இளங்கோவன் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளங்கோவன் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3 டிச., 2008

இளங்கோவன் கவிதைகள்-3:

முழுதாகச் சிரித்தாலுன் அச்சம் நாணம்
முகமாடும் மடம்பயிர்ப்பு சிதறுமென்றோ
இழுது, தீமுன் உருகல்போல் என்னுள் மின்னி
ஏந்துநகை தன்னாலே உருக்கும் என்றோ
பொழில்மலரின் அழகொளியாய் பொழியும் இன்பப்
புன்னகையைப் பாதியிலே நிறுத்தி மின்னும்
எழில்மலராம் கண்ணாலே நகை முடிக்கும்
என்னாளே! பொன்னாளே! ஏனிச் செய்கை?

2 டிச., 2008

இளங்கோவன் கவிதைகள்-2:

கிஞ்சுகவாயஞ்சுகமே! கிளைத்துகின்ற
கிளிஎன்றால் பசுமையில்லை! பூங்கா தன்னில்
விஞ்சுகின்ற குயிலென்றால் கருமையில்லை!
வீனைஎன்றால் கவிழவில்லை! யாழேன்றாலோ
கொஞ்சுமிசை அறிந்ததன்றி உருவம் இல்லை!
கோத்தும்பி இசைபெற்று வந்ததில்லை!
அஞ்சுநிறப் பூங்கில்லாய்! பேசல் ஏனோ!
அவனியிலே சிறந்தீர்க்கும் பேச்சு ஏனோ?

1 டிச., 2008

இளங்கோவன் கவிதைகள்-1:

அயர்வுவரும் அப்பொழுதும்
உன் நினைப்பே
ஆபத்தில் துணிவு தரும்
உன் முகந்தான்
உயர்வின்மீன் கூட்டத்தில்
பார்ப்பதெல்லாம்
ஒண்டொடியே உன்கண்கள்
நானென் வாழ்வில்
முயற்சிசெயும் வேலைகளில்
கிடைக்கும் வெற்றி
முத்தமிழே, புத்தொளியே
உன்னாலன்றோ!