சுந்தர ராமசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுந்தர ராமசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31 அக்., 2021

நூல் நயம் : தோட்டியின் மகன் : மலையாள மூலம் : தகழி சிவசங்கரப் பிள்ளை (தமிழில் : சுந்தர ராமசாமி)


#ReadingMarathon2021
#RM223
#ஆண்டுவிழா
#மொழிபெயர்ப்பு
#கிளாசிக்
67/50+

புத்தகம் : தோட்டியின் மகன்
ஆசிரியர் : 
மலையாள மூலம் : தகழி சிவசங்கரப் பிள்ளை அவர்கள்
தமிழில் : சுந்தர ராமசாமி அவர்கள்

வறுமையின் காரணமாக, தோட்டியாக பணிபுரியும் ஒருவர், அவருக்குப் பின் அவரது மகன், அடுத்து, அடுத்து என சந்ததியாகத் தொடரும் தோட்டித் தொழில், தங்கள் உரிமைகளை, உரிமைகள் எனில் மிகப் பெரிய விஷயங்களுக்கான நிர்பந்தங்கள் எல்லாம் இல்லை, தங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற ஊதியம், கல்வி கற்கும் உரிமை, இது போன்ற் அடிப்படை உரிமைகள் தான். இவற்றினைக் கூட, இந்த சமூகம் கொடுக்க மறுக்கிறது. ஆனால், இந்த சமுகத்தால், தோட்டிகள் இல்லாமல், ஒரு நாளைக் கூட நகர்த்தி விட முடியாது. ஆனாலும், அவர்களை மதிக்க மாட்டோம். இப்படியான சமூகத்தில், தோட்டியாக இருக்கும் ஒருவன், தன் சந்ததி, தோட்டியாகி விடக் கூடாது என்று, முனைப்புடன் செயல்படுகிறான். நல்ல எண்ணம், நல்ல மாற்றம், மாற்றம் வேண்டும், வாழ்வில் முன்னேற்றம் வேண்டும் என்றெண்ணும் அம்மனிதனின் ஆசை நிறைவேறியதா?

"மனிதனின் கழிவுகளை, மனிதன் அகற்றும் அவல நிலை தீருமோ?" என்ற வலி நிறைந்த வாசகத்தினை சில காலத்திற்கு முன் வாசித்ததாக நினைவு. இந்த நாவலை வாசித்ததும், அந்த வாசகத்தின் பின்னிருக்கும் வலியை உணர முடிந்தது.

இசக்கிமுத்து மகன் சுடலைமுத்து, இக்கதையின் கதை சொல்லி. இசக்கிமுத்து மரணிக்க, அவரை புதைக்க வழியில்லாமல், அவர்கள் படும் பாடு, வேதனையானது. தந்தைக்குப் பின், தந்தை பார்த்த தொழிலுக்கு தள்ளப்படும் சுடலைமுத்து, தன் பிள்ளை ஒரு தோட்டி ஆகிவிடக் கூடாது என்பதில் முனைப்புடன் இருந்து, வள்ளியை மணமுடித்து, மோகன் என்ற பிள்ளையும் பிறக்க, தானொரு தோட்டியின் மகன் என்பதே தெரியாமல் வளர்க்கப்படும் சூழல் எங்ஙனம் தலைகீழாக மாறுகிறது? தோட்டி குறித்து அந்த குழந்தை என்ன நினைக்கிறது? சுடலை முத்து மீது பாசம் கொண்ட அவன் பிள்ளை மோகன், தந்தையின் பாசத்திற்காக ஏங்கி நிற்கும் தருணங்கள் நெகிழ வைக்கின்றன.

தோட்டி எனில், அவனும் மனிதன் தானே, அவன் தன் பிள்ளைக்கு, தான் விரும்பும் பெயரைக் கூட வைக்கக் கூடாதா என்ன, சுடலையின் மகன், மோகனின் பெயர், பரிகாசத்திற்கு உள்ளாகையில், கோபம் கட்டுப்படுத்த இயலவில்லை.

சமூகத்தில், மனிதக் கழிவுகளை துப்புரவு செய்யும் தோட்டிகளின் வாழ்விடம், ஊருக்கு ஒதுக்குப்புறமாய், கழிவுகள் நிறைந்த இடங்களிலேயே அமைகிறது. தூய்மையற்ற இடம், இவர்களின் வாழ்விடம் ஆகிப் போவதால், ஆண்டு தோறும் வரும் கொள்ளை நோய்கள், இம்மக்களில் பலரையும் காவு வாங்கத் தவறுவதில்லை. இம்மக்களின் எண்ணிக்கை குறைந்தால், தங்களுக்கு அன்றாடம் செய்ய வேண்டிய, கழிவு அகற்றும் பணியினை செய்ய ஆள் தட்டுப்பாடு ஏற்படும் என்று சிந்திக்கத் தெரிந்த மக்களால், அவர்களும் தம்மைப் போன்ற சக மனிதர் தாம் என்று சிந்திக்கத் தோன்றவில்லை.

பல கேள்விகளையும், வலிகளையும் மனதில் ஏற்படுத்திய புத்தகம். இப்புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு, 1946. இன்றுவரை, இத் தொழில்புரியும் மக்கள் இருக்கிறார்கள். இந்தத் தொழில் செய்வதால், பல இன்னல்களுக்கு, நோய்களுக்கு ஆளாகிறார்கள். சிலர் மரணத்தையும் தழுவுகிறார்கள். நாமும் அவற்றை எல்லாம், ஒரு செய்தியாக மட்டுமே பார்த்து, கடந்து போக பழகிக் கொண்டு விட்டோம். சக மனிதனின் துயரில், வலியில், வேதனையில், நாம் அந்த வலி, வேதனை என்றொன்று இருப்பதைக் கூட உணராது, ஒவ்வொரு நாளையும், கடந்து போய்க் கொண்டே தானிருக்கிறோம்.

நன்றி :

திரு.தமிழ் முகில் பிரகாசம், 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல்

25 செப்., 2021

நூல் நயம் : ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி



ஒரு புளியமரத்தின் கதை ஆசிரியர் -சுந்தர ராமசாமி பக்கங்கள் 222

 நாகர்கோவில் கன்னியாகுமரி க்கு இடைப்பட்ட பகுதியில் தனியாக நிற்கும் ஒரு புளிய மரத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பற்றி  அந்த மாவட்டத்திற்கே உரிய கரிசல் இலக்கிய தமிழ் பாணியில் அழகாக எழுதியுள்ளார் ஆசிரியர். கன்னியாகுமரி நாகர்கோவில் மாவட்டம் என்பதால் ஆங்காங்கே மலையாளம் மின்னி மின்னி வருகிறது. ஒரு ஊரில் அடையாளமாக நிற்கும் புளியமரம் பற்றியும் ,அதை ஒருவர் வெட்டவருவதையும்,வெட்டுபவரை தடுத்தது பற்றி தாமோதர ஆசான் கதையாக கூறுவது அருமை. மரத்தை சுற்றி உள்ள அரசியல் பற்றியும் அழகாக விளக்குகிறது .இந்த நாவல் ஒரு மரத்தை சுற்றி எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அந்தப் புளிய மரம் மட்டும் அப்படியே தான் நிற்கின்றது.ஒரு குளத்தின் நடுவில் வளரும் புளிய மரம் தான் இறக்கும் போது நகரின் மையத்துக்கு வந்து விடுகிறது. மரத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அப்படி. மற்றபடி மரம் நகரவில்லை. புளிய மரம் மரணிக்கும் போது கூட, அது பூ பூப்பதை போலவும் காய் காய்ப்பதை போலவும் இயல்பாக மரணிக்கிறது. மரணத்தை வெகு இயல்பாக ஏற்றுக் கொள்கிறதுபுளிய மரத்தின் அருகிலிருந்த காற்றாடி மரத் தோப்பை வெட்டி சாய்த்து அங்கே ஒரு பூங்காவை அமைக்க அரசாங்கம் முன்வருகிறது. மரங்கள் வெட்டப்படுவதை கூட்டமாக நின்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கூறும் கருத்து இன்றைய நவீன உலகின் உச்சம்.இன்றைய அரசியல் நகர்வுகளை அன்றே படம்பிடித்து காட்டியுள்ளார் ஆசிரியர்.நன்றி வணக்கம்


நன்றி :
சுபாஷ்
வாசிப்பை நேசிப்போம்

17 நவ., 2020

சிறுகதை நேரம் : பக்கத்தில் வந்த அப்பா - சுந்தர ராமசாமி


பக்கத்தில் வந்த அப்பா - சுந்தர ராமசாமி |

கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை

BAVA CHELLADURAI

63,966 views•Apr 29, 2019

SHRUTI TV

648K subscribers

 

SRV Matriculation Higher Secondary School, Samayapuram, Trichy

'வெளிகாற்று உள்ளே வரட்டும்'

மாணவர்களுக்கான 5நாள் பயிலரங்கம்

 

பக்கத்தில் வந்த அப்பா - சுந்தர ராமசாமி | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை

 

Bava Chelladurai story time

#Bavachelladurai

 

This video made exclusive for YouTube Viewers by Shruti.TV

 

Grateful thanks to BAVA CHELLADURAI, SHRUTI TV and YouTube and all the others who made this video possible