31 மார்., 2023

சுற்றுச்சூழல்

நன்றி :
மாண்புமிகு மரங்கள் குழு, 
விவசாயி முத்துசரண் 
மற்றும் 
முகநூல் 

இன்றைய சிந்தனைக்கு

நலக்குறிப்புகள்

இன்றைய குறள்

கோபுர தரிசனம்

அருள்வாக்கு

சிவனருட் செல்வர்

இன்று ஒரு தகவல்

19 மார்., 2023

நூல் நயம்

" ஆகாய ஓவியம் ".
கௌதம நீலாம்பரன். லக்சன்யா பதிப்பகம் முதல் பதிப்பு 2003 .விலை ரூபாய் 70. மொத்த பக்கங்கள் 160.

இது ஒரு சிறுகதை தொகுப்பு :

ஆசிரியர் குறிப்பு:

கௌதம நீலாம்பரன்:
தீபம் இலக்கிய மாத இதழில் துவங்கி, இதயம் பேசுகிறது,ஞானபூமி, ஆனந்த விகடன், குங்குமம் என்று இதழியப் பணியில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக இருந்தார். தமிழின் முன்னணி வார, மாத இதழ்கள் அனைத்திலும் சரித்திர ந வீனங்கள், சமூக நவீனங்கள், சிறுகதைகள், கவிதைகள் எழுதியவர். வானொலி. தொலைக்காட்சிகளிலும் இவரின் படைப்புகள் பல இடம் பெற்றிருக்கின்றன.

****

       இந்தப் புத்தகத்தில் மொத்தம் 19 கதைகள் எழுதப்பட்டு இருக்கிறது .ஒவ்வொன்றும் ஒரு ஒவ்வொரு விதமாக கற்பனை கலந்த சில கதைகள் உண்மை நிகழ்ச்சிகளை கொண்டு சில கதைகள் என்று எழுதப்பட்டிருக்கிறது.

1. ஆகாய ஓவியம்
2. நரகாசுரவதம்
3. தெருச் சந்நிதி
4.சுக சொப்பனம்
5. வேஷ உறவுகள்
6. கரிப்பூச்சு
7. ஓய், நீர் பண்றது நியாயமா?
8.விரிசல் விழாத அலைகள்
9. விடலைச் சவால்கள்
10. கலகலப்பாய் ஒரு கயமை

11.வெள்ளை ஆசைகள்
12.அன்பு வேஷம்
13.கனவுகள் - கற்பனைகள் - நிஜங்கள்
14.ஆத்மாவின் மவுனம்
15.வானில் இல்லை வயல்கள்
16. இருவரும் கை கோர்த்து
17. ஆழம்
18.புதைமணல்
19.அக்கினிப் பரீட்சை.

         ஆயிரம் காவியங்கள் சொல்லாத ஒரு செய்தியை, வெகு நேர்த்தியாக எடுத்துரைக்கிறது 'ஆகாய ஓவியம்' என்பேன் நான். புகழ்ச்சியாகி விடுமோ என்னும் தயக்கம் எனக்கில்லை. 'செய்தக்க செய்யாமையானும் கெடும்' என்பதை அறிந்ததால் வந்த துணிவு இது. நல்லோரை இகழ்தல், நல்லவை விலக்கல் என தீப்பண்புகளின் திறன் ஓங்கியதால்தான் நாடு இன்று நசிவு இலக்கியங்கள் - நச்சுக் கலைகள் வளர்த்துத் தடம்புரண்டு, தட்டுத் தடுமாறிக் கிடக்கிறது.

      என்றோ ஒரு விழிப்பு எங்கோ உதிக்குமென்று, 'பரித்ராணாய சாதூனாம்' பாடிக் கொண்டிருத்தல் ஆகாது. ஒரு சுய விழிப்பு ஒவ்வொரு ஆத்மனிலும் தோன்றிப் பிரகாசிக்க வேண்டும்...

தளைகள் அனைத்தும் உடைத்தெறிய நீ அல்லல்பட வேண்டாம். அவை வெறும் மாயை சூரியக்கதிர்ப் பட்டதும் விலகி அழியும் பனிப்படலமே உன்னைப் பூட்டி வைத்தவன் சாவியையும் உன் புத்திக்குள்ளேதான் வைத்திருக்கிறான். தேடு எடு திற

இந்த எண்ணங்கள்தான் இந்தச் சிறுகதைகளால் இத்தொகுதி
முழுக்கப் பரிமளிக்கின்றன.

1)
'ஆகாய 'ஓலியம்': கதை ஆயிரம் பேர் சிந்தையிலாவது ஆல விருட்ச விதைகளைத் தூவும் என்பது என் நம்பிக்கை. 

அண்டா குண்டா ஆகாயம் சாமியார் ஒரு கிராமத்திற்கு வருகிறார் .பல நாட்களாக கவனிக்கப்படாது இருந்த ஒரு இடத்தில் ஒதுக்குப்புறமாக இருந்த அவரை சிலர் அழைத்துச் சென்று குளத்தருகே விடுகிறார்கள். கிராமத் தலைவர் அந்த மடத்தையே அந்தத் துறவி தங்கிக் கொள்ள சம்மதிக்கிறார்.
          துறவியாக இருந்தும் சாமியாராக இருந்தும் அண்டா குண்டா ஆகாயம் என்கிற பெயர் பெற்று விளங்கிய அந்த சாமியார் சிறு பிள்ளைகளோடு குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருப்பார் .
         அவர்களுக்கு விஞ்ஞானம் கணிதம் ஆன்மீகம் குறித்து போதனை செய்வார் .சித்து விளையாட்டுகளும் விளையாடுவார் .ஆனால் ஊர் உலகத்துக்கு தெரியாமல் குழந்தைகளிடம் ரகசியம் காத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்வார் .

