அறுபதைத் தொட்டு, பணியிலிருந்து ஓய்வு பெற்று, 'பெரிசுகளின்' பட்டியலில் சேர்ந்துவிட்டேன். (செட்டிநாட்டுப் பகுதியில் வாஞ்சையோடு 'ஐயா', நெல்லைப் பகுதியில் எகத்தாளமாக 'பாட்டையா', மதுரைப் பகுதியில் மரியாதையோடு 'பெரிசு').
முதுமையில் உடலையும், மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதைப் பற்றி நிறையப் படித்திருக்கிறேன். அவற்றோடு என் கருத்துக்களையும் இணைத்து இங்கே எழுதுகிறேன்.
நேரமேயில்லை என்று ஓடிக்கொண்டிருந்த காலம் போய், பலருக்கு நேரத்தை என்ன செய்வது என்ற பிரச்சினை. என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.
அதிகாலை எழுந்து தியானம், உடற்பயிற்சி, பிரார்த்தனை, மனம் ஒன்றினால் பஜனை, காலையும் மாலையும் திறந்த வெளியில் சென்று நடந்து வருவது, இயற்கையை ரசிப்பது, கோவில்களுக்கு சென்று வருவது, விரும்பிய புத்தகங்களை, அதிலும் உற்சாகமூட்டும் சீரிய சிந்தனைகள் கொண்டவற்றை, தேடிப் படிப்பது, இன்டர்நெட்டில் தேடித் தேடி நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்வது, நமக்கென்று 'வலைப்பூக்களை' உருவாக்கி சிறந்தவற்றை, சீரியவற்றை அவற்றில் பதிவு செய்வது, 'ஆர்குட்' போன்ற சமுதாய இணையங்களில் பழைய மற்றும் புதிய நண்பர்களோடு உரையாடுவது, சிரமமில்லாத பயணங்களை மேற்கொள்வது, குழந்தைகளோடு விளையாடுவது-பொழுதுபோக்குவது, அவர்களுக்கு நல்ல விஷயங்களை கதைகள் மூலம் சொல்லித்தருவது, வீட்டில் அனைவருக்கும் பயனுள்ள வகையில் செயல்படுவது, நல்ல 'Hobby' ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது (நான் புதிய கேமரா ஒன்றை வாங்கி, மனதிற்கு பிடித்தவற்றைஎல்லாம் 'கிளிக்' செய்கிறேன்) - இப்படி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தேவையில்லாமல் மனதைத் தளரவிடாது இப்படி நமது மனதிற்கும், 'பர்சுக்கும்' ஏற்ற பல விஷயங்களைச் செய்யலாம்.
சில எச்சரிக்கைகள்:
1. வீட்டிலும் வெளியிலும் நாம் சொல்வதுபோல் மற்றவர்கள் குறிப்பாக மனைவி மக்கள் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரச்சினை பண்ணாமல் இருக்கவேண்டும். மனத்தில் தோன்றும் கருத்துக்களை சொல்லிவிட்டு ஒதுங்கிவிடுவதே மரியாதை. நாம் வளர்ந்த-வாழ்ந்த காலங்கள் வேறு, அவர்கள் வாழ்கின்ற காலம், கருத்துக்கள் வேறு. இதை மனதில் கொள்ளவேண்டும்.
2. நமது ஆரோக்கியத்தைப் பேணி, இறுதிவரை நோய்நொடியில்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். வேறுவகையில் சொல்வதானால், நம் மனைவி மக்களுக்கோ மற்றவர்க்கோ எந்த வகையிலும் சுமையாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
3. வீட்டில் அதுவேண்டும், இதுவேண்டும் என்று கேட்டு நச்சரிக்காமல், எளிய வாழ்க்கை வாழவேண்டும். நமக்கு வேண்டியவற்றை நாமே செய்துகொள்ளவேண்டும்.
4. முடிந்தால் பயனுள்ள, பிரச்சினை இல்லாத சமுதாயப் பணி ஒன்றை மேற்கொண்டு சமுதாயப் பிரக்ஞையோடு செயல்படலாம்.
5. பேச்சைக் குறைத்துக் கொள்ளுதல் அவசியம். வயதானவர்கள் பலருக்கு இந்த தொணதொணக்கும் வியாதி இருக்கிறது. இதனாலேயே நம்மைக் கண்டு பலர் ஓடுவது.
6. முடிந்தவரை நாமாக யாருக்கும் அறிவுரைகள் வழங்காதிருப்பது (பொதுவாக யாரும் அவற்றைக் காதுகொடுத்துக் கேட்கப் போவதில்லை - நடக்கப் போவதில்லை. தேடிவந்து யாரவது கேட்டால் மட்டுமே - சுருக்கமாகக் கூறலாம்.)
