27 பிப்., 2024

சிரிப்புத்தான் வருகுதையா

இன்று ஒரு தகவல்

நலக்குறிப்புகள்

அருள்வாக்கு

கவிதை நேரம்

25 பிப்., 2024

நலக்குறிப்புகள்

வீட்டுக்குறிப்புகள்

இன்றைய சிந்தனைக்கு

அருள்வாக்கு

குட்டிக்கதை

எட்டு வயது சிறுவன் கடைவீதியில் உள்ள கடைக்காரரிடம் ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு கிடைப்பாரா என்று கேட்டான் சிறுவனின் கையில் இருந்த நாணயத்தை தட்டிவிட்ட கடைக்காரர் சிறுவனை அங்கிருந்து துரத்திவிட்டார் சிறுவனும் அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடையாக சென்று ஒரு ரூபாய்க்கு #இறைவனை வேண்டுமென்று கேட்டுள்ளான் பல கடைக்காரர்கள் அவனை விரட்டி விட்டாலும் மனம் தளராத சிறுவன் அங்கிருந்த ஒரு பெரிய கடைக்கு சென்று  கடை உரிமையாளரிடம் உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு வேண்டுமென்று கேட்டு உள்ளான். அதற்கு அந்த கடைக்காரர் மிகுந்த கோபமுற்று இழுத்து கொண்டு போய் வெளியே தள்ளி விட்டார். அவன் வந்து கொண்டிருந்த ஒரு விலையுயர்ந்த சொகுசு காரின் முன்னே சென்று விழுந்தான். அந்த கார் நிறுத்தப்பட்டது. நல்ல வேளை அடியேதும் படவில்லை. அந்த காரில் இருந்து இறங்கிய அந்த பெரியவர் அந்த சிறுவனை பார்த்து என்ன ஆயிற்று என்று கேட்டார். அந்த சிறுவன் நடந்ததை, கூறி பின்னர் அவரிடமே, தன்னுடைய ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி, உங்களிடம் #இறைவன் இருந்தால் இந்த ஒரு ரூபாயை வைத்து கொண்டு எனக்கு கொடுக்க முடியுமா என்று கேட்டான். அதற்கு அந்த பெரியவர், ஒரு ரூபாய்க்கு இறைவனை வாங்கிவிட்டு அந்த இறைவனை வைத்து நீ என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு சிறுவன் எனக்கு எல்லாமே என் தாய் தான். சாப்பாடு ஊட்டுவது முதல் தாலாட்டு பாடி என்னை தூங்க வைப்பது வரை என் தாய் தான். தற்போது என் தாய் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் உன் தாயை இறைவன் தான் காப்பாற்றுவார் என்று கூறி விட்டனர். அதனால்தான் என்னிடம் உள்ள ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். அதற்கு அந்த பெரியவர் உனக்கு ஒரு ரூபாய்க்கு இறைவனைத் தானே வேண்டும், நான் தருகிறேன் என்று கூறி, ஒரு கடிதம் எழுதி, அதை ஒரு உறையுள் போட்டு கொடுத்து, இதனை கொண்டு போய் உன் தாய் அனுமதிக்கப்பட்ட  மருத்துவமனையில் குறிப்பிட்ட ஒரு மருத்துவரின் பெயரைச் சொல்லி அவரிடம் கொண்டு போய் கொடு என்று கூறி அனுப்பி வைத்தார். சிறுவனும் அவ்வாறே நேராக மருத்துவமனைக்கு சென்று அந்த மருத்துவரை கண்டு அந்த உறையை கொடுத்தான்.  அந்த உறையை  பிரித்து பார்த்த மருத்துவர், மருத்துவமனையின் நிறுவனர் தன் கைப்பட எழுதிய  அந்த கடிதத்தை கண்டு அதிர்ந்து போய் உடனே அந்த தாய்க்கு தீவிர உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, அந்த சிறுவனின் தாயை காப்பாற்றினார். 

முக்கிய மருத்துவர்கள் புடை சூழ மருத்துவமனையின் நிறுவனர் (அதாவது அந்த பெரியவர்) உயிர் பிழைத்த தாயை காண வந்தார். அவர்களை பார்த்த தாய், மருத்தவ செலவை பற்றி நினைத்து, என்ன ஆகுமோ என அச்சத்தில் உறைந்து இருந்தாள். அந்த பெரியவர், அந்த ஏழை தாயிடம் கவலை படாதீர்கள், உங்கள் சிகிச்சைக்கான அனைத்து தொகையும் உங்கள் மகன் செலுத்தி விட்டான்.   இதை கேட்டதும் தாய், அதிர்ந்துபோய் தன் அருகே தூங்கிக்கொண்டிருந்த தன் மகனை பார்த்தாள்.
மேலும் தொடர்ந்த பெரியவர், செலவு போக  மீதித் தொகையை உங்கள் மகனை படிக்க வைப்பதின் மூலம் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்றார்.