       இப்படிப்பட்ட நிலையில் மடத்தை சுத்தம் செய்வதற்காக பழுதுபட்டு சின்னாபின்னமாகக் கிடந்த சுதையால் ஆன சிலைகளை உடைத்து அந்த கம்பிகளை பொறுக்கி எடுத்து பத்திரமாஸ் விளக்கு வைத்து ஒளி ஊட்டுகிறார் மடத்துக்கு .

       இதைக் கண்டு பொறுக்காத சிலர் அந்த சிலைகளை உடைத்து விட்டதாக அவரை நைய புடைக்காமல் வார்த்தையால் விளாசி கிராமத் தலைவரால் ஊரைவிட்டு வெளியேற்றப்படுகிறார் .
         சில மாதங்களுக்கு பிறகு தான் எல்லோருக்கும் புரிகிறது ஒரு நல்ல ஆத்மாவை ஊரை விட்டு விரட்டி விட்டோமே என்று.
       ஆசிரியரின் ஆதங்கமும் அதுதான் .இன்று புற்றிசல் போல ஊர் எங்கும் கிளம்பி வந்து கொண்டிருக்கும் போலிச் சாமியார்கள் இருக்கின்ற நிலையில் இப்படிப்பட்ட நல்ல சாமியார்கள் மக்களால் கண்டு கொள்ளப்படுவதில்லை என்ற ஆதங்கத்தை ஆசிரியர் இந்த கதை மூலம் வெளிப்படுத்துகிறார்.

2"நரகாசுரவதம்' .

        நிச்சயம் ஆன்மிக உலகில் புதுச்சிந்தனை அலை பரப்பும் என்றே எண்ணுகிறேன். 

      தீபாவளி பண்டிகை குறித்தும் நரகாசுரன் கதை குறித்து ஆசிரியரின் பார்வை வித்தியாசமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது . ஒப்புக்கொள்ளத்தக்க அளவிலே கதை சொல்லப்பட்டிருக்கிறது.

"தீபாவளிக்கு ஒவ்வொரு ஸ்டேட்ல ஒவ்வொரு காரணம் சொல்றாங்க. ராமர் வனவாசம் முடிஞ்சு அயோத்தி திரும்பின நாள். மகாவீரர் பரி நிர்வாணமான தினம், மகாபலிச் சக்கரவர்த்தி அரியணை ஏறிய நாள்... இப்படி இன்னும் என்னென்னவோ சொல்றாங்க ஆனா, எல்லா ஊர்லயும் பொதுவா நரகாசுரவதம் தான் மேலோங்கி நிக்குது. நரகனை கிருஷ்ணர் அழிச்சார். சத்யபாமா அதுக்கு உதவினாங்க. சாகறப்ப நரகன். 'என் இறப்பை எல்லோரும் கொண்டாடணும்'னு வேண்டினான். அதனாலதான் தீபாவளி வந்துச்சு... இதுதானே கதை?'

'அப்படின்னா தீபாவளிக்கு நரகாசுர சதுர்த்தசின்னுல்ல பேர் வந்திருக்கணும்....? 'நரகசதுர்த்தசி'ன்னு ஏன் எல்லாரும் எழுதறாங்க. சொல்றாங்க...?"
என்று கேள்வி கேட்டுவிட்டு அதற்கான பதிலும் ஆசிரியர் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.
       'நரக சதுர்த்தசி' ஒரு பழைய பண்டிகை அன்னிக்கு பார்த்து நரகாசுரனும் செத்தான். அது அவனோட காரணப்பெயர். உண்மைப் பெயர் பவுமன். அவன் கொடுமை செஞ்சதா சொல்லப்பட்டாலும் சாகறப்ப அவன், கிருஷ்ணா,நீத்தார் நினைவு நாள்னு மக்கள் கொண்டாடற ஒரு தினத்துல என்னை வதம் செஞ்சிருக்கே. நிச்சயமா மக்கள் என் நினைவு நாளைக் கொண்டாடாலாம் விட முடியாது'னு சொல்லியிருக்கான். அது காலப்போக்குல அவனோட நினைவு நாளாவே ஆயிடுச்சு..."

தீபாவளிக்கு இப்படி ஒரு புது
விளக்கம் கண்டுபிடிச்சி ஆசிரியர் சொல்லி இருக்கிறார்.
ஆனாலும், ஏதோ யோசிக்க வைக்கற மாதிரிதான் இருக்கு..."

இதுதான் உண்மை. மூணு தலைமுறைக்கு திதி, திவசம், தர்ப்பணம்னு செய்யறது நடைமுறையில் இருக்கு. அப்படிச் செய்ய முடியாம விட்டவங்க எப்பவாச்சும் ஒருமுறை காசிக்குப் போய் கங்கைக் கரையில் திதி கொடுத்தா போதும்னு நம்பறாங்க. இன்னும் புரட்டாசில மகாலய அமாவாசைன்னு ஒண்ணு கொண்டாடப்படுது. அடுத்து ஐப்பசில வர்ற அமாவாசைய ஒட்டித்தான் நரக சதுர்த்தசியும் வருது. தாத்தாவுக்கு ஒரு அண்ணன், தம்பி இருந்து, பிள்ளைங்க இல்லாம செத்துட்டாங்கனு வச்சுக்குங்க.. அவங்க சொத்தும் சேர்த்து நம்ம அப்பா, தாத்தா அனு பவிச்சிருப்பாங்க. அப்படி முகம் தெரியாத. பெயர் தெரியாத மூதாதையர்களுக்கும் நாம் நன்றி செலுத்தணும். அவங்க ஆன்மா நரகத்துல இருந்தா, விடுதலைக்கு நாம எதாச்சும் செய்யணும்னு உருவான பண்டிகைதான் 'நரக சதுர்த்தசி'. அவங்க நினைவுல மோட்ச தீபம் (கார்கில் தியாகிகளுக்கு அண்மையில் ஏத்தினமே. அது மாதிரி) ஏற்றுகிற பழக்கம்தான் தீபாவளியா ஆச்சு.

