31 ஆக., 2020

நோயின்றி வாழ இந்த மூன்றை சரி செய்யுங்கள் -- டாக்டர் ஜி.சிவராமன்

நோயின்றி வாழ 

இந்த மூன்றை சரி செய்யுங்கள்

டாக்டர் ஜி.சிவராமன்

|Dr.Sivaraman health tips

27,674 views•Aug 19, 2020

HEALTHY TAMILNADU

Dr.Sivaraman latest speech in tamil

Contact us : Team.healthytamilnadu@gmail.com

Website : https://healthytamilnadu.blogspot.com

 

Grateful thanks to Dr G SIVARAMAN, HEALTHY TAMILNADU and YouTube.


 

பக்தி உலா : மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்


பக்தி உலா : மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்             

MEENAKSHI AMMAN & THE MARVEL OF MADURAI 

FULL EPISODE

39,817 views•Aug 17, 2020

HISTORY TV18 TAMIL

45.9K subscribers

புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா மற்றும் மீனாட்சி கோவிலின் மெய்சிலிர்க்கும் அனுபவத்தை உங்கள் திரைகளில் வழங்குகிறது HistoryTV18. ‘Meenakshi Amman & The Marvel of Madurai’-இல் காலத்தில் பின்னோக்கி பயணித்து இந்த தென்னிந்திய அற்புதம் மீண்டும் உயிர்பெறும் விழாவில் கலந்துகொள்ளுங்கள்.

#MeenakshiAmman #MarvelOfMadurai

 

Grateful thanks to HISTORY TV18 TAMIL and YouTube.

எனக்குப் பிடித்த பாடல் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும்



உனக்கு மட்டும் உனக்கு மட்டும் 

ரகசியம் சொல்வேன் : பி.சுசீலா


மணப்பந்தல்

UNAKKU MADDUM UNAKKU MADDUM 

SSKFILM011 PS @ MANAP PANTHAL

1,968,753 views•Jun 17, 2011

KANDASAMY SEKKARAKUDI SUBBIAH PILLAI

148K subscribers

Suggested by saregama

Darr Ke Aage Jeet Hai #JeetengePhirSe | Mountain Dew| Sukhwinder Singh |Yeh Desh Hai Veer Jawaano Ka

Music in this video

Learn more

Listen ad-free with YouTube Premium

Song

Kannadasan Kadhal Padalgal

Licensed to YouTube by

LatinAutor - UMPG, LatinAutor, Abramus Digital, LatinAutor - PeerMusic, UMPG Publishing, LatinAutor - SonyATV, UNIAO BRASILEIRA DE EDITORAS DE MUSICA - UBEM, and 1 Music Rights Societies

Song

Unakkumattum Unakkumattum

Artist

P. Susheela

Album

Manappandhal

Licensed to YouTube by

saregama (on behalf of Saregama India Limited); Saregama Publishing, BMI - Broadcast Music Inc., and 2 Music Rights Societies

 

Grateful thanks to KANDASAMY SEKKARAKUDI SUBBIAH PILLAI and YouTube.

ஆர்,கே.நாராயணின் மால்குடி நாட்கள் : சுவாமியும் சினேகிதர்களும்


ஆர்,கே.நாராயணின்  மால்குடி நாட்கள் : 

சுவாமியும் சினேகிதர்களும்

MALGUDI DAYS (TAMIL) - EPISODE 1 -

SWAMI AND FRIENDS | KIDS TV SERIES

107,581 views•Aug 17, 2016

ULTRA CINEMA

5.4M subscribers

Watch All Episodes of Malgudi Days Click - http://bitly.com/malgudidaystamil

 

Malgudi Days (Tamil) - Episode 1 - Swami And Friends 

 

Malgudi Days is an Indian television series based on the works of R.K. Narayan. The series was directed by Kannada actor and director SHANKAR NAG.

 

Swami and Friends revolves around the life of ten-year-old Swaminathan, or Swami as he is known. Swami portrays the growing pangs of a boy who despises school, as he makes excuses and roams around Malgudi with his friends. Swami's father works in a government office and his mother is a housewife. At home, Swami shares his adventures with his aged granny, who lovingly addresses him as "Chamy." Swami has two close friends: Mani and Rajam, the son of the police chief superintendent.

 

Swami - Master Manjunath

Swami's father - Girish Karnad

Gopinath - Harish

Mani - Raghuram

Rajam - Rohit Srinath

Swami's mother - Vaishali Kasaravalli

Swami's grand mother - Suhasini Adarkar

Muniya (Muni) - Kanti Madiya

Muniya's wife - B Jayashree

Shopkeeper - Somu

American (New York tourist) - Teddy White

Nitya - Deven Bhojani 

 

#malgudidaystamil #swamiandfriends #kidstvseries

 

Grateful thanks to ULTRA CINEMA, SHANKAR NA, all the others who made this video possible and YouTube.

பாலு மகேந்திராவின் கதை நேரம் : காத்திருப்பு

 

பாலு மகேந்திராவின் கதை நேரம் :  காத்திருப்பு

Kathirippu | Balumahendra Vin Kadhai Neram | Single Story Episode

2,210 views•Feb 12, 2020

BRAVO THIRAI

815 subscribers

Title : Kathirippu

Direction and story : Balu Mahendra

Starring : Mounika, Cheran Raj, Amarasigamani,LI.C.narasimman, Shanmugasundarai,Usha, Gowthami,Hema and others

 

Grateful thanks to BRAVO THIRAI and YouTube.




இன்றையதத்துவம் : தீர்மானவாதம் எனப்படும் Determinism

இன்றைய தத்துவம் :
தீர்மானவாதம் எனப்படும்
Determinism

தீர்மானவாதம் என்பது காரணம் மற்றும் விளைவு பற்றிய கருத்தாக்கம் ஆகும்.  ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நிகழும் ஒரு நிகழ்வை காரணமானது பிணைக்கிறது மற்றும் முந்தைய நிலைகள் வழக்கமாக ஒரு சம்பவத்தின் எந்த நிலையையும் தீர்மானிக்கின்றன. நிர்ணயம் என்பது ஒரு பகுத்தறிவு கோட்பாடாகும், இது முன்னர் அனைத்து நிகழ்வுகளையும் சரியான விருப்பங்களையும் அடையாளம் காணும் என்று கூறுகிறது. 

காரண விளைவு என்பது ஒரு தனித்துவமான யோசனையாகும், இது அனைத்து நிகழ்வுகளும் முந்தைய நிலைமைகளால் இயற்கையின் ஏராளமான சட்டங்களுடன் அவசியம் என்று கூறுகிறது. எவ்வாறாயினும், இந்த கருத்து மிகவும் விரிவானது, மேலும் இது ஒருவரின் செயல்கள், தேர்வுகள் மற்றும் விவாதங்களை உள்ளடக்கியது, மேலும் தொடர்ச்சியான நிகழ்வுகளின் தொடர்ச்சியான சங்கிலி உள்ளது, இது உலகின் தோற்றம் வரை நீண்டுள்ளது.

கடந்த சில நூற்றாண்டுகளில், தத்துவவாதிகள் சுதந்திரம் மற்றும் தீர்மானத்தின் உண்மை மற்றும் அவை எவ்வாறு தொடர்புடையவை என்பதை விவாதித்தனர். இணக்கம் என்பது சுதந்திரம் என்பது தீர்மானத்துடன் ஒத்துப்போகும் என்ற கருத்தாகும். சுதந்திரமான விருப்பம் இருப்பதாக சுதந்திரவாதிகள் நம்புகிறார்கள், தீர்மானிப்பவர்கள் இருக்கும்போது கடினமான விருப்பமின்மைவாதிகள் சுதந்திரம் இருக்காது என்று நினைக்கிறார்கள்.

தீர்மானத்தின் வெவ்வேறு வகைகள் யாவை?

உயிரியல் நிர்ணயம்

உயிரியல் நிர்ணயம் என்பது ஒவ்வொரு மனித நடத்தையும் இயல்பானது மற்றும் மரபணு ரீதியாக தீர்மானிக்கப்படுகிறது என்ற கருத்தை குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட மரபணு அல்லது உடலியல் கூறுகள் மனித நடத்தையை கட்டுப்படுத்துகின்றன என்று உயிரியல் நிர்ணயவாதம் நம்புகிறது. விஞ்ஞான இனவெறி, சமூகவியல் மற்றும் யூஜெனிக்ஸ் போன்ற சமூகத்திலும் அறிவியலிலும் மரபணு இயக்கவியல் பல இயக்கங்களுடன் தொடர்புடையது.

சுற்றுச்சூழல் நிர்ணயம்

புவியியல் அல்லது காலநிலை நிர்ணயம் என்றும் குறிப்பிடப்படுகிறது, சுற்றுச்சூழல் நிர்ணயம் என்பது வேறுபட்ட உடல் சூழல் எவ்வாறு மாநிலங்களையும் சமூகங்களையும் துல்லியமான வளர்ச்சிப் பாதைகளுக்குத் தூண்டுகிறது என்பதை ஆய்வு செய்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் பல அணுகுமுறைகள் நிலப்பரப்பு மற்றும் காலநிலை மனித உளவியல் மற்றும் செயல்பாட்டை தீர்மானிக்கிறது என்று நம்புகின்றன, மேலும் இது யூஜெனிக்ஸ் மற்றும் இனவெறியுடன் தொடர்புடையது. உதாரணமாக, பண்டைய சீனாவில், மக்களின் குணாதிசயங்கள் சுற்றியுள்ள நதிகளால் தீர்மானிக்கப்படுகின்றன என்று கருதப்பட்டது. விரைவான மற்றும் முறுக்கும் நதிகளுக்கு அடுத்ததாக கட்டப்பட்ட சங்கங்கள் பேராசை மற்றும் விரோதத்தின் விரும்பத்தகாத பண்புகளை வெளிப்படுத்துகின்றன என்று நம்பப்பட்டது.

உளவியல் நிர்ணயம்

உளவியல் நிர்ணயம் பல்வேறு தன்னிச்சையான மன செயல்முறைகளை கோட்பாடு செய்கிறது, அவை முன்பே இருக்கும் உளவியல் வளாகங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. உளவியல் நிர்ணயம் என்பது தற்செயலாக எதுவும் நடக்காது என்ற அமானுஷ்ய நிகழ்வுக்கு பொருந்தும் காரணக் கொள்கையைப் பொறுத்தது. எனவே ஒரு நபரின் பெயரையும் நாவின் சீட்டையும் மறந்துவிடுவது ஒரு உளவியல் பொருளைக் கொண்டதாக நம்பப்படுகிறது.

