என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
பாரதி கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதி கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
30 டிச., 2019
1 ஜன., 2019
பாரதி கவிதைகள்-29: நான்
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,
கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,
இன்னிசை மாதரிசையுளேன் நான்,
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.
மந்திரங்கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டநற் சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான்.
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்.
30 நவ., 2017
பாரதி கவிதைகள்-30: ஐய பேரிகை கொட்டடா...
ஐய பேரிகை
பல்லவி
ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடா
ஐய பேரிகை கொட்டடா!
சரணங்கள்
1. பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்(ஐயபேரிகை)
2. இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம். (ஐய பேரிகை)
3. காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம். [ஐய பேரிகை)
20 நவ., 2017
பாரதி கவிதைகள்-29: அச்சமில்லை அச்சமில்லை... (ஞானப் பாடல்கள்)
அச்சமில்லை
(பண்டாரப் பாட்டு)
(பண்டாரப் பாட்டு)
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
ஞானப் பாடல்கள்
24 செப்., 2017
பாரதி கவிதைகள்-26 இன்று புதிதாய்ப் பிறந்தோம்
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்!
தீமையெலாம் அழிந்துபோம்,
திரும்பி வாரா 28 பிப்., 2015
பாரதி கவிதைகள்-25: விடுதலை - சிட்டுக்குருவி
விடுதலை - சிட்டுக்குருவி
பல்லவி
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே
சரணங்கள்
1. எட்டுத்
திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)
2. பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு)
3. முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)
2. பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு)
3. முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)
14 பிப்., 2015
பாரதி கவிதைகள்-24: ஐய பேரிகை
ஐய
பேரிகை
பல்லவி
ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடா
ஐய பேரிகை கொட்டடா!
பல்லவி
ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடா
ஐய பேரிகை கொட்டடா!
சரணங்கள்
1. பயமெனும்
பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்(ஐயபேரிகை)
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்(ஐயபேரிகை)
2. இரவியினொளியிடைக்
குளித்தோம்-ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம். (ஐய பேரிகை)
இன்னமு தினையுண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம். (ஐய பேரிகை)
3. காக்கை
குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம். [ஐய பேரிகை)
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம். [ஐய பேரிகை)
4 நவ., 2014
பாரதி கவிதைகள்-23: அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
11 செப்., 2009
வீடீயோ கவிதைகள்-6:
மகாகவியின் நினைவு நாளான இன்று காலை முதல் தொடர்ந்து மகாகவியின் பாடல்களை டிவியில் கண்டு, கேட்டு மகிழ்ந்தேன். யூடூபிலும் பல பாடல்களைக் கேட்டு இன்புற்றேன். கவிப்பேரரசின் "கவிராஜன் கதையைப்" படித்துச் சுவைத்தேன். தற்போது, மகாகவியின் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்ற அவரது பாடலை பதிவு செய்து, அவருக்கு அஞ்சலி செலுத்தி மகிழ்கின்றேன்.
நன்றி: 'கார்த்திக்1947' & YouTube.
9 செப்., 2009
பாரதி கவிதைகள்-21: "ஞான பானு"
திருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல்லறிவு, வீரம்
மருவுபல் கலையின் சோதி வல்லமை என்பவெல்லாம்
வருவது ஞானத்தாலே வையக முழுவதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபானு.
கவலைகள், சிறுமை, நோவு, கைதவம், வறுமைத் துன்பம்
அவலம் அனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை அச்சம்
இவையெலாம் அறிவிலாமை என்பதோர் இருளிற் பேயாம்.
நலமுறு ஞானபானு நண்ணுக; தொலைக பேய்கள்
அனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தியாக வளர்வது நெருப்புத் தெய்வம்.
தினத்தொளி ஞானங் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே, கூடிவாழ்வார் மனிதர் என்றிசைக்கும் வேதம்
பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கும், ஆங்கே
எண்ணிய வண்ணமெல்லாம் எளிதிலே வெற்றியெய்தும்
திண்ணிய கருத்தினோடும் சிரித்த முகத்தினோடும்
நண்ணிடும் ஞானபானு அதனை நாம் நன்கு போற்றின்.
மருவுபல் கலையின் சோதி வல்லமை என்பவெல்லாம்
வருவது ஞானத்தாலே வையக முழுவதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபானு.
கவலைகள், சிறுமை, நோவு, கைதவம், வறுமைத் துன்பம்
அவலம் அனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை அச்சம்
இவையெலாம் அறிவிலாமை என்பதோர் இருளிற் பேயாம்.
நலமுறு ஞானபானு நண்ணுக; தொலைக பேய்கள்
அனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தியாக வளர்வது நெருப்புத் தெய்வம்.
தினத்தொளி ஞானங் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே, கூடிவாழ்வார் மனிதர் என்றிசைக்கும் வேதம்
பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கும், ஆங்கே
எண்ணிய வண்ணமெல்லாம் எளிதிலே வெற்றியெய்தும்
திண்ணிய கருத்தினோடும் சிரித்த முகத்தினோடும்
நண்ணிடும் ஞானபானு அதனை நாம் நன்கு போற்றின்.
8 செப்., 2009
பாரதி கவிதைகள்-20: "கண்ணபெருமானே"
காயிலே புளிப்பதென்ன கண்ண பெருமானே - நீ
கனியிலே இனிப்பதென்ன கண்ண பெருமானே
நோயிலே படுப்பதென்ன கண்ண பெருமானே - நீ
நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பெருமானே
காற்றிலே குளிர்ந்ததென்ன கண்ண பெருமானே - நீ
கனலிலே சுடுவதென்ன கண்ண பெருமானே
சேற்றிலே குழம்பலென்ன கண்ண பெருமானே - நீ
திக்கிலே தெளிந்ததென்ன கண்ண பெருமானே
ஏற்றி நின்னைத் தொழுவதென்ன கண்ண பெருமானே - நீ
எளியர் தம்மைக் காப்பதென்ன கண்ண பெருமானே
போற்றினோரைக் காப்பதென்ன கண்ண பெருமானே - நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்ன கண்ண பெருமானே.
கனியிலே இனிப்பதென்ன கண்ண பெருமானே
நோயிலே படுப்பதென்ன கண்ண பெருமானே - நீ
நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பெருமானே
காற்றிலே குளிர்ந்ததென்ன கண்ண பெருமானே - நீ
கனலிலே சுடுவதென்ன கண்ண பெருமானே
சேற்றிலே குழம்பலென்ன கண்ண பெருமானே - நீ
திக்கிலே தெளிந்ததென்ன கண்ண பெருமானே
ஏற்றி நின்னைத் தொழுவதென்ன கண்ண பெருமானே - நீ
எளியர் தம்மைக் காப்பதென்ன கண்ண பெருமானே
போற்றினோரைக் காப்பதென்ன கண்ண பெருமானே - நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்ன கண்ண பெருமானே.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)