28 செப்., 2021

சிரிப்புத்தான் வருகுதையா

கருத்து மேடை :

மாவீரன் பகத்சிங் பிறந்ததினம்

நூல் நயம் : ஊர்சுற்றிப் புராணம் - ராகுல் சாங்கிருத்யாயன்


#ஆண்டுவிழா #பயணம் தொடர்பானவை 

புத்தகம்.                   ஊர்சுற்றிப் புராணம்
ஆசிரியர். ராகுல் சாங்கிருத்யாயன்
பதிப்பகம். நியூசென்சுரி புக் ஹவுஸ்
பக்கங்கள். 150

இந்த உலகத்துலயே பழமையான மதம் ஒன்னு இருக்குன்னா, அது "ஊர்சுற்றுதல்" மட்டும் தான்னு சாங்கிருத்யாயன் ஆரம்பிக்கிறாரு. அதாவது ஊர்சுற்றுதல் மட்டும் தான் எந்த மத எல்லைக்கும் உட்படாதது, எல்லா மதங்களுக்கும் பொதுவானதுனு சொல்ற சாங்கிருத்யாயன், உதாரணத்துக்கு பழம்பெரும் ஊர்சுற்றிகளான புத்தர், இயேசுல இருந்து பாகியான், யுவான் சுவாங் வரையும் கவிஞர்கள்ல காளிதாசரில் இருந்து இரஷ்யாவின் புஷ்கின் வரைக்கும் உதாரணத்துக்கு கொடுக்குறாரு.

ஊர்சுற்றுதலின் தோற்றம். 
மனித சமுதாயத்துடைய வளர்ச்சியும், நாகரீகங்களுடைய தோற்றமும் நதிக்கரையில் இருந்து தான் ஆரம்பிச்சது. அதுவே போதும்னு மனுஷன் ஒரே இடத்துல தங்கி இருந்தா, அவனுடைய அறிவு குறுகிய பார்வை உடையதாக தான் இருந்திருக்கும். இவ்ளோ பரந்துபட்ட சமுதாயம் உலகத்துல தோன்றி இருக்காது.

ஊர்சுற்றும் மனப்பான்மை.
"ஒரு புகைப்படத்தைப் பார்த்து, நீங்கள் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள அடர்ந்த காடுகளையும், பனிமூடிய மலைச்சிகரங்களின் இயற்கை அழகையும், அதன் மனமகிழ் மணத்தையும் எப்படி அனுபவிக்க முடியாதோ, அதைப்போலவே ஊர்சுற்றிக்குக் கிடைக்கக்கூடிய நிறைவான இன்பம் பயண நூல்களைப் படித்து நீங்கள் பெற முடியாது." - ராகுல் சாங்கிருத்யாயன்.

இப்படி பயணக்கட்டுரைகள்ல இருந்து, ஊர்சுற்றுதல் பக்கம் நம்மள திசைத்திருப்புற சாங்கிருத்யாயன், ஊர்சுற்றுதலுக்கு வழிகாட்டவும் செய்றாரு.

ஊர்சுற்றும் விரதம். 
ஊர்சுற்றுதல் மனப்பான்மை ஒருத்தங்களுக்கு 12 லிருந்து 14 வயசுக்குள்ள வரணும்னு சொல்ற சாங்கிருத்யாயன், அந்த விரதத்தை 16 வயசுல இருந்து 24 வயசுக்கு மேல தான் தொடங்கணும்னு சொல்றாரு.

ஊர்சுற்றுதலுக்கு அடிப்படையான பூகோள அறிவும், வரலாறும், கணிதமும் தெரிந்து இருக்குறது இன்னும் நலம்னும், உலக வரைபடங்கள், தேச வரைபடங்கள் பற்றிய தெளிவும் அங்க நிலவுற தட்பவெப்ப நிலை, நிலப்பகுதி சார்ந்த அறிவும் அவங்களுக்கு ஊர்சுற்ற கைக்கொடுக்கும்னு சாங்கிருத்யாயன் குறிப்பிடுறாரு.

பணமும், செல்வமும் ஊர்சுற்றி விரதத்திற்கு இருக்குற தடைக்கற்கள்னு சொல்ற அவரு, ஊர்சுற்றுகிறவர்கள் உடல் உழைப்பை நம்பி இருக்கணும், தச்சுத் தொழில், சிகையலங்காரம் செய்ய தெரிஞ்சு இருக்குறது Extra Qualification. மொழி தெரியாத இடங்கள்ல கூட இந்த அனுபவ அறிவு கைக்கொடுக்கும்னு தன்னுடைய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துக்கிறாரு.

