அதிர்ச்சித் தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிர்ச்சித் தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 மார்., 2020

அதிர்ச்சித் தகவல்கள்: சரியும் வங்கிகள், பேரிடரில் இந்தியப் பொருளாதாரம்?


ரிசர்வ் வங்கி அனுப்பிய அதிர்ச்சியளிக்கும் 

குறுஞ்செய்தி 

திரு அய்யநாதன் அவர்களின் விழிப்புணர்வு 

பேட்டி 

Ayyanathan About Bank Shut Down Issue | Yes Bank | PNB | Savings
29,999 views
Mar 13, 2020
Zhagaram Voice
106K subscribers
For Business Enquiry : zhagaramcontact@gmail.com For Business Enquiry : zhagaramcontact@gmail.com
Credits :
Camera - Thiyagu
Edit - Thiyagu
Jr.Excutive Producer- Ranjith
Channel Head - Durai Prabhakaran

நன்றி: திரு அய்யநாதன் அவர்கள், "Zhagaram Voice" மேலும் இந்த காணொளியை உருவாக்கிய மேற்கூறப்பட்டுள்ள அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

21 ஜூன், 2019

அதிர்ச்சித் தகவல்கள்-14: கதிர்வீச்சால் நரகமான ஜாதுகோடா

அணுக்கழிவு கிடங்கு அமைந்தால், கதிர்வீச்சால் நரகமான ஜாதுகோடாவாக தமிழகம் மாறும் ஆபத்து?*

*NEWS 18*

💧💧💧💧💧💧💧💧💧💧💧

யுரேனிய கழிவுகளின் கதிர்வீச்சின் வீரியம் குறைய, குறைந்தது 50,000 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
    
ஜாதுகோடா... ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் ஓர் அழகிய மலை கிராமப் பகுதி. இந்தப் பகுதியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 35,000-க்கும் மேற்பட்ட மக்கள், விவசாயத்தை முதன்மையாகக் கொண்டு, இயற்கையோடு இயற்கையாக மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழ்ந்து வந்தார்கள்.

1951-ம் ஆண்டு மலைவாழ் மக்களின் மகிழ்ச்சியில் பேரிடி விழுந்தது போல ஒரு செய்தி பரவியது. அந்த மக்கள் வாழ்ந்து வந்த மலைப் பகுதிகளில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதே அந்தப் பேரிடி. பிறகு, 1967-ம் ஆண்டு யுரேனிய சுரங்கத்தையும், உற்பத்தித் தொழிற்சாலையையும், இந்தியாவிலேயே முதன்முதலாக, யுரேனியம் கார்பரேஷன் ஆஃப் இந்தியா என்ற அரசு நிறுவனம் ஜாதுகோடாவில் நிறுவியது.

யுரேனிய சுரங்கம் அமைக்க அப்பகுதி மக்களின் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டன. விவசாயம் தவிர வேறெதுவும் தெரியாத அந்த அப்பாவி மக்களை, வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்ற வழக்கமான கட்டுக்கதைகளைக் கூறி, தினக்கூலிகளாக வேலையில் அமர்த்தியது அந்த நிறுவனம். என்னவென்று தெரியாத அந்த மக்களை, யுரேனிய மூலப்பொருளை எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கையாள வைக்கப்பட்டனர்.

ஒவ்வோர் ஆண்டும் யுரேனியம் ஆலையில் இருந்து வெளியேறும் 3,60,000 டன் யுரேனியம் உற்பத்திக் கழிவுகள், செயற்கையாக அமைக்கப்பட்ட குட்டைகளில், எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் கொட்டப்பட்டன. அந்தக் கழிவுகளில் யுரேனியம் மட்டுமல்ல, தோரியம் 230, ரேடியம் 226, ரேடான் 222 போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய கதிரியக்கத் தனிமங்களும் இருந்தன.