சமூக நிர்ணயம்

சமூக நிர்ணயம் கோட்பாடு சமூக கட்டமைப்புகள் மற்றும் தொடர்புகளால் மட்டுமே ஒரு நபரின் நடத்தையை தீர்மானிக்க முடியும் என்று கூறுகிறது. சமூக நிர்ணயிப்பாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகள், கல்வி பழக்கவழக்கங்கள் மற்றும் கவிதை எழுதுதல், கொலை செய்வது போன்ற எந்தவொரு நடத்தைகளையும் ஏன் வெளிப்படுத்துகிறார்கள் என்பதை தீர்மானிக்க உதவும் பல சமூக நிகழ்வுகளைப் பார்க்கிறார்கள்.

தருக்க நிர்ணயம்

தர்க்கரீதியான நிர்ணயம் என்பது எதிர்கால நிகழ்வு குறித்த முன்மொழிவு சரியானது அல்லது நிகழ்வின் மறுப்பு உண்மை என்பதும், இந்த அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள வைப்பதும் தற்போதைய நிலை-விவகாரங்களின் இருப்பு ஆகும். ஷ்லிக் மோரிட்ஸ் அறிமுகப்படுத்திய தர்க்கரீதியான தீர்மானவாதம் ஃப்ரீவில் கருத்துக்கு ஒரு சவாலை முன்வைக்கிறது.

இன்றைய தத்துவ மேதை : ஆன்மிக ஞானி மகான் ஸ்ரீ அரவிந்தர்.

இன்றைய தத்துவ மேதை : சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், கல்லூரி முதல்வர், ஆன்மிக ஞானி எனப் பன்முகத் தன்மைகளுடன் 9பரிணமித்தவர் மகான் ஸ்ரீ அரவிந்தர். 

சுதந்திரப் போராட்ட வீரராகப் பல்வேறு வீர தீரச் செயல்களுடன்  தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் மக்களிடையே ஆன்மிக எழுச்சியை உருவாக்கிய மாபெரும் ஞானி. இன்றைய கொல்கத்தா நகரில் 1872, ஆகஸ்ட் மாதம் 15 - ம் நாள் கிருஷ்ண தனகோஷ் - ஸ்வர்ணலதா தேவி ஆகியோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். அவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் அரவிந்த் அக்ராய்ட் கோஷ். `அரவிந்தம்' என்றால் `அன்றலர்ந்த தாமரை' என்று பொருள். பெயருக்கு ஏற்றபடியே எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருந்தவர் அரவிந்தர்.

அரவிந்தர் தனது தொடக்கக் கல்வியை டார்ஜிலிங்கில் உள்ள லோரெட்டோ கான்வென்டில் பயின்றார். பிறகு, 1879 -ம் ஆண்டு சகோதரர்களுடன் இங்கிலாந்து சென்று லண்டன், கேம்பிரிட்ஜில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் `இந்திய ஆட்சிப் பணி' படிப்பில் சேர்ந்தார்.  கிருஷ்ண தனகோஷ்க்கு, தனது மகன் அரவிந்தன் அரசுத் துறையில் உயர்ந்த பதவி வகிக்க வேண்டும் என்றே ஆசை. அதன் பொருட்டுதான் அரவிந்தரை லண்டன் வரை அனுப்பிப் படிக்க வைத்தார். ஆனால், கேம்பிரிட்ஜ் கல்லூரியில் படித்த காலத்திலேயே பல்வேறு புரட்சிகரமான சிந்தனைகளைக் கொண்டிருந்தார் அரவிந்தர். 1893 - ம் ஆண்டு லண்டனிலிருந்து இந்தியா திரும்பினார்.

1893 -ம் வருடம் இந்திய அரசியலிலும், ஆன்மிகத்திலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடம். ஏனெனில், இந்த வருடத்தில்தான் பாரதத்தின் தொன்மை மற்றும் ஆன்மிகச் சிறப்பை மேலை நாடுகள் அறிந்துகொள்ளும்படிச் செய்ய, சிகாகோ நோக்கிய பயணத்தைத்  தொடங்கினார் விவேகானந்தர். இதே வருடத்தில்தான் மகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்கப் பயணமும் நிகழ்ந்தது. விவேகானந்தர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் பயணம் இந்தியாவிலிருந்து தொடங்கியதென்றால், அரவிந்தரின் பயணம் இந்தியாவை நோக்கியதாக இருந்தது. இந்தியா திரும்பிய பிறகு பரோடா சமஸ்தானத்தில் பணிபுரிந்தார் அரவிந்தர். 

இந்த நிலையில்தான் 1905 - ம் ஆண்டு வைசிராய் கர்சன் பிரபு வங்கப் பிரிவினையை ஏற்படுத்தினார். பிரிவினைக்கு எதிராக 1906 - ல் மிகப்பெரிய அளவுக்குக் கலவரங்கள் வெடித்தன. கொல்கத்தாவில் உள்ள வங்காள தேசியக் கல்லுரியில் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த அரவிந்தரை, விடுதலைப் போராட்டத்துக்கு இழுத்துச் சென்றது கர்சன் பிரபுவின் இந்தப் பிரிவினைக் கொள்கைதான். `வந்தே மாதரம்' இதழில் ஆங்கிலேய அரசு மற்றும் வங்கப் பிரிவினைக்கு எதிராக விடுதலையைத் தூண்டும் பல்வேறு கட்டுரைகளை எழுதி மக்களிடையே விழுப்புஉணர்ச்சியை ஏற்படுத்தினார். போராட்டங்களையும் நடத்தினார். 1907 மற்றும் 1908 - ம் ஆண்டுகளில் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார் அரவிந்தர். அந்தக் காலகட்டத்தில் பல இளைஞர்களுக்குச் சுதந்திரப் போராட்டத்துக்கான ஊக்க சக்தியாகவும் திகழ்ந்தார்.

குற்றம் நிரூபிக்கப்படாததால், 1909 -ம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட அரவிந்தர், அரசியலிலிருந்து விலகி, ஆன்மிக யோக நெறிகளில் கவனத்தைச் செலுத்தலானார். சிறையில் இருந்த காலத்தில் அவர் படித்த நூல்கள், உபதேசங்கள், கீதை ஆகியவை அவரை ஆன்மிகத்தை நோக்கி இழுத்தன. பிறகு, `கர்மயோகி' என்ற ஆங்கிலப் பத்திரிகை, `தர்மா' என்ற வங்க மொழிப் பத்திரிகை ஆகியவற்றில் ஆன்மிகம் குறித்த தனது கருத்துகளைத் தொடர்ந்து எழுதினார். பரமனின் ஆட்சியைப் பூமியில் நிலை நிறுத்துவதற்கு ஆன்மிக விடுதலை ஒன்றே தீர்வு என்று கண்டுகொண்டார்.

ஆன்மிக நெறியில் சென்றுவிட்டாலும் அரவிந்தரை ஆங்கிலேயே அரசு தொடர்ந்து கண்காணித்து அச்சுறுத்திக்கொண்டிருந்தது. 1910 -ம் ஆண்டில், `ஷாம்சுல் ஆலம் கொலை வழக்'கில் அரவிந்தர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனால் மாறுவேடமிட்டு பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார் அரவிந்தர்.

ஆங்கிலேய அரசுக்கு எதிரான கொந்தளிப்பிலிருந்து முற்றாக விலகிக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, யோக நெறியில் தன்னுடைய கவனம் முழுவதும் செலுத்தி தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டார் அரவிந்தர். 1926 ம் ஆண்டு ஆசிரமம் அமைத்து தியானத்திலும் யோகத்திலும் ஈடுபட்டார். ஆன்மிகத்தை பலருக்குப் பரப்பினார். பாரதியுடன் நட்பு கொண்டது இந்தக் காலத்தில்தான். இதே காலத்தில்தான் ஸ்ரீ அன்னை, அரவிந்தரைச் சந்தித்து அவரது ஆன்மிக சாதனைகளுக்கு உற்ற துணையாக இருந்தார். இங்குதான் அரவிந்தர் தனது ஒப்பற்ற காவியமான `சாவித்ரி'யைப் படைத்தார். பல ஆண்டுகள் தொடர்ந்து எழுதிய அவரது `சாவித்ரி காவியம்' 1950 - ம் ஆண்டு நிறைவு பெற்றது. 

 `ஓர் எறும்பின் உயிரைக் காப்பாற்றுவது, ஒரு பேரரசை நிறுவுவதை விடச் சிறந்த செயலாகும்' என்று கருணை உள்ளத்தோடு ஆன்மிகத்தைப் பரப்பிய மகான் ஸ்ரீ அரவிந்தர் இதே ஆண்டு டிசம்பர் 5 - ல் முக்தியடைந்தார்.  

நன்றி : திரு நேயம் சத்யா,  தத்துவங்களத் தேடி,  வாட்ஸ்அப் குழு

சிரித்து வாழவேண்டும்

குட்டிக்கதை

”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் ஜவர்லால்.

“எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி.  
ஜட்ஜூக்கு சுருக்கென்றது.

பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ்.  
ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார்,

“இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிஃபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு”  
பக்கிரி சந்தோஷமாக ஒப்புக் கொண்டான்.  
ஜெயிலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்தார்.

“பக்கிரி கூலியை வாங்கிக்கிட்டு செல்லுக்குப் போகிற வழியில அவனை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினம் ஒருத்தரா இந்த வேலையைச் செய்யணும், யார் எப்ப பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது” என்றார்.  
அவர்கள் இந்த தொழில் சவாலை ஏற்றார்கள்.

முதல் நாளே பக்கிரி பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் டிஃபன் தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் துளியூண்டு சாப்பிடத் தந்தார்கள்.  
அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டிருந்தாலும் வேறு வழியில்லை. ஆட்டத்துக்கு ஒப்புக் கொள்ளா விட்டால் ஒன்பது பேர் பட்டினி! அதை விட ஒருத்தன் பட்டினி பரவாயில்லையே!  
எல்லோரும் விடுதலை ஆகும் அன்று ஜட்ஜ் ஜவர்லால் வந்தார்.

“சட்டத்தையோ, தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றார்.

“ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு செக்கண்டில தட்டிக்கிட்டு போறது எவ்வளவு அக்கிரமம்ன்னு இப்போ புரியுது, இனி பிக்பாக்கெட் அடிக்க எனக்கு மனசு வராது” என்றான் பக்கிரி.  
“பிக் பாக்கெட் கொடுத்தவன் பசியில துடிக்கிறதைப் பார்க்க சகிக்கல்லை. செத்தாலும் இனிமே பிக்பாக்கெட் அடிக்க மாட்டோம்” என்றார்கள் மற்ற ஒன்பது பேரும்.

ஜட்ஜ்  ஒரு திருக்குறள் அபிமானி. வள்ளுவர் சொன்னதைத்தான் அவர் செய்தார்.

*தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்*  
*ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து*

குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான்.

