29 மே, 2023

அபூர்வமான படம்

கவிதை நேரம்

நன்றி :
முனைவர் 
அ சு இளங்கோவன் 

இன்றைய சிந்தனைக்கு

நலக்குறிப்புகள்

இன்றைய குறள்

கோபுர தரிசனம்

அருள்வாக்கு

27 மே, 2023

சிவனருட் செல்வர்

இன்றைய புத்தகம்

நலக்குறிப்புகள்

இன்றைய சிந்தனைக்கு

இன்றைய குறள்

கோபுர தரிசனம்

அருள்வாக்கு

26 மே, 2023

இன்று ஒரு தகவல்

இன்றைய குறள்

கோபுர தரிசனம்

நலக்குறிப்புகள்

இன்றைய சிந்தனைக்கு

அருள்வாக்கு

25 மே, 2023

இன்றைய புத்தகம்

இன்றைய குறள்

கோபுர தரிசனம்

இன்றைய சிந்தனைக்கு

நலக்குறிப்புகள்

அருள்வாக்கு

24 மே, 2023

இன்றைய சிந்தனைக்கு

உங்கள் கவனத்திற்கு

நூல் நயம்

"கனவுகள் விற்பனைக்கல்ல."
கவிஞர் அமிர்தா . சோலை பதிப்பகம் 
முதல் பதிப்பு -2021 மொத்த பக்கங்கள் 112 விலை ரூபாய் 100.

30 நாள் வாசிப்புப் போட்டியில் முழுகாமல் கலந்து கொண்டதற்கான பரிசு புத்ததகம் ஆக கனவுகள் விற்பனைக்கு அல்ல வந்து சேர்ந்தது.

     முயலாக ஓடி மூன்றாமிடத்தில் ஆமையாக நின்றுவிட்டேன்.

       சபரிமலை யாத்திரைப் பயணமும் எம்ஏ இரண்டாமாண்டு தேர்வுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

        மூன்று குதிரைகளில் ஓடியதால் மூன்றாமிடம் போலும்,போதும்.

    பிரியா மேடத்திற்கும் கதிரவன் சாருக்கும் புத்தககம் அனுப்பிய சோலைப் பதிப்பகத்திற்கும் கவிஞர் அமிர்தா அவர்களுக்கும்  நன்றி.

#######

வேறெந்த நூற்றாண்டையும்விட இந்த நூற்றாண்டில்தான் தமிழ்க் கவிதை பல நெருக்கடிகளையும், சிக்கல்களையும் சந்தித்திருக்கிறது.

       கதை சொல்லுதல், நீதி கூறுதல் போன்ற அதன் கூறுகள் இடம் மாறிவிட்டன. படைப்புத் துறையில் உரைநடையும், திரைப்படமும் பெற்ற எழுச்சி கவிதையைப் பாதித்துள்ளது.

        தமிழ்க் கவிதையின் தொன்மையான கோட்பாடுகள் மறக்கப்பட்டு விதேசிய கோட்பாடுகளே பேசத் தகுந்தவையாகிவிட்டன. இன்றைய தமிழ்க் கவிஞன் தனது மரபை அறியாதவனாக இருந்து கொண்டே புற மரபுகளில் ஈடுபாடுள்ளவனாக இருக்கிறான்.

 அந்த வகையில் கனவுகள் விற்பனைக்கு அல்ல கவிதை அருமையாக அமைந்திருக்கிறது.

#####

#####

என்னுரை என்று கவிஞர் அமிர்தா
முறையை கீழ்க்கண்டவாறு பதிவு செய்கிறார்:.
      கவிதையும் நானும் கைகுலுக்கிக் கொண்ட எனது பள்ளிப்பருவத்திலிருந்து நான் கடந்து சென்ற வாழ்வின் சில தருணங்கள் கவிதைகளாய்மாற கடமையும், வறுமையும் என் கவிதைகளை அச்சேற்றவிடாமல் செய்ய, காற்றோடு கலந்துவிட்டன. பல புனைவுகள் கனவாகவே...

         எதையும் எதிர்பார்த்தோ எதிர்ப்பார்க்க வைத்தோ புறப்படாமல் கல்லுக்குள் ஈரமாய் நின்று, மனதில் ஒரு பிரளயத்தை உருவாக்கும் வல்லமை கவிதைக்கு உண்டு.

       அத்தகைய கவிதை உலகில் என்னை நான் பிரசவித்த முதல் குழந்தை உங்கள் கைகளில் தவழும் கனவுகள் விற்பனைக்கல்ல.."என்கிறார் கவிஞர் அமிர்தா அவர்கள்.
####

       அணிந்துரை வழங்கிய கவிஞர் மு. மேத்தா அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
       தமிழ் அறிந்தவர்களில் யாரும் தாயுமானவரை
அறியாதிருப்பார்களோ? ஆனால், கவிஞர் அமிர்தா அவர்கள் நமக்குக் காட்டுவது துறவால் தாயுமானவரை அல்ல உறவால் தாயும் ஆனவரை.

வாழ்க்கை அழகுதான்... அதில் உன் நினைவுகளோ
பேரழகு!
என்று அமிர்தாவின் அழகான கவிதையால் அலங்கரிக்கப்படுவோம் என்று தெரிந்தால் இனிமேல் அம்மிகூட அம்மாவாய்ப் பிறப்பதற்கு ஆசைப்படும்.

விநோதமானது...
வாழ்க்கை
நம்மோடு
விளையாடும் விளையாட்டு!

சில சமயங்களில் நினைவாக... சில சமயங்களில் கனவாக...
சில சமயங்களில் உருவமாக... சில சமயங்களில் அருவமாக!

      வார்த்தைகளுக்குள் காட்சியளிக்கும் கவிஞரின் வாழ்க்கையோ புரியாத மொழியில் புதிர் போட்டுவிட்டு, நம்மைப் பார்த்துப் புன்னகை பூக்கிறது. கவிஞரை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையே என்று நாம் ஆதங்கம் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
அவரே வழங்கிய வாக்கு மூலம் இது.

நானே
புரிந்துகொள்ள முடியாத
புதிராய்
நான்.

கவிஞர்கள் காதலைப் பற்றித்தான் காவியம் பாடுவர்! ஆனால், அமிர்தா அவர்களோ 'காதலா? நட்பா?' என்று ஒரு பட்டிமன்றம் நடத்தி - தீர்க்கமாக ஒரு தீர்ப்பும் வழங்குகிறார்.

“காதலை எழுத
வார்த்தைகள் போதும்... நட்பை எழுத
வாழ்க்கை ஒன்று வேண்டும்!”

காரணம்
இதோ கவிஞரின் கவிதையே  வழங்குகிறது தீர்ப்பு.

இதயம் இடம் மாறினால் காதல்
இதயமாகவே மாறினால் நட்பு

        வரலாற்றை உள்ளத்திற்குள் ஓவியமாய் வரைகிறது அமிர்தாவின் தாயுமானவள் என்ற தலைப்பிலேயே வரும் கவிதை.

நட்புப் புன்னகையில்
கைகோர்த்துக் கொண்ட
நாளிலிருந்து
ஒற்றை வார்த்தையில்
தாயாகிப் போனவள் நீ!
புரியவில்லை என்பவர்களுக்குப் பொருளடக்கம் சொல்கிறது
பின் தொடரும் இக்கவிதை :

ஒற்றைப் புன் சிரிப்பில்
என் காயங்களைத் துடைத்தெறிந்தவள் நீ... அனாதை என்ற என் பட்டத்தை உன் அரவணைப்பால் உடைத்தெறிந்தவள் நீ...

இவ்வளவு அழுத்தமாகவும், ஆழமாகவும் அன்பின் கோட்டோவியம் தீட்டிக் காட்டவேண்டிய அவசியம் இப்போது என்ன நேர்ந்தது?

நாம் இருவரும்
நடந்துசென்ற பாதையில்
இன்று நான் மட்டும்
தனியே -
உன் பாதச் சுவடுகளைத்
தேடியவாறு!

யாரிடமும் சொல்லாத
சோகம் எல்லாம் சேர்த்து வைக்கும்...
என் இதயம்
உன் மடி சாய்ந்திடும்
நாளை எண்ணி!
இதயம் தனக்கான சோகங்களை எதற்காகச் சேர்த்து வைக்கிறது? இன்னொரு இதயத்திடம் அதைப் பகிர்ந்து கொள்வதற்குத் தானே... இதோ - அமிர்தா தன் கவிதையில் வெளிப்படையாய் அதை விவரிக்கிறார்..

துறவுக்குள் மூழ்கிய ஒருவரைத் தாயுமானவர் என்று அழைத்த தமிழ், உறவுக்குள் மூழ்கிய ஓர் அன்பான அம்மையை அமிர்தாவின் வார்த்தையில் தாயுமானவள் என்று அழைத்துத் தான் எழுதும் தமிழைத் தலை நிமிர்கிறது.

       புதுக்கவிதை உலகத்திற்குப் பூமாலை அல்ல - ஒரு பொன் மாலையையே சூட்டியிருக்கும் கவிஞர் அமிர்தாவின் பாமாலையைப் பாராட்டுவோம்.

       புதுக்கவிதை இதோ தன்னைப்
புதுப்பித்துக் கொள்கிறதென்று பூரிப்புக் கொள்வோம்!"என்கிறார் கவிஞர் மு. மேத்தா
#######

       இனி இந்த புத்தகம் குறித்து பார்ப்போம்.:

         கனவு காணாத மனிதர் யாருமில்லை. Fantacy .தன் எதிர்காலம் பற்றிய கனவுகள், தன் வாழ்க்கையில் அடையவேண்டிய இலட்சியங்கள் பற்றிய கனவுகள், என பலவிதமான கனவுகளை நாம் ஒவ்வொரு கண்டு கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
      அந்த வகையில்  கவிஞர் அமிர்தா அவர்கள் தன்னுடைய கவிதை சார்ந்த கனவுகளுடன் கவிதை வானில் சிறகடித்து பறந்துகொண்டிருக்கிறார். தன் கவிதை வானில் அவர் கண்ட கனவுக் கவிதைகளை இந்த நூலின் மூலம் சிறப்பாக வெளியிட்டு இருக்கிறார். 

'பிரிவு' என்ற கவிதையொன்றில், பிரிவின் வலியை சொல்லும் போது, அந்த வரிகளை படிக்கும்போது, நம் உதடுகளுக்கே வலியெடுக்கிறது.

இதோ ஒரு நடைபிணம் உன் பிரிவில், நான்
என்ற உயிர்ப்பான வரிகள் வலிகளை சுமந்தபடி வார்க்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று,
*உனக்காக காத்திருந்தபோதுதான் உணர்ந்தேன் ஒரு நொடியின் நீளத்தை*
என்ற வரிகளில் .
*உறக்கம் வராத 
இரவுகளின் தனிமையில் கடிகார முள்ளின் ஓசைகள் சொல்லும்,
உந்தன் பெயரை
என்று தனிமையில் கூட நினைவுகளின் பிரிவின் வலியோடு கனவில் நீந்துவதை உணர முடிகிறது.

         அதேபோன்று, சமுதாய நோக்கோடு பிற உயிரினங்களுக்காகவும் வருத்தப்படுவதை நம்மால் உணர முடிகிறது இந்த கவிதையில்.

*புயல் வந்ததும் வீடு பறிபோனது 
எந்த அரசாங்கம் உதவி செய்யும்
பரிதாபமாய் காகம்*
என்ற வரிகளில்  இவரின் இரக்க சிறகுகள். 

       எதிர்கால சந்ததிக்காகவும் கனவு காண்கிறார் .அதை,
*சேர்த்து வைக்கவேண்டிய நீரெல்லாம் உப்போடு உறவாடச் சென்றுவிட,
நம் பேரனுக்கும் பேத்திக்கும்
தண்ணீரை காகிதத்திலா நிரப்பிவைப்போம்!
       என்றதில் தண்ணீர் சேமிப்பு நம் கண்களில் உப்பு சேர்ப்பு கண்ணீரை வரவைக்கிறது.

        மனிதன், பறவை, எதிர்கால சந்ததிகள் என்று பலர்மீது இரக்கமும், அக்கறையும் கொண்ட இக்கவிஞர் மனிதத்தை பற்றி சிலவரிகள்.

மனிதம் வளர்ப்போம்

*அவசர அவசரமாய் ஓடிச்செல்லும் முகங்கள் எல்லாம் வேறு பக்கம் திரும்பிக் கொள்ளும்.
சாதி வேரில்
சரித்திரம் படைக்கும் காதலெல்லாம்
கருகிப்போகும்
காக்கைகளும் குருவிகளும் தொண்டை வரல கத்தும் ஒரு சொட்டு நீருக்காக.

குப்பைக்கூடையில் மீதமாகும் ஏழையின் பசி போக்கும் வடித்த சோறுகள்.

*இனியேனும் மாற்றுவோம்
வீட்டுக்கொரு
மனிதம் வளர்ப்போம்
என்று மனிதாபிமானத்தை விதைக்கிறார்.

.1)தோழன்

என் தாயைத் தாண்டி முழுதாய்
 என்னை புரிந்து கொண்டவன் நீ!
என்னை உனக்கும்
உன்னை எனக்கும் புரிய வைத்தது காமம் கடந்த நம் நட்பு!
என்னுள் மறைத்து வைத்த காயங்களை உன்னிடம் மொழிபெயர்க்க வேண்டும்.

எப்போதும் என் வாழ்க்கைப் பாதையின் வழித்துணையாய் நீ...நட்புடன்

மரணம் கடந்து நம் சதைகளை உண்டுகளித்த மண்கூட உச்சரிக்கும் நம் நட்பின் புனிதத்தை...

3) கலாப்ரியா ஹைக்கூ கவிதைகளை எழுதுவதற்கு முன்பாக அதை பற்றி புரிந்து கொள்வதற்கும் தெரிந்து கொள்வதற்கும் நுட்பம் அறிவதற்கும் ஆயிரத்துக்கும் அதிகமான ஹைக்கூ கவிதைகளை பார்த்து பார்த்து படித்து படித்து தன்னை புதுப்பித்துக் கொண்டதாக கூறியிருந்தார்.     நமது கவிஞர் அமிர்தா அவர்கள் எத்தனை ஹைக்கூ கவிதைகளை படித்து தன்னைப் புதிப்பித்துக் இந்த ஹைக்கூ கவிதைகளை எழுதி பதிவு செய்தாரோ.

ஹைக்கூ...

அமைதியான இரவு 
ஆங்காங்கே இரைச்சல் 
சில்வண்டுகள்.

வெட்டுவது பாவம்தான் 
வெட்டினால் தானே உணவு
 விறகுவெட்டி.

விண்ணில் வலை வீசுவதில்லை 
நிலவின் துக்கம் 
மகிழ்ச்சியில் மீன்கள்.

எத்தனை நாள் ஆகிறது
 கொஞ்சம் கவனிக்கக் கூடாதா 
ஏழையிடம் வயிறு.

நிறைந்திருக்கும் உணவு விடுதிகள் அவசர அவசரமாய் அள்ளிப்போடும் இயந்திரங்கள் 
இன்றைய மனிதர்கள்.

பேச்சுத்துணைக்கு ஆளில்லாமல் புலம்புகிறது 
ஒற்றைப்பனை.

புயலுக்கு பயந்தா வீட்டை சுமந்து செல்கிறாய் ஒ! நத்தையே!

நீண்ட இரவு
நிலவு பேசிக்கொண்டிருக்கிறது காற்றிடம்தான்.

####
4)   தீர்ந்து கொண்டிருக்கிறேன்:

உன்னை எழுத எழுத என் இரவும் இந்த பேனா மையும் உன் நினைவில் நானும் தீர்ந்து கொண்டிருக்கிறோம்.

நிறைய எழுதவேண்டும் உன்னை விடிந்துவிடும் இரவுகள் விட்டுச் செல்லும் மிச்சத்தை

அடுத்த இரவு வருவதற்குள் புதிதாய் துளிர்த்து விடுகின்றன
 புத்தம்புது எண்ணங்கள்.
 எல்லா இரவுகளிலும் நிரம்பி வழிகிறாய் எப்படி எழுத உன்னை?

5)குழந்தைத் தொழிலாளி:
*பக்கத்து வீட்டு பாப்பாவுடனும் 
எதிர்த்த வீட்டு அக்காவுடனும் 
அடுத்த வீட்டு அண்ணனுடனும் புத்தகப்பையும், புதுத்துணியுமா ஆத்தாளுக்கு கையசைச்சு 
புறப்பட்டு பள்ளிக்குப் போக

 காஞ்ச இலைய எடுக்கலையா
எச்சில் டம்ளரை துலக்கலையா 
அங்கென்ன வேடிக்கை 
நங்கூரமாய் முதுகில் இறங்கிய 
ஒற்றை அடியில் 
பள்ளி கனவுகளும் 
வறுமை வயிறும்
 பயந்து போய் ஒட்டிக்கொள்ளும் 
 எச்சில் இலைகளில்.*

6)வியக்கிறேன்

புரையோடிய புண்களை மட்டுமல்ல மனதைக் குடையும் ரணங்களையும் மறக்கச்செய்யும் இந்த காலத்தை 
எண்ணி வியக்கிறேன்...