கலை மீதான தாகம்.
ஒரு ஊர்சுற்றி எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமா பயணப்படுறானோ, அவ்வளவுக்கு அவ்வளவு அறிவை சேகரிக்க முடியும்னும் அதை எழுத்து, ஓவியம், சிற்பங்கள் மூலம் வடிக்கிறதால தன்னுடைய தேசத்துக்கும், தன்னுடைய ஊர்சுற்றி விரதத்திற்கும் பெருமை சேர்க்க முடியும்னு சொல்றாரு சாங்கிருத்யாயன்.

பழங்குடியின மக்கள் இடையே ஊர்சுற்ற கிளம்புறவங்க, அவங்க மொழி தெரியலனா கூட நடனம், இசை, வாத்தியங்கள் மூலமா அவங்களோட ஒன்றிணையலாம்னு பரிந்துரைக்கிற சாங்கிருத்யாயன், உதவிக்கு எடை குறைவாக இருக்குற புல்லாங்குழலை ஊர்சுற்றிகளுடைய கைகள்ல கொடுக்குறாரு.

ஊர்சுற்றுதலில் பெண்கள்.
ஊர்சுற்றுதல்ல ஆண்கள் மட்டும் தான் ஈடுபடனுமா, பெண்கள் ஈடுபடக் கூடாதானு கேட்கிற பெண்களுக்கு சாங்கிருத்யாயன், ஊர்சுற்றும் விரதம் ஆண்கள் - பெண்கள் இருவருக்கும் பொது தான். ஆனா பெண்கள் தனியா இல்லாம, 3 பேர் கொண்ட குழுவா இயங்கினா இன்னும் பாதுகாப்பா இருக்கும்னு சொல்றாரு.

தன்னுடைய அனுபவத்துல தான் 1930, 40 கள்ல பார்த்த பெண்களுடைய பயணங்களை உதாரணத்துக்கு கொடுக்குறாரு.

ஊர்சுற்றிகளின் காதல்.
இதையெல்லாம் பேசுற சாங்கிருத்யாயன் காதலை மட்டும் மறந்திடுவாரா. ஊர்சுற்றிப் பயணத்துல தடைகற்களா இருக்குற அப்பா, அம்மா, உறவுகளையே உதறி வர சொல்றவரு. காதலுடைய இயல்பை ஏற்றுக்கிறாரு.

 நட்பும், அன்பும் ஊர்சுற்றிகளுடைய அடிப்படை பண்பா இருக்கும் போது, ஊர்சுற்றிகளுக்கு அதுவும் இளைஞர்களுக்கு, யுவதிகளுக்கு காதல் ஏற்படுறது இயல்பும்னும் அதை வெட்கம், சங்கோஜத்தால பாதுகாத்துக்கணும்னு சொல்ற சாங்கிருத்யாயன், மனுஷனை ஒரே இடத்துல கட்டிப் போடுற எதையும் நான் வெறுக்கிறேன். ஆனா அப்படி இல்லாம, இரண்டு ஊர்சுற்றிகளுக்கு நடுவுல வரல காதல் ஏற்புடையதும்னும், அந்த காதல் Extra இரண்டு கால்களையும், நாலு கால்களையும் கொடுத்திடாமலும், ஊர்சுற்றி விரதத்தைக் கெடுத்திடாமலும் இருந்தால் சரினும் சொல்றாரு.

ஒட்டுமொத்தமா ஊர்சுற்றி புராணம், ஊர்சுற்ற கிளம்புறவங்களுக்கு Guidelines. நிச்சயம் படிங்க.

மகேஸ்வரன் முருகேசன் 🖋️
28 Sept 2021

நன்றி :

திரு.மகேஸ்வரன் முருகேசன்
வாசிப்பை நேசிப்போம்

சிரிக்கவும் சிந்திக்கவும்

கவிதை நேரம் : பட்டினத்தாா் பாடல்

இன்றைய திருமந்திரம் : பாடல் 1277

திருமந்திரம் - பாடல் #1277: நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

வீச மிரண்டுள நாதத் தெழுவன
வீசமு மொன்று விரைந்திடு மேலுற
வீசமும் நாதமு மெழுந்துட னொத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே.