நூல்மயம் : கார்ல் மார்க்ஸ்

"கார்ல் மார்க்ஸ்"
-வாழ்க்கை வரலாறு-

"சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி 
மார்க்சிய-லெனினிய ஆய்வு நிறுவனத்தால் எழுதப்பட்டுள்ளது 

1220 பக்கங்கள் 
அபூர்வ புகைப்படங்கள் 
அறிய ஓவியங்களின் காட்சிகள் அடங்கிய முழுமையான மிகச்சிறந்த புத்தகம் 

"மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு பல வகைகளில் நமக்கு முக்கியமாக உள்ளது.அது ஒரு மிகப்பெரிய புரட்சிக்காரரின் வாழ்க்கை.அது ஒரு மிகப்பெரிய சிந்தனையாளரின் வாழ்க்கை.மார்க்சியம் என்ற அற்புதமான ஒரு சிந்தனை அவரது வாழ்க்கை முழுவதிலும் ஒரு தொடர் நிகழ்வாக உருவாகிக்கொண்டிருந்தது 

அது ஒருபோதும் முடிந்த சூத்திரமாக ஆகிவிடவில்லை.சமூக அரசியல் அசைவுகளில் தேக்கங்கள் ஏற்பட்ட போதெல்லாம் மார்க்ஸ் மேலும் மேலும் சமூகவரலாற்றின் ஆழங்களையும் பரப்புக்களையும் அகழ்ந்தெடுத்துக் கொண்டே இருந்தார் 

மார்க்சின் அரசியல் வாழ்க்கை சந்தித்த பலவகை ஏற்ற இறக்கங்களையும் ஒவ்வொரு அரசியல் சந்தர்ப்பத்தில் மார்க்சின் எதிர்பார்ப்புக்களையும் அவற்றின் வெற்றி அல்லது தோல்விகளையும் விரிவாகச் சித்தர்ப்பனவாக இந்நூலின் இயல்புகள் அமைந்துள்ளன"

நூலிற்காக-பேராசிரியர் ந.முத்துமோகன் அவர்கள்

எமது நியூ செஞ்சுரி நிறுவனத்தின் வெளியீடு 
விலை ரூபாய் 850 / மட்டுமே 

புத்தக தேவைக்கான தொடர்புக்கு
 
மதுரை கிளை 
7708683563
WhatsApp

மிகச் சிறந்த மருத்துவர்கள்

இயற்கையின் ஜாலம்

கல்லிலே கலைவண்ணம்

அபூர்வமான படம் : உலகின் முதல் கார்

        உலகின் முதல் கார் 

இன்று சில தகவல்கள்

எங்கள் தமிழகம்

தமிழரின் கட்டுமான தொழில்நுட்பதின் செழுமையை இன்றுவரை பறைசாற்றிக் கொண்டிருப்பவை தமிழகக் கற்கோயில்களே. அந்தக் கோவில்களின் விதானத்தை தாங்கி நிற்கும் ஒவ்வொரு கல்தூணும் ஒரு கலை பொக்கிஷம். அவ்வாறான தூணை நுட்பமாக பாகம் பிரித்திருந்தது நமது தொல்லறிவு.

நன்றி :


சுற்றுச்சூழல்

விஸ்வநத்தம் ஊராட்சிக்கு பாராட்டுக்கள்! 

நம்பிக்கை நட்சத்திரங்கள்

கருணை உள்ளமே :

நீதி மன்றமாக மாறிய படிக்கட்டுகள் 

ஒரு மூதாட்டி நடக்க முடியாத தள்ளாத வயது அவருக்கு இரண்டு வருடங்களாக ஓய்வூதியம் கிடைக்கவில்லை ... வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் மாவட்ட நீதிமன்றத்தை நாடி புகாரளிக்க முடிவு செய்து மாவட்ட நீதிமன்றம் அலுவலகம் வருகிறார்.

படிகளில் ஏற முடியவில்லை படிகளில் அமர்கிறார் நடக்க இயலாமல் தகவல் டவாலி மூலமாக மாவட்ட நீதிபதிக்கு (DM) தகவல் செல்கிறது.

மாவட்ட நீதிபதி  மாடியிலிருந்து இறங்கி வருகிறார் மூதாட்டி அமர்ந்திருந்த படிகளில் மூதாட்டி அருகே அமர்கிறார்.

அந்த இடம் நீதிமன்றமாக மாற நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றமாக மாறுகிறது விசாரணை பரிவுடன் ஆரம்பிக்கிறது.

படிக்கட்டுகளே நீதிமன்றமாக மாறுகிறது விசாரணை ஆரம்பமாகிறது நீதிபதி ஆவணங்களை கேட்கிறார் 

மூதாட்டியும் தனக்கு ஓய்வூதியம் கிடைக்காத ஆவணங்களை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்கிறார். அந்த இடத்திலேயே  உடனடியாக  விசாரணை செய்து அந்த மூதாட்டிக்கு ஓய்வூதியம் கிடைக்க தீர்ப்பளிக்கிறார். 

மாவட்ட நீதிபதி (DM) பெயர் : அப்துல் அசீம்

மாவட்டம் : புவன் பள்ளி
மாநிலம் : தெலுங்கானா.

நன்றி :

நீதிபதி அப்துல் அசீம் அவர்களுக்கு 🙏🙏🙏

சிரிப்புத்தான் வருகுதையா


நன்றி :


மக்கள் குரல்

சேர்ந்தும், சோர்ந்தும் 
சார்ந்து தலை சாய்த்தும், 
கலைந்தும், களைத்தும் 
கலந்து இன்பமாய் சென்ற 
இல்லற வாழ்வை 
விஷம் நுரைக்கும் மதுபான 
கோப்பைகள் இல்லாமல் 
செய்த கதையிது.....................

தீர்த்த கரைதனிலே 
சமத்துவம் சாத்தியமாகும் 
ஒரு புனிதபொழுதினிலே 
நண்பர்களுடன் கூடி 
குதூகலமாய் ஆரம்பமான 
குடிப்பழக்கம் மெல்ல மெல்ல 
போர்களமாய் மாறிட................

கோபுரமோ 
குப்பைத்தொட்டியில், 
பூக்கடையோ 
சாக்கடையில் என 
மாதசம்பளம் முழுவதும் 
மதுக்கடைக்கு போயிற்று, 
அவனோ 
போட்டால் ஆடினான், 
போட்டுவிட்டு பாடினான்...........

பெருகிப்போன குடியால் 
கருகிப்போன கனவுகளோடு 
நீர் வறண்ட கோடையில், 
நிழலற்ற பாதையில்...............

ஒரு நாள் நா வறண்டு, 
நம்பி வந்த மனைவி, 
குழந்தைகளை விட்டு, 
ஊரும், உறவும் அற்றுப்போய், 
குடும்பபெயரும் கெட்டு.............

அவன் என்பவன் 
மதுவெனும் அரக்கனால் 
"அதுவாகி "
வீழ்ந்தே கிடந்தான் 
வீதி ஓரத்திலே..............

மாண்டு போனது 
அவன் மட்டுந்தானா???
வெகுண்டு எழுந்தவரெல்லாம் 
துவண்டே போயினர் 
வீட்டுக்கு வீடு வாசற்படி 
என்ற கதையினாலே.

       # கார்த்திகேயன்.

நன்றி :

என்னமோ நடக்குது!

தமிழக வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள் : ஆபிரகாம் பண்டிதர்

யார் இந்த ஆபிரகாம் பண்டிதர்?

ஆபிரகாம் பண்டிதர் 1899ஆம் ஆண்டு தஞ்சாவூருக்கு அருகில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு நிலத்தை வாங்கி, அதற்கு "கருணானந்தபுரம்" என்று பெயரிட்டார். பொதுமக்கள் அதைப் "பண்டிதர் தோட்டம்" என்றே அழைத்தனர். அவ்விடத்தில் பல வகையான மரம் செடி கொடிகளையும், மூலிகைகளையும் மலர்களையும் பயிரிட்டார். வேளாண்துறையில் புதிய ஆய்வுகளையும் மேற்கொண்டு பரிசுகளும் பெற்றார்.

தஞ்சாவூரில் அவருடைய இல்லத்தில் பண்டிதர் "கருணாநிதி மருத்துவக் கூடம்" (Karunanidhi Medical Hall) என்றொரு பிரிவைத் தொடங்கி அங்குக் கூடிவந்த மக்களுக்கு மருத்துவ நல உதவி நல்கினார். அவர் வழங்கிய "கோரோசனை மாத்திரைகள்" பிரபல்யமானவை. அவை இந்தியாவில் மட்டுமன்றி, அந்நாளைய சிலோன், பர்மா, மற்றும் ஆங்கிலேயர் கைவசம் இருந்த கிழக்கு ஆசிய நாடுகள் (இன்றைய சிங்கப்பூர், மலேசியா) முதலியவற்றில் அந்த மாத்திரைகளுக்கு அமோக வரவேற்பு இருந்தது.

1908, பெப்ருவரி 22ஆம் நாள் ஆபிரகாம் பண்டிதரைச் சந்திக்க அந்நாளைய பிரித்தானிய ஆளுநரான சர் ஆர்த்டர் லாலி (Sir Arthur Lawley) என்பவரும் அவர்தம் துணைவியாரும் வந்தனர். அவர்கள் பண்டிதரின் பணிகளைப் பெரிதும் பாராட்டினர்.

1909ஆம் ஆண்டு பிரித்தானிய இந்திய அரசு ஆபிரகாம் பண்டிதருக்கு "ராவ் சாகிப்" என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. தம்மைச் சந்திக்க வந்த பிரித்தானிய ஆளுநரின் வருகையின் நினைவாகப் பண்டிதர் ஒரு பெரிய சமூகக் கூடம் கட்டி அதற்கு "லாலி சமூகக் கூடம்" (Lawley Hall) என்று பெயரிட்டுச் சிறப்பித்தார்.

தமிழிசை சாகித்தியங்களின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்ற முத்துத் தாண்டவர் முதலிய மூவரைப் போல, தமிழிசை இலக்கணத்தைத் தெளிவுபடுத்துவதற்கென வாய்த்த வல்லுநர்கள் மூவர். கருணாமிர்த சாகரம் எழுதிய ஆபிரகாம் பண்டிதர், யாழ் நூல் எழுதிய விபுலாநந்தர், சிலப்பதிகார இசை நுணுக்கம் எழுதிய டாக்டர் எஸ். ராமநாதன் ஆகியோர்தான் அந்த மூவர்.

