#மேன்மக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#மேன்மக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 ஜூலை, 2026

மேன்மக்கள்

*சுவாமி விபுலானந்தர்*
(நினைவு தினம் ஜூலை 19, காலமான ஆண்டு 1947.)
.....................................................
  1892 ஆம் ஆண்டு பிறந்தவர் தமிழறிஞர் விபுலானந்தர். இயற்பெயர் மயில்வாகனம், பல்துறை சார்ந்த பேரறிஞர். கவிஞர். விஞ்ஞானப் பட்டதாரி. 

   பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப் பேராசிரியர். ஆராய்ச்சியாளர். மொழிபெயர்ப்பாளர். துறவி.
  
   அடிகளார் 1931இல் தமிழ் நாடு வந்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மூன்றாண்டுகள் தொண்டு புரிந்தார். 

  பின் இலங்கை திரும்பி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியரானார். 
  
  1922 இல் சென்னை ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்து, காவி பூண்டு ராமகிருஷ்ண மடத்துத் தலைவர் சுவாமி சிவானந்தரிடம் "பிரபோத சைதன்யர்" என்னும் தீட்சா நாமம் பெற்றார். 

   அங்கு "ராமகிருஷ்ண விஜயம்" என்ற தமிழ் இதழுக்கும் "வேதாந்த கேசரி" என்ற ஆங்கில இதழுக்கும் ஆசிரியராக இருந்தார். "செந்தமிழ்" என்னும் பத்திரிகையிலும் கட்டுரைகள் எழுதினார். 

    ஆசிரம வாழ்க்கை முடிந்து சுவாமி விபுலானந்தர் என்னும் குருப்பட்டம் பெற்றார். குருவாக இருந்து அபிஷேகம் செய்தவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேர்ச்சீடர்களில் ஒருவரான சுவாமி சிவானந்தர். 
  
   அதன் பின் இலங்கை திரும்பினார். கல்வி நிறுவனங்கள் பலவற்றை நிறுவினார். 

   மட்டக்களப்பு உப்போடையில் சிவானந்த வித்யாலயம் என்ற ஆண்கள் பாடசாலை, திருமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் ஆங்கிலக் கல்லூரி, காரைத் தீவு சாரதா வித்யாலயம் என்பன அவர் நிறுவியவையே. 
  
   தலைநகர் கொழும்பில் தமிழ்ப் பள்ளிக்கூடம் இல்லாத குறையைப் போக்க விவேகானந்த வித்யாலயத்தைத் தொடங்கினார். 

  அத்துடன் கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, முதலிய இடங்களில் ராமகிருஷ்ண ஆச்சிரமங்களை நிறுவினார். விபுலானந்தர் ஆன்மீகவாத சன்மார்க்க நெறியாளராக வாழ்ந்தார்.
  
   சாதி, மத, மொழி, இன ஏற்றத் தாழ்வுகளுக்கும், ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர். 
   
   1924இல் மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் "நாடகத் தமிழ்" என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ்ச் சங்கச் செயலாளராக இருந்த டி.சி. சீனிவாஸ ஐயங்க¡ரின் வேண்டுகோளுக்கிணங்க "மதங்க சூளாமணி" என்ற நூலை எழுதினார்.

     இவர் எழுதிய நூல்களில் யாழ் நூல் மிகவும் புகழ்பெற்றது. 1937இல் இமய மலையைக் காணச் சென்று மலைச்சாரலில் உள்ள மாயாவதி ஆசிரமத்தில் தங்கினார். 

   அங்கு சிலகாலம் "பிரபுத்த பாரதா" என்ற ஆங்கில இதழுக்கு ஆசிரியராக இருந்து பல கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.

  கனடாவில் வாழும் ஈழத்துப் பூராடனார் (க.தா. செல்வராசகோபால்) என்ற கவிஞர் 1983இல் விபுலானந்த அடிகளின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் "விபுலானந்தர் பிள்ளைத் தமிழ்" என்ற பிரபந்த நூலை வெளியிட்டிருக்கிறார். 
 
   சிவானந்த வித்யாலய முகப்பில் உள்ள மரத்தின் கீழ் சுவாமிகளின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரின் கல்லறை மேல் அவரால் பாடப்பட்ட பின்வரும் கவிதை வரிகள் பொறிக்கப் பட்டுள்ளன:

  "வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
   வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ
   வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
   உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"

.....................................................
திரு.திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!🙏🙏🙏

3 ஏப்., 2026

மேன்மக்கள்: ஒரு கூரையின் கீழ் தொடங்கிய கருணையின் புரட்சி!


🌿 மேன்மக்கள்
ஒரு கூரையின் கீழ் தொடங்கிய கருணையின் புரட்சி

தாமஸ் பெர்னார்டோ (Thomas Barnardo) — ஒரு சாதாரண மனிதர். ஆனால், ஒரு அசாதாரண முடிவு எடுத்தவர்.

1866 ஆம் ஆண்டு. லண்டன் நகரம்.

மருத்துவம் படித்து கொண்டிருந்த 21 வயது இளைஞன். வாழ்க்கைக்கு தெளிவான திட்டம்.
படிப்பு முடித்து மருத்துவராக வேண்டும்.
பிறகு சீனாவுக்கு சென்று மிஷனரி சேவை செய்ய வேண்டும்.
அது நல்ல திட்டம். உயர்ந்த திட்டம்.
ஆனால்…

ஒரு இரவு, அந்தத் திட்டம் முற்றிலும் மாறிப் போனது.