சுவாமி விவேகானந்தர் கூறியதுபோல 'மனம் விரிந்துகொண்டே போகவேண்டும்'. இறுதியில் எல்லையற்ற இப்பிரபஞ்சத்தோடு ஒன்றோடு ஒன்றாகக் கலந்திடல் வேண்டும். பிறவிப்பயனை அடைதல் வேண்டும். சாதனைகள் படைத்திடல் வேண்டும். ஆன்மிகத்தில்தான் இவையெல்லாம் கைகூடும், மனமும் அமைதி பெறும். இறுதிவரை வாழ்க்கையில் பிரச்சினைகள் வந்துகொண்டேதான் இருக்கும். அவற்றை அமைதியுடனும், பொறுமையுடனும் எதிர்கொள்ளும் ஆற்றலையும், மனப்பக்குவத்தையும், அன்புள்ளத்தையும் ஆன்மிகத்தில் மட்டுமே பெறமுடியும். இது என் உறுதியான நம்பிக்கை.
என் வாழ்வில் இவை அனைத்தையும் கடைப்பிடிக்க முயல்வேன். So help me God!
என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
நினைத்துப் பார்க்கிறேன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைத்துப் பார்க்கிறேன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2 அக்., 2009
14 ஆக., 2009
நினைத்துப் பார்க்கிறேன்-8: "உவமைகளும் உருவகங்களும்"
பெண்ணைப் பற்றிப் பாடாத கவிஞர்களே இல்லை. பெண்களின் அழகை வர்ணிப்பதென்பது கவிஞர்களுக்கு கைவந்த கலை. கவிஞர்களின் கற்பனை பெண்களைப் பற்றி எழுதும்பொது சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விடுகிறது. அதிலும் திரைப் பாடல்களில் பெண்களை வர்ணிக்க எத்தனை உவமைகள், உருவகங்கள்! மலரும் கொடியும் பெண்ணென்பார்! நதியும் மதியும் பெண்ணென்பார்! மலர்களில் ரோஜாவில் ஆரம்பித்து தாமரை, மல்லிகை, முல்லை, அல்லி, செண்பகம் என்று கொத்தமல்லிப்பூ வரை சென்றுவிட்டு, இன்னும் ஏதாவது பூ மிச்சமிருக்கிறதா என்று தேடிக்கொண்டிருக்கிறது. கன்னி ஒருத்தியிடம் எத்தனை கனி என்று எழுதி கனிகளையும் விட்டுவைக்க வில்லை.
புதுமையாக ஒரு கவிஞன் புத்தம் புதிய புத்தகமே என்று சற்று மாறுபட்டு எழுதியபோது ஆஹா என்று ரசித்து மகிழ்ந்திருக்கிறேன். தற்போது அதையெல்லாம் தாண்டி கவிஞர்கள் எங்கோ சென்று விட்டார்கள். தேக்குமர ஜன்னல், தேவலோக மின்னல், ஈச்சமர கட்டில், எலந்தைப்பழ தொட்டில் என்று அவர்கள் கற்பனை எங்கெங்கோ செல்லும்போது சிரிப்பை அடக்க முடிவதில்லை. நீங்களே மனக்கண்ணால் இவற்றை கற்பனை செய்து பாருங்களேன்! அப்புறம் கம்ப்யூட்டரில் ஆரம்பித்து, கப்யூட்டர் மென்பொருள், மொபைல் ஃபோன், சிம் கார்டு என்று எதையும் விட்டு வைப்பதில்லை.
இன்னும் அவர்களது கற்பனை எப்படியெல்லாம் விரியப்போகிறதோ? பொறுத்திருந்து பார்ப்போம்.
புதுமையாக ஒரு கவிஞன் புத்தம் புதிய புத்தகமே என்று சற்று மாறுபட்டு எழுதியபோது ஆஹா என்று ரசித்து மகிழ்ந்திருக்கிறேன். தற்போது அதையெல்லாம் தாண்டி கவிஞர்கள் எங்கோ சென்று விட்டார்கள். தேக்குமர ஜன்னல், தேவலோக மின்னல், ஈச்சமர கட்டில், எலந்தைப்பழ தொட்டில் என்று அவர்கள் கற்பனை எங்கெங்கோ செல்லும்போது சிரிப்பை அடக்க முடிவதில்லை. நீங்களே மனக்கண்ணால் இவற்றை கற்பனை செய்து பாருங்களேன்! அப்புறம் கம்ப்யூட்டரில் ஆரம்பித்து, கப்யூட்டர் மென்பொருள், மொபைல் ஃபோன், சிம் கார்டு என்று எதையும் விட்டு வைப்பதில்லை.
இன்னும் அவர்களது கற்பனை எப்படியெல்லாம் விரியப்போகிறதோ? பொறுத்திருந்து பார்ப்போம்.