இதுல பட்டாசு புதுந்ததெல்லாம் பிற்காலப் பழக்கம். பாபர் - அக்பர் காலத்துலதான் சீன தேசத்துப் பட்டாசுக நம்ம தேசத்துல வந்து குவிய ஆரம்பிச்சுதுன்னு வரலாறு இருக்கு. இப்ப நம்ம வங்க பட்டாசு வெடிக்கறதை ஒரு சாஸ்திரம்னு கெட்டியா பிடிச்சுக்கிட்ட மாதிரி, முன்னோர்கள் நினைவு நாள்ங்கிற 'நரக சதுர்த்தசி'ய மறந்துட்டு, நரகாசுரன் கதைய கெட்டியா பிடிச்சுக்கிட்டாங்க.."
உறுதியாக தனது கருத்தை கதாபாத்திரம் மூலமாக நிலைநாட்டுகிறார் ஆசிரியர்.

        மண்ணைத் தோண்டி வைரம் எடுத்தாப்பல இருக்கு இந்த விளக்கம். 

3.அக்கினிப் பரிட்சை', '
4.வெள்ளை ஆசைகள்'
5., 'ஆழம்' போன்ற பல சுதைகள் நிஜச் செய்திகளின் நாக்கமாகவே எழுதப்பட்டவை.

     ஆசிரியர் கொஞ்சம் சமூகப் பிரக்ஞையுடன் எழுதியிருக்கிற இந்தக் கதைகள் அவரின் சமூக பிரக்ஞை  குறித்த அக்கறையை காட்டுகிறது.

        சேதுபந்தனம், பல்லவன் தந்த அரியணை, ஈழவேந்தன் சங்கிலி, கலிங்கமோகினி போன்ற பல்வேறு சரித்திர நவீனங்களில் கௌதம நீலாம்பரன் அவர்கள் ஒரு காலத்தைய சமூக நிகழ்வினையே விவரித்து இருந்தார்.
 நூற்றுக்கு மேற்பட்ட  சமூகச் சிறுகதைகளிலும் விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய சில குறுநாவல்களிலும் இவர் இன்றைய சமூக நிகழ்வினையே ஒரு சரித்திரப் பதிவாக்கி உள்ளார்.

நன்றி :
திரு கருணா மூர்த்தி 
மற்றும் 
முகநூல்

அபூர்வமான படம்

உங்கள் கவனத்திற்கு

இன்று ஒரு தகவல்

நினைவில் நின்றவர்கள்

நலக்குறிப்புகள்

இன்றைய சிந்தனைக்கு

இன்றைய குறள்

கோபுர தரிசனம்

அருள்வாக்கு

18 மார்., 2023

அறிவியல் உலகம்

சிரித்து வாழவேண்டும்!

நூல் நயம்

"சைவம் வளர்த்த அருளாளர்கள் ."
நாடகங்கள் .முனைவர் ஜெயந்தி நாகராஜன். ஏ எம் புக் ஹவுஸ் .
முதல் பதிப்பு 2021. விலை ரூபாய் 160 . மொத்த பக்கங்கள் 180.

   இது ஒரு ஆன்மீக புத்தகம் .

      சைவம் வளர்த்த அருளாளர்கள் ஐந்து அருணாளர்கள் குறித்து எழுதப்பட்ட புத்தகம் இது.

     மொத்தம் 63 நாயன்மார்கள் .இந்த கால அருள் மிகு கிருபானந்த வாரியார் அவர்களுடன் சேர்த்து 64 நாயன்மார்கள் .அவர்களில் 5 நாயன்மார்களை குறித்து கதையாக சொல்லாமல் நாடகமாக வடிவம் அமைத்திருக்கிறார் ஆசிரியர்.

****

நூலாசிரியர் குறிப்பு:

        கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகக்குழந்தை இலக்கியத்துறையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டு வருகிறார்.

         பாடல்கள், கதைகள், நாடகங்கள், வாழ்க்கை வரலாறு என எழுபது நூற்களுக்கும் மேலாக எழுதியுள்ளார்.

        மேனாள் பேராசிரியை (செந்தமிழ்க் கல்லூரி மதுரை) முத்துச்சரம் என்னும் வலையொளி வாயிலாகச் சிறுவர் நிகழ்ச்சிகளை அளித்து வருகிறார்.

        இணையத்தின் வாயிலாகப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்.

         பல்வேறு ஊடகங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றி உள்ளார்.

**"
          தமிழகத்தில் தலை சிறந்த பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் இந்நூலாசிரியர். குழந்தை இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கதை, கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதைகள், வாழ்க்கை வரலாறு, இலக்கியம், போன்ற பல்வேறு துறைகளிலும் தனக்கே உரிய எளிய நடையில் மிக உயர்ந்த கருத்துக்களை படைத்து வருபவர்.