தாய் மிகவும் பயந்து போய் அந்த பெரியவரிடம் காரணத்தை கேட்டபோது, அவர் " உங்கள் மகனின் அந்த கடவுள் மீதான நம்பிக்கை மற்றும் கடவுளை பெற்றே தீருவேன் என்ற விடா முயற்சி ஆகியவைதான்  இந்த சேவையை செய்ய காரணம் என்று கூறினார். 

#மனதில்நம்பிக்கை மற்றும் #விடாமுயற்சி இருந்தால் ஒரு ரூபாய்க்கு கூட #இறைவன் கிடைப்பார்...
அன்பே கடவுள்....அன்பே சிவம் .

இன்று ஒரு தகவல்

21 பிப்., 2024

நலக்குறிப்புகள்

இன்றைய சிந்தனைக்கு

சிரித்து வாழவேண்டும்!

மேன்மக்கள்

இந்தியாவிலேயே,முதன் முறையாக,முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 
"மின் மோட்டாரை" தயாரித்த மாநிலம்
தமிழ்நாடு.
தயாரிக்கப்பட்ட வருடம் 1937. 
தயாரித்தது யார் தெரியுமா
கோவை மாவட்டம் கலங்கல் என்ற கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு மகனாகப் பிறந்த அச்சிறுவனுக்கு,பள்ளிக் கல்வியின் மேல் நாட்டமில்லை,எனவே பள்ளியிலிருந்து வெளியே அனுப்பப்பட்டான்.பள்ளிக் கல்வி தலையில் ஏறாமல் போகவே,ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.ஒரு நாள் அவ்வழியே வந்த பிரிட்டீஷ்காரரின்-மோட்டார் பைக் பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டது.பைக் என்பதே அரிதலும்,அரிதான அக்காலகட்டத்தில் அதைப் பழுது பார்க்கும் நிபுணத்துவமும் குறைந்தே இருந்தது.நட்ட நடுவழியில் வெள்ளைக்காரர் திணறுவதைப் பார்த்து,அங்கு ஆடு-மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த அச்சிறுவன் ஓடி வந்து-பைக் கை பிரித்து மேய்ந்து பழுது நீக்கி அதை ஓடும் நிலையில் தயார் செய்து தந்தான்.அன்று தான் அதுவரையிலும் அச்சிறுவன் மனதில் தீப்பொறியாய் இருந்த விஞ்ஞானத் தாகம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.உடனடியாக தன் கிராமத்தை விட்டு வெளியேறி-கோவையில் ஒரு உணவகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.அதில் வந்த பணத்தைச் சேமித்து ஒரு மோட்டார் பைக் வாங்குவதே அவரது திட்டம்.பல மாத சேமிப்பில் அவரால் ஒரு மோட்டார் பைக்கை வாங்க முடிந்தது.வாங்கிய கையோடு அதை பகுதி பகுதியாகப் பிரித்து-அது பணி செய்யும் விதத்தை ஆராய்ந்து,பின் மீண்டும் ஒன்று சேர்த்தார்.அதன் பின் சின்ன சின்ன இயந்திரவியல் பணிகளைச் செய்யும் மிகச் சிறிய பொறியியல் பட்டறையை அமைத்தார்.அன்று தொடங்கிய அந்த பயணம் இந்திய அளவில் அறிவியல் துறையில் பல அசகாய சாதனைச் செய்தது. 

யார் அவர் என புதிராக இருக்கிறதா? 

1945 இல் நடந்த சம்பவம்.

இந்தியாவின் முதல் பாலிடெக்னிக் கல்லூரி அது.அக்கல்லூரியின் முதல்வர் கூட அவர்தான்.ஆனால் அவரோ பள்ளிப் படிப்பையேத் தாண்டாதவர்,ஆனாலும் தொழில்நுட்ப அறிவில் அவருக்கு நிகராக வேறு எவரும்  இல்லாத காரணத்தினால்,அவரையேப் அப்பதவியில் அமர்த்தியது அன்றைய பிரிட்டீஷ் அரசாங்கம். 

பிரிட்டிஷ் அரசால்,தயாரிக்கப்பட்ட, அக்கல்லூரியின் பாடத்திட்டத்தை மறுஆய்வு செய்த அவர்,பொறியியல் படிப்புகளுக்கு நான்காண்டுகள் தேவையேயில்லை.அது மாணவர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கும்,இரண்டாண்டுகள் போதும் என்று மாற்றத்தைக் கொண்டு வரப் பரிந்துரை செய்தார்.ஆனால் அதை பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புக் கொள்ளவில்லை. 

உடனடியாக அக்கல்லூரியின் முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக  இராசினாமா செய்தார்.

இதில் வேடிக்கையானே விஷயம் என்னவென்றால்,அவர் அளித்த நன்கொடைகளாலும்,அவரின் அயராத முயற்சியாலுமே தான் இந்தியாவின் முதல் பாலிடெக்னிக் கல்லூரியான அது,
கோயம்புத்தூரில் அமைந்தது. 

அவர் நன்கொடை தந்து அவரால் உருவாக்கப்பட்ட அந்த கல்லூரியின் முதல்வர் பதவியை தான் அவர் இராஜினாமா செய்தார். 