🌙 ஒரு கேள்வி… ஒரு வாழ்க்கை மாற்றம்

அன்று, ஏழை குழந்தைகளுக்கான பள்ளியில் (ragged school) அவர் சேவை செய்து கொண்டிருந்தார்.
அனைவரும் சென்ற பின், ஒரு சிறுவன் மட்டும் அங்கேயே நின்றிருந்தான்.
“நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டார்.
“எங்கும் இல்லை…” என்றான்.
அந்த ஒரு பதில்…
அந்த ஒரு வலி…
“உன்னைப் போன்றவர்கள் இன்னும் இருக்கிறார்களா?” என்றார்.
“நிறைய பேர்… நான் காட்டுகிறேன்…” என்றான்.

🏚️ அந்தக் கூரை…
அந்த சிறுவன் அவரை நகரின் இருண்ட தெருக்களில் அழைத்துச் சென்றான்.
ஒரு சந்தை அருகே இருந்த ஒரு குடிசையின் கூரைக்கு.
அங்கே…

11 குழந்தைகள்.
குளிரில் நடுங்கிக் கொண்டே, ஒன்றாகக் குவிந்து படுத்திருந்தனர்.

வீடு இல்லை.
வெப்பம் இல்லை.
நாளை இல்லை.
அந்த காட்சி —
அவரின் உள்ளத்தை உடைத்தது.

💭 “நான் ஏன் சீனாவுக்கு போக வேண்டும்?”

அந்த இரவு, அவர் ஒரு புதிய கேள்வியை கேட்டார்:

“இங்கே இவ்வளவு குழந்தைகள் துன்பத்தில் இருக்கும்போது, நான் ஏன் தொலைதூரம் போக வேண்டும்?”
அந்தக் கேள்வியே
ஒரு மனிதனின் வாழ்க்கையையும்
ஆயிரக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்தையும்
மாற்றியது.

🏠 ஒரு வாசல்… ஒரு வாக்குறுதி

1870 ஆம் ஆண்டு,
அவர் தனது முதல் இல்லத்தைத் தொடங்கினார்.
அதன் வாசலில் ஒரு வாசகம்:

“No Destitute Child Ever Refused Admission”
(ஏழை குழந்தை ஒருவரும் மறுக்கப்பட மாட்டார்கள்)

Grateful thanks to Wikimedia Commons 

இது ஒரு வாசகம் இல்லை.
இது ஒரு உறுதி.

⚖️ விமர்சனங்களும்… உண்மையும்

அவரை பலர் விமர்சித்தனர்.
“இது சரியான முறையல்ல…”
“அனைவரையும் ஏற்க முடியாது…”
“சட்டப்படி தவறு…”
ஆனால் அவர் ஒரு பதில் மட்டுமே சொன்னார்:
“நீங்கள் ஆய்வு செய்யும் வரை… குழந்தைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.”
அது ஒரு கருத்து இல்லை.
ஒரு கடும் உண்மை.

🌧️ குறைகளும் இருந்தன…

Thomas Barnardo ஒரு பரிபூரண மனிதர் அல்ல.
சில சமயங்களில், குழந்தைகளை குடும்பத்திலிருந்து விலக்கினார்.
நிதி திரட்ட, உணர்ச்சிகளை தூண்டும் புகைப்படங்களை பயன்படுத்தினார்.
சில குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிய திட்டங்கள் பின்னர் விமர்சிக்கப்பட்டன.
அவரின் வாழ்க்கை —
சாதாரண “சாந்தர் கதை” அல்ல.
மனிதத் தவறுகளும், மனிதத் தியாகங்களும் கலந்த ஒன்று.

🌟 ஆனால்…
ஒரு உண்மை மட்டும் மறுக்க முடியாது.
அவர்
60,000க்கும் மேற்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றினார்.
வீதி, மழை, பசி, மரணம் —
அவை இருந்த இடத்தில்
வீடு, உணவு, கல்வி, எதிர்காலம் வந்தது.

🔥 ஒரு மனிதன்… ஒரு முடிவு

அவர் மருத்துவராகி இருக்கலாம்.
அவர் வெளிநாட்டில் சேவை செய்திருக்கலாம்.
ஆனால் அவர் தேர்ந்தெடுத்தது —
ஒரு வேறு பாதை.
“ஒரு குழந்தையும் துறக்கப்படக் கூடாது”
என்ற நம்பிக்கை.
அதை வாழ்நாள் முழுவதும் நிரூபித்தார்.

🌿 நிறைவு

சமூகம் சொன்னது:
“ஏழை குழந்தைகள் அப்படித்தான்.”
அவர் சொன்னார்:
“அவர்கள் தவறான சூழலில் பிறந்தவர்கள். அதை மாற்றலாம்.”
அவர் சரி என்பதை
ஆயிரக்கணக்கான வாழ்க்கைகள் சாட்சி சொல்கின்றன.
🙏

நாம் அனைவரும் பெரிய செயல்கள் செய்ய வேண்டியதில்லை.
ஆனால், ஒரு மனிதனின் துன்பத்தை பார்த்து
திரும்பிப் போகாமல் இருக்கலாம்.