விளக்கம்:

பாடல் #1276 இல் உள்ளபடி ஏரொளிச் சக்கரத்திலிருந்து வெளிப்படும் சத்தத்திலிருந்து வெளிப்படும் மந்திர ஒலிகள் இரண்டு வகைகளாக இருக்கின்றது. இவை இரண்டுமே சத்தத்திலிருந்து வெளிப்பட்டு மேல் நோக்கி ஒன்றின் மேல் ஒன்றாக விரைவாக எழுந்து கொண்டே இருக்கின்றது. இந்த இரண்டு விதமான மந்திர ஒலிகளும் ஏரொளிச் சக்கரத்தின் சத்தத்துடன் சரிசமமாகச் சேர்ந்து ஒன்றாக வெளிப்பட்ட பிறகு ஏரொளிச் சக்கரத்திலிருந்து வெளிப்பட்டு அண்ட சராசரங்கள் முழுவதும் விரிந்து பரவி இருக்கின்ற வெளிச்சத்தோடும் சரிசமாகப் விரிந்து பரவுவதை பாடல் #1276 இல் உள்ளபடி உலகத்திலுள்ள இறைவனை அடைய விரும்பி சாதகம் செய்யும் உயிர்கள் காணலாம்.

நன்றி :

இன்றைய குறள்

அருள்வாக்கு

சுற்றுச்சூழல் : மரம் வளர்ப்போம்!

இயற்கையை நேசிப்போம்!


நன்றி :


இனிய காலை வணக்கம்!

27 செப்., 2021

ஹோமியோபதி ஜூம் கூட்டம்

*இன்று மாலை*
*Aproch Dindigul*  is inviting you to a scheduled Zoom meeting.

Topic: 

*அரிய மருந்துகள் அற்புத நலமாக்கல்கள் 19*

Speaker 

ஹோமியோ ஆசான் *பழ.வெள்ளைச்சாமி*


Time: Sep 27, 2021 
           06:45 PM India

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/81092830601?pwd=cEhSTjdSOUwrbG9oOUdrcmRzNTRydz09

Meeting ID: 
810 9283 0601

Passcode: 
575548

Zoom open at 6-45 pm

Zoom enter at 6-59 pm

You Tube Live Link at 6-58 pm

Meeting starts at 7-00 pm

You Tube Live Link:  

https://www.youtube.com/channel/UC9-qC0VLHn_xnrbaoXlTouQ/videos

கைவண்ணம், கலைவண்ணம்


நன்றி :

வாவ்! படங்கள்


நன்றி :


அருள்வாக்கு

நலக்குறிப்புகள் : தலைவலி


நன்றி :

இன்று ஒரு தகவல் : TNPSC தேர்வில் மாற்றம்


நன்றி :

நூல் நயம் : இந்தியப் பயணக் கடிதங்கள்

வாசிப்பு என்ன செய்துவிடும்? 

துவண்டு கிடக்கும் மனதை தட்டி எழுப்பும்..
ரணமடைந்த மனதிற்கு மருந்திடும்..
எல்லாமே முடிந்துவிட்டது என நினைக்கும் போதும் உற்சாகமூட்டும்...
இலக்கை நோக்கி உத்வேகமாக ஓட வைக்கும்..
எப்படிப்பட்ட இழப்பிலிருந்தும் வெளியே வர உறுதுணையாக இருக்கும்...

இவை எல்லாம் நான் உணர்வுப்பூர்வமாக உணர்ந்தவை.. 2020 இறுதியில் நம் குழு குறித்த அறிமுகம் கிடைத்தது.. 2021 மாரத்தானில் பங்கேற்று குறைந்தது 100 புத்தகங்களாவது வாசித்துவிட வேண்டும் என ஆசையோடு முதல் 2 பதிவுகளை எழுதினேன்.. அதன் பின் வாசிக்கவே முடியாமல் போய்விட்டது. நான்காண்டுகள் எதற்காக எங்கள் குடும்பம் காத்திருந்ததோ அந்த மகிழ்ச்சி கிடைத்தது. ஆனால் 6 மாதங்கள் மட்டுமே அது நீடித்தது. 6 மாதங்களாக உயிரும், உடலுமாக எனக்குள் இருந்த ஜீவன் எங்களை விட்டு சென்றது. எல்லாமே சூன்யமாகி விட்டது. இந்த இழப்பில் இருந்து மீளவே முடியாது என நினைத்திருந்தேன். வேதனையும், கண்ணீருமாகவே 2 மாதங்கள் கழிந்தன. எனக்கு பிடித்த எதையுமே செய்ய முடியவில்லை. மனம் மாறும் என வட்டெழுத்து கற்க என் இணையர் சேர்த்துவிட அதிலிருந்தும் 2 நாட்களில் ஓடிவந்துவிட்டேன்... மருத்துவரும் என் நிலை பார்த்து, மீண்டும் வேலைக்கு செல்ல அறிவுறுத்த பணிக்கு சென்றேன்.. 