          சமூக ஊடகம் வானொலி, தொலைக்காட்சி, வார, மாத, தினசரி இதழ்களிலும் தனது பங்களிப்பை செய்து வருகிறார். தமிழகத்தில் உள்ள முன்னணிப் பதிப்பங்களிலும் தனது படைப்பினை பதிப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

         நாடகம் எழுதுவது என்பது அவ்வளவு எளிதல்ல காரணம் கதை மாந்தர்களின் அத்தனைத் தரவுகளையும் மிக நேர்த்தியாக, அனைவரும் புரிந்து கொள்ள கூடிய வகையில் எழுத்து வடிவில் கொண்டுவருவது கடினம். அதனை நூலாசிரியர் மிகவும் திறம்படக் கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

         இந்நூலின் கதை மாந்தர்களை இன்றைய இளைய தலைமுறையினர் அவசிம் தெரிந்து கொள்ள வேண்டும் ..

***

1. சேக்கிழார் பெருமான்

2. நம்பியாண்டார் நம்பி

3. மனுநீதிச் சோழன்

4. திருக்குறிப்புத் தொண்டர்

5. மெய்ப்பொருள் நாயனார்

6. சிறுத்தொண்டர்

        தமிழோடு இசையையும் சேர்த்து வளர்த்த பெருமை சைவத்திற்கும், வைணவத்திற்கும் உண்டு.
         பக்தி இலக்கியங்கள் பெருக அவை துணை நின்றன. சைவ சமயத்தின் மேன்மையை எடுத்துரைக்கும் நூலாகப் பெரிய புராணம் திகழ்கின்றது .

        பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும்.     
           சுந்தரமூர்த்தி நாயன்மாரைக் காப்பியத் தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் தமது நூலில் விவரிக்கிறார். 

        பொங்கிய இருளை, ஏனைப் புற இருள் போக்குகின்ற செங்கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பார்கள்.

         புற இருளை நீக்க, சூரியன் இருக்கிறது. அக இருளை நீக்க அறியாமையை நீக்க இந்தப் பெரிய புராணம் என்ற நூலை எழுதுகிறேன் என்று நூல் காரணம் சொல்கிறார் சேக்கிழார் பெருமான். இந்தத் தமிழ் மண்ணிலே பிறந்து இங்கேயே வாழ்ந்து, பக்தி நெறி தழைக்கச் செய்த அன்பர்களைப் பாடிய பெருங் காப்பியம் பெரிய புராணம் . முக்தியை விடப் பக்தியே பெரிது என வாழ்ந்து காட்டிய அருளாளர்களைப் பற்றியே சைவம் வளர்த்த அருளாளர்கள் என்னும் நூல் பேசுகிறது.

         உலகம் உய்ய இந்தத் திருத் தொண்டர்களின் வரலாற்றைப் பாடுகிறேன் என்றுரைத்த அடியார் சேக்கிழார் பெருமானின் வாழ்க்கை, திருமுறைகளைத் தொகுத்தளித்த நம்பியாண்டார் நம்பியின் கதை, மனுநீதிச் சோழனின் கதை, திருக்குறிப்புத் தொண்டர், மெய்ப்பொருள் நாயனார், சிறுத் தொண்டர் ஆகியோரின் கதைகளை நாடக வடிவில் தரப்பட்டுள்ளது.

        பள்ளி, கல்லூரி விழாக்களில் தமிழ் நாடகங்களைக் காண்பதே அரிதாகி வருகின்ற சூழலில் இந் நூல் அக் குறையைத் தீர்க்கும் முகத்தான்
 பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் இந்த நூலை பயன்படுத்திக் கொள்ள நான் விரும்புகிறேன்.

           ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கும் பக்தி பெருகும் முத்தமிழில் ஒன்றான நாடக பயிற்சி கிடைக்கும்.

        தமிழ் கூறும் நல்லுலகம் சைவம் வளர்த்த அருளாளர்கள் என்னும் நாடக நூலை வரவேற்கும் என்றே நம்புகிறேன்.

"சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?

ஹரி ஓம் ஷம்போ சிவ ஷம்போ மகாதேவ் அமைதியை தேடுங்கள் அன்பே சிவம்

மாணிக்கவாசகர்

சிவபுராணத்தின் பெருமைகள் :

1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.

2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.

3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.

3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.

4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.

5. ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் " மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.

6. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.

7. ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் " ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.

8. தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.

9. மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி " இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.

10. அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.

11. ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.

12 *சிறப்பு - 1* நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.

13. *சிறப்பு - 2* சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் *வாழ்க* என முடியும்.

14. *சிறப்பு - 3* அதை அடுத்த 5 வரிகள் *வெல்க* என முடியும்.

15. *சிறப்பு -4* அடுத்த 8 வரிகள் *போற்றி* என முடியும்.

16. இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.

17. சிவபுராணத்தின் 32 வது வரியில் *மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்* என பாடி இருப்பார்.
இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.

18. திருவாசகத்தின் 18 வது வரியான *அவன் அருளாலே அவன் தாள் வணங்கி* என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

19. ரமண மகிஷி , திருவண்ணிமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.

20. காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.

பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்.
அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.

21. இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்.

"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

*சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்*ஓம் நமச்சிவாய..

நன்றி :
திரு கருணா மூர்த்தி 
மற்றும் 
முகநூல்


அபூர்வமான படம்

உங்கள் கவனத்திற்கு

அதிர்ச்சித் தகவல் : அட கடவுளே!