“தமிழக முழுமைக்கும் உதவிய நற்பெரும் மருத்துவர்; கடல் போன்ற கருணாமிர்த சாகரம் என்னும் இசை நூல் எழுதியவர்; வீணை வித்தகர்; அறிஞர் போற்றிய இசை ஆராய்ச்சி அன்பர்; பெரும்புலவர்களைப் புரிந்து பேணிய வள்ளல்; இசை மாநாடுகள் இனிது நடத்தியவர்; பரோடா இந்திய இசை மாநாட்டில் 24 சுருதி பற்றிச் சொற் பெருக்கு ஆற்றிய ஆய்வாளர்; சுருளிமலைத் துறவியார் கருணானந்தர்பால் அரிய மருந்து முறைகளைக் கற்றுக்கொண்ட அறிஞர்; சிலப்பதிகார இசை நுணுக்கங்களையும் சங்க இலக்கிய இசையியலையும் முதன் முதலில் ஆராய்ந்து பிற ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாய் நின்றவர்; மேற்கு நாட்டினர்க்குத் தென்னக இசையியல் பற்றிக் கட்டுரைகள் எழுதியும், கருணாமிர்த சாகரத்தை ஆங்கிலத்தில் எழுதியும் ஐரோப்பிய இசையியலையும் தமிழ் இசையியலையும் ஒப்பீடு செய்து பணியாற்றியவர்; பழம் இசை நூல்களைத் திரட்டி அச்சிட்டு அளித்து, மறைந்துபோகாமல் காத்த இசைப்புரவலர்.”

தமிழிசை வளம்:

தமிழிசைக் களஞ்சியத்தை உருவாக்கிய முனைவர் வீ. ப. கா. சுந்தரம், ஆபிரகாம் பண்டிதரை அறிமுகப்படுத்தும் முறை இது. வரலாற்று வல்லுநர், பறவையியல் வல்லுநர் (ஆர்னிதாலஜிஸ்ட்), புகைப்படக் கலைஞர், ஓவியர், சோதிடர், இசைத்தமிழ் வல்லுநர், இசைப்பாடல் ஆசிரியர் எனப் பல்வேறு ஆற்றல்கள் பெற்றுத் தமிழுக்குத் தொண்டாற்றிய ஆபிரகாம் பண்டிதரை இதைவிடச் சிறப்பான முறையில் அறிமுகப்படுத்த முடியாது. எல்லாக் கலைகளும் ஒன்றுக்கொன்று தமக்குள் கொண்டிருக்கும் தொடர்பினை நன்றாக உணர்ந்தவர். இவை யாவினுக்கும் மேலாக, இசைத் தமிழ் ஆய்வின் முன்னோடி ஆபிரகாம் பண்டிதர்.

வாழ்க்கை வரலாறு

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே சாம்பவர் வடகரை என்னும் சிற்றூரில், 1859ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ஆம் நாள், முத்துச்சாமி நாடார், அன்னம்மாள் தம்பதியர்க்கு மகனாகத் தோன்றியவர். மிக எளிய குடும்பம். முத்துச்சாமி நாடார், சாம்பவர் வடகரையை விட்டு பங்களாச் சுரண்டை என்னும் ஊருக்கு வந்து அங்கிருந்த ஆங்கிலப் பாதிரியாரிடம் தோட்டக்காரனாகப் பணியாற்றினார். அன்னம்மாள் ஆலயப் பணிகளைச் செய்துவந்தார். பண்டிதர், தமது ஆரம்பக் கல்வியைப் பன்றிகுளம் என்னும் ஊரில் முடித்தார். 14 வயதிலேயே திருமலாபுரம் என்னும் சிற்றூரில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1874இல் திண்டுக்கல் சென்று நார்மல் பள்ளியில் ஆசிரியர் பயிற்சி மேற்கொண்டார். அவரது திறமையாலும் அறிவாற்றலாலும் அப்பள்ளியை நடத்திவந்த யார்க் துரையின் நன்மதிப்பைப் பெற்றார். அவரிடமிருந்தே புகைப்படக் கலையையும் கற்றார்.

திண்டுக்கல் கந்தசாமிப் பிள்ளை என்பாரிடம் அச்சுத் தொழிலைக் கற்றார். சோதிடக் கலையையும் பயின்றார். வயலின் வித்துவான் சடையாண்டிப்பத்தர் என்பாரிடம் வயலின் வாசிக்கக் கற்றுக்கொண்டார். திண்டுக்கல் வழியாகப் பழநி செல்லும் சித்தர்கள், சாதுக்கள், பரதேசிகளிடம் சித்த மருத்துவக் கூறுகளைப் பயின்றார். திண்டுக்கல்லுக்கு அருகே ஆனைமலைப் பட்டியில் வசித்துவந்த பொன்னம்பல நாடார்க்கும் இவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. பொன்னம்பல நாடார் ஒரு மருத்துவர். 1887இல் அவர் சுருளிமலைக்குப் பண்டிதரை அழைத்துச் சென்றார். அங்கு கருணானந்த மகரிஷியைக் கண்டு அவருடைய சீடர் ஆனார். தமது மருந்துகளுக்கெல்லாம் கருணானந்த சஞ்சீவி என்றே பெயரிட்டிருந்தார். (அக்காலத்தில் மருத்துவர்களைப் பண்டிதர் என்று அழைப்பது வழக்கம். மருத்துவத்தையும் பண்டுவம் என்பார்கள். பிரசவம் பார்க்கும் மருத்துவச்சிகளையும் பண்டுவச்சி என்பது மரபு.)

1882இல் பொன்னம்மாள் என்பாரை மணந்தார். கணவன் மனைவி இருவரும் ஆசிரியப் பணி புரிந்தனர். 1890இல் மருத்துவ அலுவல்கள் மிகுந்ததால், ஆசிரியப் பணியைத் துறந்து இருவரும் சொந்த மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டனர்.

மருந்துகளை விற்கக் கும்பகோணம் செல்வது இவரது வழக்கம். தஞ்சை நகருக்கு மேற்கிலிருந்த நிலத்தை வாங்கிக் கருணானந்தபுரம் என்ற பண்ணையை அமைத்தார். 1894இல் ஒரு வீட்டையும் வாங்கினார். இங்கிலாந்து லிவர்பூல் நகரிலிருந்து நீர் இறைக்கும் குழாயையும் காற்றாலையையும் வாங்கிப் பெரிய கிணறுகளை வெட்டி நிலத்தைப் பண்படுத்தினார். பிறகு தமக்குத் தேவையான மூலிகைகளை அங்கேயே பயிரிட்டார். வேளாண்மை ஆய்வுகளிலும் ஈடுபட்டார். (1899இல் ஆவானிக் என்னும் தொற்றுநோய் பரவியபோது, பண்டிதரின் மருந்துகள் தான் சமயசஞ்சீவியாகப் பயன்பட்டன என்பர்.) தஞ்சையில் ஆசிரியராகப் பணிபுரிந்துவந்த கோயில் பாக்கியம் அம்மையார் என்பாரின் இசைத்திறமையில் ஈடுபட்டு அவரை இரண்டாம் திருமணம் புரிந்துகொண்டார்.

கரும்பில் இவர் கண்டுபிடித்த ஒரு புதிய வகைக்கு ராஜாக் கரும்பு எனப் பெயரிட்டார். அது அக்கால அரசுக் கண்காட்சிகள் அனைத்திலும் பரிசு பெற்றது. அரசு ஆய்வுப் பண்ணைகளில் பயிரிடப்பட்டது. புதுவிதமான பட்டுப்பூச்சிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். வேளாண்துறையிலும் சித்தமருத்துவத் துறையிலும் பண்டிதர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி அக்கால பிரிட்டிஷ் அரசு ராவ் சாகிப்பட்டத்தை 1909இல் வழங்கி கௌரவித்தது.

தஞ்சையில் முதன்முதலில் மின்சாரம் இவர் வீட்டில் தான் பயன்படுத்தப்பட்டது. 1911இல் அவரது மனைவி பொன்னம்மாள் மறைந்தார். பின்னர் பாக்கியம் என்பவரைப் பண்டிதர் திருமணம் செய்துகொண்டார்.

சுருளிமலைக் கருணானனந்த முனிவர்தான் இவருக்கும் தமிழிசையின் நுட்பங்களையும் சொல்லிக் கொடுத்தவர். எனவே இசைத்தமிழில் இவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. இதற்கேற்ப கோயில்பாக்கியம் அம்மையாரும் இசைவல்லுநராக வாய்த்தார்.

சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோரின் கீர்த்தனைகளும் வர்ணங்களும் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே இருந்தன. சங்கீதம் கற்கும்போது பாடல்கள் தாய்மொழியில் எளிதில் புரியும் வண்ணம் இருக்கவேண்டும் என்பது ஆபிரகாம் பண்டிதரின் கருத்து. தெரியாத மொழியில் பாடும்போது அதன் முழுப்பயனும் கிட்டாமல் போய்விடுகிறது. பொருள் புரிந்து அர்த்த பாவத்தோடு பாடுவதே சிறப்பு என்பதும் அவர் கருத்து.

தமிழிசை ஆய்வில் ஈடுபடுவதற்காகப் பழைய இசை நூல்களைத் திரட்டி அச்சிட்டார். தஞ்சாவூரில் இசை ஆய்வுக்கென சங்கீத வித்யாமகாஜன சங்கம் என்ற அமைப்பை உண்டாக்கினார். 1912 முதல் 1914 வரை மூன்றாண்டுகள் சங்கீத வித்யாமகாஜன சங்கம் இசை மாநாடுகளைச் சிறப்பாக நடத்தியது. இம்மாநாடுகளில் பங்கேற்றவர்களின் நிழற்படங்கள், பெயர்கள், கட்டுரைகள், இவை பற்றிய செய்தித்தாள் விமரிசனங்கள் ஆகிய யாவற்றையும் முறையாகக் கருணாமிர்த சாகரத்தில் வெளியிட்டார். இதனால் பண்டிதருடைய வரலாற்றுக் கண்ணோட்டம் புலனாகிறது. தாமே ஒரு புகைப்பட வல்லுநர் என்பதால், தாமே சொந்தமாக நடத்திய இந்த மாநாடுகளில் பங்கேற்றவர்களின் நிழற்படங்களைப் பாதுகாத்ததன் வழி, அக்கால இசை வல்லுநர்களை அவர்களது பெயர்களுடன் நாம் இன்றும் கண்டு மகிழ முடிகிறது.

1909இல் லண்டன் அரசுக் கலைச் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சுத்தொழிலையும் கற்றவர் என்பதால், தஞ்சையில் லாலி அச்சகத்தை நிறுவினார். மின்விசையால் அங்கு இயங்கிய முதல் அச்சகம் இதுவே.

தஞ்சைக் கந்தசாமிப் பிள்ளை என்பவரிடம் சோதிடம் கற்றார். சோதிட விமரிசினி என்ற சபையை ஏற்படுத்தி அதற்குத் தலைமை வகித்துத் திறம்பட நடத்தினார். இசைக் கலைக்கும் சோதிடக் கலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது பண்டிதர் கருத்து.

