22 ஏப்., 2008

திருமந்திரம்-2: "யாவர்க்குமாம்..".

யாவர்க்குமாம்...

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.

- திருமந்திரம்

காலையில் இறைவனுக்கு பச்சிலை இட்டு வணங்கியும், பசு, நாய், பூனை, காகம் போன்ற பிராணிகட்கு சிறிது உணவளித்தும், வறியார்க்கு சோறிட்டும், மற்றவர்கட்கு இன்சொல் கூறியும், நாம் வாழ்வோமாக. இதனால் எல்லா நலங்களையும் அடையலாம். உலகிற்கு நாம் உதவினால் உலகம் நமக்கு உதவுகிறது.

நன்றி : "தினசரி திருமுறை"
தொகுத்தவர் - சிவ.அ.பக்தவச்சலம்
வெளியிட்டோர் - சிவனடியார் திருக்கூட்டம், குடியாத்தம்

1 கருத்து:

Rajendran சொன்னது…

இவையனைத்தும் மிகவும் எளிதில் செய்யக்கூடியவைதானே.!