நலக்குறிப்புகள்

இன்றைய சிந்தனைக்கு

இன்றைய குறள்

கோபுர தரிசனம்

அருள்வாக்கு

15 மார்., 2023

குட்டிக்கதை

கேள்வி மேடை

நூல் நயம்

"புனித பிரான்சிஸ் சவேரியார்"
புனித மரியன்னை அச்சகம்.
விலை ரூபாய் 20 மொத்த பக்கங்கள் 50

#இது ஒரு சரித்திர நூல் 
# வாழ்க்கை வரலாறு என்று கூறி விடலாம்.

"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் "
இது திருக்குறள் .

      விவசாயத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அவ்வப்போது புத்தூட்ட பயிற்சி அளிப்பார்கள். ஒருமுறை குடுமியா மலைக்கு பயிற்சி பெற சென்றிருந்தபோது வழக்கம் போல தொழில்நுட்பம் குறித்து பேசாமல் வேறு பேசலாமா என்று கேட்டார் அங்கிருந்து அதிகாரி .சரி என்றதும் அவர் மேற்கண்ட குறளுக்கு  விளக்கம் கொடுத்தார். மூன்று மணி நேரம் தொடர்ந்து விளக்கம் கொடுத்தார். மிகவும் அருமையான ஒரு விளக்கம்.

       எவன் ஒருவன் தன்னை உணர்ந்து அடக்கமாக இருக்கின்றானோ அவனுக்கு அழிவில்லை என்பதின் சாரம் அது அந்த குறள்.

       புத்த பெருமானுக்கு அழிவில்லை உடல் அழிவில்லை ஆன்மா அழிவில்லை .
      ஸ்ரீ ராமானுஜருக்கும் அது போலவே உடல் அழிவில்லை ஆன்மா அழிவில்லை .
காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது .

       அது போன்றதே இந்தியாவிற்கு சேவை செய்ய வந்த பிரான்சிஸ் என்கிற மத போதகருக்கு தன்னை உணர்ந்து ஏழை எளிய நோயாளி பெரு நோய் மக்களுக்கு அருவருப்பு படாமல் அசுசைப்படாமல் ஒரு எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் சேவை செய்ததன் காரணமாக அவரது உடல் இன்றும் அழியாமல் அப்படியே இருந்து வருகிறது .

        கோவாவில் உள்ள அந்த கிறிஸ்துவ மத ஆலயத்திற்கு சென்று பார்த்தோம் .உயரமான மாட பீடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு இருக்கிறது .ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவரது உடல் வெளியே வெளியே கொண்டு வந்து எதிர்புறம் உள்ள ஒரு பழைய சர்ச்சில் பார்வைக்கு வைக்கப்படும். புதிதாக தயாரிக்கப்படும் ஒரு பெட்டியில் அவரது உடல் மாற்றி வைக்கப்படும் .இது ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் .
அவரது வரலாறு குறித்து சுருக்கமாக பார்ப்போம் இந்த புத்தகத்தின் வாயிலாக.

###

         1506 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி ஸ்பெயின் தேசத்தில் பிரான்சிஸ் சவேரியார் பிறக்கின்றார் .சவேரியார் என்ற வரலாற்று சிறப்பு பெற்ற கோட்டையில் பிறந்ததால் அவர் பிரான்சிஸ் சவேரியார் என்று அழைக்கப்பட்டார் .அவரின் இரண்டு அண்ணன்கள் ராணுவ வீரர்கள் வீரமும் உறுதியான உள்ளமும் கொண்டவர்கள்.
சவேரியார் கோட்டையை எதிரிகளால் தகர்க்கப்படவே பிரான்சிஸ் அவர்களின் தந்தை இறந்துவிடவே தாயார் குடும்ப பொறுப்பை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார் .

     சவேரியார் மல்யுத்தம் குதிரைச் சவாரி நீச்சல் ஈட்டி எறிதல் போன்றவற்றில் மிகவும் ஆர்வம் காட்டினார் .எத்தனையோ பரிசுகளை வென்றார் .படிப்பிலும் முதன்மை வகுத்தார். அவருடைய தாய் இவருக்கு கடவுள் பக்தியை ஊட்டினார் ஒழுக்கமும் கற்பித்து, பாரிஸ் மாநகரத்தில் உள்ள பெயர் பெற்ற கல்லூரியில் பட்டம் பெற்றார் .கல்லூரியில் உடன் பயிலும் மாணவர்கள் மதுபான கடைகளுக்கு சென்றாலும் இவர் அங்கு செல்லாமல் அவர்களை நல்வழிப்படுத்தினார் .
      ஒழுக்கத்திலும் படிப்பிலும் உறுதிப்பூண்டு இரவும் பகலும் உழைத்தார் .உயர்ந்த மதிப்பெண் பெற்றார் .இறுதியில் அங்கேயே பேராசிரியராக நியமிக்கப்பட்டார் .மாணவரிடம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது .

        இதனால் அவருக்கு தற்பெருமை உண்டாகியது. பொருளுக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டார். இவற்றை அடைவதே தன் வாழ்க்கையின் நோக்கமாக்கினார் அ.வரது அறையில் ஒரு முன்னாள் போர் வீரர் மாணவர் கால் உடைந்தவர் தங்கி இருந்தார் .அவர் மனமாற்றம் அடைந்து கடவுள் பாதையில் சென்றார் .அவர் பிரான்சிஸ் சவேரியாரிடம் ,"ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கி கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பார் என்றால் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன ?"
என்னும் கிறிஸ்துவின் கூர்மையான கேள்வியை அடிக்கடி  கூறி வந்தார். இதனால் மனமாற்றம் ஏற்பட்டது .இதன் காரணமாக கடவுளுக்காகவே வாழ வேண்டும் என்னும் உறுதி பூண்டு வேறு சிலரும் நண்பர்களாய் சேர்ந்து ஒருநாள் பாரிஸ் நகருக்கு அருகே இருந்த மலைக்குச் சென்றனர் .தங்கள் உறுதியின் அடையாளமாக தங்கள் நல்ல உடைகளை கலைந்து விட்டு துறவியின் அங்கி அணிந்தனர்.
        மலை உச்சியில் இருந்த ஆலயத்தின் குரு முன் நிலையில் இவர்கள் எல்லோரும் கிறிஸ்துவுக்கு தம்மை அர்ப்பணித்தினர்.
இந்த நிகழ்வில் தான் இயேசு சபை உருவானது.
அதன் பின் இஞ்ஞாசியரும் அவருடைய தோழர்களும் ரோமாபுரியை நோக்கி புறப்பட்டனர். நடுங்கும் குளிரும் பாதை முழுவதும் விழுந்து கிடந்த பனிக்கட்டிகளும் அவர்களின் நடை பயணத்திற்கு தடை இட்டன. சவேரியாருக்கோ கடுமையான காய்ச்சல் இருந்தாலும் உறுதியோடு  ரோமபுரியை அடைந்ததும் இஞ்ஞாசியரும்  அவரது தோழர்களையும் திருத்தந்தை வரவேற்று அவர்களுக்கு குருத்துவப் பட்டம் அளித்தார் .

      சவேரியார் 40 நாட்கள் தியானம் செய்தார் .ஜபம் உபவாசம் மற்றும் தபசுக்கள் பல செய்து அந்த 40 நாட்களையும் கழித்தார் .அதன் பின் தன் முதல் திருப்பலியை நிறைவேற்றினார் .அப்போது அவர் இதயம் மகிழ்வில் துடித்தது .கண்கள் ஆனந்த கண்ணீர் வடித்தன.

       மருத்துவமனைக்குச் சென்று உடலெல்லாம் சீழ் வடிந்து துர்நாசம் வீசிக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார் .

      ஒரு நாள் ஒரு இரவு ஒரு இந்தியனை தனது முதுகில் சுமந்து செல்வது போல கனவு கண்டார். அடுத்த நாள் இஞ்ஞாசியர் சவேரியாரை அழைத்து நீங்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள் .கிறிஸ்துவின் நற்செய்தி இந்திய மக்களுக்கு எடுத்துரைத்து அவர்கள் வாழ்வு உயர்விற்கு பாடுபடுங்கள் என்று கூறினார் .எனவே இந்தியாவுக்கு புறப்பட்டு வந்தார் .
     மறுநாள் சவேரியார் ஸ்பெயின் நாட்டில் உள்ள லிஸ்பனுக்கு புறப்பட்டார் .பயணத்திற்கு குதிரை கொடுக்கப்பட்டும் அவர் நடந்து சென்றார்.

     அந்த வருடம் நான்கு கப்பல்கள் இந்தியாவிற்கு புறப்பட இருந்த சமயத்தில் கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த பிரசங்க மேடையில் சவேரியார் மக்களுக்கு போதித்தார் .கப்பல் புறப்பட்டது 

    ஆப்பிரிக்கா கண்டத்தை சுற்றி செல்ல வேண்டி இருந்தது .
 இந்தியாவை அடைவதற்கு ஓராண்டு காலம் பிடிக்கும். வீசுகின்ற புயலை சமாளித்து உயிரோடு திரும்பி வருவது மிகவும் துர்லபம் .கப்பலில் உள்ள மக்களுக்கு தினமும் உபதேசம் செய்து வந்தார் .பணிவிடை செய்து வந்தார் .மாலுமி தூங்கி விடவே கப்பல் ஓட்டும் பணியையும் மேற்கொண்டார் .கப்பல் லிஸ்பனை விட்டு புறப்பட்டு ஓராண்டு முடிந்த பிறகு கோவா வந்து சேர்ந்தது .

      அன்று இரவு பல மணி நேரம் அவர் ஜெபம் செய்தார் .மறுநாள் அவரது அலுவலை ஆர்வத்துடன் தொடங்கினார் . வீடு வீடாக சென்று ஜெபித்தார் .நோயாளி மக்களுக்கு பணிவிடை செய்தார்.

      ஒருவன் தன் பாவ வாழ்வை விட்டுவிட மறுத்து விட்டான் .எனவே அவர் ஒருநாள் காட்டுக்குள் சென்று தன் அங்கியை களைந்து விட்டு அவன் மனம் திருந்துவதற்காக தன்னையே சாட்டையால்  அடித்துக்கொண்டு ஜெபித்தார் .ஒளிந்து இருந்து பார்த்த அந்த மனிதன் உள்ளம் உருகி மாறிவிட்டது .

       சவேரியார் கோவாவில் சில மாதங்கள் தங்கி இருந்த பிறகு கன்னியாகுமரியில் இருந்து மன்னார் தீவு வரை உள்ள மீனவர் வாழும் பகுதிகளுக்கு சென்றார் .அங்குள்ள பரத குல மக்கள் மீன்பிடிப்பதிலும் முத்து குளிப்பதிலும் திறமையானவர்கள் .அவர்களுக்கு உபதேசம் செய்தார் .ஜெபம் செய்தார் .இயேசுவின் நற்செய்தியை எல்லோரும் அறிய வேண்டும் அன்பு அவர் காட்டிய அன்பு நெறியில் அவர் நடக்க வேண்டும் என்று தனியாக ஆவலுடன் அவர் இன்னல்களையும் இடையூறுகளையும் மேற்கொண்டார்.