அந்தக் கல்லூரி தான், துவக்கத்தில் ஆர்தர் ஹோப் கல்லூரி என்று பெயரிடப்பட்டு, பின்னாட்களில்,கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி என்றான, 

இன்றைய  Government College of Technology -GCT Coimbatore.

புகைப்படக் கருவியான கேமராவைப் பார்த்தாலே அதை ஏதோ ஒரு துப்பாக்கியைப் பார்த்தது போல மக்கள் பதறி,புகைப்படம் எடுத்தாலே ஆயுள் குறைந்து விடும் என்று திடமாக நம்பிய 1930 களின் காலகட்டத்தில்,  அதிலும் ஒரு தனி நபர் ஒருவர் கையில் கேமரா இருப்பதும்,அதை அவர் கையாள்வதும்--வானத்தில் பதினொன்று போட்டுக் காட்டும் சாகசத்திற்கு நிகராகப் பார்க்கப்பட்ட,அந்தக் காலகட்டத்திலேயே அவரிடம் கேமரா இருந்தது.அதுவும் அவரே வடிவமைத்த கேமரா.அதைக் கொண்டு 1935 இல் இங்கிலாந்தில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இறந்தபொழுது-அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை அப்படியேப் படம் பிடித்தார்.இங்கிலாந்திலேயே படம் பிடித்தவர்--இந்தியாவில் சும்மா இருப்பாரா?நேதாஜி,காந்தி,நேரு,காமராஜர்,
பசும்பொன் தேவர்,பெரியார்  என்று அவரின் கேமராவில் அகப்படாத பிரபலங்களே இல்லை. 

1937 இல் முதன் முதலில் இந்தியாவில்,உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட-முதல் எலக்ட்ரிக் மோட்டாரை தயாரித்தது அவருடைய UMS நிறுவனம் தான்.

1940 களிலேயே,ஒரு முழு வீட்டையும்,அஸ்திவாரம் தொடங்கி,முழுக் கட்டிடம் வரையில்-எட்டே மணிநேரத்தில் கட்டி முடித்துக் காட்டினர் அவர்.

1940 களிலேயே மிக மிக மெல்லிய பிளேடுகளைக் கொண்ட--தானியங்கி முகச்சவரக் கத்தியை வடிவமைத்தார். அது ஜெர்மனியில் பல பரிசுகளை வென்றது.

1952 இல் இரு நபர்கள் மட்டும் பயணம் செய்யும் வகையில்,பெட்ரோலில் இயங்கும் காரை அவர் வடிவமைத்து தயாரித்தார்.ஆனால் அப்போதைய இந்திய அரசாங்கம் அக்காருக்கு லைசென்ஸ் தர மறுத்து விட்டது.

பத்தடி உயரம் வளரும் பருத்திச் செடி, பலவகை சுவைகளைக் கொண்ட மாம்பழங்களைக் ஒரே கிளையில் தரும் மாமரம் என அவர் விவசாயத்திலும் பல புரட்சிகளைச் செய்து காட்டினர்.இவையெல்லாம் அவருடைய அறிவியல் கண்டுபிடிப்பு எனும் கடலின் கரையில் எடுக்கப்பட்ட சிப்பிகள்... 

முறையான கல்வியறிவு ஏதுமின்றி-தன் சொந்த முயற்சியாலும்,கடின உழைப்பாலும் முன்னேறிய அவர் தான், 

கோவை அரசு மருத்துவக்கல்லூரி துவக்கப்பட்ட பொழுது,அதற்காக தனக்குச் சொந்தமான 153 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியவரும், 

GCT எனப்படும்,கோவை பொறியியல் கல்லூரி அமைய பெரும் முயற்சியெடுத்து,நிதியுதவி செய்து,அதன் முதல் முதல்வருமாகவும் இருந்த, 

கொங்கு மண்டலத்தின் தங்கம், 

"கோபாலசாமி துரைசாமி நாயுடு.... சுருக்கமாக....ஜி.டி.நாயுடு..." 

கல்வி இல்லையே,பணமில்லையே,
வசதியில்லலையே,வாய்ப்புகள் இல்லையே...என்று இல்லைகளை பட்டியலிட்டு இயலாமையில் இருக்காமல், 

நாம் நிற்கும் அந்தப் புள்ளியிலிருந்து தான் உலகமே துவங்குகிறது.நாமே நமக்கு மூலதனம். 

புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் கண்டு நோகாமல்,அவற்றைச் சேர்த்து வைப்போம்,நம் வெற்றிவிழாவில் மற்றவர்கள் அதை பெருமையாக பேசுவார்கள்....என்று நினைக்கத் தொடங்கினால், 

நம் வெற்றியைப் பதிவு செய்ய வரலாறு காத்திருக்கிறது...

மாமேதை ஜி.டி.நாயுடுவை இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் என்று குறிப்பிடுவார்கள்.

நன்றி :

அருள்வாக்கு

20 பிப்., 2024

நூல் நயம்

#reading_marathon2024
24RM070
12/75
#எஸ்ராமகிருஷ்ணன் 

புத்தகத்தின் பெயர்: யாமம் ஆசிரியர் பெயர்: எஸ் ராமகிருஷ்ணன் 
பதிப்பகம்: தேசாந்திரி மொத்த பக்கங்கள் 408 விலை ரூ400

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நாவல்கள், மொழிபெயர்ப்பு, சினிமா, கட்டுரைத் தொகுப்புகள், உலக எழுத்தாளர்கள் மற்றும் அவருடைய படைப்புகள் குறித்த கட்டுரை தொகுப்புகள் என இவர் எழுதிக் குவித்த எழுத்துக்கள் அளவற்றது..  நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை இயற்றியுள்ளார்.. இவருடைய "யாமம்" என்ற இந்த நாவல் பக்கம் பக்கமாக எழுத்துகளின் குவியல்கள்! கதைகளின் ஊடாக இவர் எவ்வளவு தகவல்களை கொடுத்திருக்கிறார்.. படிக்க படிக்க தீரா பக்கங்கள்!!  பக்கங்கள் என்று சொல்வதை விட அவ்வளவு தகவல்கள், மனித மனதின் விசித்திரங்கள்,அவற்றின் அலைகழிப்பு, போராட்டங்கள், ஏமாற்றங்கள்,துயரங்கள், சந்தோஷங்கள்...  

இந்த நாவலில் மொத்தம் நான்கு கதைகள் ஒவ்வொரு கதையின் ஓட்டமும் ஒரு தெளிந்த நீரோடையின் ஓட்டம் போல நகர்கிறது.. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் நகரும் கதைகள்.. எந்த ஒரு இடத்திலும் கதையோ கதை மாந்தர்களோ தொடர்பு கொள்வதே இல்லை.. ஒரே நாவலுக்குள் நான்கு குரு நாவல்கள் தனித்து இயங்குவதை போல தான் கதை சொல்லப்பட்டு இருக்கிறது இந்த நான்கு கதைகளும் "யாமம்" என்ற ஒற்றை புள்ளியில் தொடர்பு கொள்கிறது.. யாமம் என்பது காமம் என்பது குறியீடாகவே அனைத்து கதைகளிலும் தொடர்கிறது... இந்த நான்கு கதைகளின் பின்புலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மதராசபட்டணம் உருவான வரலாறு அமைந்திருக்கிறது நான்கு கதைகளுக்கும் ஆதாரமாக விளங்குவதும் இந்த வரலாறு தான்.. 

மதராசபட்டினம் உருவான காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு இஸ்லாமிய குடும்பம் மிகுந்த வாசனை கொண்ட ஒரு அத்தரை பிரத்தியேகமாக தயாரித்து விற்பனை செய்கிறது.. அந்த அத்தர் பெயர் தான் யாமம்.. 

" சொல்லின் வழியாக இரவை அறிந்து கொள்ள முடியாது. பகலும் இரவும் ஒன்றுக்கொன்று எதிரானதும் அல்ல, உறவானதும் அல்ல. பகல் தீட்டும் சித்திரங்கள் யாவையும் இரவின் கரங்கள் அழித்து மறுஉருவாக்கம் செய்கின்றன.”  

அதனால் இரவு என்னும் ரகசிய நதி எப்போதுமே நம்மை சுற்றி ஓடிக்கொண்டே இருக்கிறது.. இரவை ஒரு சுகந்தம் என உருவாக்குவதும் உங்கள் கையில் என்று சொல்லி ஒரு சூஃபி ஞானி அத்தர் தயாரிக்கும் தொழிலை கரிமின் குடும்பத்திற்கு சொல்லிக் கொடுக்கிறது.. இந்த குடும்பத்தின் ஆண் வாரிசுகளின் மூலம் வழிவழியாக அத்தர் தயாரிக்கும் தொழில் தொடர்ந்து வருகிறது.. கரீம் தன்னுடைய ஆண் வாரிசுக்காக மூன்று பெண்களை மணக்கிறான்.. ராஜ்மானி, வஹிதா மற்றும் சுரையா.. ஆனால் இவர்கள் யாராலும் ஒரு ஆண் வாரிசை பெற்றெடுக்க முடியவில்லை... இதையே நினைத்து தன்னுடைய குடும்பத்தொழில் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல ஆண் வாரிசு இல்லை என்று வெறுத்து கரீம் சூதாட்டத்திலும் குதிரை பந்தயத்திலும் தன்னுடைய செல்வங்களை எல்லாம் இழக்கிறான்.. அதன் பிறகு அவனுடைய மனைவிகள் எவ்வாறு தன்னுடைய வாழ்க்கையை கடக்கிறார்கள் என்பது மீதிக் கதை...

இவர்கள் தயாரிக்கும் யாமம் மனிதனின் அடிப்படை காமம் என்ற இச்சையின் குறியீடாகவே அனைத்து கதைகளிலும் வெளிப்படுகிறது... இரவினை சுகந்தமாக்கும் யாமம் (காமம்) அந்த சுகந்தத்தினால் ஆட்கொள்ளப்படும் மனிதர்கள் இப்படி மற்ற அனைத்து கதைகளும் நகர்கிறது... 

