பக்தி பாமாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பக்தி பாமாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 ஜூன், 2020

பக்தி பாமாலை: பட முடியாது இனித்துயரம் மனதை உருக்குகின்ற பாடல்


பட முடியாது  இனித்துயரம்  மனதை உருக்குகின்ற பாடல்


1,784,286 views•Mar 3, 2018

சித்தர்கள் 

வள்ளலாரின் திருவடி சரணம்.

நன்றி: சித்தர்கள்  மற்றும் யூடியூப்.

5 மார்., 2020

பக்தி பாமாலை: வள்ளலார் பாடல்கள் : முறையீடு



மனதை மாற்றி கண்ணீர் வரவைக்கும் பாடல் வரிகள்

714,337 views
Jul 11, 2017
Tamil discourse தேடல் முன்னோர்கள் வழி
29.6K subscribers

வள்ளலார் பாடல்கள் : முறையீடு

1. மருந்தறியேன் மணியறியேன் மந்திர மொன் றறியேன்
மதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலை யறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்குந் திறத்தனிலோ ரிடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்தவறி வேனோ?
இருந்திசை சொலவறியேன் எங்ஙனம் நான் புகுவேன்?
யார்க்குரைப்பேன் என்ன செய்வேன் எதுமறிந் திலனே!

2. அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்
அறிவறிந்த அந்தணர்பாற் செறியுநெறி அறியேன்
நகங்காண முறுதவர்போல் நலம்புரிந்து மறியேன்
நச்சுமரக் கனிபோலே இச்சைகனிந் துழன்றேன்;
மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்
மணிமன்றந் தனையடையும் வழியுமறி வேனோ?
இகங்காணத் திரிகின்றே னெங்ஙனநான் புகுவேன்?
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதுமறிந் திலனே!

3. கற்குமுறை கற்றறியேன்: கற்பனகற் றறிந்த
கருத்தர்திருக் கூட்டத்திற் களித்திருக்க அறியேன்:
நிற்குநிலை நின்றடியே னின்றாரி னடித்தேன்:
நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்:
சிற்குணமாம் மணிமன்றிற் றிருநடனம் புரியுந்
திருவடியென் சென்னிமிசைச் சேர்க்கவறி வேனோ?
இற்குணஞ்செய் துழல்கின்றே னெங்ஙனநான் புகுவேன்
யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலனே!

4. தேகமுறு பூதநிலைத் திறஞ்சிறிது மறியேன்
சித்தாந்த நிலையறியேன் சித்த நிலையறியேன்:
யோகமுறு நிலைசிறிது முணர்ந்தறியேன் சிறியேன்
உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரிற் கடையேன்:
ஆகமுறு திருநீற்றி னொளிவிளங்க அசைந்தே
அம்பலத்தி லாடுகின்ற அடியையறி வேனோ?
ஏகவனு பவமறியே னெங்ஙனநான் புகுவேன்?
யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலேன்!

5. வரையபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
மரணபயந் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்:
திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடந்தே
தெள்ளமுத முணவறியேன் சினமடக்க அறியேன்:
உரையுணர்வு கடந்துதிரு மணிமன்றந் தனிலே
ஒருமைநடம் புரிகின்றார் பெருமையறி வேனோ?
இரையுறுபொய் யுலகினிடை யெங்ஙனநான் புகுவேன்?
யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலனே


"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய வாள்ளலாரின் இனிமையான பாடல் வரிகள்.

இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது.

நன்றி: Tamil discourse தேடல் முன்னோர்கள் வழி மற்றும் யூட்யூப்.

வள்ளலார் ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகளின் திருவடிகளைப்
போற்றுகின்றேன்.   

5 ஆக., 2019

பக்தி பாமாலை-5:யானே பொய் என் நெஞ்சும்... திருவாசகம்


யானே பொய் என் நெஞ்சும்...  திருவாசகம்

104,791 views

அன்புடன் செல்வன் Anbudan Selvan
Published on Oct 29, 2016

திருவாசகம்,பொன் சுந்தரலிங்கம், தொகுப்பு செல்வன் s

நன்றி: திரு போன் சுந்தரலிங்கம் மற்றும் செல்வன் எஸ் 

5 மே, 2019

30 ஏப்., 2019

பக்தி பாமாலை-9: முருகன் சிறப்பு பாடல்கள்



செவ்வாய்கிழமை முருகன் சிறப்பு பாடல்கள் 

Lord Muruga | Palani |Kumaran | Best Tamil Murugan Padalgal
44,407 views
“Bhakti Padal”
Published on Apr 29, 2019

நன்றி: "பக்தி  பாடல்"  மற்றும் யூடியூப். 

24 ஏப்., 2019

பக்தி பாமாலை-17: இடரினும் தளரினும் ...




இடரினும் தளரினும் ...

ஆல்பம் : எல்லாம் சிவமயம் 

இசையமைத்து பாடியவர் : சிவபுராணம் D V ரமணி 

வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் 

விஜய் மியூஸிக்கல்ஸ்

1,102,886 views

Vijay Musical

Published on May 21, 2018

காந்தார பஞ்சமம்

திருப்பெருந்துறை சிவனே போற்றி . . திருவிளையாடல் நாயகா போற்றி

இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்

கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

வாழினும் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்

தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே

நனவினும் கனவினும் நம்பாஉன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்

புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே

தும்மலொ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்

கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரிஎழ முனிந்தவனே

கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்

கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா

ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே

வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா

ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே

பேரிடர் பெருகிஓர் பிணிவரினும் சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்

ஏருடை மணிமுடி யிராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்

கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே



பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்

புத்தரும் சமணரும் புறன்உரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே

அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த இலைநுனை வேற்படை யெம்இறையை

நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்

வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்

நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே


நன்றிசிவபுராணம் DV ரமணி , கதிரவன் கிருஷ்ணன் , 
விஜய் மியூஸிக்கல்ஸ் மற்றும் யூடியூப்.