7)சாராய நாற்றம் சுமந்த நான்கு சக்கர வாகனம் தலைதெறிக்க ஓடி
 நசுக்கி செல்லும் யாரோ தூக்கி போட்ட பொறையை துரத்திச் சென்ற அந்த தெருவோர நாயை.

8))கொஞ்சம் தனிமை வேண்டும்

சாலையோரம் அழுக்காய்
என்னை இம்சித்துக் கொண்டேயிருக்கும் அந்த கூக்குரலின் வலியை எழுத அரை அம்மணமாய் ஒட்டிய வயிறில் உருண்டோடும்

பசியின் கதறலைப் பதிக்க...

என்னை நச்சரித்துக் கொண்டே இருக்கும் அந்த குரலை மறந்துவிடாதே என என் ஒவ்வொரு கவளச் சோற்றிலும் தெரியும் அந்த ஏக்க முகத்தை

கருப்பையை சுரண்டி

தாய்மையைத் தட்டியெழுப்பும் அந்த சிசுவின் அழுகுரலை எழுத்தாய் மாற்ற கொஞ்சம் தனிமை வேண்டும்...*
####

     இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கவிதைகளும் படிப்பவர் நெஞ்சில் உற்சாகத்தை ஊற்றெடுக்கவைக்கும், புது சிந்தனையை தட்டியெழுப்பும் என்பது உறுதி.

."கனவுகள் விற்பனைக்கல்ல."
கவிஞர் அமிர்தா . சோலை பதிப்பகம் 
முதல் பதிப்பு -2021 மொத்த பக்கங்கள் 112 விலை ரூபாய் 100.

30 நாள் வாசிப்புப் போட்டியில் முழுகாமல் கலந்து கொண்டதற்கான பரிசு புத்ததகம் ஆக கனவுகள் விற்பனைக்கு அல்ல வந்து சேர்ந்தது.

     முயலாக ஓடி மூன்றாமிடத்தில் ஆமையாக நின்றுவிட்டேன்.

       சபரிமலை யாத்திரைப் பயணமும் எம்ஏ இரண்டாமாண்டு தேர்வுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

        மூன்று குதிரைகளில் ஓடியதால் மூன்றாமிடம் போலும்,போதும்.

    பிரியா மேடத்திற்கும் கதிரவன் சாருக்கும் புத்தககம் அனுப்பிய சோலைப் பதிப்பகத்திற்கும் கவிஞர் அமிர்தா அவர்களுக்கும்  நன்றி.

#######

வேறெந்த நூற்றாண்டையும்விட இந்த நூற்றாண்டில்தான் தமிழ்க் கவிதை பல நெருக்கடிகளையும், சிக்கல்களையும் சந்தித்திருக்கிறது.

       கதை சொல்லுதல், நீதி கூறுதல் போன்ற அதன் கூறுகள் இடம் மாறிவிட்டன. படைப்புத் துறையில் உரைநடையும், திரைப்படமும் பெற்ற எழுச்சி கவிதையைப் பாதித்துள்ளது.

        தமிழ்க் கவிதையின் தொன்மையான கோட்பாடுகள் மறக்கப்பட்டு விதேசிய கோட்பாடுகளே பேசத் தகுந்தவையாகிவிட்டன. இன்றைய தமிழ்க் கவிஞன் தனது மரபை அறியாதவனாக இருந்து கொண்டே புற மரபுகளில் ஈடுபாடுள்ளவனாக இருக்கிறான்.

 அந்த வகையில் கனவுகள் விற்பனைக்கு அல்ல கவிதை அருமையாக அமைந்திருக்கிறது.

#####

#####

என்னுரை என்று கவிஞர் அமிர்தா
முறையை கீழ்க்கண்டவாறு பதிவு செய்கிறார்:.
      கவிதையும் நானும் கைகுலுக்கிக் கொண்ட எனது பள்ளிப்பருவத்திலிருந்து நான் கடந்து சென்ற வாழ்வின் சில தருணங்கள் கவிதைகளாய்மாற கடமையும், வறுமையும் என் கவிதைகளை அச்சேற்றவிடாமல் செய்ய, காற்றோடு கலந்துவிட்டன. பல புனைவுகள் கனவாகவே...

         எதையும் எதிர்பார்த்தோ எதிர்ப்பார்க்க வைத்தோ புறப்படாமல் கல்லுக்குள் ஈரமாய் நின்று, மனதில் ஒரு பிரளயத்தை உருவாக்கும் வல்லமை கவிதைக்கு உண்டு.

       அத்தகைய கவிதை உலகில் என்னை நான் பிரசவித்த முதல் குழந்தை உங்கள் கைகளில் தவழும் கனவுகள் விற்பனைக்கல்ல.."என்கிறார் கவிஞர் அமிர்தா அவர்கள்.
####

       அணிந்துரை வழங்கிய கவிஞர் மு. மேத்தா அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
       தமிழ் அறிந்தவர்களில் யாரும் தாயுமானவரை
அறியாதிருப்பார்களோ? ஆனால், கவிஞர் அமிர்தா அவர்கள் நமக்குக் காட்டுவது துறவால் தாயுமானவரை அல்ல உறவால் தாயும் ஆனவரை.

வாழ்க்கை அழகுதான்... அதில் உன் நினைவுகளோ
பேரழகு!
என்று அமிர்தாவின் அழகான கவிதையால் அலங்கரிக்கப்படுவோம் என்று தெரிந்தால் இனிமேல் அம்மிகூட அம்மாவாய்ப் பிறப்பதற்கு ஆசைப்படும்.

விநோதமானது...
வாழ்க்கை
நம்மோடு
விளையாடும் விளையாட்டு!

சில சமயங்களில் நினைவாக... சில சமயங்களில் கனவாக...
சில சமயங்களில் உருவமாக... சில சமயங்களில் அருவமாக!