        எப்போதும் இறைவனோடு இணைந்து வாழ்ந்த சவேரியார் வழியாக இறையாற்றல் வெளிப்பட்டது.

        ஒரு முறை மரணப்படுக்கையில் இருந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்று பிரார்த்தனை செய்தார் .அவள் பிழைத்துக் கொண்டாள் .
       அதேபோல் தண்ணீரில் மூழ்கி இறந்து இறந்துவிட்ட தன் மகனை ஒரு தாய் தன் கைகளில் ஏந்தி அவர் முன் மண்டியிட்டு கண்ணீர் விட்டு கதறினாள்.அவர் உருக்கமாக ஜெபித்து சிலுவை அடையாளம் இட்ட உடனே அந்த சிறுவன் கண்விழித்தான்.
இப்படி பல அதிசயங்கள் அவர் நடத்திக் காட்டினார்.

      ஒருமுறை படகில் பயணம் செய்யும்போது புயல் ஒன்று எழுந்தது .உடனே அவர் தன் பாடுபட்ட சிலுவையை எடுத்து மன்றாடினார் .அப்போது சிலுவை அவரது கையில் இருந்து நழுவி கடலுக்குள் விழுந்து விட்டது .வருத்தமாக கடற்கரையில் நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு நண்டு அப்பாடுபட்ட சுரூபத்தை பற்றி கொண்டு தன்னிலிருந்து கரையை நோக்கி ஊர்ந்து வந்தது .

       தேள் பாம்பு போன்றவற்றால் தீண்டப்பட்டோரும் புலி போன்ற கொடி விலங்குகளால் தாக்கப்பட்டவர்களும் அவரிடம் குணம் பெற்றார்கள்.

        பிறகு திருவாங்கூர் சென்று மன்னரை சந்தித்து ஜெபம் செய்யவும் மக்களுக்கு போதனை செய்யவும் அனுமதி பெற்று அவர் பணி செய்தார்.

      1546 ஆம் ஆண்டு மலாக்கா தீவுக்கு பயணமானார் அங்கிருந்து மோரோ தீவுகளுக்கு சென்ற வண்ணம்  ஏழை மக்களுக்கு உதவிட திட்டமிட்டார் .அந்த தீவுகளில் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர் அவர்களுக்கு ஜெபம் செய்து பணிவிடை செய்தார்

      சவேரியார் ஜப்பானுக்கு செல்ல நினைத்தார் .அந்த நேரத்தில் மலாக்காவில் தொற்றுநோய் பரவி எண்ணற்ற மக்கள் அதற்கு பலியானார்கள் .எனவே தனது பயணத்தை நிறுத்திவிட்டு பணிவிடை செய்தார்.

         அதன் பிறகு ஜப்பான் சென்றார் .மன்னரை சந்தித்து தனது நோக்கம் குறித்து கூறி அனுமதி பெற்றார் .அங்கிருந்த மக்களுக்கு உபதேசம் செய்தார் ஜபம் செய்தார்.

     மன்னனுக்கு ஒரு சந்தேகம் .மனிதன் இறந்த பின் அவனுக்கு என்ன நிகழும் என்ற கேள்வி இருந்தது .அந்த கேள்விக்கு விடையாக சவேரியார் ,"நம் உடல் மட்டும் அழியுமே தவிர ஆன்மா அழியாது .நல்லவரின் ஆன்மா விண்ணகத்தில் நிலையான வாழ்வு பெறும் .தீமை செய்தவரின் ஆன்மா நரகத்தில் தண்டனை பெறும் ",என்று விளக்கினார். மன்னனுக்கு இந்த பதில் மன நிறைவு தந்தது.

     சீனாவுக்கு செல்ல முடிவு செய்தார் .சீனாவுக்குள் நுழைய கூடாது என்று கண்டிப்பான தடை உத்தரவு இருந்தது .அதை மீறுபவர்கள் கொடிய தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள் .இருந்த போதும் சீனா நாட்டிற்கு அருகில் உள்ள சான் சியான் தீவை அடைந்தார்.

        அங்கு சவேரியார் நோயற்றார் .அந்தோணி அவருக்கு உடனிருந்து பணிவிடை புரிந்து வந்தார் .சவேரியாரின் உடல்நிலை கவலைக்கிடமாயிற்று .பிணியும் பட்டினியும் அவரை வாட்டின. பாடுபட்ட சுரூபம் ஒன்றுதான் அவருக்கு ஆறுதல் தந்தது .மணிக்கணக்காய் அதையே பார்த்துக் கொண்டிருப்பார் .தான் செல்ல விரும்பிய சீன நாட்டை நினைத்தார் .அந்த திசையை நோக்கி பாடுபட்ட சுரூபத்தை காட்டி அந்த நாட்டு மக்கள் கிறிஸ்துவை அறிந்து பொதுவாழ்வு பெற வேண்டுமென உருக்கமாக வேண்டினார் .

      1552 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் நாள் தான் இறக்கப்போவது உணர்ந்த சவேரியார் அருள் வடி வீசு முகத்துடன் ஆண்டவரே உம்மையே நம்பி இருக்கிறேன் .என் ஆன்மாவை உம்மிடம் ஒப்படைக்கிறேன் ,"என்று கூறி அமைதியாக உயிர் துறந்தார்.