பரோடா மகாராஜாவைக் கொண்டு 1916ஆம் ஆண்டு பரோடாவிலும் ஓர் இசை மாநாட்டினை மார்ச் 20 முதல் 24 வரை நடத்தினார். கர்நாடக இசையிலும் இந்துஸ்தானி இசையிலும் வல்ல பேரறிஞர்கள் பலர் கலந்துகொண்ட நிகழ்ச்சி இது. இதில் ஐரோப்பிய இசையியலோடு தமிழ் இசையியலை ஒப்பிட்டுக் கட்டுரை வழங்கினார். இம்மாநாட்டில், இவரது புதல்வியர் கனகவல்லி, மரகதவல்லி இருவரும் 24 சுரங்களை வீணையில் வாசித்துக் காட்டிப் பண்டிதரின் கருத்தை உறுதிசெய்தார்கள். இந்த 24 சுர முறையை பரோடா திவான் மட்டுமின்றி, வீணை சேஷண்ணா, எல். முத்தையா பாகவதர் போன்றவர் ஏற்றுப் பெரிதும் பாராட்டினர். (கர்நாடக இசையில் 22 சுரவரிசை முறையே கையாளப்படுகிறது.)

வாழ்க்கையின் முதற்பகுதியை மருத்துவ ஆய்வுக்கும், இரண்டாம் பகுதியை இசை ஆய்வுக்கும் அர்ப்பணித்த பண்டிதர், தமது 59ஆம் வயதில் 1918 ஆகஸ்டு 31 அன்று இயற்கை எய்தினார்.

தாம் வாழ்ந்த காலத்தின் ஆட்சியாளர்கள், அறிஞர்கள், புலவர்கள், இசைவல்லுநர்கள் பலரோடும் நெருங்கிய தொடர்பும் கடிதப் போக்குவரத்தும் வைத்திருந்தார். சோழ வந்தான் அரசஞ் சண்முகனார், உ. வே. சாமிநாதையர், ஹரிஹர பாரதி, ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர், வீணை வேங்கட ரமணதாசர், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர், தஞ்சை எல். உலகநாத பிள்ளை, மு. இராகவையங்கார், ஜே. எஸ். சாண்ட்லர், செல்வக் கேசவராயர், திரு. வி. க., போன்றோர் அவருடன் தொடர்பு கொண்டிருந்த சிலர்.

இசை ஆய்வு முன்னோடி

சமஸ்கிருதத்தையும் விஞ்சிய செம்மொழி என்று தலைமைபூண்டு உலாவரவேண்டிய இந்தியாவின் மிகப்பழைய மொழியாகிய தமிழ், தன்னிடம் எத்தனையோ வளமிருந்தும் அயலார் ஆட்சிக் காரணத்தாலும் ஆதரவின்மையாலும் மெலிந்து சூம்பிக் காணப்படுகிறது. இதற்கு நல்ல உதாரணம் தமிழிசை.

தமிழில் தொல்காப்பியம் சங்க இலக்கியம் தொட்டு இசையிலக்கணம் விரிவாகக் காணப்படுகிறது. சங்க இலக்கியத்திலும், சிலப்பதிகாரத்திலும், நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடல்களிலும் ஏராளமான பண்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் இன்றைக்குத் தமிழிலே பாடுவதென்பது இன்னும் அரசியல் சார்ந்த விவகாரமாகவும் ஒரு சாதிக்கு எதிரான விவகாரமாகவுமே பார்க்கப்படுகின்ற நிலை பரிதாபத்திற்குரியது. மிகக் குறைந்த அளவே இசையிலக்கணம் தெரிந்த ஒருவனுக்கும்கூட, சிலப்பதிகாரத்திலும் சங்க இலக்கியத்திலும் வரும் இசைக்குறிப்புகளைப் படித்தால் அக்காலத் தமிழிசைதான் இன்றைய கர்நாடக, இந்துஸ்தானி இசைகளுக்கு முன்னோடி என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆயினும் இந்த எளிய விஷயத்தைச் சொல்வதற்கும், தமிழ்நாட்டில் தமிழில் பாடுவதுதான் முறை என்பதை வலியுறுத்துவதற்கும் 1930கள் தொடங்கி ஒரு பெரிய இயக்கமே (தமிழிசை இயக்கம்) தேவைப்பட்டிருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் இசைப்பகுதிகளைத் தமிழ்ப் புலவர்கள் பல நூற்றாண்டுகளாக ஆராயவில்லை. 14ஆம் நூற்றாண்டு முதல் தெலுங்கு, சமஸ்கிருதம் முதலிய மொழிகள் தமிழ் நாட்டில் வளர்ந்தனவே ஒழிய தமிழ் வளரவில்லை. தெலுங்கர் ஆட்சியில் வேறென்ன நடக்கும்? தமிழில் இசையே கிடையாது என்று சொல்லும் நிலை நானூறாண்டுகளில் ஏற்பட்டுவிட்டது. இதுபற்றி ஆபிரகாம் பண்டிதர் எழுதுகிறார்:

சங்கீதத்திற்கு சங்கீத ரத்னாகரர் எழுதிய நூலே முதல் நூல் என்றும், அது சிறந்த தென்றும், தமிழ் மக்களுக்குச் சங்கீதமே தெரியாதென்றும் சொல்லுகிறார்கள்.

(கருணாமிர்த சாகரம், ப.916)

14ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான காலம், தமிழிசை அறவே இல்லாத இருண்ட காலம் என்றால், இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி முதல் இன்றுவரை போராட்டக்காலமாகவே இருக்கிறது. வேறெந்த நாட்டிலாவது, வேறெந்த மொழியிலாவது அந்தந்த மொழியில் பாடக்கூடாது என்று சொல்ல முடியுமா? கேட்டாலே வயிறு வலிக்கச் சிரிப்பார்கள். நமக்கு உண்மையிலேயே இது வயிற்றுவலி.

பண்டைக்காலம் முதல் வழங்கிவந்த தமிழிசையை சாரங்கதேவர் என்னும் ஆசிரியர் படித்துப் பின்பற்றி, அதன் வாயிலாக இந்துஸ்தானி இசையை விளக்க, சங்கீத ரத்னாகரம் என்னும் நூலை எழுதினார். அவர் 14ஆம் நூற்றாண்டினர். காஷ்மீரிகளும், தென்னிந்தியரும் ஒன்றுபோல அவரைத் தங்களைச் சேர்ந்தவர் என்கிறார்கள். (க.சா.ப. 1088). பிறகு வந்த வேங்கடமகி என்பார் அந்நூல் கருத்துகளைக் கர்நாடக இசைக்குப் பொருந்துமாறு செய்தார். பிறகுவந்த புரந்தரதாசர்தான் தமிழிசையையே கர்நாடக இசை என்று சொல்லிப் பிரபலப்படுத்தினார். மேலும் மாயாமாளவ கௌள இராகத்தை அடிப்படையாக வைத்து ஸ்வராவளி, ஜண்டை, தாட்டு, அலங்கார வரிசைகளைக் கற்பிக்கும் இன்றைய முறையை உருவாக்கிய வரும் அவரே.

சிலப்பதிகார இசை நுணுக்கங்களை முதலில் ஆராய்ந்தவர் ஆபிரகாம் பண்டிதர். இசை நுணுக்கங்களை ஆழமாக அறியவேண்டுமானால் வீணை, புல்லாங்குழல் இவற்றுள் ஒன்றையேனும் திறம்பட இசைக்கும் அறிவு தேவை என்பதை அறிந்தார். தஞ்சை அரண்மனையில் வீணை பயின்றார். பின்னர் தம் மகள்களுக்கும் வீணை ஆசிரியர்களை அமர்த்தினார். பல நீண்ட ஆண்டுகள் இரவுபகலாக இசைநூல்களைக் கற்றும், கலந்துரையாடியும், பழைய இசைப்பனுவல்களைத் திரட்டியும் உருவாக்கிய ஆய்வு நூலுக்குத் தமது அருட்குருவாகிய கருணானந்தர் பெயரால், கருணாமிர்த சாகரம் என்றே பெயரிட்டார். 1917இல் அந்நூல் வெளியாயிற்று.

கருணாமிர்த சாகரம்

தமிழிசை இயக்கத்திற்கு உத்வேகம் அளித்த ஒரே நூல், கருணாமிர்த சாகரம்தான். 1940களில்தான் யாழ்நூல் அரங்கேற்றப்பட்டது. அதற்குப் பிறகு குடந்தை ப. சுந்தரேசன், வெள்ளை வாரணன் ஆகியோர் யாழ்நூல் கருத்துகளைப் பரப்பிவந்தனர். எம். எம். தண்டபாணி தேசிகர் முதலியோர் தமிழில் மட்டுமே பாடும் உறுதிபூண்டு அதைச் செயல்படுத்தியதால், அவர்கள் பிற வித்வான்களால் ஏற்றுக்கொள்ளப்படவோ புகழப்படவோ இல்லை. ஒரு காலத்தில் தியாகராஜ பாகவதர், எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள் போன்றவர்களால் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் வளர்ந்துவந்த தமிழிசை இப்போது அடியோடு இல்லாமல் போய்விட்டது. ஒரே லட்சிய வேகத்தோடு தமிழிசைப்பாடல்கள் எழுதிய இலக்குமணப் பிள்ளை, மதுரகவி பாஸ்கர தாஸ், பாபநாசம் சிவன் போன்றோர் இன்று இல்லை. இவ்வளவெல்லாம் இருந்தாலும் தமிழிசை உணர்வு ஓரளவு பரவுவதற்குக் காரணமாக, தமிழிசை இலக்கணம் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது. எஸ். இராமநாதனுடைய Music in Cilappathikaram (அவரது முனைவர் பட்ட ஆய்வேடு) 1960களில் வெளிவந்தது. இவற்றின் காரணமாக தலித் மக்கள் தனி இசைவிழா நடத்துகின்ற நிலை வரை இன்று வளர்ந்துள்ளது. பிறகு வீ.ப.கா. சுந்தரம், சேலம் ஜெயலட்சுமி போன்றோர் தமிழிசையிலும் அதன் இலக்கணத்திலும ஆர்வம் காட்டி வந்தனர். இவை எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாக இருந்த நூல் கருணாமிர்த சாகரம்.

கருணாமிர்த சாகரம் என்பது ஆபிரகாம் பண்டிதரின் வாழ்க்கைப் பணிநூல் (magnum opus). இது ஏ4 அளவிலான தாள் அமைப்பில் 1346 பக்கங்கள் கொண்டது. நான்கு பாகங்களாக அமைந்தது இப்பெருநூல். இந்நூல் சுருதிகளைப் பற்றியது என்று குறிப்பிடுகிறார் பண்டிதர்.

பன்முக ஆற்றல் பெற்றவரும் இசைத்துறையில் ஆழக்கால் பதித்தவரும் தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் தமது 71ஆம் வயதில் 31.8.1919இல் தனது இசைத் துடிப்பை நிறுத்திக் கொண்டார்.