இன்னொரு கதையில் வரும் பத்ரகிரி தன்னுடைய தகப்பனாரால் புறக்கணிக்கப்பட்டு தன்னுடைய சித்தியால் பேணி வளர்க்கப்பட்டவன் இவருடைய மனைவி விசாலா.. இவனுடைய தம்பி திருச்சிற்றம்பலம் அவனுடைய மனைவி தையல்நாயகி.. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் லாம்ப்டன் தலைமையில் நில அளவை குழுவில் இணைந்து பணியாற்றும் பத்ரகிரி.. கணிதத்தில் மேதையாக திகழும் திருச்சிற்றம்பலம்.. தன்னுடைய மேற்படிப்பிற்காக பல லண்டன் சென்றும் தன்னுடைய பிரம்மச்சரிய வாழ்க்கையை மிகவும் கட்டுக்கோப்பாக கடைபிடித்து வருகிறான்.. உறவுகளின் பிறழ்வுகளில் ஏற்படும் சிக்கல்களை இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் மீதிக்கதை மிக அருமையாக சித்தரிக்கின்றன... 

நீலகண்டம் என்ற நாயை பின்தொடர்ந்து செல்லும் சதாசிவ பண்டாரம் இன்னொரு கதை.. இந்த கதையின் மூலம் மனிதர்களின் வாழ்வு பெரும்பாலும் அவர்களின் மனங்களில் தோன்றிக்கொண்டே இருக்கும் சிலஅக காரணங்களுக்காக அலைபாய்ந்து கொண்டே செல்வதை மிக நுண்ணியமாக சித்தரித்துக் காட்டுகிறார்,. ஆன்மீக வாழ்வினை ஏற்றுக்கொண்ட பண்டாரத்தின் வாழ்விலும் காமம் இல்லாமல் இல்லை.. இரவு என்பது நாம் நினைத்தவாரில்லை.. அது மனிதனின் அகத்தை நெகிழச் செய்து நம்மை அறியாமலேயே அதன் ஆழத்திற்கு இழுத்துச் சென்று தன் மாயவலையில் சிக்கிக் கொள்ள வைக்கிறது... அந்த நெகிழ்வான இரவில் பண்டாரமும் ஆட்கொள்ளப்படுகிறார்.. 

அடுத்து கிருஷ்ணப்ப கரையாளரின் கதை.. சொத்து பிரச்சனை வழக்கில் உழன்று கொண்டிருக்கும் இவர் தன்னுடைய ஊதாரித்தனத்தால் நிறைய சொத்துக்களை இழக்கிறார்.. வாழ்வின் நிறைய அலைகழிப்புக்குப் பிறகு எலிசபத் என்ற வேசியுடன் தனக்கு சொந்தமான மலைக்குச் சென்று தங்குகிறார்.. மலையின் மீது இருக்கும் காடும் இயற்கையும் எப்பேர்ப்பட்ட மனதினையும் கரைத்து விடும்.. அப்படித்தான் கிருஷ்ணப்பனும்.. மலையின் மீது குடியேறியதில் இருந்து தன்னுள் ஏற்பட்ட மனமாற்றம் கடைசியில் தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விட்டுக் கொடுத்து அவர் தங்கியிருக்கும் அந்த மலையை மட்டும் எடுத்துக் கொண்டு அதையையும் எலிசபத்திற்கு எழுதிக் கொடுக்கிறார்.. அதன் பின்பு அந்த மலை சரிவில் தேயிலை தோட்டம் உருவான கதையையும் கூறியுள்ளார்.. இந்த கதையின் எலிசபெத் என்னவானாள் என்பதை வாசகர்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. 

இப்படி ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத இந்த நான்கு கதைகளிலும் இதுதான் முடிவு என்று இல்லாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கை பயணங்களாக தொடர்கிறது... கரிமின் கதை பேராசையையும் , சதாசிவ பண்டாரத்தின் கதை ஆன்மீகப் பாதையையும், பத்ரகிரியின் கதை சபலத்தினால் ஏற்படும் சிக்கல்களையும்,  கிருஷ்ணப்ப கரையாளரின் கதை பல்வேறு சலனங்களுக்குப் பிறகு ஏற்படும் அமைதியையும் உணர்த்துகிறது.. மனித மனங்களின் எண்ண ஓட்டங்களுக்கு நாம் எப்படி எதிர்வினை புரிந்தால் எந்த இடத்தை அடையலாம் என்பதை தெளிவாக விளக்கும் கதைகள் அற்புதமான வாசிப்பு அனுபவம்...

நன்றி :

குட்டிக்கதை

ஊசியின் ஓட்டையில் யானை போய்விட்டது, ஆனால் அதன் வால் போக முடியவில்லை..! மகாபாரதம் போடும் விடுகதைக்கு விடை தெரியுமா?

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். அழகான குதிரையை அவனும் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "குதிரை என்ன விலை? என்று கேட்டான்.