பார்ப்போர் எல்லாம் என் மீது அக்கறையாய் விசாரிக்க, குழந்தையின் நினைவிலிருந்து மீளமுடியாமல் தவித்தேன்... மனிதர்களை எதிர்கொள்ளவே அஞ்சினேன்.. குழந்தையை குறித்து ஏதேனும் கேட்டுவிடுவார்களோ என  நடுங்கினேன். என்னை எப்படி தேற்றி பழைய நிலைக்கு கொண்டு வருவது என என் இணையர் நினைத்துகொண்டிருந்த போதுதான் நம் குழுவின் 4 ஆம் ஆண்டு வாசிப்பு விழா குறித்த அறிவிப்பை எதேச்சையாக இருவரும் பார்த்தோம். அனைத்து தலைப்புகளிலும் நீ புத்தகம். வாசித்து பதிவிட வேண்டும் என என் இணையர் உறுதியாக கூற, பிறகுதான் மீண்டும் வாசித்து நம் குழுவில் பதிவிட்டு வருகிறேன். 

நான் வாசிக்கும் புத்தகங்களை புலனத்தின் முகப்பில் ( WhatsApp status) வைப்பேன். அதை பார்க்கும் பலரும் ஒரே நாளில் எப்படி ஒரு புத்தகத்தை படிக்க முடியும் என கேள்வி எழுப்புவர் அவர்களுக்கு தெரியாது நான் புத்தகங்களுக்குள் ஒளிந்துகொள்கிறேன் என்பது. தூக்கம் தொலைத்த இரவுகள், இப்போது புத்தகங்களோடு கழிகின்றன.. மனம் இயல்பாக முயன்று கொண்டிருக்கிறது. நான் மீண்டும் வாசிப்பை நாடாவிட்டிருந்தால் நிச்சயம் இழந்த இடத்திலேயே இருந்திருப்பேன். ஒரு அடிக்கூட அந்த இடத்திலிருந்து நகர்ந்திருக்க மாட்டேன்.. எனக்கு தக்கசமயத்தில் உதவிய நம் குழுவிற்கு நான் தான் மனமாற நன்றி கூற வேண்டும். ஆனால் நம் குழு எனக்கு சிறந்த பதிவுக்காக புத்தகம் பரிசளித்துள்ளது. இந்த புத்தகம் என் உணர்வோடு கலந்தது. பெருமகிழ்ச்சி...

நன்றி :

வாசிப்பை நேசிப்போம்
முகநூல் 

இனிய நற்சிந்தனைகள்

இன்றைய திருமந்திரம் : பாடல் 1276


திருமந்திரம் - பாடல் #1276: நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

விந்துவு நாதமு மொக்க விழுந்திடில்
விந்துவு நாதமு மொக்க விரையதாம்
விந்திற் குறைந்திடு நாத மெழுந்திடில்
விந்துவை யெண்மடி கொண்டது வீசமே.

விளக்கம்:

பாடல் #1275 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து வெளிப்பட்டு வந்து அண்ட சராசரங்கள் முழுவதும் பரவி அங்கிருந்து வெளிச்சமும் சத்தமும் ஒரே அளவில் கீழுள்ள உலகங்களுக்கு விழுந்து நன்மையைக் கொடுக்கும் மூல விதையாக இருக்கின்றது. உலகத்திலுள்ள உயிர்களில் இறைவனை அடைய முயற்சி செய்யும் ஆன்மாக்களுக்கு பயன் படும்படி வெளிச்சம் குறைந்து அதை விட எட்டு மடங்கு அதிகமாக சத்தமாக வெளிப்படும் போது அது மந்திர ஒலியாக இருக்கின்றது.

கருத்து: சாதகருக்குள்ளிருந்து வெளிப்பட்டு வரும் ஏரொளிச் சக்கரமானது அண்டங்கள் முழுவதும் விரிந்து பரவி அங்கிருந்து அனைத்து உலகங்களுக்கும் நன்மையைக் கொடுக்கும் மூல விதையாக இருக்கின்றது. உலகங்களில் இறைவனை அடைய விரும்பி சாதகம் செய்யும் உயிர்கள் மேலும் மேன்மையடைய இந்த ஏரொளிச் சக்கரம் வெளிச்சத்தைக் குறைந்து சத்தத்தை அதிகமாக்கி மந்திர ஒலியாகக் கொடுக்கின்றது.