நன்றி :

நலக்குறிப்புகள்

நீங்கள் எந்த உணவை சாப்பிட்டாலும் எப்படி சாப்பிட்டாலும் சோம்பு தண்ணீரை மட்டும் குடித்து பாருங்கள். எப்படியாப்பட்ட தொங்கும் தொப்பையும்,உடல் எடையும் ஒரே மாதத்தில் குறையும்.மேலும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமையும்.சோம்பு நீரை தயாரிக்கும் முறையை பற்றியும் ,நீங்கள் அறிந்திராத சோம்பு நீரை பற்றிய நன்மைகள் ஏன அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்

சோம்பு நீர் தயாரிக்கும் முறை:

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.பின்னர் கொதிக்கும் தண்ணீரை இறக்கி அதில் ஒன்று அல்லது இரண்டு டீ ஸ்பூன் சோம்பை சேர்த்து 10 நிமிடம் வரை மூடி வைத்துவிட வேண்டும்.பின்னர் அதன் பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அவ்வளவுதாங்க ஒரு பதினைந்து நிமிடத்தில் இந்த சோம்பு நீரை நாம் தயாரித்து விடலாம்.வருஷக்கணக்கில் உடல் எடையை குறைப்பதற்கும், மாதவிடாய் பிரச்சனையை தீர்ப்பதற்கும்,நாம் போகாத மருத்துவர் இருந்திருக்க முடியாது.வாங்க இதை எவ்வாறு குடிக்க வேண்டும் இதில் இருக்கும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சோம்பு நீரின் பயன்கள்!

ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது.
ஏனென்றால் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல் சோம்பு தண்ணீர் குடித்தால் மிக எளிதாக,நாள்பட்ட உடல் பருமனை குறைக்கும்.

சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளை எரித்து எளிதில் உடல் எடையை குறைக்க உதவுகிறது மேலும் வயிற்றை சுற்றி உள்ள தேவையற்ற சதைப்பகுதி தொப்பையை கரைந்து சரியான உடல் அமைப்பைத் தரும்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, அளவுக்கு அதிகமாக பசி ஏற்படும்.அதனை குறைப்பதற்கு பலரும் கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கி போடுவார்கள் ஆனால் சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால் அது இயற்கையிலேயே பசியை அடக்கும் தன்மை உடையது
கல்லீரல் மற்றும் கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கியமாக மெலடோனின் என்ற மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும் இதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம்.

காலையில் காபி டீ சாப்பிடுவதற்கு பதிலாக சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

மேலும் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் செரிமான தன்மையை ஊக்குவிக்கும்.

தற்போதைய காலத்தில் சுகாதாரமற்ற உணவு காற்று மாசுபாடு காஸ்மெடிக் பொருட்கள் என பல வழிகளில் நம் உடலில் அதிக அளவு நச்சுத்தன்மை வாய்ந்த டாக்ஸின்கள் நுழைகிறது. ஆனால் சோம்பு தண்ணீர் குடித்து வந்தால் அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் நாள்பட்ட மாதவிடாய் பிரச்சனையை இறுதியில் குறைக்கும் சக்தி இந்த சோம்பு தண்ணீருக்கு உள்ளது.

சோம்பு நிறை குடிக்கும் நேரங்கள்.

வெதுவெதுப்பான நிலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு குடிக்க வேண்டும்

தினமும் காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் அந்த நீரை குடிக்கலாம்.

அதேபோல் மூன்று வேளை சாப்பிட்ட பிறகும் இந்த சோம்பு தண்ணீரைக் குடித்து வரலாம்.

நீங்கள் ஏதோ ஒரு முறையில் இந்த சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால் ஒரே மாதத்தில் எப்படியாப்பட்ட தொப்பையும் குறைந்து உங்கள் உடல் அழகான அமைப்பை பெரும்.மேலும் மேலே கூறிய அனைத்து பிரச்சினைகளும் விரைவில் குணமாகும்.

நன்றி :

30 ஆக., 2020

அபூர்வமான படம் !

கல்லிலே கலைவண்ணம்

இயற்கையின் ஜாலம்

எங்கள் தமிழகம் : கடல் ஆமை சிற்பங்கள்

தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள்
உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?'

பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில்
போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?
தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த
தொழில் நுட்பம்!

தன் நுண்ணறிவால்
நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள்
நிறைய.
கடல் ஆமைகள் கடலில் இருக்கும்
நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ
வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும்
சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல்
போக்குவரத்தை நீரின்
ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.
இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல்
தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின்
கடல்படையும் போகமுடியாத பல
இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்!

மத்திய
தரைக்கடல், தென்ப்கிழக்கு ஆசிய நாடுகளில் பல
வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்.
பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில்
பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை
அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன்
மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில்
ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.
உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா,
கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ்
மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர்.
கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார்.
சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில்
இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில்
பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள்
அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான்.
போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான்
உண்மை!

கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன்
தொழில்நுட்பம் தான் . அதாவது, கொலம்பஸ்
கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட
வழித்தடமும் ஒன்றுதான்!

ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க
இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும்
ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம்
தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர்.
விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம்
உண்டு. தான் பிறந்த இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும்.
தமிழ்கத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு. இதில்
பல ரகசியங்கள் இருக்கும் போல!

**பகிர்வு**      நன்றி.


நன்றி : திரு. வெங்கிட்டு சாமி,  புதிய தகவல்கள் மற்றும் முகநூல்.

தமிழக வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள் : விந்தை மனிதர் ஜி.டி.நாயுடு

அவர் இந்தியாவின் எடிசன் இல்லை... உலகின் ஒரே ஜி.டி.நாயுடு!

உலகின் பல முக்கிய கண்டுபிடிப்புகளை இந்திய விஞ்ஞானிகள் கொடுத்திருக்கிறார்கள். அதில், கோவையைச் சேர்ந்த ஜி.டி. நாயுடுவுக்கு அதிக பங்குள்ளது. 

ஒரு மனிதர், ஒரு துறையில் கில்லியாக இருக்கலாம். ஆனால், ஜி.டி.நாயுடு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ், விவசாயம் என்று பல துறைகளில் கில்லியாக இருந்தார்.

ஜி.டி.நாயுடு
உலக அளவில் மிக முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரராக இருந்தாலும், இதற்கான அங்கீகாரம் ஜி.டி.நாயுடுவுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி, தவிர்க்க முடியாத சக்தியாக வந்தார்
 ஜி.டி.நாயுடு.

 ஜி.டி.நாயுடுவின் பல கண்டுபிடிப்புகளில், முக்கியமானவற்றை இங்கே பார்க்கலாம்.

ஷேவிங் ரேசர்

இரண்டாம் உலகப் போர் சமயத்தில், ஜி.டி.நாயுடு ஐரோப்பா செல்கிறார். அங்கு பிளேடுகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. ஷேவிங்குக்கு ஒரே பிளேடைத்தான் பயன்படுத்த வேண்டிய நிலை. ஒரு பேக்கரிக்குச் செல்கிறார்.

 அங்கு ரொட்டித்துண்டுகளை வித்தியாசமாக வெட்டுவதை பார்க்கிறார் ஜி.டி.நாயுடு. உடனடியாக ஒரு பொம்மை காரை வாங்கி, அதன் மோட்டாரை மட்டும் கழட்டி, பிளேடில் பயன்படுத்திப் பார்க்கிறார். 

சக்சஸ் ஆகிறது. நண்பர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு. ஐரோப்பாவில் காப்புரிமை கிடைக்கிறது. லண்டனில் விற்பனைக்கு வருகிறது. முதல் மாதத்திலேயே 7,500 ரேசர்கள் விற்பனையானது.

ஜுசர்

ஜி.டி.நாயுடு ஒருமுறை சிக்காகோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறார். அங்கு, ஆரஞ்ச் ஜுஸில் இருக்கும் வைட்டமின்கள் குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்த ஒரு பேராசிரியரை சந்தித்தார். 

ஆராய்ச்சிக்காக, அந்தப் பேராசிரியர் ஒரு ஜுசரும் தயாரித்துள்ளார். ஆனால், அதில் ஜுஸ் தயாரிக்கும் போது, ஆரஞ்சின் விதைகள் வீணாவதுடன், சுவையும் மாறுவதாகக் கூறியுள்ளார். சிறிது நேரம் அதுகுறித்து ஆராய்ச்சி செய்த ஜி.டி.நாயுடு, சிம்பிள் காய்ன் ஸ்ப்ரிங் என்ற ஐடியாவை கொடுக்கிறார். 

அதில் ஸ்ப்ரிங் பொருத்தியவுடன், பிரச்னையும் சரியாகிவிட்டது. ஜுசரும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.

உருளைக்கிழங்கு தோல் எடுக்கும் கருவி

உருளைக் கிழங்கு தோல் எடுப்பதற்கு அதிக நேரம் எடுக்கும். ஜி.டி நாயுடு கண்டுபிடித்துள்ள இந்தக் கருவி, உருளைக் கிழங்கில் இருக்கும் தோலை மட்டும் தனியாக எடுத்துவிடும். இதை 1940-களிலேயே அவர் கண்டுபிடித்துவிட்டார்.

கீ வால் கிளாக் (Key Wall Clock)

அந்தக் காலத்தில் இருக்கும் வால் கிளாக்குகளுக்கு, தினமும் கீ கொடுக்க வேண்டும். ஆனால், 1950-ம் ஆண்டு வாரத்தில் இரண்டு முறை கீ கொடுத்தால் இயங்கும் வால் கிளாக்கைக் கண்டுபிடித்தார் ஜி.டி.நாயுடு.

ரேடியோகிராம்

ஜி.டி.நாயுடுவின் யூ.எம்.எஸ் ஃபேக்டரியில் ரேடியோகிராம் தயாரிக்கப்பட்டது. 6 Valves, 4 Band, 4 ஸ்பீக்கர் வசதிகள் இதில் உள்ளன. மேலும்,10 ரெக்காடர்களை மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி கொண்ட ரேடியோகிராமை இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்தியது ஜி.டி.நாயுடுதான்.

 பலவகையான ரேடியோகிராம்களை, அவர் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

தமிழ் டயல் ரேடியோ (Tamil dail radio)

தமிழ் டயல் வைத்த ரேடியோவை முதன்முதலாக அறிமுகப்படுத்தியதும் ஜி.டி.நாயுடுதான்.