குதிரையின்_உரிமையாளரோ, "ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்" என்றார். சகாதேவன் உடனே, "சரி கேள்வியைச் சொல்லுங்கள்" என்றான்.

குதிரையின் உரிமையாளர், "நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் சொல்லுங்கள்! ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை. இது ஏன்? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்" என்றார். சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்துவிட்டான்.

சற்று நேரத்தில்.... சகாதேவனை தேடிக்கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். "ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு, குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.

துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?" என்றார். நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.

"ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்? பதில் சொல்லிவிட்டு, குதிரையை கொண்டு செல்லுங்கள்" என்றார். அர்ஜுனனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, "தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா!" என்றார்.

பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், "அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்?" எனக் கேட்டார். அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான்.

அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள் எல்லாரும் திகைத்தார்கள். "அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக என்ன நடந்தது?" எனக் கேட்டார்கள்.தர்மர் பதில் சொல்லத் தொடங்கினார்..

"தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப் போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன." அதை நினைத்துத்தான் நடுங்கினேன். "ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று விரிவாகக் கூறினார்.

"உங்களிடம் கேள்வி கேட்டவன் கலி_புருஷன். அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர்கள். ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்பது குறிக்கிறது.

ஆனால், அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.

அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும். ஆனால், நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைத்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

அடுத்து மூன்றாவது கேள்வியில், பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள். மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள்.

இதைத்தான், வேலி அப்படியே இருக்க, பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது என்று சொல்லி முடித்தார் தர்மர்.

கலியுகத்தில் உலகம் இப்படித்தான் இருக்கும் என்பது மகாபாரத காலத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