      வார்த்தைகளுக்குள் காட்சியளிக்கும் கவிஞரின் வாழ்க்கையோ புரியாத மொழியில் புதிர் போட்டுவிட்டு, நம்மைப் பார்த்துப் புன்னகை பூக்கிறது. கவிஞரை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையே என்று நாம் ஆதங்கம் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
அவரே வழங்கிய வாக்கு மூலம் இது.

நானே
புரிந்துகொள்ள முடியாத
புதிராய்
நான்.

கவிஞர்கள் காதலைப் பற்றித்தான் காவியம் பாடுவர்! ஆனால், அமிர்தா அவர்களோ 'காதலா? நட்பா?' என்று ஒரு பட்டிமன்றம் நடத்தி - தீர்க்கமாக ஒரு தீர்ப்பும் வழங்குகிறார்.

“காதலை எழுத
வார்த்தைகள் போதும்... நட்பை எழுத
வாழ்க்கை ஒன்று வேண்டும்!”

காரணம்
இதோ கவிஞரின் கவிதையே  வழங்குகிறது தீர்ப்பு.

இதயம் இடம் மாறினால் காதல்
இதயமாகவே மாறினால் நட்பு

        வரலாற்றை உள்ளத்திற்குள் ஓவியமாய் வரைகிறது அமிர்தாவின் தாயுமானவள் என்ற தலைப்பிலேயே வரும் கவிதை.

நட்புப் புன்னகையில்
கைகோர்த்துக் கொண்ட
நாளிலிருந்து
ஒற்றை வார்த்தையில்
தாயாகிப் போனவள் நீ!
புரியவில்லை என்பவர்களுக்குப் பொருளடக்கம் சொல்கிறது
பின் தொடரும் இக்கவிதை :

ஒற்றைப் புன் சிரிப்பில்
என் காயங்களைத் துடைத்தெறிந்தவள் நீ... அனாதை என்ற என் பட்டத்தை உன் அரவணைப்பால் உடைத்தெறிந்தவள் நீ...

இவ்வளவு அழுத்தமாகவும், ஆழமாகவும் அன்பின் கோட்டோவியம் தீட்டிக் காட்டவேண்டிய அவசியம் இப்போது என்ன நேர்ந்தது?

நாம் இருவரும்
நடந்துசென்ற பாதையில்
இன்று நான் மட்டும்
தனியே -
உன் பாதச் சுவடுகளைத்
தேடியவாறு!

யாரிடமும் சொல்லாத
சோகம் எல்லாம் சேர்த்து வைக்கும்...
என் இதயம்
உன் மடி சாய்ந்திடும்
நாளை எண்ணி!
இதயம் தனக்கான சோகங்களை எதற்காகச் சேர்த்து வைக்கிறது? இன்னொரு இதயத்திடம் அதைப் பகிர்ந்து கொள்வதற்குத் தானே... இதோ - அமிர்தா தன் கவிதையில் வெளிப்படையாய் அதை விவரிக்கிறார்..

துறவுக்குள் மூழ்கிய ஒருவரைத் தாயுமானவர் என்று அழைத்த தமிழ், உறவுக்குள் மூழ்கிய ஓர் அன்பான அம்மையை அமிர்தாவின் வார்த்தையில் தாயுமானவள் என்று அழைத்துத் தான் எழுதும் தமிழைத் தலை நிமிர்கிறது.

       புதுக்கவிதை உலகத்திற்குப் பூமாலை அல்ல - ஒரு பொன் மாலையையே சூட்டியிருக்கும் கவிஞர் அமிர்தாவின் பாமாலையைப் பாராட்டுவோம்.

       புதுக்கவிதை இதோ தன்னைப்
புதுப்பித்துக் கொள்கிறதென்று பூரிப்புக் கொள்வோம்!"என்கிறார் கவிஞர் மு. மேத்தா
#######

       இனி இந்த புத்தகம் குறித்து பார்ப்போம்.:

         கனவு காணாத மனிதர் யாருமில்லை. Fantacy .தன் எதிர்காலம் பற்றிய கனவுகள், தன் வாழ்க்கையில் அடையவேண்டிய இலட்சியங்கள் பற்றிய கனவுகள், என பலவிதமான கனவுகளை நாம் ஒவ்வொரு கண்டு கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
      அந்த வகையில்  கவிஞர் அமிர்தா அவர்கள் தன்னுடைய கவிதை சார்ந்த கனவுகளுடன் கவிதை வானில் சிறகடித்து பறந்துகொண்டிருக்கிறார். தன் கவிதை வானில் அவர் கண்ட கனவுக் கவிதைகளை இந்த நூலின் மூலம் சிறப்பாக வெளியிட்டு இருக்கிறார். 

'பிரிவு' என்ற கவிதையொன்றில், பிரிவின் வலியை சொல்லும் போது, அந்த வரிகளை படிக்கும்போது, நம் உதடுகளுக்கே வலியெடுக்கிறது.

இதோ ஒரு நடைபிணம் உன் பிரிவில், நான்
என்ற உயிர்ப்பான வரிகள் வலிகளை சுமந்தபடி வார்க்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று,
*உனக்காக காத்திருந்தபோதுதான் உணர்ந்தேன் ஒரு நொடியின் நீளத்தை*
என்ற வரிகளில் .
*உறக்கம் வராத 
இரவுகளின் தனிமையில் கடிகார முள்ளின் ஓசைகள் சொல்லும்,
உந்தன் பெயரை
என்று தனிமையில் கூட நினைவுகளின் பிரிவின் வலியோடு கனவில் நீந்துவதை உணர முடிகிறது.

         அதேபோன்று, சமுதாய நோக்கோடு பிற உயிரினங்களுக்காகவும் வருத்தப்படுவதை நம்மால் உணர முடிகிறது இந்த கவிதையில்.

*புயல் வந்ததும் வீடு பறிபோனது 
எந்த அரசாங்கம் உதவி செய்யும்
பரிதாபமாய் காகம்*
என்ற வரிகளில்  இவரின் இரக்க சிறகுகள். 

