாறு அரண்மனைக்குத் திரும்பினார்கள்.... 

 *வேடன் விடுதலை செய்யப்பட்டான். அவன் மீது தவறுதலாக, தான் கொலைப்பழி சுமத்+தியது குறித்து மனைவியை இழந்த கணவன் அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். 

  அந்தக் கணவனிடம் மறுமணம் செய்துகொண்டு புதுவாழ்க்கையைத் தொடங்குமாறும் குழந்தையை நல்லபடி வளர்க்குமாறும் அறிவுறுத்தி, அவனுக்கும் வேடனுக்கும் பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பி வைத்தான் மன்னன். 

  `ஒவ்வொருவரது மரணத்தின் கணமும் முன்னரே நிர்ணயிக்கப் பட்டது. அவரவர் வினையாலேயே அவரவரும் இறக்கிறார்கள். 

   மரண நேரத்தை ஒருகணமேனும் யாரும் தள்ளி வைக்க இயலாது` என்பதை உணர்ந்துகொண்ட மன்னனின் கரங்கள், சோமசுந்தரர் ஆலய கோபுரத்தை நோக்கி வணங்கின.  

நன்றி: 
மாலைமலர்)

............................


இன்றைய சிந்தனைக்கு

அருள்வாக்கு

ஹோமியோபதி