அருள்வாக்கு




இன்றைய சிந்தனைக்கு

முதியோர் நலம்

*45 வயது முதல் 100 வயது வரை உள்ள எனது பெரியவர்களுக்கான சுகாதார குறிப்புகள்*
******
நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்க இவை அனைத்தையும் கவனியுங்கள்:
 ::::::::::::::::::::::::::::::::::
உங்கள் தேநீரில் பால் குறைவாக குடிக்கவும். அதற்கு பதிலாக, எலுமிச்சை அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
~~~~~~
பகல் நேரத்தில், அதிக தண்ணீர் குடிக்கவும்; ஆனால் இரவு நேரத்தில், குறைவாக குடிக்கவும்.
~~~~~~
பகலில் 2 கப் காபிக்கு மேல் குடிக்க வேண்டாம், முற்றிலும் நிறுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.
~~~~~~
எண்ணெய் உணவுகளை 
குறைவாக சாப்பிடுங்கள்.
~~~~~~
சிறந்த தூக்க நேரங்கள் 
இரவு 10 மணி முதல் 
காலை 6 மணி வரை.
~~~~~~
மாலையில், மாலை 5 அல்லது 6 மணிக்குப் பிறகு சிறிது அல்லது எதுவும் சாப்பிடுங்கள்.
~~~~~
குளிர்ந்த நீரில் மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள், 
ஆனால் சூடானவுடன், படுக்கைக்குச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன் உங்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். மருந்துகளை உட்கொண்டு உடனடியாக படுத்துக்கொள்ளாதீர்கள்.
~~~~~~
நீங்கள் மேலும் வயதாகும்போது, குளிர்ந்த தண்ணீரைக் குடிப்பதை நிறுத்துங்கள், ஆனால் அறை வெப்பநிலையில் தண்ணீரை மட்டுமே குடிக்கவும்
~~~~~~~~~~~~~~~
ஒரு நாளைக்கு குறைந்தது 
8 மணிநேரம் தூங்க முயற்சி செய்யுங்கள்.
~~~~~~~~~~~~~~~
மதியம் முதல் மாலை 3 மணி வரை ஒன்றரை மணி நேரம் தூங்குவது, மன அழுத்தத்தைக் குறைக்கவும், இளமையாகவும், எளிதில் வயதாகாமல் இருக்கவும்.
~~~~~~~~~~~~~~~
உங்கள் மொபைல் ஃபோன் பேட்டரியில் ஒரே ஒரு 
பட்டியை விட்டுவிட்டால், 
இனி அழைப்புகளைச் செய்ய வேண்டாம், ஏனென்றால் ஆபத்தான கதிர்வீச்சு மற்றும் அலைகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.
~~~~~~~~~~~~~~~
அழைப்புகளுக்குப் பதிலளிக்க உங்கள் இடது காதைப் பயன்படுத்தவும், வலது காது உங்கள் மூளையை நேரடியாகப் பாதிக்கும். 😳 அழைப்புகளுக்குப் பதிலளிக்க இயர்போன்களைப் பயன்படுத்துவது இன்னும் சிறந்தது.
~~~~~~~~~~~~~~~
*உங்களால் முடிந்தவரை அடிக்கடி சரிபார்க்க வேண்டிய இரண்டு விஷயங்கள்:*
(1) உங்கள் இரத்த அழுத்தம்
(2) உங்கள் இரத்த சர்க்கரை.
~~~~~~~~~~~~~~~
*உங்கள் உணவுகளில் குறைந்தபட்சமாக குறைக்க வேண்டிய ஆறு விஷயங்கள்:*
(1) உப்பு
(2) சர்க்கரை
(3) பாதுகாக்கப்பட்ட இறைச்சி மற்றும் உணவுகள்
(4) குறிப்பாக வறுத்த 
சிவப்பு இறைச்சி
(5) பால் பொருட்கள்
(6) மாவுச்சத்துள்ள பொருட்கள்
~~~~~~~~~~~~~~~
*உங்கள் உணவில் அதிகரிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்:*
(1) கீரைகள்/காய்கறிகள்
(2) பீன்ஸ்
(3) பழங்கள்
(4) கொட்டைகள்
~~~~~~
*நீங்கள் மறக்க வேண்டிய 
மூன்று விஷயங்கள்:*
(1) உங்கள் வயது 😮
(2) உங்கள் கடந்த காலம் 🤔
(3) உங்கள் கவலைகள்/குறைகள் 👍🏽
~~~~~~
*எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் அல்லது எவ்வளவு வலிமையாக இருந்தாலும் உங்களிடம் இருக்க வேண்டிய நான்கு விஷயங்கள்:*
(1) உங்களை உண்மையாக நேசிக்கும் நண்பர்கள்
(2) அக்கறையுள்ள குடும்பம்
(3) நேர்மறை எண்ணங்கள்
(4) ஒரு சூடான வீடு.
~~~~~~
*ஆரோக்கியமாக இருக்க நீங்கள் செய்ய வேண்டிய ஏழு விஷயங்கள்:*
(1) பாடுதல்
(2) நடனம்
(3) உண்ணாவிரதம்
(4) புன்னகை/சிரித்தல்
(5) மலையேற்றம்/உடற்பயிற்சி
(6) உங்கள் எடையைக் குறைக்கவும்.
~~~~~~
*நீங்கள் செய்ய வேண்டிய 
ஆறு விஷயங்கள்:*
(1) நீங்கள் சாப்பிட பசி எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம்
(2) நீங்கள் குடிக்க தாகம் எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம்
(3) நீங்கள் தூங்குவதற்கு தூக்கம் வரும் வரை காத்திருக்க வேண்டாம்
(4) நீங்கள் ஓய்வெடுக்க சோர்வாக உணரும் வரை காத்திருக்க வேண்டாம்
(5) மருத்துவப் பரிசோதனைக்காகச் செல்ல உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் வரை காத்திருக்காதீர்கள், இல்லையெனில் வாழ்க்கையில் நீங்கள் வருத்தப்படுவீர்கள்.
(6) நீங்கள் உங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதற்கு முன் உங்களுக்கு பிரச்சனை வரும் வரை காத்திருக்காதீர்கள்.
~~~~~~
இந்த சுகாதார உதவிக்குறிப்புகளைப் படித்த பிறகு நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று:
(1) இதை உங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்புங்கள், நீங்கள் அவ்வாறு செய்யும்போது, கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
=================
 உங்களின் இயல்பான வியாபாரத்தை மேற்கொள்ளும் போது, நீங்கள் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறீர்கள் என்பதை அறிய, எப்பொழுதும் எங்கள் உடலைச் சரிபார்த்துக்கொள்ள மறக்காதீர்கள். ஆரோக்கியமே செல்வம்.

