"கடவுள்களின் பள்ளத்தாக்கு ."
சுஜாதா எழுதியது .தொகுப்பு
தேசிகன் .உயிர்மை பதிப்பகம் வெளியீடு .விலை ரூபாய் 165. மொத்த பக்கங்கள் 206 .
முதற் பதிப்பு 2004 நான்காம் பதிப்பு 2013.
பல கட்டுரைகளின் தொகுப்பே இந்த புத்தகம் .
அ)பயணம்
1)கடவுள்களின் பள்ளத்தாக்கு
2) தமிழ்நாடு 2000 மைல்.
3) நவீன குவைத்.
ஆ) இலக்கியம் .
1)நகைச்சுவை பற்றி ஒரு சீரியஸான
கட்டுரை .
2)சூடிக்கொடுத்த சுடர்கொடி
3)வீடுதோறும் தமிழ் கவிதை .
4)சிறுகதை நுணுக்கங்கள் .
5)சிறுகதை அடிக்கடி கேட்கப்படும்
கேள்விகள் .
6படிப்பது எப்படி ?.
இ) சினிமா
1) ஹே ராம்.
2)தமிழ் படம் ஆஸ்கார் வாங்க
முடியுமா .?
3)பாய்ஸ் .
ஈ)அரசியல்:
1) காவிரிக்கு மொழி தெரியாது.
2) ராஜீவ் காந்தி இறந்ததற்கு காரணம்
3) கவிழ்ப்பது எப்போது
4)14ஆம் தேதி சிந்தனைகள் .
5)சீரழிவுக்கு யார் காரணம்?
6) " பலே" சியா.
7) இந்தியர்கள் நிறைய அல்வா
சாப்பிடுகிறார்கள்!
உ.) பொது:
1)வயது வந்தவர்களுக்கு மட்டும் .
2)மாற்றமும் ஏமாற்றமும் .
3)அனந்துவின் சிரிப்பு .
4)பெண்களும் நானும் .
5)சிவந்த செவ்வாய் .
6)நானும் விகடனும் .
7)பில்கேட்ஸ் விரித்த டாலர் வலை
8)எதிர்காலத்தில் பத்திரிகைகளும்
புத்தகங்களும்.
9) உயிர்மை புத்தக வெளியீட்டு
விழாவில்.
10). டயாபடீஸ் .
11)வெளிநாட்டு மோகம் கொண்ட
இளைஞர்களுக்கு அன்புடன் .
12)ஆதலினால் காதல் செய்தேன் .
13)தொழில்நுட்பமா தொப்புள்
நுட்பமா?
14டெலிபோனும் நானும் .
ஆக மொத்தம் பயணம் ,இலக்கியம் , சினிமா, அரசியல் மற்றும் பொது என்கிற தலைப்பில் ஆசிரியர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த புத்தகம்.
#####$
பயணம்.:
நான் முதல் முதலாக அமெரிக்காவில் உள்ள பிக் பேண்ட் Big Bend,white Sand பகுதிகளுக்குச் சென்று இருந்தேன். அந்த இயற்கையின் அதிசய பெரிய மடிப்புகளையும் புவியியல் தொல்லியல் சூழலியல் குறித்த ஆச்சரியங்களை எல்லாம் திறம்பட எழுதுவதற்கு சுஜாதா எஸ் ராமகிருஷ்ணன் போன்றவர்கள் இங்கு வந்து எழுதலாமே என்று எண்ணமிட்டுக் இருந்தேன். அது குறித்த எனது சிறு குறிப்பை முகநூலில் பதிவிட்டு இருந்தேன் .
திவ்ய தேசங்கள்-108 அவற்றின் 106 காணும் பேறு பெற்றேன் .பத்ரிநாத் சென்று வந்த பிறகு இனிமேல் மீண்டும் ஒருமுறை பத்ரிநாத் சொல்லக் கூடாது என்கிற பயம் என்னை கவ்விக்கொண்டது . எல்லா திவ்ய தேசங்களையும் இன்னொரு முறை காண வேண்டும் என்கிற ஆவல் உறுதி சங்கல்பம் எடுத்துக் கொண்ட போதிலும் பத்ரிநாத் செல்வதற்கு ஏனோ மனம் மீண்டும் ஒரு முறை விரும்பவில்லை .இரண்டாம் முறை எனது தம்பி சென்றபோது , ஏனோ எனக்கு உயிர் பயம் வயிற்றைப் பிசைந்த காரணத்தினால் செல்லவில்லை .
இதையேதான் சுஜாதா அவர்களும் பத்ரிநாத் சென்று வந்த பிறகு குறித்து இருந்தார் .
சுஜாதா அவர்கள் பயணம் குறித்து எந்த நூலும் எழுதவில்லை என்று நினைத்திருந்தேன் .ஆனால் இந்த தொகுதியில் பத்ரிநாத் (கடவுள்களின் பள்ளத்தாக்கு) என்ற தலைப்பிலும் குவைத்து நாட்டு அனுபவத்தையும் பயணத்தையும் தமிழ்நாட்டில் சென்ற சில இடங்களில் அனுபவத்தையும் தொட்டுக் காட்டி இருக்கிறார் என்கிற களிப் பேருவகை கொள்ளத்தக்க அளவிலேயே வரிகளை பின்னி அள்ளி வீசியிருக்கிறார் .