அதுவே —
மேன்மை.

ChatGPT-க்கு மனமார்ந்த நன்றிகள்!🙏🙏🙏

1 ஜன., 2026

மேன்மக்கள்:​ ஜி.டி. நாயுடு - இந்தியாவின் எடிசன்


மேன்மக்கள்:
​ஜி.டி. நாயுடு: இந்தியாவின் எடிசன் 
மற்றும் கோவையின் பெருமை

Courtesy:
https://www.aramseithupazhaghu.in/



​தமிழ்நாட்டின் 'தொழில்முனைவோர் தலைநகரம்' என்று கோயம்புத்தூரை இன்று நாம் அழைக்கிறோம் என்றால், அதற்கு மிக முக்கியக் காரணம் கோபால்சாமி துரைசாமி நாயுடு என்னும் மகா மேதை.

​ஆரம்பகால வாழ்க்கை:

1893-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பிறந்த ஜி.டி. நாயுடு, முறையான பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியவர். ஆனால், ஒரு மோட்டார் சைக்கிளைப் பிரித்து அடுக்கி, அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டதில் தொடங்கியது அவரது வியக்கத்தக்க பயணம்.
​அசாத்தியக் கண்டுபிடிப்புகள்:

அவர் ஒரு 'பல்முனை வித்தகர்'. அவரது கண்டுபிடிப்புகள் நம்மை இன்றும் வியக்க வைக்கின்றன:

​மின்சார சவரக்கத்தி (Electric Razor):

உலகிலேயே முதன்முதலில் மின்சாரத்தில் இயங்கும் சவரக்கத்தியை இவர் கண்டுபிடித்தார்.

​அதிசயப் பழங்கள்: 

விவசாயத்தில் ஆர்வம் கொண்ட அவர், விதையில்லாத திராட்சைகளையும், ஒரு செடியில் பல நிறப் பூக்களையும் வளர்த்து சாதனை படைத்தார்.
​போக்குவரத்து: தமிழ்நாட்டின் முதல் பேருந்து சேவைகளில் ஒன்றான 'United Motor Service' (UMS)-ஐத் தொடங்கி, போக்குவரத்துத் துறையில் புரட்சி செய்தார்.

​கல்விப் பணி:

அறிவைச் சம்பாதிப்பதை விட, அதை மற்றவர்களுக்குப் பயிற்றுவிப்பதையே அவர் நோக்கமாகக் கொண்டிருந்தார். கோயம்புத்தூரில் பல தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உருவாக அவர் அடித்தளமிட்டார்.

​முடிவுரை:

"ஆராய்ச்சி என்பது வெறும் ஆய்வகத்தில் மட்டுமல்ல, நம் அன்றாட வாழ்க்கையிலும் இருக்க வேண்டும்" என்று வாழ்ந்து காட்டியவர் அவர். இன்றைய இளைஞர்களுக்கு ஜி.டி. நாயுடு ஒரு மாபெரும் உத்வேகம்.

மனமார்ந்த நன்றிகள்:
GOOGLE GEMINI 🙏🙏🙏

30 டிச., 2025

மேன்மக்கள்

கக்கன் நினைவு தினம்: டிசம்பர் 23:
.............................
*கக்கன் என்றொரு மாமனிதர்!*
*திருப்பூர் கிருஷ்ணன்*
.............................
  *பொதுவாழ்வில் நேர்மைக்கு உதாரணமாக விளங்கிய கக்கன் 1908 இல் பிறந்தவர். மதுரையைச் சேர்ந்தவர். 

   அதே மதுரையைச் சேர்ந்த தியாகி வைத்தியநாதய்யரைத் தம் தந்தை போல் கருதியவர். வைத்தியநாதய்யரோ கக்கனைத் தம் பெறாத மகன் போலவே எண்ணினார். 

   மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற ஹரிஜன ஆலயப் பிரவேச நன்னாளில் வைத்தியநாதய்யர் தலைமையில் உடன்சென்றவர் கக்கன். 

   கலவரம் நிகழ்ந்தால் ஒருகை பார்ப்போம் என வைத்தியநாதய்யருக்குத் துணையாக நின்றவர் குணத்தில் பசும்பொன்னே ஆன முத்துராமலிங்கத் தேவர். 

  அன்றுதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆலயக் கதவு திறந்தது. திருப்புன்கூர் ஆலயத்தில் நுழைய நந்தன் சங்கடப்பட்டதுபோல் இனி நந்தன் மரபில் வந்தவர்கள் எந்த ஆலயத்திலும் நுழையச் சங்கடப் படத் தேவையில்லை என்றெண்ணிக் கக்கன் மனம் மகிழ்ந்தது. 

  திருப்புன்கூரில் நந்தனுக்குத் தானே விலகியது நந்தி. ஆனால் மதுரையில் ஹரிஜன ஆலயப் பிரவேசத்திற்குக் குறுக்கே நின்ற சில நந்திகளை முத்துராமலிங்கத் தேவரின் துணிச்சல்தான் விலக வைத்தது. 

  என்றாலும் தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயத்தில் நுழைந்ததால் மீனாட்சியம்மன் ஆலயத்தை விட்டுப் போய்விட்டதாக அர்ச்சகர்களில் சிலர் நினைத்தார்கள்! 

   அவர்கள் அதே கோயில் வளாகத்தில் உள்ள சொக்கநாதர் சன்னிதியில் மட்டும் வழிபாட்டை நிகழ்த்தினார்கள். 

  இந்த விசித்திரத்தை எண்ணி ராஜாஜி நகைத்தார். அவர் காமராஜரோடு மீனாட்சி ஆலயத்திற்குச் சென்றார். 

   காமராஜரிடம், `மீனாட்சியம்மன் கக்கனைப் போன்றோர் நுழைந்ததால் ஆலயத்தை விட்டு வெளியேறி விட்டதாகச் சிலர் நினைக்கிறார்களே? மீனாட்சியம்மன் சிலையைப் பார்த்தபின் என்ன தோன்றுகிறது?` என்று கேட்டார். 

  `முன்னர் இல்லாத மலர்ச்சியோடு மீனாட்சி அம்மன் தென்படுவதைப் பார்க்கிறேன்! தான் பெற்ற பிள்ளைகள் தன்னைப் பார்க்கத் தடைவிதித்த சிலர் சன்னிதியிலிருந்து விலகியதால் அன்னை இன்று கூடுதல் பொலிவோடு இருக்கிறாள்!` என்று பதில் சொன்னார் பெருந்தலைவர்.  

  வைத்தியநாதய்யர் காலமானபோது அவரது புதல்வர்கள் அவருக்குக் கொள்ளி வைத்தது இயல்புதான். 

  ஆனால், கக்கன், அந்தண வகுப்பைச் சேர்ந்த வைத்தியநாதய்யருக்கு, தாமும் மொட்டை அடித்துக் கொண்டு கொள்ளி வைத்தார். 

   வைத்தியநாதய்யரின் புதல்வர்கள், தங்கள் சமூகத்திலிருந்து இதற்கு வந்த எதிர்ப்பை மீறி கக்கன் கொள்ளி வைப்பதற்கு ஆதரவாக நின்றார்கள். 

  ஹரிஜன ஆலயப் பிரவேசத்தைத் தலைமை தாங்கி நடத்திய வைத்தியநாதய்யரின் உடலுக்கும் இந்து சமயத்தில் தவறுதலாக நடைமுறையில் வந்துவிட்ட தீண்டாமை என்ற அநீதிக்கும் அன்று ஒருசேரக் கொள்ளி வைக்கப்பட்டது.  

  ராமபிரானின் உருவப் பட எரிப்புப் போராட்டத்தை ஈ.வெ.ரா அறிவித்தபோது பெரிதும் மனம் வருந்தினார், சமய நம்பிக்கையும் காந்தியிடம் பெரும் ஈடுபாடும் கொண்ட கக்கன். 

  பெரியாருக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்த அவர், `தேசத் தந்தையான காந்தியின் நம்பிக்கைக்குரிய கடவுளை அவமதிப்பது ஒரு சமூக விரோதச் செயல்!` எனக் குறிப்பிட்டார்....  

  *கக்கன் குடும்பத்தினரின் குலதெய்வத்தின் பெயர்தான் கக்கன். ஆண்பிள்ளை பிறந்தால் கக்கன் என்றும் பெண்பிள்ளை பிறந்தால் கக்கி என்றும் யெர் வைப்பது அவர் குடும்ப வழக்கம். 

  சுதந்திரப் போரில் ஈடுபட்ட காலங்களில், காவல் துறையினரின் பலத்த கண்காணிப்பிலிருந்து தப்பிக்க கக்கன் பெண்வேடமிட்டுக் கக்கியாக மாறிய சந்தர்ப்பங்கள் பல உண்டு! 

 வெகுகாலம் இந்த ரகசியம் தெரியாமலிருந்து பிறகுதான் காவல்துறை விழித்துக் கொண்டது. கக்கன் கைதுசெய்யப்பட்டு அலிபூர் சிறையில் அடைக்கப் பட்டார். 

  சிறைவாசத்தில் கற்றுக் கொண்ட இந்தி பின்னாளில் அமைச்சரானபோது அவருக்குப் பெரிதும் பயன்பட்டது. 

   அமைச்சர் பதவியிலிருந்து விலகியபின் பொதுப் பேருந்துகளில்தான் மக்களோடு மக்களாக கக்கன் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.... 
 
  *கக்கன் மத்திய சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பொதுப்பணித் துறை, விவசாயம், ஆதித் திராவிடர் நலத்துறை, உள்துறை என்று பல பொறுப்புகளை வகித்தவர்.

  9 ஆண்டுகள் அமைச்சராகவும் 5 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். கறைபடாத கரத்தை உடையவர். 

  அமைச்சராக இருந்தபோது, அரசு வாகனத்தில் குடும்ப உறுப்பினர்கள் போக அனுமதிக்க மாட்டார். 

  அவரின் தம்பி விஸ்வநாதன் வேலையில்லாமல் இருந்தபோது எங்கும் பரிந்துரை செய்ய மறுத்தார். 

   தம்பிக்கு மனை ஒதுக்கிய பொழுது, அந்தக் கோப்பை வாங்கிக் கிழித்துப் போட்டுவிட்டு மனை வழங்கக் கூடாதெனக் கூறிவிட்டார். 