11 ஜூலை, 2009
நினைத்துப் பார்க்கிறேன்-7: "சாருமுகம்"
நெல்லையில் நான் பதினோராம் வகுப்பு படிக்கையில் அறிமுகமானான் ஆறுமுகம். எனக்கு இரண்டு-மூன்று வயது இளையவன் என்று நினைக்கிறேன். அவன் எங்கள் பள்ளியில் எட்டாவதோ, ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருந்தான். அது மட்டுமல்ல, என் வீட்டிற்கு அருகில், எதிர் வரிசையில் அவன் வீடு. அப்போது அவன் பெற்றோருக்கு அவன் ஒரே பிள்ளை. (பல வருடங்கள் கழித்து அவனுக்குத் தம்பி பிறந்ததாகக் கேள்விப்பட்டேன். ஆனால் நான் அவனைப் பார்த்ததில்லை).
நாங்கள் இருவரும் 'புத்தகப் பைத்தியங்கள்'. அப்போது நான் 'அமுதம்' என்ற பெயரில் ஒரு கையெழுத்து இதழை நடத்திக் கொண்டிருந்தேன். அதில் எனக்கு அவன் உறுதுணை. நாங்கள் இருவரும் எழுதுவோம். நண்பர்களிடம் படிக்கக் கொடுப்போம். 'சாருமுகம்' என்ற புனைப்பெயரில் எழுதுவான் அவன். (அவனது பெயர் எஸ்.ஆறுமுகம்). ஓராண்டிலேயே நாங்கள் பிரிய நேரிட்டது. இரயில்வேயில் வேலை பார்த்துவந்த என் அப்பாவிற்கு மாற்றலாகி நாங்கள் மானாமதுரை சென்று விட்டோம். இருப்பினும் உறவினர்களைப் பார்க்க நான் நெல்லை வரும்போதெல்லாம் அவனைப் பார்ப்பேன். நாளடைவில் அதுவும் இல்லாமல் போனது.
நான் காரைக்குடியில் வேலைக்குச் சேர்ந்து காரைக்குடி வந்துவிட்டேன். அவன் தமிழக அரசின் வருவாய்த்துறையில் செங்கோட்டையில் வேலை பார்ப்பதாகக் கேள்விப்பட்டேன்.
திடீரென்று ஒருநாள் அவனிடமிருந்து கடிதம் வந்தது. என் உறவினர்களிடமிருந்து என் முகவரியைப் பெற்று எனக்கு எழுதியிருந்தான். எனக்கு 'இலக்கிய தாகத்தையும், எழுத்தார்வத்தையும் ஊட்டியவன் நீ" என்றெல்லாம் எழுதியிருந்தான். மகிழ்ச்சியாக இருந்தது. பதவி உயர்வு பெற்று மதுரையில் இருப்பதாக அறிந்து, ஒரு முறை அவன் வீட்டிற்குச் சென்று அவனைப் பார்த்தேன். அவனது துணைவியையும், மகளையும் அறிமுகப் படுத்தி வைத்தான்.
அதன் பிறகு ஓரிரு கடிதப் பரிமாற்றங்கள். அப்புறம் மறுபடியும் தொடர்பு விட்டுப்போனது.
பல ஆண்டுகள் கழித்து ஒரு நாள் இரவு அமெரிக்காவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. ஆறுமுகத்தின் மகள் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு என் அலுவலகம் தொடர்பாக தகவல் கேட்டாள் ஒரு பெண். அப்போது பேச்சோடு பேச்சாக, "மாமா, அப்பா தற்போது இல்லை, தெரியுமா?" என்றாள். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. "என்னம்மா, சொல்கிறாய்?" என்றேன் அதிர்ச்சியோடு. சில ஆண்டுகளுக்கு முன் ஓரிரவு மாரடைப்பால் திடீரென ஆறுமுகம் மறைந்ததை தெரிவித்தாள் அவள். (அதன் பின்னர் திருமணம் நடந்து, அவன் தன் கணவருடன் அமெரிக்கா சென்றிருக்கவேண்டும்.) எனது வேதனையை அவளிடம் தெரிவித்தேன். அன்றிரவு முழுவதும் அவனைப் பற்றிய நினைப்பும், வருத்தமும்தான். அதன் பிறகு அவனைப் பற்றி நினைக்க வாய்ப்பே இல்லாமல் போனது.
என்னுடைய இள வயதிலோ, பள்ளிப்பருவத்திலோ நடந்த எதுவுமே நினைத்துப் பார்க்கக் கூடியதாகவோ, பெருமைப் படக்கூடியதாகவோ இல்லை என்றெண்ணியிருந்தேன். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் திடீரென அவன் நினைவு வர, அந்த நாட்களை நினைந்து, அந்த நினைவுகளை வேதனையுடன் இங்கே பதிவு செய்கிறேன்.
