12 ஆக., 2008

இன்று ஒரு தகவல்-3: "உன்னத சேவை"

ஜோஸ், மதுரையைச் சேர்ந்த இந்த 59 வயது இளைஞர், சத்தமில்லாமல் மிகப்பெரிய சாதனை செய்து வருகின்றார். கடந்த 37 ஆண்டுகளில் 147 முறை இரத்த தானம் செய்திருக்கிறார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் இருபது பேருக்காவது அறுவை சிகிச்சை நடக்கிறது. இவர்களுக்கு அறுபது யூனிட் வரை இரத்தம் தேவைப்படுகிறது. ஆஸ்பத்திரியில் செஞ்சிலுவைச் சங்கத்தை அதன் இணைச்செயலராக இருந்து நிர்வகித்து வருகிறார் ஜோஸ். அவருக்குக் கீழ் முன்னூறுக்கும் மேற்பட்ட கொடையாளர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் இரத்த தானம் செய்யத் தயாராக இருக்கின்றனர். உயிர் காக்கும் உன்னத சேவைபுரியும் இவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள். (அடிப்படை: தினமலர், மதுரை, ஜூலை 27, 2008)

கருத்துகள் இல்லை: