காமராஜர் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமராஜர் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5 ஆக., 2019

காமராஜர் நினைவுகள்-20: காமராஜர் குற்றாலம் குளியல்...



காமராஜர் குற்றாலம் குளியல்...

காமராஜர் அவர்கள் முதல்வராக இருந்தபொழுது, ஒருமுறைஎண்ணெய் தேய்த்துக் கொண்டு, குற்றால அருவிக்குச்சென்றாராம்.

அருவியில் யாரும் குளித்துக்கொண்டிருக்கவில்லையாம்.
மக்கள் கூட்டம் ஒரு ஓரமாக காவலர்களால்
தடுத்தி நிற்க வைக்கப்பட்டிருந்தனர்.
ஏன்யா அருவி காலியா இருக்கு? சுற்றுலாப்
பயணிகள் யாரும் குளிக்கலையா?என்று
கேட்டிருக்கிறார்...

இல்லைங்கய்யா,, முக்கியஸ்தர்கள் வந்தால்,யாரையும் அருவியில் அனுமதிப்பதில்லை, இது வெள்ளைக்காரன் காலத்திலிருந்து வரும்
வழக்கம் என்றனராம் அதிகாரிகள்.

உடனே காமராஜர் கோபம் கொண்டு, அது வெள்ளைக்காரன் ஆட்சி.
இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சியைய்யா, மக்களுக்காகத்தான் நாம் இருக்கிறோமே ஒழிய நமக்காக மக்கள் இல்லை. உடனே அருவியில் குளிக்க மக்களை அனுமதிங்கய்யா என்று சொல்லிவிட்டு, மக்களோடு மக்களாகக் குளித்து மகிழ்ந்திருக்கிறார்.
அதனால்தான் அவர் இன்றைக்கும் கர்ம வீரர் காமராஜர் என்று உள்ளன்போடு மக்களால் அழைக்கப்படுகிறார்.

31 மே, 2019

காமராஜர் நினைவுகள்-19: சீனா இந்தியா இடையே போர் இருந்த நேரம்



காமராஜர் பதவியில் இருந்த நேரம் சீனா இந்தியா இடையே போர் மூண்டது. இந்தியா படு தோல்வி. நேரு மிக வருத்தத்துடன் இருந்தார். அந்நேரம் காமராஜரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. காமராஜரிடம் புலம்பி தீர்த்து விட்டார்.

உடனே காமராஜர்இப்ப என்ன பிரச்னைங்கறேன்?”

அதற்கு நேருநம்ம கிட்ட போதுமான நவீன ஆயுதங்கள் இல்லாததினால் தான் இந்த தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. நவீன ஆயுதங்கள் இருந்திருந்தால் நாம் ஜெயித்து இருக்கலாம் என்றார்.

அதற்கு காமராஜர்மத்த வேலையை நிறுத்திவிட்டு அந்த அமெரிக்ககாரன்கிட்ட நமக்குத் தேவையானதை வாங்குங்கறேன்

வாங்கலாம் தான் ஆனால்.. என்று இழுத்தார் நேரு.

இன்னும் என்ன பிரச்னை?

இல்ல! அந்த வெப்பன்ஸ் இந்தியாவுக்கு அனுப்பனும்னா அமெரிக்காவில ஏதாவது ஒரு வங்கி நமக்கு பண உத்தரவாதம் எழுதி குடுக்கணும். ஆனா, இந்தியாவை நம்பி எந்த வங்கியும்உத்திரவாதம் தர மாட்டேன்ங்கிறான்…” என்று வருத்தத்துடன் சொன்னார் நேரு.

உடனே காமராஜர் அவருடைய பாஷையில்.

அவன் கடை இங்க ஏதாவது இருக்காங்கிறேன்?

நேருவுக்கு ஒன்றும் புரியவில்லை. காமராஜர் மீண்டும் கேட்டார்.

அட அவன் கடை இங்க ஏதாவது இருக்காங்கிறேன்?

நேரு புரிந்துகொண்டு உடனே..