நாங்கள் இருவரும் 'புத்தகப் பைத்தியங்கள்'. அப்போது நான் 'அமுதம்' என்ற பெயரில் ஒரு கையெழுத்து இதழை நடத்திக் கொண்டிருந்தேன். அதில் எனக்கு அவன் உறுதுணை. நாங்கள் இருவரும் எழுதுவோம். நண்பர்களிடம் படிக்கக் கொடுப்போம். 'சாருமுகம்' என்ற புனைப்பெயரில் எழுதுவான் அவன். (அவனது பெயர் எஸ்.ஆறுமுகம்). ஓராண்டிலேயே நாங்கள் பிரிய நேரிட்டது. இரயில்வேயில் வேலை பார்த்துவந்த என் அப்பாவிற்கு மாற்றலாகி நாங்கள் மானாமதுரை சென்று விட்டோம். இருப்பினும் உறவினர்களைப் பார்க்க நான் நெல்லை வரும்போதெல்லாம் அவனைப் பார்ப்பேன். நாளடைவில் அதுவும் இல்லாமல் போனது.
நான் காரைக்குடியில் வேலைக்குச் சேர்ந்து காரைக்குடி வந்துவிட்டேன். அவன் தமிழக அரசின் வருவாய்த்துறையில் செங்கோட்டையில் வேலை பார்ப்பதாகக் கேள்விப்பட்டேன்.
திடீரென்று ஒருநாள் அவனிடமிருந்து கடிதம் வந்தது. என் உறவினர்களிடமிருந்து என் முகவரியைப் பெற்று எனக்கு எழுதியிருந்தான். எனக்கு 'இலக்கிய தாகத்தையும், எழுத்தார்வத்தையும் ஊட்டியவன் நீ" என்றெல்லாம் எழுதியிருந்தான். மகிழ்ச்சியாக இருந்தது. பதவி உயர்வு பெற்று மதுரையில் இருப்பதாக அறிந்து, ஒரு முறை அவன் வீட்டிற்குச் சென்று அவனைப் பார்த்தேன். அவனது துணைவியையும், மகளையும் அறிமுகப் படுத்தி வைத்தான்.
அதன் பிறகு ஓரிரு கடிதப் பரிமாற்றங்கள். அப்புறம் மறுபடியும் தொடர்பு விட்டுப்போனது.
பல ஆண்டுகள் கழித்து ஒரு நாள் இரவு அமெரிக்காவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. ஆறுமுகத்தின் மகள் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு என் அலுவலகம் தொடர்பாக தகவல் கேட்டாள் ஒரு பெண். அப்போது பேச்சோடு பேச்சாக, "மாமா, அப்பா தற்போது இல்லை, தெரியுமா?" என்றாள். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. "என்னம்மா, சொல்கிறாய்?" என்றேன் அதிர்ச்சியோடு. சில ஆண்டுகளுக்கு முன் ஓரிரவு மாரடைப்பால் திடீரென ஆறுமுகம் மறைந்ததை தெரிவித்தாள் அவள். (அதன் பின்னர் திருமணம் நடந்து, அவன் தன் கணவருடன் அமெரிக்கா சென்றிருக்கவேண்டும்.) எனது வேதனையை அவளிடம் தெரிவித்தேன். அன்றிரவு முழுவதும் அவனைப் பற்றிய நினைப்பும், வருத்தமும்தான். அதன் பிறகு அவனைப் பற்றி நினைக்க வாய்ப்பே இல்லாமல் போனது.
என்னுடைய இள வயதிலோ, பள்ளிப்பருவத்திலோ நடந்த எதுவுமே நினைத்துப் பார்க்கக் கூடியதாகவோ, பெருமைப் படக்கூடியதாகவோ இல்லை என்றெண்ணியிருந்தேன். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் திடீரென அவன் நினைவு வர, அந்த நாட்களை நினைந்து, அந்த நினைவுகளை வேதனையுடன் இங்கே பதிவு செய்கிறேன்.
8 ஜூலை, 2009
நினைத்துப் பார்க்கிறேன்-7: "அரவணைத்தல்"
பல ஆண்டுகளுக்கு முன், உலோக அரிமானத் தடுப்புப் பிரிவில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய மேஜையின் மேல் கண்ணாடிக்கடியில், ஒரு படம் வைத்திருந்தேன். மறக்க முடியாத படம் அது. ஒரு அழகான சிறுவன்; அவனைச் சுற்றிலும் ஐந்தாறு அழகான நாய்க்குட்டிகள். அவை அனைத்தும் அவன்மேல் விழுந்து, விழுந்து செல்லமாக முத்தமிட்டுக் கொண்டிருக்கும். அந்தச் சிறுவனோ முகமெல்லாம் மலர்ந்து, ஆனந்தத்தின் உச்சியில். அதன் கீழோ ஒரு அருமையான வாசகம்: "உங்களுக்குப் பிரியமானவர்களிடம் அன்பை வெளிக்காடுங்கள்."