கட்டட கலவை

கட்டடங்கள் வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக 1950-ம் ஆண்டு, அரிசி உமி மற்றும் சிமென்ட்டை கலந்து ஒரு கலவையை உருவாக்கினார் ஜி.டி.நாயுடு. கட்டடங்களுக்கு அதிக வலுவை கொடுக்கும் அந்தக் கலவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

எலக்ட்ரிக் மோட்டார்

1937-ம் ஆண்டு இந்தியாவில் முதல்முதலாக எலக்ட்ரிக் மோட்டாரை தயாரித்து அறிமுகப்படுத்தினார் ஜி.டி.நாயுடு. விவசாயம் மற்றும் தொழில்துறையினருக்கு இது மிகவும் உதவியாக இருந்தது.

ஏழைகளுக்கு வீடுகள்

அனைத்து ஏழை மக்களுக்கும் ஓர் சொந்த வீடு என்பது ஜி.டி.நாயுடுவின் கனவுத்திட்டம். 

இதற்காக 1950-ம் ஆண்டு ஒரு டிஸைனை உருவாக்கினார். சிங்கிள் பெட் ரூம் ரூ.750, டபுள் பெட் ரூம் ரூ.1,100 வீடுகள் கட்டுவதற்கான, திட்ட வரைவை அரசுக்கு அனுப்பினார். இந்த வீடுகளை ஒரே நாளில் கட்டி முடிப்பதற்கான திட்டத்தையும் அவர் வகுத்திருந்தார்.

இவை மட்டுமல்ல, கால்குலேட்டர், பிளேடு, ஆட்டோமெடிக் டிக்கெட் மெஷின் என்று ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆட்டோமெடிக் டிக்கெட் மெஷின்

ஜி.டி.நாயுடு அறக்கட்டளை பொதுமேலாளர் சுரேஷ் நாயுடு, "ஒரு நபருக்குள் இத்தனை விஷயங்கள் எப்படி இருக்கு முடியும்? என்று நான் அவரை நினைத்து ஆச்சர்யப்படாத நாளே இல்லை. ஜி.டி.நாயுடு 4-ம் வகுப்பு வரைதான் படித்தார். 

தமிழ் மீடியம்தான். அப்படியிருந்தும், வெளிநாடுகளில் ஆங்கிலத்தில் இருந்த தொழில்நுட்பங்களை, நமது ஊருக்குத் தகுந்ததுபோல மாற்றி அறிமுகப்படுத்தினார்.

ஜி.டி.நாயுடுவுக்கு 18 வயது இருக்கும்போது, ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவர் பைக்கில் செல்வதைப் பார்க்கிறார். அதைப் பார்த்தவுடன், இந்த வண்டியைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஜி.டி.நாயுடுவுக்கு வருகிறது. ஹோட்டலில் பணிக்குச் சேர்கிறார்.

அந்த வருமானத்தில் பணத்தைச் சேமிக்கிறார். அதே ஐரோப்பா நபரிடம் சென்று பைக்கை வாங்குகிறார். பைக் வாங்கியவுடன் அவர் செய்த முதல் வேலை, அந்த பைக்கை அக்கு வேறு, ஆணி வேராகப் பிரிக்கிறார். அங்குதான் ஆட்டோ மொபைல்ஸ் பற்றிய ஆர்வம் தொடங்கியது.

அதன் பிறகு, ஸ்பின்னிங் மில், போக்குவரத்து என்று பலதுறைகளில் இறங்கினார். ஜி.டி.நாயுடு தொடங்கிய டிரான்ஸ்போர்டின் முதல் பேருந்தில், நடத்துனர், ஓட்டுநர் எல்லாமே அவர்தான். பிறகு அது, 600 பேருந்துகளுடன், யுனைட்டட் மோட்டர் சர்வீஸாக வளர்ந்தது. ஒருகட்டத்தில், ஜி.டி.நாயுடுவுக்குக் கீழ் 62 நிறுவனங்கள் இயங்கின. ஜி.டி.நாயுடு சித்த மருத்துவராகவும் இருந்தார்.

பல மருந்துகளை ஆவணப்படுத்தியது, தயாரித்தது என்று சித்தாவில் ஜி.டி.நாயுடுவின் பணிகள் மிக முக்கியமானவை. 

கோவை மிகப்பெரிய தொழில் நகரமாக இருக்க ஜி.டி.நாயுடு முக்கிய காரணம். அவரின் உழைப்பின் மூலம் பல விஷயங்கள் நமக்கு வரமாகக் கிடைத்துள்ளன" என்றார்.

கோவை, அவினாசி சாலையில் அவர் நினைவாக, ஜி.டி.நாயுடு மியூசியம் இருக்கிறது.

 தினசரி பள்ளி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என்று பலர் வந்து செல்லும் மியூசியத்தில், ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாமல், பல விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.

ஜி.டி.நாயுடு மியூசியம்

தற்போதுதான், அங்கு ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளுக்கு என்று ஓர் தனி கேலரி உருவாகி வருகிறது. அந்த கேலரியில் ஜி.டி.நாயுடுவின் அனைத்துப் படைப்புகளையும் காணலாம்.

ஜி.டி.நாயுடுவை இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் என்றழைப்பதுண்டு. ஆனால், அவர் உலகின் ஒரே ஒரு ஜி.டி.நாயுடு. பிரச்னைகளைக் கண்டறிந்து, அதற்குத் தீர்வு காண்பது ஜி.டி.நாயுடுவுக்கு மிகவும் பிடிக்குமாம்.

ஜி.டி.நாயுடு கண்டுபிடித்த பிளேடு

அவர் ஒரு Problem solver.. உலகில் உள்ள பல மில்லியன் டெக்கீஸ்க்கு, டெக் குரு, பாஸ் எல்லாமே ஜி.டி.நாயுடுதான்.💖🙏💖

நூல்மயம் : பறந்துபோன பக்கங்கள் : கோமல் சுவாமிநாதன்


ஸ்டேஜ் மற்றும் தி.ஜானகிராமன் அவர்களை பற்றிய நினைவுகள் - கோமல் சுவாமிநாதனின் 'பறந்து போன பக்கங்கள்' - சுய அனுபவ கட்டுரைகளிலிருந்து

1957 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சேவாஸ்டேஜ் நாடகக் கல்வி நிலையப் பள்ளி துவக்கப்பட்டது. அன்று ஆகஸ்ட் 15-ம் தேதி. பத்தாவது சுதந்திர நாளை எஸ்.வி.சகஸ்ரநாமம் வீட்டு மாடியில் கொண்டாடத் திட்டமிட்டிருந்தோம். அதில் இன்னொரு விசேஷம் . அன்று முதல் சுதந்திரப் போராட்ட நூற்றாண்டு விழாவாகவும் கொண்டாடப்பட்டது. கொண்டாடியவர்கள் சேவாஸ்டேஜ்  நாடகக் கல்வி நிலைய மாணவர்கள் 26 பேர்.
ஆரம்ப விழாவை துவக்கி வைத்தவர், அன்றைக்கு கல்வி மந்திரியாக இருந்த சி.சுப்பிரமணியம். துவக்க விழா அன்று தி.ஜானகிராமன் எழுதிய “ஊரும் தேரும்” என்ற நாடகமும் அரங்கேற்றம். இருபத்தாறு  மாணவர்களுக்கும் அந்த நாடகத்தைப் பற்றி விமரிசனம் செய்ய வேண்டுமென்று பயிற்சி வைக்கப்பட்டது. நாடக பாத்திரங்களையும், நடிப்புத் திறனையும் பற்றி நான் பாரபட்ச மற்ற முறையில் விமரிசனம் செய்தேன்.  என் விமரிசனம் எஸ்.வி.சகஸ்ரநாமத்திற்கும், தி.ஜானகிராமனுக்கும் ரொம்ப பிடித்திருந்தது. 
எங்கள் ஆசிரியர் பி.எஸ். ராமையா உற்சாகத்தின் சிகரம். பி.எஸ்.ராமையா பெரிய சிறுகதை ஆசிரியர் என்பதை விட அவர் மெஹ்பூபின் “ஆன்” படத்திற்கு தமிழ் வசனம் எழுதியவர் என்று நன்றாக அறிந்திருந்தேன்.  

இன்னொரு ஆசிரியர் என்.வி. ராஜாமணி. இவரும் நாடக ஆசிரியர். புதுடில்லி தேசிய நாடகப்பள்ளியின் தாயான ஏஷியன் தியேட்டர் இன்ஸ்டிடியூட்டில் படித்து பின்னர் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் நாடகத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். எஸ்.வி. சஹஸ்ரநாமத்தின் மருமகன்.

மூன்றாவது ஆசிரியர் சிற்பி கலாசாகரம் ராஜகோபால்... கலாக்ஷேத்ராவில் பயின்று நடனக்கலையில் தேர்ச்சி பெற்ற பின்னர் சிற்பி ஆனவர். தஞ்சாவூர்காரர். நானும் தஞ்சாவூர்காரன் என்றவுடன் என் கூட ரொம்ப அபிமானமாகப் பழகினார்.
இவர்களைத் தவிர ஏறத்தாழ தினம் அங்கு வந்து போகிறவர் தி.ஜானகிராமன். அப்பொழுது அவர் மயிலாப்பூர் ராக்கியப்ப முதலி தெருவில் இருந்தார். சகஸ்ரநாமம் குழுவிற்கு ‘நாலு வேலி நிலம்’ நாடகம் எழுதிக் கொண்டிருந்தார். முன்னரே போட்ட ‘ஊரும் தேரும்’ நாடகத்துடன் இன்னொரு கதையையும் இணைத்து பெரிய நாடகமாக எழுதும் முயற்சி அது. ஜானகிராமனுடைய ‘மோகமுள்’ நாவலை சி.சு. செல்லப்பா மிகப் புகழ்ந்து பேசுவார். ஆனால் அதன் வர்ணனைகள் கொஞ்சம் பச்சையாக ஆபாசமாக இருப்பதாக பி. எஸ். ராமையாவின் எண்ணம். இது பற்றி ஒரு நாள் சேவாஸ்டேஜ் மாடியில் சர்ச்சை வந்தது. ஜானகிராமன் சொன்னார் “இருக்கட்டுமேய்யா. ஒரு வீடு கட்டுறோம், வீடு முழுக்க பூஜை ரூமா இருக்க முடியுமா? படுக்கை அறையும் வேணும்... மனுஷன் ரிலாக்ஸ் செய்துக்க லாவட்டரியும் வேணும். பூஜை ரூம் இல்லாம வீட்டுல குடியிருக்கலாம், லாவட்டரி இல்லாமல் குடியிருக்க முடியுமா சொல்லுங்கோ. அதுனால அந்த ஆபாசம்னு நீங்க சொல்றதெல்லாம் லாவட்டரி மாதிரின்னு வச்சுக்கோங்கோ” என்பார். ராமையா விட மாட்டார். “லாவட்டரி வேண்டியது தான். ஆனா அது வீட்டு ஒதுக்குப்புறமா இருக்கணும், நடுக் கூடத்துல இருக்கப்படாது. நடுக்கூடம் மாதிரி இருக்கிற ஒரு இடத்துல வந்து இந்த “பச்சை”யை டபக்குன்னு உள்ள விட்டு விடுகிறீரே” என்பார். 

