திருமந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 நவ., 2017

திருமந்திரம்-20: ஒக்க நின்றானை...

தினம் ஒரு திருமந்திரம்

ஒக்க நின்றானை உலப்பு இலி தேவர்கள்
நக்கன் என்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கம் நின்றார் அறியாத பரமனைப்
புக்கு நின்று உன்னியான் போற்றி செய்வேனே.


     இறைவனை நான் அணுகி இருந்து அநுதினமும் வழிபாடு செய்வேன்.உடனாய் நிற்பவன்; அழிவற்ற தேவர்கள் ஆடையற்றவன் எனப்பரவும் தலைவன். பக்கத்தில் உள்ள திருமால் முதலிய தேவர்கள் அறிய முடியாத மேலோன். இத்தகைய இறை வனை நான் அணுகி நின்று நாள் தோறும் வழிபடுவேன்.

20 நவ., 2017

திருமந்திரம்,-19: போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை...

போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை
மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாங்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே. 

     இறைவனைப் புகழ்ந்து பாடி நான் உரைக்கின்றேன். இனிமையான உயிரிலே பொருந்தியிருக்கும் தூயவனாகவும் நான்கு திசைகளுக்கும் பராசக்திக்கும் தலைவனாகவும், மேல் சொல்லப்பட்ட திசைகளுள் தெற்குத் திக்கிற்குரிய இயமனை உதைத்தவனாகவும் அவ்விறைவனை புகழ்ந்து நான் பாடுகின்றேன்.

பத்தாம் திருமுறை: திருமூலர் அருளிய திருமந்திரம்


24 செப்., 2017

திருமந்திரம்-18 ஒன்ற அவன்தானே ...

ஒன்ற அவன்தானே இரண்டு அவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் *ஏழு உம்பர்ச்
சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே. 

4 நவ., 2014

திருமந்திரம்-17: ஐந்து கரத்தனை யானை முகத்தனை...



ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

26 செப்., 2014

திருமந்திரம்-16: பெத்தத்தும் தன்பணி யில்லை...

திருமூலர் திருமந்திரம்

பெத்தத்தும் தன்பணி யில்லை பிறத்தலால்
முத்தத்தும் தன்பணி யில்லை முறைமையால்
அத்தற்கு இரண்டும் அருளால் அளித்தலால்
பத்திப் பட்டோர்க்குப் பணியொன்றும் இல்லையே'

2 ஆக., 2009

திருமந்திரம்-13: பதைத்து ஒழிந்தேன் பரமா...

பதைத்து ஒழிந்தேன் பரமா உனைநாடி
அதைத்து ஒழிந்தேன் இனியாரோடும் கூடேன்
சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர
உதைத்து உடையாய் உகந்து ஆண்டருளாயே.

31 ஜூலை, 2009

திருமந்திரம்-13: காயப்பை ஒன்று சரக்குப் பல உள

காயப்பை ஒன்று சரக்குப் பல உள
மாயப்பை ஒன்று உண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக்குள் நின்ற கள்வன் புறப்பட்டான்
மாயப்பை மன்னா மயங்கிய வாறே.

28 ஜூலை, 2009

திருமந்திரம்-13: ஒன்றவன் தானே; இரண்டவன் இன்னருள்;...

ஒன்றவன் தானே; இரண்டவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்; நான்கு உணர்ந்தான்;ஐந்து
வென்றனன்; ஆறு விரிந்தனன்; ஏழு உம்பர்ச்
சென்றனன்; தானிருந்தான் உணர்ந்து எட்டே.

26 ஜூலை, 2009

திருமந்திரம்-12: எட்டி பழுத்தன இருங்கனி வீழ்ந்தன ...

எட்டி பழுத்தன இருங்கனி வீழ்ந்தன
ஒட்டிய நல்லறம் செய்யாதவர் செல்வம்
வட்டிகொண்டு ஈட்டியே மண்ணில் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன் அறியாரே.


எட்டி மரத்தில் பெரிய பழங்கள் காய்க்கும். ஆனால் அவற்றால் யாருக்கும் பயனில்லை. அதேபோல் வட்டி வாங்கிப் பிறர் பொருளைக் கவர்ந்து, அதைக் கொண்டு வாழும் வஞ்சகர்களாலும் யாருக்கும் பயனில்லை.

25 ஜூலை, 2009

திருமந்திரம்-11: மந்திரம் ஆவதும் மாமருந்து ஆவதும்...

மந்திரம் ஆவதும் மாமருந்து ஆவதும்
தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும்
சுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே.

24 ஏப்., 2009

திருமந்திரம்-10: புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை...

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோம் கருக்கும்

புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

3 டிச., 2008

திருமந்திரம்-9: தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்...

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள்
சென்னியில் வைத்த சிவனரு ளாலே.

26 நவ., 2008

திருமந்திரம்-8 உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்

உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிந்தவர்க்குச் சீவன் சிவலிங்கம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
கள்ளப்புலன் ஐந்தும் காளாமணி விளக்கே.

4 அக்., 2008

திருமந்திரம்-7: "தானே தனக்குப் பகைவனும்..."

தானே தனக்குப் பகைவனும், நண்பனும்
தானே தனக்கு மறுமையும், இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே!

3 அக்., 2008

திருமந்திரம்-6: "தன்னையரையத் தனக்கொரு..."

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமற் தானே கெடுகின்றான்.
தன்னையே அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே, அர்ச்சிக்கத் தானிருந்த் தானே.

24 செப்., 2008

திருமந்திரம்-5: "காற்றைப் பிடிக்கும் கணக்கு"

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே.

23 செப்., 2008

திருமந்திரம்-4: "உடம்பார் அழியில்..."

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

22 ஏப்., 2008

திருமந்திரம்-2: "யாவர்க்குமாம்..".

யாவர்க்குமாம்...

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.

- திருமந்திரம்

காலையில் இறைவனுக்கு பச்சிலை இட்டு வணங்கியும், பசு, நாய், பூனை, காகம் போன்ற பிராணிகட்கு சிறிது உணவளித்தும், வறியார்க்கு சோறிட்டும், மற்றவர்கட்கு இன்சொல் கூறியும், நாம் வாழ்வோமாக. இதனால் எல்லா நலங்களையும் அடையலாம். உலகிற்கு நாம் உதவினால் உலகம் நமக்கு உதவுகிறது.

நன்றி : "தினசரி திருமுறை"
தொகுத்தவர் - சிவ.அ.பக்தவச்சலம்
வெளியிட்டோர் - சிவனடியார் திருக்கூட்டம், குடியாத்தம்