பத்ரிநாத் சென்று வந்த பிறகு நான் சிறு குறிப்பினை முகநூலில் பதிவிட்டு இருந்தேன் .திருமங்கை ஆழ்வாரை நினைக்காமல் இருக்க முடியாது .மனத்திடம் உடல் திடம் இருந்தாலன்றி இந்த காலத்திலேயே பயணம் செய்து செய்வது மிகவும் ஆபத்தானது .ஆனால் எந்த ஒரு வகையும் வசதியும் இல்லாத அந்தக் காலத்திலேயே திருமங்கையாழ்வார் சென்று வந்து பாடியிருக்கிறார் என்றால் அவருக்கு எவ்வளவு மனோதிடம் உடல் திடம் இருந்திருக்க வேண்டும் என்று ஆச்சர்யப்பட்டு போனேன். அதையே சுஜாதா அவர்களும் குறிப்பிட்டிருக்கிறார் .நுணுகி ஆராய்ந்து தனது பயணத்தை பதிவு செய்திருக்கிறார் .
நான் சென்ற போது நதியின் குறுக்கே அணை கட்டி மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு இருந்தது .
இமயமலை என்பது இளையமலை என்று குறிப்பிடுவார்கள் .அந்த இமயமலையின் முடிகளை எல்லாம் மரங்களை எல்லாம் அழித்துவிட்டு ஆங்காங்கே பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதை கண்ணீர் மல்க ஆசிரியர் அந்த பயணத்தை இவ்வாறு முடித்திருப்பார்.
"ஏழ்மையால் ம லையை விற்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் .இதனால் ஏற்படும் மண்சரிவு ஸ்ல்டிங் silting,வெள்ளப்பெருக்கு ,
நதி கோபம் என்று எத்தனையோ
ஈகாலஜிகல் விளைவுகள் இருக்கின்றன.
மரங்கள் இல்லா மலையிலிருந்து இறங்கி வந்து விட்ட குரங்கு
பிஸ்லெரி பாட்டிலை கடித்துக் கொண்டு இருந்தது.
######
சினிமா என்கிற தலைப்பில் மூன்று கட்டுரைகள் எழுதியிருக்கிறார் .
தமிழ் படம் ஆஸ்கார் வாங்க முடியுமா ?:
வாங்க முடியும் என்று பத்து கட்டளைகளை தந்திருக்கிறார் ஆசிரியர்.
1)கமர்சியல் தேவைகளில் இருந்து விடுபடவேண்டும் .
2)இதற்கு தமிழ்நாட்டில் உள்ள ஆறு தொலைக்காட்சி சேனல்களில் ஓர் இரண்டாவது HBO, Hallmark ஹால்மார்க் போல படம் எடுக்க நிதி ஒதுக்கவேண்டும் .
3)டைரக்டர்கள் கதை பண்ணாமல் தமிழ் இலக்கியத்தில் சிறந்த எழுத்தாளர்கள் எழுதிய கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் .
4)கதையை முற்றும் வரை எழுதி பைண்ட் பண்ணி விடவேண்டும் .
5)கதைக்கேற்ப பாத்திரங்களை தேர்ந்தெடுக்க Casting director கேஸ்டிங் டைரக்டர் வேண்டும் .
6)எந்த விதமான மீட்டர் வட்டி கவலையுமின்றி படம் எடுக்கவேண்டும் .
7)கதைக்கு தேவைப்பட்ட அளவுக்கு டெக்னாலஜி தந்திரங்களை பயன்படுத்த வேண்டும் .
8)கதைக்களன் என்பதில் குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டும்
பாட்டு டான்ஸ் என்பதெல்லாம் கதை கேட்டால் தான் கொடுக்க வேண்டும் .
9)இங்கிலீஷ் தப்பில்லாமல் சுருக்கமாக சப்டைட்டில் செய்ய வேண்டும் .
10)அதன் பிறகு டை கட்டிய இளைஞரிடம் கொடுத்து டில்லியிலும் ஹாலிவுட்டிலும் கூவி விற்க வேண்டும் என்று 10 அறிவுரைகளை கட்டளையாக தெரிவித்திருக்கிறார் ஆசிரியர்.
##₹##
"சீரழிவுக்கு யார் காரணம் ? " -
50 வருஷம் சுதந்திரத்துக்குப்பின் என்ன சாதித்திருக்கிறோம் என்று இப்போது 'ஜோதிடம்' உள்ளிட்ட எல்லாப் சிறப்புப் பேட்டி , கட்டுரைகள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
டெலிவிஷனில் தேசியக் கொடியை அடிக்கடி காட்டி ஏசி அறைகளில் தலைகலைந்த எக்கனாமிஸ்டுகள் ' Where did we go Wrong' என்று இங்கிலீஷில் அலசுகிறார்கள்.
காரணங்களாக அரசியலும் , கருப்புப் பணமும் , அதிக ஆசைகளை ஏற்படுத்திய நுகர்வோர் கலாச்சாரமும் , கிராமங்களைப் புறக்கணித்ததும் லஞ்சமும் சொல்லப்படுகின்றன.
யோசித்துப் பார்த்தால் சீரழிவுக்கு நாம்தான் காரணம் என்பது சுலபமாகப் புரியும்.
வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டு வெளியில் குப்பை கொட்டும்போது
நின்ற இடத்தில் , சுவர் கண்ட இடத்தில் ஒன்றுக்குப் போகும் போது;
பஸ் ஜன்னல்களுக்கு வெளியே துப்பும்போது.
எப்படி நாம் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல முடியும்?
அவர்களும் நம்மிலிருந்து வந்தவர்தாம்!
##₹₹₹
எந்தப் பொருள் குறித்தும் நுணுகி ஆராய்ந்து எழுதுகின்ற திறன் மிக்கவர் சகலகலா பல்கலை பன்முக வித்தகர் சுஜாதா அவர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நன்றி :