*மருத்துவத் தகுதி*
           உயர் இரத்த அழுத்தம்
          ----------
120/80 -- இயல்பானது
130/85 --இயல்பான (கட்டுப்பாடு)
140/90 -- உயர்
150/95 -- வி.ஹை
----------------------------
           பல்ஸ்
          ----------
நிமிடத்திற்கு 72 (தரநிலை)
60 --- 80 p.m. (சாதாரண)
40 -- 180 p.m.(அசாதாரண)
----------------------------
          வெப்ப நிலை
          -------------------
98.4 F (சாதாரண)
99.0 F மேலே (காய்ச்சல்)

*உங்கள் உறவினர்கள், நண்பர்கள் இந்த தகவலை பகிர்ந்து உதவுங்கள்....*

*மாரடைப்பு* : - வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது

இது மிகவும் நல்ல கட்டுரை. சாப்பிட்ட பிறகு வெதுவெதுப்பான தண்ணீரைப் பற்றி மட்டுமல்ல, ஹார்ட் அட்டாக் பற்றியும். சீனர்களும் ஜப்பானியர்களும் அவர்களுடன் சூடான தேநீர் அருந்துகின்றனர்
சாப்பாடு, குளிர்ந்த நீர் அல்ல, சாப்பிடும் போது அவர்கள் குடிக்கும் பழக்கத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம். குளிர்ந்த நீர் அருந்த விரும்புவோருக்கு, இந்தக் கட்டுரை உங்களுக்குப் பொருந்தும். உணவின் போது குளிர்ந்த பானம்/தண்ணீர் குடிப்பது மிகவும் தீங்கானது. ஏனெனில், குளிர்ந்த நீர் நீங்கள் இப்போது உட்கொண்ட எண்ணெய் பொருட்களை திடப்படுத்தும். இது செரிமானத்தை மெதுவாக்கும். இந்த 'கசடு' அமிலத்துடன் வினைபுரிந்தவுடன், அது உடைந்து, திட உணவை விட வேகமாக குடலால் உறிஞ்சப்படும். இது குடலை வரிசைப்படுத்தும். மிக விரைவில், இது கொழுப்பாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்ட பிறகு சூடான சூப் அல்லது வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நல்லது.

பிரஞ்சு பொரியல் மற்றும் பர்கர்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய எதிரி. அதன் பிறகு ஒரு கோக் இந்த அரக்கனுக்கு அதிக சக்தியைக் கொடுக்கிறது. உங்கள் இதயம் மற்றும் ஆரோக்கியத்திற்காக அவற்றைத் தவிர்க்கவும்.

மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படாமல் இருக்க இரவில் இரத்தம் உறைவதைத் தவிர்க்க நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும்.

இந்தச் செய்தியைப் படிக்கும் ஒவ்வொருவரும் 10 பேருக்கு அனுப்பினால், குறைந்தபட்சம் ஒரு உயிரையாவது காப்பாற்றுவோம் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம் என்கிறார் இருதயநோய் நிபுணர். ...

எனவே, தயவு செய்து உண்மையான நண்பராக இருங்கள் மற்றும் நீங்கள் விரும்பும் நபர்களுக்கு இந்தக் கட்டுரையை அனுப்பவும்.

*கட்டாயம் படிக்க வேண்டும்*
*வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவும்*
 
*💉இரத்தக் குழு இணக்கம் 💉*

உங்கள் வகை என்ன, அது எவ்வளவு பொதுவானது?

O+ 1 இல் 3 37.4%
(மிகவும் பொதுவான)

3 இல் A+ 1 35.7%

B+ 1 இல் 12 8.5%

AB+ 1 இல் 29 3.4%

O- 1 இல் 15 6.6%

A- 1 இல் 16 6.3%

B- 1 இல் 67 1.5%

AB- 1 இல் 167 .6%
(அரிதாக)

*இணக்கமான இரத்த வகைகள்*

O- பெற முடியும் O-

O+, O+, O-ஐப் பெறலாம்

A- A-, O- பெறலாம்

A+, A+, A-, O+, O- ஆகியவற்றைப் பெறலாம்

B- B-, O- பெறலாம்

B+ B+, B-, O+, O- ஆகியவற்றைப் பெறலாம்

AB- AB-, B-, A-, O- ஆகியவற்றைப் பெறலாம்

AB+ ஆனது AB+, AB-, B+, B-, A+, A-, O+, O-b ஆகியவற்றைப் பெறலாம்

இது ஒரு உயிரைக் காப்பாற்றக்கூடிய 
முக்கியமான செய்தி!
🅰️(+) : நல்ல தலைமை.
🅰️(-) : கடின உழைப்பாளி.
🅱️(+) : மற்றவர்களுக்காக தியாகம் செய்யலாம் மற்றும் மிகவும் லட்சியம், சகிப்புத்தன்மை.
🅱️(-) : வளைந்து கொடுக்காத, சுயநலம் & சோகம்.
🅾️(+) : உதவ பிறந்தவர்.
🅾️(-) : குறுகிய மனம் கொண்டவர்.
🆎(+) : புரிந்துகொள்வது 
மிகவும் கடினம்.
🆎(-) : கூர்மையான & புத்திசாலி.

உங்கள் இரத்தக் குழு என்ன?
 
*தண்ணீரின் விளைவு* 💐 தண்ணீர் முக்கியம் என்பதை நாம் அறிவோம் ஆனால் அதை குடிக்க வேண்டிய ஸ்பெஷல் டைம்கள் பற்றி ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.. !!
       *நீங்கள் செய்தீர்களா* ???

💦 சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பது ⏰ மனித உடலில் அதன் செயல்திறனை அதிகரிக்கிறது;

1⃣ 1 கிளாஸ் தண்ணீர் எழுந்தவுடன் -🕕⛅ உள் உறுப்புகளை செயல்படுத்த உதவுகிறது..

உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் 2⃣ 1 கிளாஸ் தண்ணீர் - செரிமானத்திற்கு உதவுகிறது.

3⃣ குளிப்பதற்கு முன் 1 கிளாஸ் தண்ணீர் 🚿 -உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

4⃣ படுக்கைக்குச் செல்லும் முன் 
1 கிளாஸ் தண்ணீர் -
🕙 பக்கவாதம் அல்லது மாரடைப்பைத் தவிர்க்கிறது.

ஒருவர் உங்களுடன் மதிப்புமிக்க ஒன்றைப் பகிர்ந்து கொண்டால், அதன் மூலம் நீங்கள் பயனடைவீர்கள், அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களுக்கு தார்மீகக் கடமை உள்ளது......

 *மிக்க மகிழ்ச்சியுடனே இருப்போம்.........*

இன்று ஒரு தகவல்

ஆன்மீக சிந்தனை