இருக்கு. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்ன்னு ஒரு வங்கி இங்க இயங்கிட்டு இருக்கு..

உடனே காமராஜர்..அதை உடனே இழுத்து மூட சொல்லுங்கறேன்..

நேரு திகைத்தார் அய்யோ அதை மூட சொன்னால் சர்வதேச பிரச்னை ஆகுமே?

உடனே காமராஜர்..அட என்னமோ ஆகட்டும். நமக்கு உதவாத அவன் கடை இங்க எதுக்குங்கறேன்?

உடனே நேரு எதையும் யோசிக்காமல் அந்த வங்கிக்கு உடனடியாக ஒரு அவசர உத்தரவு பிறப்பித்தார்.

எங்களுக்கு உதவி செய்யாத உங்கள் நாட்டு எந்த தொழிலும் இனி எங்கள் நாட்டில் வேண்டியதில்லை உடனே இடத்தை காலி செய்யவும் என்ற தகவல் வங்கி அதிகாரியை திகைக்க வைத்தது.

உடனடியாக அமெரிக்காவுக்கு தகவல் அனுப்பினர். அடுத்த சில மணி துளிகளில் அமெரிக்க வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு இந்தியா ஆயுதம் வாங்குவதற்கு உத்தரவாதம் தர தயார் ஆயினர்.

எவனோ எழுதியதை வெறுமனே மனப்பாடம் செய்து பரிட்சை பேப்பரில் வாந்தியெடுத்தால் மட்டும் போதாது.. எப்படிப்பட்ட காரியத்தை எப்படி அணுக வேண்டும் என்ற நெஞ்சுரம்தேவை....

அதுதான் சரியான படிப்பு....

29 மே, 2019

காமராஜர் நினைவுகள்-18: இதயம் தொட்ட பதிவு






இதயம் தொட்ட பதிவு

மகன் தன் தாய்க்கு மாதந்தோறும் ரூ.120 அனுப்பினார்.
மகன் அனுப்பும் பணம் போதுமானதாக இல்லை.

எனவே தாய், தயங்கித் தயங்கி, தன் சொந்த மகனுக்கே தூது விட்டார்.

மகனே, நீ முதல் அமைச்சரானதும்,
என்னைப் பார்க்க, ஒவ்வொரு நாளும், யார் யாரோ வருகின்றனர்.
வீடு தேடி வருபவர்களுக்கு சோடாவோ, கலரோ வழங்காமல் அனுப்ப முடியவில்லை. அதனால் செலவு கொஞ்சம் கூடுகிறது. எனவே இனிமேல் மாதம் ரூ.150 அனுப்பினால் நல்லது.

பதில் கடிதம்:

அம்மா, உன்னைத் தேடி வருபவர்களுக்கு, நீ சக்திக்கு மீறிச் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. சோடா, கலர் தருவதை இனிமேல் நிறுத்து. நான் அனுப்பும் 120 ரூபாயில் வாழ்க்கையை சிக்கனமாக நடத்து.

 #இவர்தான் நம்_கர்மவீரர்_காமராசர்#

தன்னைப் பெற்றெடுத்த அன்னைக்கு 30 ரூபாய் கூடுதலாகத் தரமறுத்த முதல்வரும், 30 ரூபாய்க்காகத் தயங்கித், தயங்கித் தன் மகனுக்கே தூது விட்டத் தாயும், இம் மண்ணில் நரம்பும், இரத்தமும், சதையுமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போதே நெஞ்சம்_சிலிர்க்கிறதே...!!

நன்றி: திரு சிவகுமார், புதிய தகவல்கள், முகநூல்

16 பிப்., 2019

காமராஜர் நினைவுகள்-17: ரேஷன் அரிசி சாப்பிட்ட ஒரே முதல்வர் : சீமான் அவர்கள்


ரேஷன் அரிசி சாப்பிட்ட ஒரே முதல்வர்சீமான் அவர்கள் 

157,900 views
“NewsGlitz - Next Generation Tamil News Channel”
Published on Jul 15, 2018

நன்றி: திரு சீமான் அவர்கள், “NewsGlitz - Next Generation Tamil News Channel” மற்றும் யூடியூப். 

26 டிச., 2018

காமராஜர் நினைவுகள்-15:


காமராசர் முதல்வராக இருந்த சமயம்..

அவரை காண அலுவலகம் தேடி ஒரு எளிய மனிதர் கையில் ஒரு மஞ்சள் பையுடன் வருகிறார்.

சிறிது நேரத்தில் முதல்வரைகாண அனுமதி கிடைத்ததும், முதல்வரின் அறைக்குள் செல்கிறார் அந்த நபர்.

உள்ளே வந்த நபரை சட்டென அடையாளம் கண்டுகொண்ட முதல்வர்..

"என்ன ரெட்டியாரே.. செளக்கியமா? என்ன சேதி? இல்ல சும்மா பார்க்க வந்தீரா?" என அழைத்து அருகில் அமரச்செய்தார்.

இவருக்கோ தயக்கம். வந்த சேதியை எப்படி சொல்ல.. முதல்வரோ அவரின் தோளில் கைவைத்து..

"பரவா இல்லை. என்ன சேதியானலும் சொல்லுங்க ரெட்டியார்"

"இல்ல என் மகனுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்.." என தயங்க..

"அடடே நல்ல சேதிதானே.. இதுக்கு ஏன் ரெட்டியாரே தயக்கம். சரி. நான் என்ன செய்ய வேண்டும். சொல்லுங்க" என்று தோளில் தட்ட..

"இல்ல.. கல்லாணத்துக்கு நீங்க வரனும். நீங்கதான் தலைமை தாங்கனும்.. ஊரெல்லாம் சொல்லிட்டன். பத்திரிகை கொடுத்துட்டு சொல்லதான் நேர்ல வந்தன்.

நீங்க எப்படியும் வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை. அதனால அப்படி சொல்லி முடிவெடுத்துட்டன். தப்பா நினைச்சுக்காதீங்க"

-என்று ரெட்டியார் இழுக்க..

காமராஜருக்கு பட்டென்று கோபம். முகம் இறுகிப்போனது.

"எந்த நம்பிக்கையில நீங்க முடிவெடுத்தீங்க. யாரைக்கேட்டு இப்படி மத்தவங்ககிட்ட சொன்னீங்கன்னேன்" என்று கடுமைகூட்டினார்.

ரெட்டியாருக்கு கண்கள் கலங்கியது..

"தப்பா நினச்சுக்காதீங்க. அன்னைக்கு உங்களுக்கு வேலூர்ல ஒரு கூட்டம் இருக்கு. பக்கத்துலதான் என் ஊர். அதனால கல்யாணத்துக்கு கூப்பிட்டா கட்டயாம் வருவீங்கன்னு நினைச்சுட்டன்" என்றார்.

பெருந்தலைவருக்கு கோபம்...

"உங்க வீட்டு கல்யாணத்துக்கு வர்றதா முக்கியம். அதுவா வேலை. வேற வேலை இல்லையா? போங்க, வரமுடியாது. நீங்க போய்ட்டு வாங்க"

-என்று பட்டென்று கூறி அனுப்பி வைத்துவிட்டார். முகத்தில் அடித்ததை போல் ஆனது ரெட்டியாருக்கு.

நடந்ததை வெளியில் சொல்லிக் கொள்வில்லை. 'முதல்வர் வரமாட்டார்' என்று எப்படி சொல்வது?

பேசாமல் கல்யாணத்தை அவரது வீட்டிலேயே எளிமையாக நடத்துகிறார். அவரது வசதிக்கு அப்படித்தான் நடத்தமுடியும். கடைசியில் 'காமராஜர் வரமாட்டார்' என்பதும் ஜனங்களுக்கு புரிந்தது.

வந்தவர்கள், போனவர்கள் எல்லாம் புறம் பேசினார்கள்..

