சிரிக்கவும் சிந்திக்கவும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிரிக்கவும் சிந்திக்கவும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 பிப்., 2020

சிரிக்கவும் சிந்திக்கவும்-: தென்கச்சி கோ. சுவாமிநாதன்


சிரிப்போம் சிந்திப்போம் 

தென்கச்சி கோ. சுவாமிநாதன்

56,715 views
May 18, 2019
Informatic Guruji (இன்ஃபார்மட்டிக் குருஜி)

Million people across Tamil Nadu woke up to his voice every morning for several years. The five-minute programme, presented in simple colloquial Tamil, the common man could relate to and punctuated by anecdotes meant to make you smile and ponder, was broadcast without a break from 1988 until his retirement in 2002. Many still remember Thenkachi Ko Swaminathan for his popular daily programme "Indru oru Thagaval "on All India Radio (AIR).

திரு தென்கச்சி அவர்களின் நினைவைப் போற்றுகின்றேன். 

நன்றி: Informatic Guruji (இன்ஃபார்மட்டிக் குருஜி) மற்றும் 

யூடியூப். 

14 ஜன., 2019

சிரிக்கவும் சிந்திக்கவும்-45:

முன்பெல்லாம் ஒருவருக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்றால் எழுந்து நிற்க வேண்டும்..

இப்போதெல்லாம் காதில் இருக்கும் ஹெட்செட்டை இறக்கினாலே போதுமானது.. ரொம்ப பெரிய மரியாதை..

3 ஜன., 2019

சிரிக்கவும் சிந்திக்கவும்-53:

மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால், அது "யோகா".

🙃🙃மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளா விட்டால், அது "தியானம்".

👍👍👍**யோகாவும், தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே...

31 டிச., 2018

சிரிக்கவும் சிந்திக்கவும்-52: பொண்டாட்டியின் ஒன்பது அவதாரங்கள்

*பொண்டாட்டியின்*
*ஒன்பது அவதாரங்கள்*.

1) காலை rush hour, Office Work..     *அஷ்ட லஷ்மி*

2) குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது.... *சரஸ்வதி*

3) பணத்தை வீட்டுச் செலவுகளிலிருந்து மிச்சப்படுத்தும் போது... *மஹாலக்ஷ்மி*

4) உணவு தயாரிக்கும் போது...
*அன்னபூரணி*

5) தேவையான நேரத்தில் குடும்பத்திற்காக உறுதியாக நிற்கும் போது....
*பார்வதி*

6.) உபயோகப்படுத்திய  ஈர டவலை கணவன் bed மேலே போடும் போது....
*துர்கா*

7) கணவன் தரமற்ற காய்கறிகளை வாங்கி வரும் போது... *பத்ரகாளி*

8) சிரமப்பட்டு செய்த தன் அலங்காரத்தை,கணவன் கவனிக்காமல் அலட்சியம் செய்யும்போது.... *மகிஷாசுரமர்தினி*

9) கணவன் மற்றொரு பெண்ணை புகழும் போது.... *சொர்ணாக்கா*....

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

27 டிச., 2018

சிரிக்கவும் சிந்திக்கவும்-48:

அருணா212 ட்விட்டரில்:

ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க என்பது சென்ற தலைமுறை வதந்தி. வாட்ஸ்அப்பில் வந்தது என்பது இன்றைய தலைமுறை வதந்தி.

23 டிச., 2018

சிரிக்கவும் சிந்திக்கவும்-45: அனுமனுக்கு மறுக்கப்பட்ட அலவன்சு

அனுமனுக்கு மறுக்கப்பட்ட அலவன்சு...!

நான் நண்பரது வீட்டு விழாவிற்கு சென்றிருந்தபோது ஒரு ஆடிட்டரும் வந்திருந்தார்.

அவரது வேடிக்கையான பேச்சில் மயங்கி அவரைச் சுற்றி ஒரு கூட்டமே இருந்தது.

நானும் அருகில் சென்று கவனித்தேன். அவர் சொன்ன செய்திகளையே இங்கு தருகிறேன்.

“…. எங்க புரஃபெஷன் ஒரு பவர்புல்லானது. எங்களால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்.

வேடிக்கைக்காக எங்கள் வட்டத்தில் உலவும் ஒரு கதையைச் சொல்கிறேன் கேளுங்கள்.

ராமாயணத்தில் இந்திரஜித்தின் பாணத்தால் அடிபட்டுக் கிடக்கும் லட்சுமணன். அவனைக் காப்பாற்ற சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவரும்படிக்கு அனுமன் பணிக்கப்படுகிறான்.

அனுமன் சஞ்சீவி மூலிகையைத் தேடித் தேடி சலித்துப்போய் சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு வருகிறான்.
லட்சுமணன் பிழைத்துக் கொள்கிறான்.

யுத்தம் முடிகிறது.

அனைவரும் அயோத்திக்கு திரும்புகின்றனர்.