அணுக்கழிவுகள் செல்லும் நீர்க் குழாய்களில் ஆங்காங்கு உடைப்பு ஏற்பட்டு, அந்தக் கதிரியக்க சக்தி கொண்ட நீர், சுற்றியுள்ள ஏரி, குளங்களில் கலந்தன. யுரேனிய கழிவுக்குட்டைகள் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தடி நீரையும், அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து நீர் ஆதாரங்களையும் மாசுபடுத்தின.
Loading...
யுரேனிய அணுக்கழிவு வெளியிடும் காமா கதிர்வீச்சு; மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் கதிரியக்க பாதிப்பு; யுரேனிய ஆலை வெளியேற்றும் கதிர்வீச்சுப் புகை என தொடர்ச்சியாக அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் பயங்கரமான கதிர்வீச்சால் முற்றுகையிடப்பட்டன. கதிர்வீச்சு பாதிப்புகள் குறித்து எந்த ஓர் அடிப்படை அறிவும் இல்லாத அப்பகுதி மக்கள், வழக்கம் போல நீர்நிலைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். கதிர்வீச்சு கலந்த தண்ணீரில் குளித்தார்கள், அதையே குடித்தார்கள்.

சில ஆண்டுகளில் அந்தப் பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கதிர்வீச்சின் தாக்கம் அப்பகுதி மக்களின் வாழ்க்கையை சூறையாடத் தொடங்கியது. பிறக்கும் குழந்தை முதல் படுக்கையில் கிடக்கும் முதியவர்கள் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை கதிர்வீச்சு அரக்கன்.

அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய், காசநோய், சுவாசக் கோளாறு, தோல் சிதைவு, உறுப்புச் சிதைவுடன் பிறக்கும் குழந்தை என நரகத்தின் வாசலைத் திறந்துவைத்தது கதிர்வீச்சு. அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தை இறந்தே பிறப்பது, கை, கால், தலை பெரிதும் சிறிதுமாக, மூளை வளர்ச்சி குன்றியும் பிறந்தார்கள். பெண்களுக்கு மலட்டுத்தன்மை, கருச்சிதைவுப் பிரச்னை, குழந்தைகள் பிறந்தவுடன் இறப்பதும் அதிகரித்தது.

இதுபோல கொட்டப்படும் யுரேனிய கழிவுகளின் கதிர்வீச்சின் வீரியம் குறைய, குறைந்தது 50,000 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். விழிப்புணர்வு ஏற்பட்டு, மக்களின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 2014-ம் ஆண்டு ஜார்கண்ட் அரசு அந்த ஆலைக்குத் தடைவிதித்து உத்தரவிட்டது. ஆலை இழுத்து மூடப்பட்டது.

இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேவர பாதிக்கப்பட்ட மக்கள் முயன்று வந்த வேலையில், ஜார்கண்ட் அரசு அம்மக்களின் நிம்மதியில் பெரிய கல்லைத் தூக்கிப் போடும் விதமாக, 2018-ம் ஆண்டு ஆலையை மீண்டும் திறக்க அனுமதியளித்தது. இதற்கு முடிவுதான் என்ன என்று தலையில் அடித்துக்கொண்டு, கண்களில் நீர் வழிய, எதிர்காலம் தெரியாத பச்சைக் குழந்தைபோல ஏங்கிக் கிடக்கிறார்கள் ஜாதுகோடா மலைப் பகுதி மக்கள்.

மலைப்பகுதியில் குறைந்த மக்கள்தொகை கொண்ட இடமான ஜாதுகோடாவிற்கே இந்த நிலைமை என்றால், தமிழகத்தில் அணுக்கழிவுகளை சேமிக்கும் கிடங்கு அமைத்தால் என்னவாகும் என்று யோசித்துக்கூட பார்க்கமுடியவில்லை. தமிழகத்தின் ஒரு பகுதியே வாழத் தகுதியற்ற நரகமாகிவிடும் என்பது மட்டும் நிச்சயம்.