  சொந்த மகளைக் கான்வென்ட் பள்ளியில் சேர்க்காமல் அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்கவைத்தார். எனக்கு அங்கேயெல்லாம் சேர்த்துப் படிக்கவைக்கப் பொருளாதாரச் சக்தி இல்லை எனக் குறிப்பிட்டார். 

  தியாகி என்ற வகையில் அவருக்கு வழங்கப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்குத் தந்துவிட்டார். 

  இப்படி அவரது நேர்மைக்கு உதாரணமாக இன்னும் எத்தனையோ சம்பவங்கள். லஞ்ச ஒழிப்புத் துறையைத் தமிழகத்தில் கொண்டு வந்ததும் கக்கன் தான்.... 

 *இறுதிக் காலங்களில் தாள முடியாத வறுமையில் சிரமப்பட்டாலும் அதை வெளியில் சொல்லாமல் வாழ்ந்தார். அவருக்கு உதவி செய்ய விரும்பிய சிவாஜி கணேசன் ஒரு தங்கச் சங்கிலியைப் பரிசளித்தார். 

  அந்தத் தங்கச் சங்கிலியை ஏலம் விட்டார் கக்கன். அதில் கிடைத்த தொகையை ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார். அதில் கிடைத்த வட்டியை மாதாமாதம் பெற்றுச் செலவு செய்து வந்தார். 

  அந்தத் தொகையும் சரிவரக் கிடைக்கவில்லை என்று பின்னால் அறிந்த சிவாஜி கணேசன் மனம் வருந்தினார். 

   1981இல் சென்னையிலிருந்து மதுரை சென்ற கக்கன் உடல் நலம் பாதிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் சாதாரண வகுப்பில் சேர்ந்தார். 

  அதே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த மேயர் முத்துவைப் பார்க்கச் சென்ற எம்.ஜி. ஆரிடம், கக்கன் அங்கே சாதாரண வகுப்பில் சிகிச்சை பெற்றுவரும் விவரம் சொல்லப்பட்டது. 

  எம்.ஜி.ஆர்., விரைந்துசென்று கக்கனைப் போய்ப் பார்த்தார். `உங்களுக்கு என்ன உதவி செய்யட்டும்? தனி வார்டுக்கு மாற்றவா?` எனக் கேட்டார். `நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி!` எனச் சொல்லிவிட்டார் கக்கன். 

  மருத்துவமனை அதிகாரிகளை அழைத்த எம்.ஜி.ஆர். `இவர் யாரென்றாவது தெரியுமா?` எனக் கேட்டார். 

  `இவர்தான் கக்கன்ஜி. இவர் பெற்றுத்தந்த சுதந்திரத்தைத் தான் நாம் அனுபவித்து வருகிறோம். இவரை இப்படி நடத்த எப்படி உங்களுக்கு மனம் வந்தது? இவருக்குத் தனி அறை வசதியும் உயர் மருத்துவமும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். 

  ஏதேனும் தேவைப்படும் அரிய மருந்து கிடைக்கவில்லை என்றால் எனக்குத் தெரியப்படுத்துங்கள். நான் வரவழைத்துத் தருகிறேன்!` 

  என்று சொல்லிக் கக்கனிடம் பிரியாவிடை பெற்றார் எம்.ஜி.ஆர்.

  *1981 டிசம்பர் 23ஆம் தேதியன்று, 73 வயதில் காலமான கக்கன் பொதுவாழ்வில் அரசியல்வாதிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்த பெருமகன். 

  அவருக்கு அஞ்சலியாக இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது. பொதுவாழ்வில் முத்திரை பதித்த அவரை, முத்திரையிடும் அஞ்சல் தலை மூலம் கெளரவித்தது குறித்து கக்கன் அன்பர்கள் நிறைவடைந்தார்கள். 

  தனிமனித ஒழுக்கமும் சமுதாய ஒழுக்கமும் நிறைந்த ஓர் அரசியல் நட்சத்திரம் உதிர்ந்துவிட்டது. இந்த இரண்டும் இல்லாதவர்கள் அரசியலில் பெருகி விட்ட காலம் இது. 

  மகான் கக்கனின் நாமத்தை உரத்து முழங்குவதாலாவது நாட்டில் நேர்மை மறுபடி தழைக்குமா என நாம் முயற்சிசெய்து பார்க்கலாம்.   

(நன்றி: கல்கி வார இதழ்.)

மனமார்ந்த நன்றிகள்:
திரு.திருப்பூர் கிருஷ்ணன் மற்றும் கல்கி 🙏🙏🙏
   .............................

29 டிச., 2025

மேன்மக்கள்

கக்கன் நினைவு தினம்: டிசம்பர் 23:
.............................
*கக்கன் என்றொரு மாமனிதர்!*
*திருப்பூர் கிருஷ்ணன்*
.............................
  *பொதுவாழ்வில் நேர்மைக்கு உதாரணமாக விளங்கிய கக்கன் 1908 இல் பிறந்தவர். மதுரையைச் சேர்ந்தவர். 

   அதே மதுரையைச் சேர்ந்த தியாகி வைத்தியநாதய்யரைத் தம் தந்தை போல் கருதியவர். வைத்தியநாதய்யரோ கக்கனைத் தம் பெறாத மகன் போலவே எண்ணினார். 

   மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற ஹரிஜன ஆலயப் பிரவேச நன்னாளில் வைத்தியநாதய்யர் தலைமையில் உடன்சென்றவர் கக்கன். 

   கலவரம் நிகழ்ந்தால் ஒருகை பார்ப்போம் என வைத்தியநாதய்யருக்குத் துணையாக நின்றவர் குணத்தில் பசும்பொன்னே ஆன முத்துராமலிங்கத் தேவர். 

  அன்றுதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆலயக் கதவு திறந்தது. திருப்புன்கூர் ஆலயத்தில் நுழைய நந்தன் சங்கடப்பட்டதுபோல் இனி நந்தன் மரபில் வந்தவர்கள் எந்த ஆலயத்திலும் நுழையச் சங்கடப் படத் தேவையில்லை என்றெண்ணிக் கக்கன் மனம் மகிழ்ந்தது. 

  திருப்புன்கூரில் நந்தனுக்குத் தானே விலகியது நந்தி. ஆனால் மதுரையில் ஹரிஜன ஆலயப் பிரவேசத்திற்குக் குறுக்கே நின்ற சில நந்திகளை முத்துராமலிங்கத் தேவரின் துணிச்சல்தான் விலக வைத்தது. 

  என்றாலும் தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயத்தில் நுழைந்ததால் மீனாட்சியம்மன் ஆலயத்தை விட்டுப் போய்விட்டதாக அர்ச்சகர்களில் சிலர் நினைத்தார்கள்! 

   அவர்கள் அதே கோயில் வளாகத்தில் உள்ள சொக்கநாதர் சன்னிதியில் மட்டும் வழிபாட்டை நிகழ்த்தினார்கள். 

  இந்த விசித்திரத்தை எண்ணி ராஜாஜி நகைத்தார். அவர் காமராஜரோடு மீனாட்சி ஆலயத்திற்குச் சென்றார். 

   காமராஜரிடம், `மீனாட்சியம்மன் கக்கனைப் போன்றோர் நுழைந்ததால் ஆலயத்தை விட்டு வெளியேறி விட்டதாகச் சிலர் நினைக்கிறார்களே? மீனாட்சியம்மன் சிலையைப் பார்த்தபின் என்ன தோன்றுகிறது?` என்று கேட்டார். 

  `முன்னர் இல்லாத மலர்ச்சியோடு மீனாட்சி அம்மன் தென்படுவதைப் பார்க்கிறேன்! தான் பெற்ற பிள்ளைகள் தன்னைப் பார்க்கத் தடைவிதித்த சிலர் சன்னிதியிலிருந்து விலகியதால் அன்னை இன்று கூடுதல் பொலிவோடு இருக்கிறாள்!` என்று பதில் சொன்னார் பெருந்தலைவர்.  

  வைத்தியநாதய்யர் காலமானபோது அவரது புதல்வர்கள் அவருக்குக் கொள்ளி வைத்தது இயல்புதான். 

  ஆனால், கக்கன், அந்தண வகுப்பைச் சேர்ந்த வைத்தியநாதய்யருக்கு, தாமும் மொட்டை அடித்துக் கொண்டு கொள்ளி வைத்தார். 

   வைத்தியநாதய்யரின் புதல்வர்கள், தங்கள் சமூகத்திலிருந்து இதற்கு வந்த எதிர்ப்பை மீறி கக்கன் கொள்ளி வைப்பதற்கு ஆதரவாக நின்றார்கள். 

  ஹரிஜன ஆலயப் பிரவேசத்தைத் தலைமை தாங்கி நடத்திய வைத்தியநாதய்யரின் உடலுக்கும் இந்து சமயத்தில் தவறுதலாக நடைமுறையில் வந்துவிட்ட தீண்டாமை என்ற அநீதிக்கும் அன்று ஒருசேரக் கொள்ளி வைக்கப்பட்டது.  

  ராமபிரானின் உருவப் பட எரிப்புப் போராட்டத்தை ஈ.வெ.ரா அறிவித்தபோது பெரிதும் மனம் வருந்தினார், சமய நம்பிக்கையும் காந்தியிடம் பெரும் ஈடுபாடும் கொண்ட கக்கன். 

  பெரியாருக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்த அவர், `தேசத் தந்தையான காந்தியின் நம்பிக்கைக்குரிய கடவுளை அவமதிப்பது ஒரு சமூக விரோதச் செயல்!` எனக் குறிப்பிட்டார்....  

  *கக்கன் குடும்பத்தினரின் குலதெய்வத்தின் பெயர்தான் கக்கன். ஆண்பிள்ளை பிறந்தால் கக்கன் என்றும் பெண்பிள்ளை பிறந்தால் கக்கி என்றும் யெர் வைப்பது அவர் குடும்ப வழக்கம். 

  சுதந்திரப் போரில் ஈடுபட்ட காலங்களில், காவல் துறையினரின் பலத்த கண்காணிப்பிலிருந்து தப்பிக்க கக்கன் பெண்வேடமிட்டுக் கக்கியாக மாறிய சந்தர்ப்பங்கள் பல உண்டு! 

