பார்த்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்த்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2 மார்., 2009

பார்த்தது-3: "காரைக்குடி புத்தகத் திருவிழா 2009"

காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் ஒன்பது நாளாக நடைபெற்ற ஏழாவது மாநில அளவிலான காரைக்குடி புத்தகத் திருவிழா நேற்றோடு நிறைவு பெற்றது.

காரைக்குடியில் முதன்முதலாக மாநில அளவிலான புத்தகக் கண்காட்சி பற்றிக் கனவு கண்டு, மிகுந்த சிரமங்களுக்கிடையில் செயல்படுத்தி , முதல் நான்கு புத்தகத் திருவிழாக்களின் பொறுப்பாளனாக செயல்படும் வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையில், புத்தகத் திருவிழா தொடர்ந்து விடாமல் நடைபெறுவது குறித்து பெருமகிழ்ச்சி அடைகின்றேன். பல இடையூறுகள் காரணமாக போகமுடியாமல், இறுதி நாளான நேற்று இரவுதான் திருவிழாவிற்குச் செல்ல முடிந்தது.

அரங்கினுள் நுழையும்போது, வண்ணமலர்கள் பூத்துக்குலுங்கும் அழகிய, அற்புத நந்தவனத்திற்குள் நுழையும் உணர்வே ஏற்பட்டது. வண்ணமலர்களை ஈக்கள் மொய்ப்பதுபோல் மக்கள் பேராவலுடன் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்வதைக் கண்டு உவகை அடைந்தேன். பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் பார்க்கிறபோது வாசித்தல் என்பது ஒரு கரை காணமுடியாத கடல், வாழ்நாள் முழுவதும் வாசித்தாலும் நாம் வாசித்தது கைம்மண் அளவே என்ற பணிவும் பிறந்தது.

நல்ல நூல்களை மேலும் மேலும் படித்து, இன்புற்று, அவற்றில் கூறப்பட்டுள்ள மேன்மையான கருத்துக்களை உள்வாங்கி, மனதில் மேன்மையான, உன்னதமான சிந்தனைகளை வளர்த்து, வாழ்க்கையில் மகத்தான சாதனைகள் படைக்கவேண்டும் என்ற வேட்கையை இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் ஏற்படுத்துகின்றன. இத்தகைய தலை சிறந்த தொண்டினைச் செய்துவரும் இப்புத்தகத் திருவிழா அமைப்பாளர்களையும், இது சிறப்பாக நடைபெற பல வகைகளிலும் உதவி புரிந்துள்ள அன்பர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இது போன்ற நல்ல வாய்ப்புக்களை பயன்படுத்தி அனைவரும் மேன்மையுற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நிறைவாக ஒன்று. "படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது; சிந்திக்காமல் படிப்பது பயனற்றது". ஆவலுடன் புத்தகங்களை வாங்கிச் செல்லும் அனைவரும் இக்கருத்தினை மனதில் நிறுத்தி பயனடைய வேண்டுகிறேன்.

16 பிப்., 2009

பார்த்தது-2:

ஆட்டோ ஒன்றின் பின்னால்...

தட்டிப்பறிப்பவன் வாழ்ந்ததில்லை;
விட்டுக் கொடுப்பவன் வீழ்ந்ததில்லை.

நன்றி: தி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி & தினமணி கதிர், 15.2.2009

7 அக்., 2008

பார்த்தது-1:

விளையாட்டுத்திடலின் சுவரில்....

"ஓடாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்".

நன்றி: ஜி.செல்லம்மாள், ராஜபாளையம், தினமணி கதிர், செப்டம்பர் 23, 2008.