அன்பை வெளிக்காட்டுதல் பலகீனம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. குறிப்பாக உங்கள் குழந்தைகளிடம் அன்பை வெளிக்காட்டத் தயங்காதீர்கள். அதே நேரத்தில் குழந்தைகளை செல்லம் கொடுத்துக் கெடுக்கவும் வேண்டாம்.
இன்றைய மனோதத்துவ நிபுணர்கள் இதை உறுதிப்படுத்துகிறார்கள். (Hug Your Children - That is what they recommend. There is an interesting article on that topic in IndiaPrenting.com). எல்லோருமே நேசிக்கப்பட விரும்புகிறார்கள். அதிலும் அவர்களுக்குப் பிரியமானவர்கள் அன்பை வெளிக்காட்டும்போது அது அவர்களுக்கு ஒரு டானிக்காகச் செயல்படுகிறது. குழந்தைகளுக்கு இது மிக அவசியம் - அவர்கள் தன்னம்பிக்கை உள்ளவர்களாக, சாதனையாளர்களாக உருவெடுக்க.
தாயின் அரவணைப்பின் பெருமையை சொல்ல வேண்டியதே இல்லை. தாயின் அன்பு, அரவணைப்பு சரியாகக் கிடைக்காத குழந்தைகள் தன்னம்பிக்கை இல்லாதவர்களாக, ஏக்கம் கொண்டவர்களாக, மனதளவில் குறைபாடுடைய குழந்தைகளாக வளருகிறார்கள். இந்த பாதிப்பு அவர்கள் பெரியவர்கள் ஆன பிறகும்கூட தொடர்கிறது.
அரவணைப்பு - என்னவொரு அருமையான சொல்! அரவம் + அணைப்பு. அரவம் என்றால் நீங்கள் அறியாதது அல்ல; பாம்பு. பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து விளையாடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். தாயின் அரவணைப்பு என்ற தொடரின் முழுப் பொருள் தற்போது புரிந்திருக்கும்.
பெரியவர்களுக்கும்கூட இது தேவைப்படுகிறது. மேலைநாடுகளில் பொது இடங்களிலும் சரி, வீடுகளிலும் சரி ஒருவரையொருவர் கட்டித் தழுவதல், முத்தமிடுதல் என்பது சாதாரணம்.
மீண்டும் சொல்கிறேன். அன்பை வெளிக்காட்டுதல் பலகீனத்தின் அடையாளமல்ல; வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அன்பை வெளிப்படுத்துங்கள், அனைவரிடமும், குறிப்பாக குழந்தைகளிடம்.
அன்பைவிட உலகில் பெரியது எதுவுமில்லை. (Love is the gretest thing in the world).
அன்பை வெளிக்காட்டுதல் பலகீனம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. குறிப்பாக உங்கள் குழந்தைகளிடம் அன்பை வெளிக்காட்டத் தயங்காதீர்கள். அதே நேரத்தில் குழந்தைகளை செல்லம் கொடுத்துக் கெடுக்கவும் வேண்டாம்.
இன்றைய மனோதத்துவ நிபுணர்கள் இதை உறுதிப்படுத்துகிறார்கள். (Hug Your Children - That is what they recommend. There is an interesting article on that topic in IndiaPrenting.com). எல்லோருமே நேசிக்கப்பட விரும்புகிறார்கள். அதிலும் அவர்களுக்குப் பிரியமானவர்கள் அன்பை வெளிக்காட்டும்போது அது அவர்களுக்கு ஒரு டானிக்காகச் செயல்படுகிறது. குழந்தைகளுக்கு இது மிக அவசியம் - அவர்கள் தன்னம்பிக்கை உள்ளவர்களாக, சாதனையாளர்களாக உருவெடுக்க.
தாயின் அரவணைப்பின் பெருமையை சொல்ல வேண்டியதே இல்லை. தாயின் அன்பு, அரவணைப்பு சரியாகக் கிடைக்காத குழந்தைகள் தன்னம்பிக்கை இல்லாதவர்களாக, ஏக்கம் கொண்டவர்களாக, மனதளவில் குறைபாடுடைய குழந்தைகளாக வளருகிறார்கள். இந்த பாதிப்பு அவர்கள் பெரியவர்கள் ஆன பிறகும்கூட தொடர்கிறது.