       எதிர்கால சந்ததிக்காகவும் கனவு காண்கிறார் .அதை,
*சேர்த்து வைக்கவேண்டிய நீரெல்லாம் உப்போடு உறவாடச் சென்றுவிட,
நம் பேரனுக்கும் பேத்திக்கும்
தண்ணீரை காகிதத்திலா நிரப்பிவைப்போம்!
       என்றதில் தண்ணீர் சேமிப்பு நம் கண்களில் உப்பு சேர்ப்பு கண்ணீரை வரவைக்கிறது.

        மனிதன், பறவை, எதிர்கால சந்ததிகள் என்று பலர்மீது இரக்கமும், அக்கறையும் கொண்ட இக்கவிஞர் மனிதத்தை பற்றி சிலவரிகள்.

மனிதம் வளர்ப்போம்

*அவசர அவசரமாய் ஓடிச்செல்லும் முகங்கள் எல்லாம் வேறு பக்கம் திரும்பிக் கொள்ளும்.
சாதி வேரில்
சரித்திரம் படைக்கும் காதலெல்லாம்
கருகிப்போகும்
காக்கைகளும் குருவிகளும் தொண்டை வரல கத்தும் ஒரு சொட்டு நீருக்காக.

குப்பைக்கூடையில் மீதமாகும் ஏழையின் பசி போக்கும் வடித்த சோறுகள்.

*இனியேனும் மாற்றுவோம்
வீட்டுக்கொரு
மனிதம் வளர்ப்போம்
என்று மனிதாபிமானத்தை விதைக்கிறார்.

.1)தோழன்

என் தாயைத் தாண்டி முழுதாய்
 என்னை புரிந்து கொண்டவன் நீ!
என்னை உனக்கும்
உன்னை எனக்கும் புரிய வைத்தது காமம் கடந்த நம் நட்பு!
என்னுள் மறைத்து வைத்த காயங்களை உன்னிடம் மொழிபெயர்க்க வேண்டும்.

எப்போதும் என் வாழ்க்கைப் பாதையின் வழித்துணையாய் நீ...நட்புடன்

மரணம் கடந்து நம் சதைகளை உண்டுகளித்த மண்கூட உச்சரிக்கும் நம் நட்பின் புனிதத்தை...

3) கலாப்ரியா ஹைக்கூ கவிதைகளை எழுதுவதற்கு முன்பாக அதை பற்றி புரிந்து கொள்வதற்கும் தெரிந்து கொள்வதற்கும் நுட்பம் அறிவதற்கும் ஆயிரத்துக்கும் அதிகமான ஹைக்கூ கவிதைகளை பார்த்து பார்த்து படித்து படித்து தன்னை புதுப்பித்துக் கொண்டதாக கூறியிருந்தார்.     நமது கவிஞர் அமிர்தா அவர்கள் எத்தனை ஹைக்கூ கவிதைகளை படித்து தன்னைப் புதிப்பித்துக் இந்த ஹைக்கூ கவிதைகளை எழுதி பதிவு செய்தாரோ.

ஹைக்கூ...

அமைதியான இரவு 
ஆங்காங்கே இரைச்சல் 
சில்வண்டுகள்.

வெட்டுவது பாவம்தான் 
வெட்டினால் தானே உணவு
 விறகுவெட்டி.

விண்ணில் வலை வீசுவதில்லை 
நிலவின் துக்கம் 
மகிழ்ச்சியில் மீன்கள்.

எத்தனை நாள் ஆகிறது
 கொஞ்சம் கவனிக்கக் கூடாதா 
ஏழையிடம் வயிறு.

நிறைந்திருக்கும் உணவு விடுதிகள் அவசர அவசரமாய் அள்ளிப்போடும் இயந்திரங்கள் 
இன்றைய மனிதர்கள்.

பேச்சுத்துணைக்கு ஆளில்லாமல் புலம்புகிறது 
ஒற்றைப்பனை.

புயலுக்கு பயந்தா வீட்டை சுமந்து செல்கிறாய் ஒ! நத்தையே!

நீண்ட இரவு
நிலவு பேசிக்கொண்டிருக்கிறது காற்றிடம்தான்.

####
4)   தீர்ந்து கொண்டிருக்கிறேன்:

உன்னை எழுத எழுத என் இரவும் இந்த பேனா மையும் உன் நினைவில் நானும் தீர்ந்து கொண்டிருக்கிறோம்.

நிறைய எழுதவேண்டும் உன்னை விடிந்துவிடும் இரவுகள் விட்டுச் செல்லும் மிச்சத்தை

அடுத்த இரவு வருவதற்குள் புதிதாய் துளிர்த்து விடுகின்றன
 புத்தம்புது எண்ணங்கள்.
 எல்லா இரவுகளிலும் நிரம்பி வழிகிறாய் எப்படி எழுத உன்னை?

5)குழந்தைத் தொழிலாளி:
*பக்கத்து வீட்டு பாப்பாவுடனும் 
எதிர்த்த வீட்டு அக்காவுடனும் 
அடுத்த வீட்டு அண்ணனுடனும் புத்தகப்பையும், புதுத்துணியுமா ஆத்தாளுக்கு கையசைச்சு 
புறப்பட்டு பள்ளிக்குப் போக

 காஞ்ச இலைய எடுக்கலையா
எச்சில் டம்ளரை துலக்கலையா 
அங்கென்ன வேடிக்கை 
நங்கூரமாய் முதுகில் இறங்கிய 
ஒற்றை அடியில் 
பள்ளி கனவுகளும் 
வறுமை வயிறும்
 பயந்து போய் ஒட்டிக்கொள்ளும் 
 எச்சில் இலைகளில்.*

6)வியக்கிறேன்

புரையோடிய புண்களை மட்டுமல்ல மனதைக் குடையும் ரணங்களையும் மறக்கச்செய்யும் இந்த காலத்தை 
எண்ணி வியக்கிறேன்...