      அவர் இறந்ததும் அந்தத் தீவில் இருந்த சில மாலுமிகள் அவரது உடலை ஒரு சவப்பெட்டிக்குள் வைத்து உடல் விரைவில் அழிய வேண்டும் என்பதற்காக சுண்ணாம்பு கற்களை அந்த பெட்டியில் பரப்பி கல்லறையில் அடக்கம் செய்தனர் .
       இரண்டு மாதங்கள் கழித்து அந்த மாலுமிகள் அந்தத் தீவில் இருந்து புறப்படும் நேரத்தில் கல்லறையை தோண்டி சவப்பெட்டியை திறந்து பார்த்தனர் .
என்ன ஆச்சரியம் !
சவேரியாரின் உடல் அழியாமல் அப்படியே உயிரோட்டத்துடன் காட்சியளித்தது.

        பின்னர் அவரது உடலை மலாக்காவிற்கு எடுத்துச் சென்றனர் .அப்போது அங்கிருந்த தொற்றுநோய் அவர் உடனே மாயமாயிற்று .
       அதன் பின் கோவாவிற்கு அவரது புனித உடலை எடுத்துச் சென்று அங்குள்ள தேவாலயத்தில் வைத்தார்கள் .

       இன்றும் அவரது உடல் அழியாமல் இருக்கிறது .சவேரியார் இயேசுவை அறிந்தார் .அவரது அன்பின் ஆழத்தை தன் உள்ளத்தில் உணர்ந்தார் .தான் பெற்ற பெருவாழ்வை பிறரும் பெற வேண்டும் எனும் ஆவலோடு பாரத நாட்டிற்கு வந்தார் .தனக்கென வாழாமல் பிறர்க்குரியராளாராய்த் தியாகத்தீயில் பலி ஆனார்.

##₹₹

புனித சவேரியார் வாழ்வில்...

07 ஏப்ரல், 1506.      : பிறப்பு

16 அக்டோபர், 1515.   : தந்தையார் இறப்பு

01அக்டோபர், 1525.  : பாரீஸ் பல்கலைக் கழகப் படிப்பு

15 மார்ச், 1530.       : எம்.ஏ. பட்டம், இஞ்ஞாசியாரோடு தொடர்பு

15 ஆகஸ்ட், 1534.  : முதல் வார்த்தைப்பாடு

24 ஜூன், 1537.         : குருப்பட்டம்

07 ஏப்ரல், 1541:: இந்தியாவுக்குப் புறப்படல்

06 CLD, 1542 :இந்தியா வந்தடைதல் (கோவா)

15 ஏப்ரல், 1549 :ஜப்பான் பயணம்

17 ஏப்ரல், 1552  : சீனா நோக்கிப் பயணம்

ஆகஸ்ட், 1552.   : சான்சியன் தீவில்

03 டிசம்பர், 1552. : இறப்பு

25 அக்டோபர், 1619. : 'அருளாளர்'பட்டம்

12 மார்ச், 1622. : 'புனிதர்' பட்டம்

####

புனித பிரான்சிஸ் சவேரியார்
அருள் வேண்டி மன்றாட்டு.

ஓ அன்பின் ஆண்டவரே.
புனித சவேரியாரை
அன்னை திருச்சபைக்கும்,
குறிப்பாகக் கீழை நாடுகளுக்கும்,
இன்னும் சிறப்பாக இந்தியாவுக்கும் கொடையாகக் கொடுத்ததற்காக
உம்மை வாழ்த்துகிறோம்,

உமக்கு நன்றி கூறுகின்றோம் |

உம் திருமகன் இயேசுவைப் பின்பற்றவும்

அவரது நற்செய்தியைப் பறைசாற்றவும்
அவரைத் தேர்ந்தெடுத்தீர் !
தன்னார்வத்தோடும் தாராள மனத்தோடும்
அவ்வழைப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

முழு மனத்தோடு தம்மை அர்ப்பணித்தார். இறையாட்சிக்காகவே தம் வாழ்வு அனைத்தையும் செலவிட்டார்.

இயேசுவின் மீது அவர் கொண்டிருந்த
ஆழ்ந்த நம்பிக்கை, அசைக்கவியலா அன்பு,
ஆன்ம தாகம், மனோபலம், உற்சாகம், களைப்பறியா நற்செய்திப் பயணம்,
ஆகியவை.... ஆயிரக் கணக்கான ஆன்மாக்களை உம் அரசுக்காக வென்றெடுத்தன !

ஆகவேதான், அன்னை திருச்சபை மூலம்,
அவரைத் திருத்தூதுப் பணி நாடுகளின் பாதுகாவலராக்கியுள்ளீர் !

அவரது பரிந்துரையால்
பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தியுள்ளீர்.

அவரது உடலை அழியாமல் காத்துவருகின்றீர் ! 

புனிதமான அவரது வாழ்வும் பணியும்
எப்போதும் எங்களுக்கு உந்துசக்தியாகட்டும்;
உயர் சாதனைக்கு வழிகாட்டட்டும்;
உம்மை நோக்கி எம்மை என்றும் இட்டுச்செல்லட்டும்,

ஆமென்,

*2024 டிசம்பர் மாதம் பிரான்சிஸ் சவேரியார் அவர்களின் பூத உடல் மீண்டும் பொதுமக்கள் காட்சிக்கு மீண்டும் வைக்கப்படும்*

*உலகிலேயே இரு கல்லறைகள் தான் திறந்த நிலையில் உள்ளன. ஒன்று எருசலேம் யேசுவின் கல்லறை, மற்றொன்று மலேஷியா மலாக்கா தீவில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் கல்லறை*

நன்றி :
திரு கருணா மூர்த்தி 
மற்றும் 
முகநூல்

அபூர்வமான படம்

இன்றைய சிந்தனைக்கு

சிரிப்புத்தான் வருகுதையா

இன்றைய குறள்

கோபுர தரிசனம்

அருள்வாக்கு