அயோத்தி திரும்பிய அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்ததற்கான பயணப் படிக்கு விண்ணப்பிக்கிறார். ஆனால் அவரது பயணப்படி மறுக்கப்படுகிறது. காரணமாக ஆடிட்டர்/அக்கவுண்டண்ட் சுட்டிக் காட்டிய 

விபரம்:
1.   அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவரும் பயணத்திற்கு முறைப்படி அயோத்தி அரசரது அனுமதியைப் பெறவில்லை.
2.   அனுமன் ஒரு 4th Grade Officer.
எனவே அவருக்கு வான் வழிப்பயணம் அனுமதி இல்லை.
3.   அனுமன் சஞ்சீவ பர்வதத்துடன் அனுமன் வந்தது excess luggage. Excess luggage is not allowed.

மேற்கண்ட காரணங்களுக்காக அனுமனின் பயணப்படி மறுக்கப் படுகிறது என்று எழுதிய ஆடிட்டர்/அக்கவுண்டண்டின் குறிப்பைப் படித்த அயோத்தி மன்னன் உடனே அனுமனை வரச்சொல்கிறார்.

அனுமனிடன் இது குறித்துச் சொல்ல அனுமனும் கவலை கொள்கிறார்.
“எஜமானே, நீங்கள் இட்ட பணியை செய்யத்தானே பயணித்தேன்.
அதற்குக்கூட பயணப்படி கிடையாதா,’ எனப் புலம்பிய அனுமனை தேற்றிய ராமன், கோப்பில் ‘please re examine ‘ என எழுதி அரண்மனை ஆடிட்டர்/அக்கவுண்டண்டுக்கு திருப்பி அனுப்புகிறார்.

கூடவே அனுமனுக்கு ஆடிட்டர்/அக்கவுண்டண்டை நேரில் ஒருமுறை சந்திக்கும்படியும் அறிவுறுத்துகிறார்.
கவலையுடன் சென்ற அனுமன் ஆடிட்டர்/அக்கவுண்டண்ட்டிடம் சென்று பேசிப்பார்க்கிறார்.
ஆனால் பயணப்படி கிட்டுவதாக இல்லை. இறுதியில் அனுமன்,” இதோ பார் இந்த பயணப்படியை நீ எனக்கு கிடைக்கும்படி செய்தாயானால் உனக்கு நான் அதில் 20 சதவீதம் பங்களிக்கிறேன்” எனச் சொன்னவுடன் சற்று யோசித்தபிறகு, “சரி நீ போ..உனது பயணப்படி உனக்கு கிடைக்கும்..” என்று பதில் வந்தது.
அதன் பிறகு இரண்டே நாளில் அனுமனின்  பயணப்படி sanction ஆகி அவருக்கு கிடைத்தது.

ஆச்சரியத்துடன் அனுமன் அந்தக் கோப்பை பார்த்தபோது அதே ஆடிட்டர் அவர் எழுப்பிய query களுக்கு அவரே clarification எழுதி பயணப்படியை sanction செய்திருந்தார்.

அந்த clarifications :

1.   அனுமன் அயோத்தி மன்னனாகிய பரதனின் அனுமதியைப் பெறாவிட்டாலும் தற்போதைய மன்னனாகிய ராமனின் அனுமதியைப் பெற்றே பயணித்ததால் அவரது பயணம் அனுமதிக்கப்பட்ட பயணமாகிறது.
2.   அனுமன் LAST GRADE OFFICER என்றாலும் அவசர நிமித்தம் காரணமாக பயணித்ததால் அவருக்கு வான்வழிப் பயணத்திற்கான அனுமதி அளிக்கப் படுகிறது.
3.   அனுமன் சஞ்சீவி வேரைக் கொண்டுவரப் பயணித்தாலும் தவறான வேரைக் கொண்டு வந்திருந்தால் மீண்டும் பயணிக்க வேண்டியிருக்கும்
எனவே சஞ்சீவ மலையைக் கொண்டுவந்ததினால் இந்த அதிகப்படியான பயணமும் செலவும் மிச்சமாவதால் இந்த EXCESS LUGGAGE அனுமதிக்கப் படுகிறது…”
என்று கதையை நண்பர் சொல்லிக் கொண்டு செல்ல கூடியிருந்தோரெல்லாம் சிரித்து மாய்ந்தனர்.

பெரும்பாலான அரசு அலுவலகங்களில் இப்படித்தான் நடக்கிறதோ?

11 டிச., 2018

சிரிக்கவும் சிந்திக்கவும்-30:

ஒரு கிலோ முளைக்கீரையில் 70 கிலோ வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் 'ஏ' உள்ளது. ஒரு கிலோ அகத்திக்கிரையில் 103 கிலோ ஆப்பிளில் உள்ள கால்சியம் சத்து உள்ளது

ஒரே ஒரு மனைவிக்குள்…
30 டீச்சரும்,
60 ஹெட்மாஸ்ட்டரும்,
90 ஜட்ஜீம்
கூடவே 20 ஜெனிலியாக்களும்,
40 சந்திரமுகிகளும்
இருக்கிறார்கள்