 வெகுகாலம் இந்த ரகசியம் தெரியாமலிருந்து பிறகுதான் காவல்துறை விழித்துக் கொண்டது. கக்கன் கைதுசெய்யப்பட்டு அலிபூர் சிறையில் அடைக்கப் பட்டார். 

  சிறைவாசத்தில் கற்றுக் கொண்ட இந்தி பின்னாளில் அமைச்சரானபோது அவருக்குப் பெரிதும் பயன்பட்டது. 

   அமைச்சர் பதவியிலிருந்து விலகியபின் பொதுப் பேருந்துகளில்தான் மக்களோடு மக்களாக கக்கன் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.... 
 
  *கக்கன் மத்திய சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பொதுப்பணித் துறை, விவசாயம், ஆதித் திராவிடர் நலத்துறை, உள்துறை என்று பல பொறுப்புகளை வகித்தவர்.

  9 ஆண்டுகள் அமைச்சராகவும் 5 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். கறைபடாத கரத்தை உடையவர். 

  அமைச்சராக இருந்தபோது, அரசு வாகனத்தில் குடும்ப உறுப்பினர்கள் போக அனுமதிக்க மாட்டார். 

  அவரின் தம்பி விஸ்வநாதன் வேலையில்லாமல் இருந்தபோது எங்கும் பரிந்துரை செய்ய மறுத்தார். 

   தம்பிக்கு மனை ஒதுக்கிய பொழுது, அந்தக் கோப்பை வாங்கிக் கிழித்துப் போட்டுவிட்டு மனை வழங்கக் கூடாதெனக் கூறிவிட்டார். 

  சொந்த மகளைக் கான்வென்ட் பள்ளியில் சேர்க்காமல் அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்கவைத்தார். எனக்கு அங்கேயெல்லாம் சேர்த்துப் படிக்கவைக்கப் பொருளாதாரச் சக்தி இல்லை எனக் குறிப்பிட்டார். 

  தியாகி என்ற வகையில் அவருக்கு வழங்கப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்குத் தந்துவிட்டார். 

  இப்படி அவரது நேர்மைக்கு உதாரணமாக இன்னும் எத்தனையோ சம்பவங்கள். லஞ்ச ஒழிப்புத் துறையைத் தமிழகத்தில் கொண்டு வந்ததும் கக்கன் தான்.... 

 *இறுதிக் காலங்களில் தாள முடியாத வறுமையில் சிரமப்பட்டாலும் அதை வெளியில் சொல்லாமல் வாழ்ந்தார். அவருக்கு உதவி செய்ய விரும்பிய சிவாஜி கணேசன் ஒரு தங்கச் சங்கிலியைப் பரிசளித்தார். 

  அந்தத் தங்கச் சங்கிலியை ஏலம் விட்டார் கக்கன். அதில் கிடைத்த தொகையை ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார். அதில் கிடைத்த வட்டியை மாதாமாதம் பெற்றுச் செலவு செய்து வந்தார். 

  அந்தத் தொகையும் சரிவரக் கிடைக்கவில்லை என்று பின்னால் அறிந்த சிவாஜி கணேசன் மனம் வருந்தினார். 

   1981இல் சென்னையிலிருந்து மதுரை சென்ற கக்கன் உடல் நலம் பாதிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் சாதாரண வகுப்பில் சேர்ந்தார். 

  அதே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த மேயர் முத்துவைப் பார்க்கச் சென்ற எம்.ஜி. ஆரிடம், கக்கன் அங்கே சாதாரண வகுப்பில் சிகிச்சை பெற்றுவரும் விவரம் சொல்லப்பட்டது. 

  எம்.ஜி.ஆர்., விரைந்துசென்று கக்கனைப் போய்ப் பார்த்தார். `உங்களுக்கு என்ன உதவி செய்யட்டும்? தனி வார்டுக்கு மாற்றவா?` எனக் கேட்டார். `நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி!` எனச் சொல்லிவிட்டார் கக்கன். 

  மருத்துவமனை அதிகாரிகளை அழைத்த எம்.ஜி.ஆர். `இவர் யாரென்றாவது தெரியுமா?` எனக் கேட்டார். 

  `இவர்தான் கக்கன்ஜி. இவர் பெற்றுத்தந்த சுதந்திரத்தைத் தான் நாம் அனுபவித்து வருகிறோம். இவரை இப்படி நடத்த எப்படி உங்களுக்கு மனம் வந்தது? இவருக்குத் தனி அறை வசதியும் உயர் மருத்துவமும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். 

  ஏதேனும் தேவைப்படும் அரிய மருந்து கிடைக்கவில்லை என்றால் எனக்குத் தெரியப்படுத்துங்கள். நான் வரவழைத்துத் தருகிறேன்!` 

  என்று சொல்லிக் கக்கனிடம் பிரியாவிடை பெற்றார் எம்.ஜி.ஆர்.

  *1981 டிசம்பர் 23ஆம் தேதியன்று, 73 வயதில் காலமான கக்கன் பொதுவாழ்வில் அரசியல்வாதிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்த பெருமகன். 

  அவருக்கு அஞ்சலியாக இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது. பொதுவாழ்வில் முத்திரை பதித்த அவரை, முத்திரையிடும் அஞ்சல் தலை மூலம் கெளரவித்தது குறித்து கக்கன் அன்பர்கள் நிறைவடைந்தார்கள். 