ராமையாவின் ‘மல்லியம் மங்களம்’ நாடகத்தைப் பார்த்து விட்டு தி.ஜானகிராமன் அவரிடம் கூறுவார் “உம்மை மாதிரி பார்க்கிறவங்களைக் கதற அடிச்சு பிழியப் பிழிய அழவெச்சு வெளிய அனுப்ப என்னால் முடியாதுய்யா” என்பார். ஆனால் இருவருக்கும் உள்ள அன்பும் மரியாதையும் துளியளவும் குறையாது என்பதை கண்ட போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அந்தக் காலத்து  எழுத்தாளர்களிடம் விமரிசனம் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியாக இல்லாதிருந்ததை நான் கண்டேன்.
சுதந்திர தினம் என்று ஆரம்பித்தேனல்லவா? அன்றைய சுதந்திர தினம் தி.ஜானகிராமன் தலைமையில் கொண்டாடப்பட்டது. “எந்த கலைகளிலும் கலைக்கலை, வியாபாரக்கலை” என்று இரண்டு கலைகள் வேரூன்றி விட்டன. வியாபாரக்கலையைப் பற்றி பேசுபவர்கள் மனிதடைய ரசனைக்குத் தக்கவாறு கலை இருக்க வேண்டுமென்று கூறுகிறார்கள். மக்கள் விரும்புகிறார்கள் எனவே அதை தருகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் கலைக்கலை ஒன்று தான். அது தான் மக்களை மேம்படுத்தும் கலை” என்றார் தி. ஜா. 

கே.எஸ். கோபாலகிருஷ்ணனுடன் இருந்து சினிமா கற்றுக்கொண்டிருந்தேன் நான். அப்போது ஆல் இந்தியா ரேடியோவில் என் குரல் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லியில் செய்தி வாசிப்பவராக ரூ.300 சம்பளத்தில் ஆர்டர் வந்தது. எனக்கு ஒரே குழப்பம். “செய்திகள் வாசிப்பது பூர்ணம்  விஸ்வதாதன்”  என்பதுபோல, “செய்திகள் வாசிப்பது கோமல் சுவாமிநாதன்” என்று என் குரலும் பெயரும் தமிழ்கூறு நல்லுலகம் முழுவதும் ஒலிக்குமே என்ற ஆசை. ஆனால் சினிமா என்ற கவர்ச்சிக் கன்னியை விடவும் மனமில்லை. டைட்டில் கார்டு போடும்போது என் பெயர் வராதா என்று எத்தனை நாள் ஏங்கி இருக்கிறேன்.
ரேடியோவா... சினிமாவா.. யார் எனக்கு வழிகாட்டுவார்கள்!
ஒரு நபர் எனக்குத் தென்பட்டார். அவர் தான் சரியான யோசனை சொல்வார். மயிலாப்பூரிலிருந்த அவர் வீட்டை நோக்கிப் போனேன், "கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுடன் நான் சேர்ந்திருக்கிறேன். சினிமா கற்றுக்கொள்கிறேன். இப்போது ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக வேலை கிடைத்திருக்கிறது, இதற்கு டில்லி செல்ல வேண்டும், நான் எதைத் தேர்ந்தெடுக்கட்டும்?” என்று கேட்டேன். அவர் நிதானமாக யோசனை செய்துவிட்டுச் சொன்னார், ரேடியோவில் போய்ச் சேர்ந்தாயானால் ஒழுங்காக மாசச் சம்பளம் வரும், பதவி உயரும், சாப்பாட்டுக்குக் கஷ்டமில்லாமல் காலந்தள்ளலாம். ஆனால் நீ ஏதோ எழுத்தாளனாக வேண்டும், நாடகாசிரியனாக வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறாயே. அதை எல்லாம் மறந்துவிடு. ரேடியோவிற்குள் போனால் நீ சாதாரண சிப்பந்தியாகி உன் மூளை மரத்துவிடும். உன் கற்பனை வறண்டுவிடும் ஒரு சிலர் தான் அதிலிருந்து தப்ப முடியும்.” 
 "நீங்கள் ரேடியோவில் தானே வேலை செய்கிறீர்கள்?"
 “ஆமாம். உண்மை தான். மாச வருமானத்தைப் பற்றிக் கவலைப் படாமல் இருக்கிறேன். ஆனால் ராமையாவைப் பார், அவர் மாதிரி நான் இருந்தால் இன்னும் எத்தனையோ சாதிப்பேன், சுவர்மெண்ட் ஆபீசுகளில் மூளை வேலை செய்யாது என்பது தான் உண்மை.”
"அப்போது என்ன சொல்கிறீர்கள்?"
 "நீ தான் தீர்மானிக்க வேண்டும். மாசச் சம்பளத்தில் போய் கவர்மெண்ட் ஆபிசில் மாட்டிக்கொள்வதைவிட சுதந்திரமாக நீ நினைத்ததைச் செய்ய இப்போது வாய்ப்பு உண்டு. ஆனால் வாழ்க்கை என்பது அன்னாடங்காச்சியாகத் தான் இருக்கும். பல சமயம் உஞ்சவிருத்தி வாங்க வேண்டியிருக்கும். ஆனால் சுதந்திரமாய் இருக்க முடியும்”
அன்றே ஆல் இந்தியா ரேடியோவிற்கு நான் வேலைக்குச் சேரவில்லை என்று எழுதிப்போட்டு விட்டேன். இந்த யோசனையை எனக்குக் கூறியவர் வேறு யாருமில்லை, தி.ஜானகிராமன்.
தி.ஜானகிராமன் பேச்சைக் கேட்டுக்கொண்டு என் வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டுவிட்டேனோ என்று ஒரு விநாடிகூட வருத்தியதில்லை. பலமுறை அவருக்கு நன்றி சொன்ன நினைவுகள் தான் அதிகம்.
வி.எச்.எஸ். ஆஸ்பத்திரியில் சாதாரணமாக அட்மிட் ஆகி, சிக்கல் அதிகமாகி, உயிர் பிரிந்து, திருவான்மியூரில் அவர் வீட்டில் கிடத்தப்பட்ட அவர் உருவத்தைக் கண்டு கடைசி முறையாகவும் நன்றி சொன்னேன்.

(கீழே புகைப்படம் - இடமிருந்து வலம் - சிற்பி கலாசாகரம் ராஜகோபால், கோமல் சுவாமிநாதன், தி.ஜானகிராமன், சுதேசமித்ரன் எடிட்டர் C. ஶ்ரீனிவாசன்). புகைப்படத்தை எனக்கு அனுப்பிய தி.ஜாவின் மகள் உமா சங்கரி அவர்களுக்கு நன்றி.


நன்றி : Ms தாரிணி கோமல் மற்றும் முகநூல்.

நீங்கள் கழுகா காகமா ?

சிரிப்புத்தான் வருகுதையா

இன்றைய குறள்


நண்பர் ஆர்.எம்.ஆர்.ராஜசேகரன் அவர்களின் கருத்துப் பதிவு:

இன்றைய குறள்
---------------

உதடுகள் ஒட்டாத குறள் இது ஒன்று மட்டும் அல்ல. "ம"கரம் அதன் உயிர்மெய் எழுத்துக்களும், "ப"கரம் அதன் உயிர்மெய் எழுத்துக்கள் இல்லாத குறள் அனைத்தும் உதடுகள் ஒட்டாது. அதன்படி மொத்தம் 24 குறள்கள். இதில் ஒரு வேடிக்கை அதிமான உதடுகள் ஒட்டாத குறள்கள் காமத்துபாலில் உள்ளன.

ஆன்மீக சிந்தனைகள்

இன்றைய சிந்தனைக்கு

பயனுள்ள தகவல் : கொரோனாவிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியது எப்படி?

கோவை E S I  மருத்துவமனையில் 141 நோயாளிகளும் கொரோனாவிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியது எப்படி?

 *கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள்.

 இதுபோல்  ஒருநாளைக்கு  2, 3 முறை குடித்து வந்தால் வைரஸ், பேக்டீரியா தொற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது. 

 இஞ்சி, கருமிளகு, எலுமிச்சை சாறு மூன்றையும் நீரில் கலந்து அந்த நீரை கொதிக்க வைக்கும் பொழுது விசேஷமான ஒரு வேதியல் மாற்றம் நிகழும். இது 
பேக்டீரியாவையும் கொன்று விடும். தினம், தினம் தனது மூலக்கூறு வடிவத்தை மாற்றிக் கொள்ளும் கொரோனா எனும் இந்த மாயாவியை எவ்வாறு? அழிப்பது என மருத்துவ உலகம் விழி  பிதுங்கி நிற்கிறது. 

அத்தகைய இந்த கொரோனா மாயாவி  போல் எத்தனை  புதிய மாயாவிகள் எதிர்காலத்தில் வந்தாலும் அனைத்து மாய அசுரர்களையும் அழிக்கும்  மும்மூர்த்திகள் தான் இந்த இஞ்சி, மிளகு, எலுமிச்சை. 

மேலும் கொரோனா போன்ற வைரஸ்களை அழிப்பதில் கபசுரத்தை காட்டிலும், நிலவேம்பை காட்டிலும் சிறந்தது  இந்த இஞ்சி, எலுமிச்சை, கருமிளகு குடிநீர்*

இஞ்சி,மிளகு, எலுமிச்சை சாறு நீரை கொண்டு தான் கர்நாடகாவில் பெருமளவு கொரோனா நோயை கட்டுப்படுத்தினார்கள்.

29 ஆக., 2020

எனக்குப் பிடித்த பாடல் : சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா

 


சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா  

படம் :  பெண்               

PENN - SONNA SOLLAI MARANTHIDALAMA SONG

358,214 views•Oct 30, 2012

AP INTERNATIONAL

5.63M subscribers

Penn - Tamil Movie

Star Cast: Gemini Ganesan, Vyjayanthimala, S. Balachander, Anjali Devi, Chittor V. Nagaiah

Music: R.Sudarsanam

Direction: M.V. Raman

 

Penn is a  Comedy Film.  Anjali Devi's dad V.Nagaiah is finding difficult to get her daughter married as he had done Intercaste marriage. Gemini Ganesan weds Anjali devi without his parent's approval. When his dad Sankarapani comes to know about it, he asks Gemini Ganesan to leave Anjalidevi and marry Vyjayanthi mala. During the wedding, Vyjayanthi mala stops the wedding and reveals the truth about Anjali Devi. Gemini Ganesan reunites with Anjalidevi and Vyjayanthimala gets married to S.Balachander

 

Grateful thanks to  AP INTERNATIONAL and YouTube.