7)சாராய நாற்றம் சுமந்த நான்கு சக்கர வாகனம் தலைதெறிக்க ஓடி
 நசுக்கி செல்லும் யாரோ தூக்கி போட்ட பொறையை துரத்திச் சென்ற அந்த தெருவோர நாயை.

8))கொஞ்சம் தனிமை வேண்டும்

சாலையோரம் அழுக்காய்
என்னை இம்சித்துக் கொண்டேயிருக்கும் அந்த கூக்குரலின் வலியை எழுத அரை அம்மணமாய் ஒட்டிய வயிறில் உருண்டோடும்

பசியின் கதறலைப் பதிக்க...

என்னை நச்சரித்துக் கொண்டே இருக்கும் அந்த குரலை மறந்துவிடாதே என என் ஒவ்வொரு கவளச் சோற்றிலும் தெரியும் அந்த ஏக்க முகத்தை

கருப்பையை சுரண்டி

தாய்மையைத் தட்டியெழுப்பும் அந்த சிசுவின் அழுகுரலை எழுத்தாய் மாற்ற கொஞ்சம் தனிமை வேண்டும்...*
####

     இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கவிதைகளும் படிப்பவர் நெஞ்சில் உற்சாகத்தை ஊற்றெடுக்க வைக்கும், புது சிந்தனையை தட்டியெழுப்பும் என்பது உறுதி.

நன்றி :
திரு கருணா மூர்த்தி 
மற்றும் 
முகநூல் 


நலக்குறிப்புகள்

பயனுள்ள குறிப்புகள்

சிரித்து வாழவேண்டும்!

சகோதரர்கள் தினம்

இன்றைய குறள்

கோபுர தரிசனம்

அருள்வாக்கு

21 மே, 2023

நூல் நயம்

"அடிமையின் காதல் ."
ரா கி ரங்கராஜன் எழுதியது .
வி.கே. புக்ஸ் இன்டர்நேஷனல் . முதல்பதிப்பு 2012 .விலை ரூபாய் 205    .மொத்த பக்கங்கள் 456..

         ரா. கி. ரங்கராஜன் ,ஒரு  எழுத்தாளர் மற்றும் இதழாளர். வரலாற்றுப் புதினங்கள், குற்றக் கதைகள், கட்டுரைகள், வேடிக்கை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், குறும்புக் கதைகள், நையாண்டிக் கவிதைகள் எனப் பல பாணிகளில் எழுதியுள்ளார்.

            இவர் 1500-க்கும் மேற்பட்ட கதைகளையும் , 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவற்றுள் பல குமுதம் ஆனந்த விகடன் முதலான இதழ்களில் தொடர்களாக வெளிவந்தன. இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்தன. பல படைப்புகள் சின்னத் திரையிலும் இடம் பெற்றுள்ளன. 

இளம் எழுத்தாளர்களுக்குக் கதை எழுதும் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் எப்படிக் கதை எழுதுவது? என்ற வகுப்பினையும் தான் ஒருவராகவே நடத்தி வந்தார்.

####₹₹

        முன்னுரையில் ரா.கி .ரங்கராஜன் அவர்கள் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறார் .அதனை படித்தால்  இந்த கதையின் சுருக்கம் தெரிந்துகொள்ளலாம் .
        வரலாற்றை பின்னணியாக வைத்து பல கட்டுரைகள் எழுதிய 
தீ நா.சுப்பிரமணியம் ,"வெள்ளைக்காரன் சென்னையில் குடியேற காலம் ரொம்ப சுவாரசியமானது .அதற்கான தகவல்களும் வண்டி வண்டியாக  கன்னிமரா நூலகத்தில் கிடைக்கும் .அதை வாசித்து எழுதி", என்று எனக்குக் கட்டளையிட்டார் .

        சென்னை கார்ப்பரேஷன் மூன்றாவது நூற்றாண்டை ஒட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் ஒரு கட்டுரையில் சென்னை நகரில் அடிமை வியாபாரம் நடந்ததாக ஒரு கட்டுரையைப் படித்தேன் .
   எடிட்டர் எஸ்ஏபி அவர்கள் The Man from Rio என்ற ஆங்கில படத்தை பார்த்துவிட்டு வந்து ,அதில் வரும் உல்லாசமான உற்சாகமான ஆபத்துக்களை சிரித்துக்கொண்டே எதிர்நோக்கும் ஹீரோவைப் போல அடிமையின் காதல் கதாநாயகனைப் படைக்கும்படி யோசனை சொன்னார் .
     இவை எல்லாமாகச் சேர்ந்து தான் அடிமையின் காதல் கதாநாயகனுக்கு காஞ்சிபுரத்தான் என்று பெயரிட்டேன் . திமுக கட்சியும் அறிஞர் அண்ணாவும் ஆட்சிபீடத்தில் நெருங்கிக் கொண்டிருந்த சமயம் ஆகையால் காஞ்சிபுரத்தான் என்ற பெயருக்கு மவுசு கூடியது என்கிறார் ரா.கி ரங்கராஜன் அவர்கள் தனது முன்னுரையில்.