'என்னமோ நானும் காமராஜரும் ஒன்னா சிறையில் இருந்தோம். கூட்டாளிங்க. என்வீட்டுக் கல்யாணத்துக்கு வருவார்னு'

பெரிசா தம்பட்டம் அடிக்சுகிட்டாரு…பார்த்தீங்களா அலம்பல. என்ற ஏலனப் பேச்சு கூடியது....

மனம் உடைந்துபோன ரெட்டியாருக்கு உடல் கூனிப்போனது. அப்படியே வீட்டிற்குள் சுருண்டு படுத்துவிட்டார். எப்படி வெளியில் தலை காட்ட முடியும்.

'காமராஜரும் நானும் பலவருஷம் ஒன்னா சிறையில் இருந்த நண்பர்கள்' என்று ஊரில் நட்புக் கதையை சொன்னவராயிற்றே.

'திருமணத்திற்கு முதல்வர் கட்டாயம் வருவார்' என்று நம்பியவாயிற்றே…

அழுதபடி படுத்துக்கிடந்தார். அந்த கல்லாயான வீடே வெறிச்சோடிப்போனது…..

திடீரென ஒரு கார் அங்கு வந்தது. வந்தவரோ...

"முதல்வர் காமராஜர் கொஞ்ச நேரத்தில் வரபோகிறார்" என்ற செய்தியைச் சொல்லி போய்விட்டார்.

ரெட்டியாருக்கு நம்பிக்கையில்லை. எந்த நம்பிக்கையில் திரும்ப ஊருக்குள் சொல்வது…? நம்பிக்கையற்று உட்கார போன வேளையில்..

சட்டென ஓர் கார் வந்து நின்றது. பெருந்தலைவரே வந்து இறங்கினார். இரண்டு, மூன்று பெரிய சாப்பாட்டு கேரீயரில் சாப்பாட்டோடு.

ரெட்டியாரால் நம்பமுடியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் காமராசர் வந்த செய்தி காட்டுத் தீயாய் பரவி கூட்டம் சேர்ந்துவிட்டது….

ரெட்டியார் முதல்வரை கட்டித்தழுவிக் கொண்டார். குலுங்கி அழுதார். தட்டிக்கொடுத்து சமாதானம் சொன்ன காமராஜர்..

"உங்க கஷ்டம் எனக்குத் தெரியும் ரெட்டியாரே. சுதந்தரம் போராட்டம், ஜெயில்னு எல்லாத்தையும் இழந்துட்டீங்க.. .எனக்குத் தெரியும்.

அதான் பையனுக்கு கல்யாணம்னு சொன்னப்பவே பட்டுனு யோசிக்காம அப்படிச் சொன்னன். நான் வர்றதா சொல்லியிருந்தா நீர் இருக்கிற இந்த நெலமில கடன் வாங்குவீர்..

முதல்வர் வர்றார்னு ஏதாவது பெரிசா செய்யனும்னு போவீர்.. அதான் அப்படிச் சொன்னன். மன்னிச்சுடுப்பா… உன் வீட்டுக் கல்யாணத்துக்கு வர்றாம எங்கபோவன்"

-என்று ஆரத்தழுவி கண்ணீர் சிந்தினார்..

பிறகு வாசலிலேயே பாய்விரித்து எடுத்து வந்த சாப்பாட்டை எல்லோருக்குமாக போடச் சொல்லி அந்த குடும்பத்தாரோடு தானும் உட்கார்ந்து சாப்பிட்டார்.

'இந்த சாப்பாட்டு சுமையைக்கூட அவருக்கு கொடுத்துவிடக்கூடாது' என்று தன் பணத்தைக்கொடுத்து வாங்கி வந்தாரென்றால்.. ரெட்டியாரின் நிலை எப்படியிருக்கும் என்பதை கூறத்தேவையில்லை…

'நட்பை போற்றியவர் காமராஜர்' என்பதற்கு இந்த நிகழ்வைக் காட்டிலும் வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை..