அரவணைப்பு - என்னவொரு அருமையான சொல்! அரவம் + அணைப்பு. அரவம் என்றால் நீங்கள் அறியாதது அல்ல; பாம்பு. பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து விளையாடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். தாயின் அரவணைப்பு என்ற தொடரின் முழுப் பொருள் தற்போது புரிந்திருக்கும்.
பெரியவர்களுக்கும்கூட இது தேவைப்படுகிறது. மேலைநாடுகளில் பொது இடங்களிலும் சரி, வீடுகளிலும் சரி ஒருவரையொருவர் கட்டித் தழுவதல், முத்தமிடுதல் என்பது சாதாரணம்.
மீண்டும் சொல்கிறேன். அன்பை வெளிக்காட்டுதல் பலகீனத்தின் அடையாளமல்ல; வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அன்பை வெளிப்படுத்துங்கள், அனைவரிடமும், குறிப்பாக குழந்தைகளிடம்.
அன்பைவிட உலகில் பெரியது எதுவுமில்லை. (Love is the gretest thing in the world).
1 ஜூலை, 2009
நினைத்துப் பார்க்கிறேன்-5: "ஜாம் அப்துல்காதர்"
இன்று அதிகாலை திடீரென்று 'ஜாம் அப்துல் காதர்' நினைவு வந்தது. எனக்கே ஏன் என்று புரியவில்லை. நம் மனம் ஆடும் சித்து விளையாட்டு இது. நம் வாழ்க்கையில் எண்ணற்ற மனிதர்களைச் சந்திக்கிறோம்; பலரை விரைவில் மறந்து விடுகிறோம். தொடர்பே இல்லாமல் திடீரென்று யாரைப் பற்றியாவது அல்லது ஏதாவது ஒன்றைப்பற்றி நினைவு வருகிறது; இது ஏன் என்று நமக்குத் தெரிவதில்லை.
அவர் எங்கள் நிறுவனத்தின் ஒய்வு பெற்ற விஞ்ஞானி. சென்ற மாதம் காலமானார். அவருடைய 'இனிஷியல்ஸ்' ஜே.ஏ.எம் (அதனால் அவர் 'ஜாம்' ஆனார்). ஒரு காலத்தில் நான் அவருடன் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் எங்களுக்குள் அவ்வளவு பழக்கமில்லை. இஸ்லாத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் ஈடுபாடும் உடையவர். அதன் கொள்கைகளை உண்மையாகப் பின்பற்றும் ஆர்வமுள்ளவர். உதாரணமாக வட்டி வாங்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். எங்கள் பிரிவில் அனைத்து ஊழியர்களும் மாதா மாதம் சிறு தொகை முதலீடு செய்து மொத்தத் தொகையிலிருந்து குறைந்த வட்டிக்கு பணம் பெற்றுக் கொள்வோம். சுருக்கமாகச் சொன்னால் அது எங்களுடைய பரஸ்பர நிதி உதவி நிறுவனம். எல்லோரும் உறுப்பினராகும்போது, தான் மட்டும் ஒதுங்கியிருந்தால் சரியில்லை என்பதற்காக அவரும் உறுப்பினராகச் சேர்ந்தார். அவரைப் போன்ற பலருக்கும் அது ஒரு முதலீடு மட்டுமே. ஆனால் என்னைப்போன்றவர்களுக்கு அவசரத்திற்கு குறைந்த வட்டிக்கு கடன் வழங்கும் வங்கி. ஆண்டிறுதியில் வட்டியில் வந்த லாபத்தை அனைவருக்கும் சம பங்காகப் பிரித்துக் கொடுப்பார்கள். ஆனால் அப்துல் காதர் மட்டும் அதை வாங்க மாட்டார். பின்னர் அதுபோன்ற ஒரு அமைப்பில் உறுப்பினராக இருப்பதே சரியில்லை என்று விலகிவிட்டார்.
மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பின் சார்பாக ஆங்கிலத்தில் ஒரு இதழும், தமிழில் ஒரு இதழும் நடத்தி வந்தேன். அவற்றை படித்த பிறகு என்மேல் அவருக்கு ஒரு ஈடுபாடு ஏற்பட்டது. மேலும் ஹோமியோபதி மருத்துவத்தை ஆழமாகப் பயின்று, ஒரு காலத்தில் அதைச் சேவையாக, என்னை நாடிவருவோர்க்கு என்னால் முடிந்த உதவியாகச் செய்திருக்கிறேன்.