நன்றி நியூஸ் 18

22 மே, 2019

அதிர்ச்சித் தகவல்கள்-13: பாலைவனமாகும் சென்னை


பாலைவனமாகும் சென்னை

Mr.Sundar Rajan Interview About Weather Change & Water Scarcity | Tamilnadu
91,903 views
NewsGlitz - Next Generation Tamil News Channel
Published on May 8, 2019
Poovulagin Nanbargal is an environmental organization based in Tamil nadu, India. The coordinator is Sundar Rajan has given the speech about the Indian defence force in Kalpakam

நன்றி: திரு சுந்தர் ராஜன் அவர்கள், NewsGlitz - Next Generation Tamil News 

Channel, பூவுலகின் நண்பர்கள் மற்றும் யூடியூப். 

5 மே, 2019

அதிர்ச்சித் தகவல்கள்-12: தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை கடத்தல்



தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை கடத்தல்


Sun News
Published on May 13, 2018

தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை கடத்தல் , பெண் குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்துள்ளது

நன்றி: "Sun News" மற்றும் யூடியூப். 

5 ஜன., 2019

அதிர்ச்சித் தகவல்கள்-10: மனிதனை ஏமாற்றும் ஏஐ!

ஏஐ = Artificial Intelligence = செயற்கை நுண்ணறிவு.

கணினி இயலின் ஒரு பகுதி. மனிதர்களைப் போலவே தானாகச் சிந்தித்துச் செயல்படும் யந்திரங்களைப் பற்றிய அறிவியல் தொழில்நுட்பம். இவை மனிதர்களைவிட அதிக சிந்தித்துசக்கும் வல்லமையும்,  செயல்படும் ஆற்றலையும் பெற்றால் எந்திரன் படத்தில் வருவது போன்ற ரோபோக்களை உருவாக்கி, மனித இனத்தையே ஆட்டிப்படைக்கும் வல்லமை பெறுமா? 

ஸ்டீபன் ஹாகிங், எலான் மஸ்க் போன்ற மேதைகள்கூட இது சாத்தியம் என்று நினைக்கின்றனர்!

2 ஜன., 2019

அதிர்ச்சித் தகவல்கள்-9: இந்தியாவில் வரலாறு காணாத நன்னீர் பற்றாக்குறை?


இந்தியாவில் வரலாறு காணாத நன்னீர் பற்றாக்குறை? அதிர்ச்சி தகவல்

 

பதியிட்டவர்கள்: புதிய தலைமுறை டிவி 

பதிவிட்ட நாள்: டிசம்பர்  27, 2018


நன்றி: புதிய தலைமுறை டிவி மற்றும் யூடியூப். 

17 அக்., 2018

அதிர்ச்சித் தகவல்கள்-6: பெட்ரோல், டீசலில் கொள்ளை லாபம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கார்ப்பரேட்டுகளின் நலனிற்காகவா? பெட்ரோல், டீசல் விலை உயரும்போது அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்வது அரசுக்குத் தெரியாதா? இல்லை அதைப் பற்றிக் கவலை இல்லையா? மக்களின் கஷ்டங்களை ஏன் கண்டுகொள்ள மறுக்கிறது? முடிவில்லாத, விடையில்லாக் கேள்விகள்?

16 அக்., 2018

அதிர்ச்சித் தகவல்கள்-5: சர்க்கரையின் அளவு

அதிர்ச்சியாக இருக்கிறது! இது உண்மையா? விஷயம் தெரிந்தவர்கள் ஆதாரங்களுடன் கலந்துரையாடினால், அனைவருக்கும் பயனளிக்கும்.

1 அக்., 2018

அதிர்ச்சித் தகவல்கள்-4: அச்சுறுத்தும் கேன் வாட்டர்

நீங்கள் வாங்கும் கேன் தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு அவசியம். நிறைய மோசடி, நிறைய ஆபத்து இதில் இருக்கிறது. இந்த வீடியோவை அவசியம் பாருங்கள்.

https://youtu.be/nqsWNEpD6J8

நன்றி: புதிய தலைமுறை மற்றும் யூட்யூப்