##
            குமுதம் ஆசிரியர் எஸ் ஏ பி.அவர்கள் மீது பெருமதிப்பும் மரியாதையும் கொண்டவன் நான். அவர் எழுதிய அத்தனை புத்தகங்களையும் படித்து விட்டேன் .அவர் படித்த சில புத்தகங்களையும் படித்து இருக்கிறேன் .குறிப்பாக * The Intimate sex lives of famous people *என்கிற புத்தகத்தையும் படிக்க முயன்று இதுவரை முடியாமல் அந்தப் புத்தகம் கிடைக்காமல் தவித்து நிற்கிறேன் .எஸ். ஏ.பி அவர்கள் பார்த்த The Man from Rioதிரைப்படத்தை இன்று ஸ்மார்ட் டிவியில் பார்த்து மகிழ்ந்தேன் .என்ன ஒரு அற்புதமான மனிதர் .அவரை நினைத்து நினைத்து புளங்காகிதம் அடைந்து போறேன்.
####
          இந்தப் புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கிய உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் கருத்தினை படிக்கும்பொழுது ரா.கி. ரங்கராஜன் அவர்களின் உன்னதம் பெருமை தெரிந்து கொள்ளலாம்.
         அந்தக் கால கட்டத்தில் சரித்திர நாவல்கள் அதிகம் படிக்காத ஒரு சிறுவனுக்கு ஞானக்கண் திறந்த மாதிரி இருந்தது அடிமையின் காதல்.     
      இன்றும் என்னை வாசிக்கத் தூண்டும் நாவல் இது .
   காஞ்சிபுரத்தான் வீட்டில் கோபித்துக்கொண்டு புறப்படும் வேளைதொட்டு ,இந்திய ஆங்கிலேய உறவின் கதையின் நடு அத்தியாயத்தில் காஞ்சிபுரத்தான் கதையை கொண்டு போய் கோட்டை வாசலில் முடித்திருப்பார் ரா.கி.ர.
       மனமெல்லாம் வியாபித்த கதை "அடிமையின் காதல்." சரித்திர நாவல்களை படிக்க வேண்டும் என்ற ஆவலை என்னுள் ஏற்படுத்திய முதல் நாவல் அடிமையின் காதல் .மீண்டும் ஒரு தலைமுறையை இது வியக்கவைக்கும் .
      இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தால் ஆங்கிலமே படிக்கும் தமிழரில் சிலர் தமிழ் சரித்திர நாவல்களை படிக்க ஈர்க்கப்படலாம் ,"என்கிறார் கமல்ஹாசன் தனது வாழ்த்துரையில்.
    

#####₹#

             சரித்திரக் கதைகள் சில சமயம் உற்சாகமூட்டுவதாக இருக்கும் ,சில சமயம் சோம்பல் ஊட்டுவதாக இருக்கும் .
          நேற்றைய நிகழ்வு நாளைய சரித்திரம் .
       இதுவரை சாண்டில்யன் முதல் சுஜாதா வரை எத்தனையோ ஆசிரியர்களின் சரித்திர படைப்புகளை படித்திருக்கிறேன் .முதன்முதலாக ரா.கி .ரங்கராஜனின் சரித்திரக் கதையை இப்போதுதான் படிக்கிறேன் .அருமையாக இருக்கிறது.

        மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு தமிழ் தைரியம் கூட்டிக்கிட்டு , காஞ்சிபுரம் வீட்டை விட்டு வெளியேறுகிறான் காஞ்சிபுரத்தான்.

             அவன் பல துறைகளில் வல்லவன், எந்தச் சூழ்நிலைகளையும் சாதூரியத்துடன் அணுகி, வெளியே வரத்தெரிந்தவன். நாயகி 'தாமரை'யைக் காதலிப்பவன். பல வேடங்களில் பின் தொடர்ந்து அவளை ஆபத்திலிருந்து காப்பவன். அடிமையாகி அடிமையின் காதல் கொள்வதுதான் தான் கதை.
       இப்பொழுதுகூட அடிமைகள் விடுவிக்கப்பட்டார்கள் என்கிற செய்தியை செய்தித்தாள்களில் அவ்வப்போது பார்த்துக்கொண்டுதான் வருகிறோம் .
        ஆனால் ஒரு காலத்தில் சென்னை மாநகரத்தில் அடிமைகள் வியாபாரம் நடந்தது என்ற ஒரு சிறுகுறிப்பு மூலமாக அறிந்து கொண்ட ரா.கி. ரங்கராஜன் அவர்கள் இந்த பெரிய சரித்திர நாவலைப் படைத்திருக்கிறார்.

        ஒரு சாதாரண காஞ்சிபுரத்தான் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்து எப்படியெல்லாம் சாகசம் புரிந்து அடிமையாகி பின் விடுதலை வேட்கை கொண்டு ஒரு அடிமையை மீட்டு ,அடிமை தாமரையின் காதலை பெறுகிறான் என்பதுதான் கதை .

      இதன் இறுதிப் பகுதியில் ஆசிரியர் இவ்வாறு எழுதுகிறார்.
  சிப்பாய் ஒருவன் பறையறைந்து உரக்கப் படித்தார்.

      "மாட்சிமை தங்கிய இங்கிலாந்து மன்னருடைய பிரதிநிதியான கிழக்கிந்தியக் கம்பெனியார் இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் கும்பினியாரின் ஆளுகைக்கு உட்பட்ட சென்னை பட்டணம் பிரதேசத்திலும் எழும்பூர் மயிலாப்பூர் திருவல்லிக்கேணி வேப்பேரி புரசைவாக்கம் கிராமங்களிலும் இன்று முதல் யாரும் அடிமைகளை வாங்கவும் விற்கவும் கூடாது என்றும் அப்படி செய்பவர்கள் ஈவு இரக்கமின்றி தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம் .தப்பியோடிய அடிமைகளை திரும்பி பிடிப்பதும் அயல்நாடுகளுக்கு அனுப்புவதும் சட்டப்படி குற்றமாகும் ",என்று முரசு அறிவிக்கிறான்.

        இன்றைய தினத்திற்கு பொருந்தக்கூடிய வாக்கியமாக இறுதி வாக்கியம் : 
       *தோல்வி இரவாகி முடியும் ;வெற்றி பகலாக விடியும் ,*என்று கூறியது காஞ்சிபுரத்தான் விரல்.


நலக்குறிப்புகள்

சிவனருட் செல்வர்

இன்றைய சிந்தனைக்கு

இன்றைய குறள்

கோபுர தரிசனம்