காமராசரைப் பற்றி ஆயிரம் செய்திகள் படித்தாலும் அவை ஒவ்வொன்றும் மாணிக்கங்களாகவே ஜொலிக்கின்றன.

(அந்த நிகழ்வில் எடுத்தபடம்தான் இது).

19 டிச., 2018

காமராஜர் நினைவுகள்-14:

காமராஜர் ஆட்சிக் காலத்தில் எத்தனை அணைகள்!

15 லட்சம் ஏக்கர் நிலம் சாகுபடிக்கு வந்தது.

அப்படிப்பட்ட சாதனைத் தலைவரை மறந்துவிட்டோம்.

16 டிச., 2018

காமராஜர் நினைவுகள்-13:

காமராஜர் ஒரு நாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் . அப்பொழுது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே .வந்தனர் பரட்டை தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் ஏழ்மையை பறைசாற்றின . பணியாளர் ஒருவர் அவர்களை விரட்ட , முற்பட , கேட் வரை ஓடிய குழந்தைகள் தயங்கி தயங்கி நின்றார்கள் . தம்மை பார்க்க வரும் பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய காமராஜர் , அந்தக் குழந்தைகளை கவனித்து விடுகிறார் . அடுத்த நிமிடம் உற்சாகம் பொங்க " என்ன யாரை பார்க்க வந்தீங்க ?"" என்று கேட்டப் படி அவரே குழந்தைகளிடம் வந்து விட ...

அப்பொழுது அந்தச் சிறுமி தயங்கி பேசினாள் " உங்களைத் தான் பார்க்க வந்தோம் . எங்களுக்கு அப்பா இல்லை . அம்மா மட்டும் தான் . அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரீட்சை பீஸ் கட்ட பணம் இல்லை . உங்களை பார்த்தா உதவி செய்வீங்கன்னு எல்லோரும் சொன்னாங்க அது தான் வந்தோம்" என்றாள் ...

அவர்களை அன்போடு தட்டிக் கொடுத்தப் படி , " அம்மா தான் அனுப்பிச்சாங்ளா ? என்று காமராஜர் கேட்க ... அந்த குழந்தைகளோ " இல்லை அய்யா , நாங்களாகத் தான் வந்தோம் . அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாக விக்கறாங்க அதுல தான் எங்களை படிக்க வைக்கிறாங்க """ என்று சொல்ல . அதற்கு மேல் கேட்க முடியாமல் . மாடிக்கு சென்ற அவர் ஒரு கவருடன் .வந்தார் சிறுமியிடம் கொடுத்து " இதில் கொஞ்சம் பணம் இருக்கு . அண்ணனுக்கு பீஸ் . கட்டிடுங்க அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளைங்களா நடந்துக்கணும் என்று சொல்லி அனுப்பி வைத்தார் ...."

மறுநாள் மீண்டும் அந்தக் குழந்தைகள் வந்தனர் . உதவியாளர் வைரவன் குழந்தைகளை உள்ளே அழைத்து வந்தார் .... " வாங்க வாங்க " என்று அவர்களை வாஞ்சையுடன் அழைத்த காமராஜரிடம் அந்தக் குழந்தைகள் . " பரீட்சைக்கு பணம் கட்டி விட்டோம் அய்யா . அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க என்று காமராஜரிடம் அந்தச் சிறுமி ரசீதை நீட்டினாள் .... காமராஜர் கண் கலங்கி விட்டார் .

ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா ? குழந்தைகள் அவரை ...வணங்கினார்கள் அவரும் குழந்தைகளை வணங்கினார் .... வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

12 டிச., 2018

காமராஜர் நினைவுகள்-12: காமராஜரின் புகழுக்கு காரணம்

சுகி சிவம் பட்டிமன்றம் 
காமராஜரின் புகழுக்கு காரணம் 
ஸ்ருதி டிவி 
இதுவரை பார்த்தவர்கள்   199071
பதிவிட்ட நாள்: ஜூலை 22, 2018


நன்றி: திரு சுகி சிவம், ஸ்ருதி டிவி  மற்றும் யூடியூப் .