  தனிமனித ஒழுக்கமும் சமுதாய ஒழுக்கமும் நிறைந்த ஓர் அரசியல் நட்சத்திரம் உதிர்ந்துவிட்டது. இந்த இரண்டும் இல்லாதவர்கள் அரசியலில் பெருகி விட்ட காலம் இது. 

  மகான் கக்கனின் நாமத்தை உரத்து முழங்குவதாலாவது நாட்டில் நேர்மை மறுபடி தழைக்குமா என நாம் முயற்சிசெய்து பார்க்கலாம்.   

(நன்றி: கல்கி வார இதழ்.)
   .............................

மனமார்ந்த நன்றிகள்:
கல்கி மற்றும் திருப்பூர் கிருஷ்ணன்🙏🙏🙏

28 டிச., 2025

மேன்மக்கள்: பண்பால் உயர்ந்த சிகரம் - ரத்தன் டாடா



மேன்மக்கள்: பண்பால் உயர்ந்த சிகரம் - ரத்தன் டாடா

​"மேன்மக்கள் மேன்மக்களே" என்ற ஔவையாரின் வாக்கிற்கு இணங்க, தன் வாழ்நாள் முழுவதும் கண்ணியத்தையும், எளிமையையும் கடைபிடித்த ஒரு மாபெரும் ஆளுமை ரத்தன் டாடா. ஒரு தொழிலதிபராக மட்டும் அல்லாமல், கோடிக்கணக்கான மக்களின் அன்பைப் பெற்ற ஒரு உன்னத மனிதராக அவர் திகழ்ந்தார்.

​பணிவு கலந்த ஆரம்பம்

​டாடா குடும்பத்தின் வாரிசாகப் பிறந்தாலும், ரத்தன் டாடா தனது பணியை ஒரு சாதாரணத் தொழிலாளியாகவே தொடங்கினார். அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை பயின்ற அவர், இந்தியா திரும்பியதும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உலைகளுக்கு (Furnace) அருகில் நின்று, தொழிலாளர்களுடன் ஒருவராக வேலை செய்தார். இந்த ஆரம்பமே அவருக்கு சாமானிய மக்களின் மீதான அக்கறையை விதைத்தது.

​உலக அரங்கில் இந்திய முத்திரை

​1991-ல் டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற போது, இந்தியப் பொருளாதாரம் பெரும் மாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருந்தது. அந்தச் சூழலில், ஜாகுவார், லேண்ட் ரோவர், டெட்லி டீ போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களை வாங்கி, இந்திய நிறுவனங்களாலும் உலகை ஆள முடியும் என்பதை மெய்ப்பித்துக் காட்டினார்.

​சாமானியனின் கனவு: டாடா நானோ

​மழையில் ஒரு குடும்பமே இருசக்கர வாகனத்தில் நனைந்து கொண்டு செல்வதைக் கண்ட ரத்தன் டாடா, "ஏழைகளும் கார் வாங்க வேண்டும்" என்ற உயரிய நோக்கத்தில் 'நானோ' காரை உருவாக்கினார். வணிக ரீதியாக அது பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும், ஒரு சாமானியனின் கஷ்டத்தைப் போக்க நினைத்த அவரது மனமே அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

​மனிதாபிமானம்: லாபத்தை விட மேலானது

​ரத்தன் டாட்டாவின் வாழ்வில் மறக்க முடியாத சில நெகிழ்ச்சியான தருணங்கள்:
​26/11 மும்பை தாக்குதல்: அந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியரின் குடும்பத்தையும் அவர் நேரில் சந்தித்து ஆதரவு அளித்தார். அவர்களின் வாழ்நாள் தேவைகளை நிறுவனம் ஏற்கும் என்று உறுதியளித்தார்.

​விலங்குகள் மீதான அன்பு: 

அவருக்கு நாய்கள் என்றால் உயிர். ஒருமுறை பக்கிங்ஹாம் அரண்மனையில் அவருக்கு வழங்கப்படவிருந்த கௌரவத்தை, தன் வளர்ப்பு நாய் உடல்நலம் சரியில்லாமல் இருந்த காரணத்திற்காக அவர் மறுத்தார். மும்பையில் உள்ள டாடா தலைமையகத்தில் தெருநாய்களுக்கெனத் தனி இடமே ஒதுக்கியுள்ளார்.

​ஈகை குணம்: 

டாடா குழுமம் ஈட்டும் லாபத்தில் 60 சதவீதத்திற்கும் மேலானது அறக்கட்டளைகள் மூலம் கல்வி, மருத்துவம் மற்றும் ஏழைகளின் நலனுக்காகச் செலவிடப்படுகிறது.

​முடிவுரை

​"வேகமாக நடக்க வேண்டுமானால் தனியாக நடங்கள், வெகுதூரம் செல்ல வேண்டுமானால் துணையோடு நடங்கள்" என்பது ரத்தன் டாட்டாவின் தாரக மந்திரம். செல்வத்தை விடச் செருக்கற்ற குணமே ஒருவரை உண்மையான 'மேன்மகன்' ஆக்கும் என்பதற்கு ரத்தன் டாடா ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்கிறார்.

மனமார்ந்த நன்றிகள்:
GOOGLE GEMINI 🙏🙏🙏