என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
20 ஜூலை, 2025
12 மார்., 2022
28 ஆக., 2020
நெல்லையப்பன் கவிதைகள் : துன்பத்தை நெய்தவன்
துன்பத்தை நெய்தவன்- நெல்லையப்பன் கவிதைகள்
75 views•Aug 27, 2020
NELLAIAPPAN SIVASUBRAMANIAN
54 subscribers
நெல்லையப்பன் கவிதைகள்-11:
"துன்பத்தை நெய்தவன்!"
துன்பத்தை நெய்தவன்!
அடுப்பில் பூனை,
தறியில் குருவிக்கூடு,
நெய்தவை வீட்டுக்குள்,
நெய்தவனோ தெருவில்.
பசங்க பள்ளிக்குப் போகல,
தறி வெகுநாளா ஓடல,
காரணம் "நூல்" இல்ல.
பசங்க பாடம் எழுதல,
அவங்க வயிறும் நிறையல,
காரணம் "நோட்டு" இல்ல.
நெய்தத வாங்கல,
புது நூலும் கொடுக்கல,
காரணம் அரசிடம் "நாணயம்" இல்ல.
வியர்வையும் கண்ணீரும்
கலந்து நெய்த கைத்தறிய
விற்பதற்கு என்ன வழி?
பொருளில் தரமிருந்தால்
விற்பதற்கு என்ன தடை?
தரமற்ற நூலிலும் , சாயத்திலும்
வியர்வயையும், உழைப்பையும்
வீணடித்து விட்டார்களோ?
களர் நிலத்தில் விதைக்கலாமா?
கிழிந்த காகிதத்தில்
ஓவியம் வரையலாமா?
பட்டினிச் சாவும்
கஞ்சித் தொட்டியும் தொடருமா?
ஆட்சிகள் மாறுது காட்சிகள் மாறுமா?
30 நவ., 2017
நெல்லையப்பன் கவிதைகள்-90:
20 நவ., 2017
நெல்லையப்பன் கவிதைகள்-89: இலக்கு
24 செப்., 2017
நெல்லையப்பன் கவிதைகள்-88 கலி காலம்
4 நவ., 2014
நெல்லையப்பன் கவிதைகள்-87: பகுத்தறிவு
29 செப்., 2012
நெல்லையப்பன் கவிதைகள்-86: அப்பா, அன்புள்ள அப்பா -1
பதினாறு வயதுப் பையன்
பை நிறைய காய்கறிகளை
வாரச் சந்தையில் வாங்கி
(அது ஒரு வசந்த காலம்)
கமிஷன் அடித்தான் வீட்டில்.
பிரிதொருநாள்
அப்பாவுடன் சந்தை சென்று
காய்கறிகள் வாங்கியவன்,
(அட, கமிஷன் போச்சே!)
அம்மாவிடம் அப்பா
விலைகளை யெல்லாம்
குறைத்துச் சொல்வது பார்த்து
குழம்பிப் போனான்
இன்று அவன் மனைவி,
“அட இதுக்குப் போயா
இந்தவிலை கொடுத்தீர்கள்?!”
என கேலி பேசும் போது,
அப்பாவின் தந்திரம்
அவனுக்குப் புரிகிறது.
28 செப்., 2012
நெல்லையப்பன் கவிதைகள்-85: மௌனம்
மொழி
கண்களில் பிறக்கிறது;
கண்மொழி
உடல் மொழி உதவுகிறது;
உடல்மொழி போதாத போது
சொல்லும், பின் எழுத்தும்
சரியாய்ச் சொல்லும்;
உரைநடை தயங்கும் போது
கவிதை கை கொடுக்கும்;
கவிதை விழிக்கும் போது
இசை எளிமையாய்
இனிமையாய்ச் சொல்லும்;
இசை தாண்டி
தொடுமொழி செல்லும்;
அன்பு செய, நன்றி நவில
இத்தனை மொழிகள்
இருந்த போதிலும்
அனைத்தும் தாண்டி
முழுமொழி தேட
விடையாய்க் கிடைப்பது
மந்திர மௌனம்.