நன்றி :


இன்றைய குறள்


நன்றி :

சுற்றுச்சூழல் : மரம் வளர்ப்போம்!

இயற்கையை நேசிப்போம்!


நன்றி :


இனிய காலை வணக்கம்!

26 செப்., 2021

நலக்குறிப்புகள் : புற்றுநோய் வராமல் காக்கும் உணவுகள்

பக்திப் பாமாலை : மாசில் வீணையும் மாலை மதியமும் - திருநாவுக்கரசர்


SORRY! VIDEO HAS BEEN DISABLED BY THE OWNER.
YOU CAN SEE THE VIDEO BY CLICKING IN THE ABOVE BOX ,
WHERE IT SAYS : "WATCH ON YOUTUBE"  SORRY AGAIN !!

துயர் தீர்க்கும் திருப்பதிகம் -

மாசில் வீணையும் மாலை மதியமும் திருநாவுக்கரசு சுவாமிகள்

371,420 views

Jun 2, 2019

Thiruneriya Thamizhosai

#MaasilVeenaiyum | #ThirunavukkarasarThevaram  | #ThiruneriyaThamizhosai

"எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் இந்த பதிகப்பாடலை படியுங்கள் துன்பங்கள் அனைத்தும் விலகி போகும்." பெருந்தீ கொழுந்து விட்டு எரியும் நீற்றரையின் உள்ளே அடைத்த போது பாடி அருளிய திருப்பதிகம். திருநாவுக்கரசு சுவாமிகள் பாடி அருளிய சிறப்புப் பொருந்திய இத்தேவாரப் பதிகங்களை அனுதினமும் பாராயணம் செய்வதால், பெரும் துன்பங்களில் இருந்தும் எளிதில் விடுபெறலாம் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.

திருமுறை : ஐந்தாம் திருமுறை 090 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

பதிக குரலிசை : திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார்

கடம்பூர் கரக்கோயிலான் "தன் கடன் அடியேனையும் தாங்குதல், என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று பின்னாளில் பாடியதற்கு ஏற்ப. சிவபிரான் பேரில் அசையாத நம்பிக்கை கொண்டு, இறைவனது பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நாவுக்கரசரின் வாழ்க்கையில் இறைவன் நிகழ்த்திய இரண்டாவது அதிசயம். முதல் அதிசயம் சூலை நோயிலிருந்து மீட்டது.

 

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே. ..... (01)

 

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்

நமச்சிவாயவே நானறி விச்சையும்

நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே

நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே. ..... (02)

 

ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்

மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்

தோளாத சுரையோ தொழும்பர் செவி

வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே. ..... (03)

 

நடலை வாழ்வு கொண்டு என் செய்தீர் நாணிலீர்

சுடலை சேர்வது சொல் பிரமாணமே

கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால்

உடலினார் கிடந்தூர் முனி பண்டமே. ..... (04)

 

பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்

நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து

காக்கைக்கே இரையாகிக் கழிவரே. ..... (05)

 

குறிகளும் அடையாளமும் கோயிலும்

நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்

அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்            

பொறியீலீர் மனம் என்கொல் புகாததே. ..... (06)

 

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்

தாழ்த்த சென்னியும் தந்த தலைவனைச்

சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே

வீழ்த்தவா வினையேன் நெடுங்காலமே. ..... (07)

 

எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான்

தொழுது போற்றி நின்றேனையும் சூழ்ந்து கொண்டு

உழுத சால் வழியே உழுவான் பொருட்டு

இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே. ..... (08)

 

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன்னார் சடை புண்ணியன்

பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு

நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே. ..... (09)

 

விறகில் தீயினன் பாலில் படுநெய் போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்

முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே. ..... (10)

 

பொருளுரை : சிவபிரான் அரணிக் கட்டையில் தீ போலவும், பாலினில் நெய் போலவும், சாணை பிடிக்கப்படாத மாணிக்கக் கல்லில் பிரகாசம் போலவும் நமது கண்களுக்கு புலப்படாமல் நிற்கின்றான். ஆனால் நமக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் ஆண்டவன் பக்தன் என்ற உறவாகிய மத்தினை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் அந்த மத்தினை இறுக்கமாக கட்டி கடைந்தால் இறைவன் நமது முன்னே வந்து தோன்றுவான்.

 

குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

Subscribe Us : https://www.youtube.com/c/Thiruneriya...

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

 

Grateful thanks to

திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார்

Thiruneriya Thamizhosai

and YouTube and all the others who made this video possible.