அந்தக் கால கட்டத்தில் அவருடைய உறவினர் ஒருவர் சளி மற்றும் அதனால் வரும் தலைவலியினால் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். எத்தனையோ சிகிச்சை அளித்தும் திருப்தியில்லை. எங்கேயோ என்னைப்பற்றி கேள்விப்பட்டு என்னிடம் வந்தார். குறிகளின் அடிப்படையில் அவருக்கு 'காலி பைக்ரோமிகம்' என்ற மருந்தைத் தர நல்ல குணம் கிடைத்தது. இது அப்துல் காதருக்குத் தெரியும். பின்னர் அவரது இன்னொரு உறவினருக்கு இருதயத்தில் பிரச்னை, அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறப்பட்டபோது, அவரை என்னிடம் அழைத்து வந்தார். ஹோமியோபதியைப் பற்றி என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார். நானும் அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் கூறினேன். பின்னர் மருந்தை ஏற்க முடிவு செய்தார். குறிகளின் அடிப்படையில் 'பிரையோனியா' என்ற மருந்தைக் கொடுத்தேன். இரண்டு அல்லது மூன்று மாதம் கழித்து மருத்துவ பரிசோதனைக்குச் சென்றபோது, அதே மருத்துவர் அவருக்கு எதுவுமில்லை, அறுவை சிகிச்சைக்கு அவசியமுமில்லை என்றபின், என்மேல் அவரது மதிப்பு, மரியாதை இன்னும் கூடியது.
என் வீட்டில் நான் வைத்திருந்த புத்தகங்களையெல்லாம் நோக்குவார். சிலவற்றை எடுத்துப் படிப்பார். எனக்கும் ஆழமான ஆன்மிக ஈடுபாடு இருப்பது கண்டு, மகிழ்ச்சியுடன் ஆன்மிக விஷயங்களைப் பேசுவார். இராமகிருஷ்ணரை இஷ்ட தெய்வமாகக் கொண்ட எனக்கு, அனைத்து மதங்களுக்கும் பொதுவான, அடிப்படையான மேன்மையான விஷயங்களைப் பற்றிப் பேசுவது விருப்பமான ஒன்று. ஆன்மிக வழியில் செல்லவிரும்புவோர்க்கான கையேடு ஒன்றை கேட்டு வாங்கிப் போனார். அந்தப் புத்தகம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. என்னிடம் இரண்டு பிரதி இருந்ததால் அதை அவரையே வைத்துக் கொள்ளச் சொன்னேன். அப்போதுகூட அவருக்குத் தயக்கம்தான்; யாரிடமும் எதையும் இலவசமாகப் பெற விரும்பாதவர்.
இணை இயக்குனராக ஓய்வு பெற்று, அவர் சொந்த ஊரில் முற்றிலும் சேவை நோக்கில் ஒரு பெரிய லட்சியப் பள்ளிக்கூடமொன்றை கட்டி, நிர்வகித்து வந்தார். அதன் துவக்க விழாவிற்கு என்னையும் அழைத்திருந்தார். என்னால் செல்ல முடியவில்லை.
சென்ற மாதம் நான் சென்னையிலிருந்த போது அவர் இறந்துவிட்டார். காரைக்குடி திரும்பியதும் நண்பர் ஒருவர் அப்துல் காதரின் மறைவு பற்றிக் கூறியபோது வருத்தமாக இருந்தது. ஆனால் அத்தோடு அதை மறந்துவிட்டேன். ஆனால் இன்று மாலை என்னமோ அவர் நினைவு வந்தது. ஏனென்று தெரியவில்லை. எளிமையான, கொள்கைப்பிடிப்பான, அந்த லட்சிய மனிதரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அவர் எங்கள் நிறுவனத்தின் ஒய்வு பெற்ற விஞ்ஞானி. சென்ற மாதம் காலமானார். அவருடைய 'இனிஷியல்ஸ்' ஜே.ஏ.எம் (அதனால் அவர் 'ஜாம்' ஆனார்). ஒரு காலத்தில் நான் அவருடன் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் எங்களுக்குள் அவ்வளவு பழக்கமில்லை. இஸ்லாத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் ஈடுபாடும் உடையவர். அதன் கொள்கைகளை உண்மையாகப் பின்பற்றும் ஆர்வமுள்ளவர். உதாரணமாக வட்டி வாங்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். எங்கள் பிரிவில் அனைத்து ஊழியர்களும் மாதா மாதம் சிறு தொகை முதலீடு செய்து மொத்தத் தொகையிலிருந்து குறைந்த வட்டிக்கு பணம் பெற்றுக் கொள்வோம். சுருக்கமாகச் சொன்னால் அது எங்களுடைய பரஸ்பர நிதி உதவி நிறுவனம். எல்லோரும் உறுப்பினராகும்போது, தான் மட்டும் ஒதுங்கியிருந்தால் சரியில்லை என்பதற்காக அவரும் உறுப்பினராகச் சேர்ந்தார். அவரைப் போன்ற பலருக்கும் அது ஒரு முதலீடு மட்டுமே. ஆனால் என்னைப்போன்றவர்களுக்கு அவசரத்திற்கு குறைந்த வட்டிக்கு கடன் வழங்கும் வங்கி. ஆண்டிறுதியில் வட்டியில் வந்த லாபத்தை அனைவருக்கும் சம பங்காகப் பிரித்துக் கொடுப்பார்கள். ஆனால் அப்துல் காதர் மட்டும் அதை வாங்க மாட்டார். பின்னர் அதுபோன்ற ஒரு அமைப்பில் உறுப்பினராக இருப்பதே சரியில்லை என்று விலகிவிட்டார்.
மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பின் சார்பாக ஆங்கிலத்தில் ஒரு இதழும், தமிழில் ஒரு இதழும் நடத்தி வந்தேன். அவற்றை படித்த பிறகு என்மேல் அவருக்கு ஒரு ஈடுபாடு ஏற்பட்டது. மேலும் ஹோமியோபதி மருத்துவத்தை ஆழமாகப் பயின்று, ஒரு காலத்தில் அதைச் சேவையாக, என்னை நாடிவருவோர்க்கு என்னால் முடிந்த உதவியாகச் செய்திருக்கிறேன்.
அந்தக் கால கட்டத்தில் அவருடைய உறவினர் ஒருவர் சளி மற்றும் அதனால் வரும் தலைவலியினால் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். எத்தனையோ சிகிச்சை அளித்தும் திருப்தியில்லை. எங்கேயோ என்னைப்பற்றி கேள்விப்பட்டு என்னிடம் வந்தார். குறிகளின் அடிப்படையில் அவருக்கு 'காலி பைக்ரோமிகம்' என்ற மருந்தைத் தர நல்ல குணம் கிடைத்தது. இது அப்துல் காதருக்குத் தெரியும். பின்னர் அவரது இன்னொரு உறவினருக்கு இருதயத்தில் பிரச்னை, அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறப்பட்டபோது, அவரை என்னிடம் அழைத்து வந்தார். ஹோமியோபதியைப் பற்றி என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார். நானும் அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் கூறினேன். பின்னர் மருந்தை ஏற்க முடிவு செய்தார். குறிகளின் அடிப்படையில் 'பிரையோனியா' என்ற மருந்தைக் கொடுத்தேன். இரண்டு அல்லது மூன்று மாதம் கழித்து மருத்துவ பரிசோதனைக்குச் சென்றபோது, அதே மருத்துவர் அவருக்கு எதுவுமில்லை, அறுவை சிகிச்சைக்கு அவசியமுமில்லை என்றபின், என்மேல் அவரது மதிப்பு, மரியாதை இன்னும் கூடியது.
என் வீட்டில் நான் வைத்திருந்த புத்தகங்களையெல்லாம் நோக்குவார். சிலவற்றை எடுத்துப் படிப்பார். எனக்கும் ஆழமான ஆன்மிக ஈடுபாடு இருப்பது கண்டு, மகிழ்ச்சியுடன் ஆன்மிக விஷயங்களைப் பேசுவார். இராமகிருஷ்ணரை இஷ்ட தெய்வமாகக் கொண்ட எனக்கு, அனைத்து மதங்களுக்கும் பொதுவான, அடிப்படையான மேன்மையான விஷயங்களைப் பற்றிப் பேசுவது விருப்பமான ஒன்று. ஆன்மிக வழியில் செல்லவிரும்புவோர்க்கான கையேடு ஒன்றை கேட்டு வாங்கிப் போனார். அந்தப் புத்தகம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. என்னிடம் இரண்டு பிரதி இருந்ததால் அதை அவரையே வைத்துக் கொள்ளச் சொன்னேன். அப்போதுகூட அவருக்குத் தயக்கம்தான்; யாரிடமும் எதையும் இலவசமாகப் பெற விரும்பாதவர்.
இணை இயக்குனராக ஓய்வு பெற்று, அவர் சொந்த ஊரில் முற்றிலும் சேவை நோக்கில் ஒரு பெரிய லட்சியப் பள்ளிக்கூடமொன்றை கட்டி, நிர்வகித்து வந்தார். அதன் துவக்க விழாவிற்கு என்னையும் அழைத்திருந்தார். என்னால் செல்ல முடியவில்லை.
சென்ற மாதம் நான் சென்னையிலிருந்த போது அவர் இறந்துவிட்டார். காரைக்குடி திரும்பியதும் நண்பர் ஒருவர் அப்துல் காதரின் மறைவு பற்றிக் கூறியபோது வருத்தமாக இருந்தது. ஆனால் அத்தோடு அதை மறந்துவிட்டேன். ஆனால் இன்று மாலை என்னமோ அவர் நினைவு வந்தது. ஏனென்று தெரியவில்லை. எளிமையான, கொள்கைப்பிடிப்பான, அந்த லட்சிய மனிதரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)