20 அக்., 2008

எனக்குப் பிடித்த கவிதை-43: "பந்தயம்"

நடக்கக் கற்று
நாலடி வைப்பதற்குள்
'ஓடு!' என்றார்கள்.
ஓடலானேன் -
கைதட்டல்கள், வாழ்த்துக்கூச்சல்கள்
வேகம், வேகம், இன்னும் வேகம்
அன்னை மடியும்
காதல் ஒத்தடமும்
இளமைக் கூத்தும்
ஓட்டத்தினூடே ஓடிமறைந்தன.
ஓடும்போதே கல்யாணம் பண்ணி
கடமைகள் முடித்து
குழந்தைகள் பெற்று
குடும்பம் சுமந்து -
அடைந்தாள் சிரித்து
இழந்தால் அழுது
பக்தியில் நனைந்து
பயத்தில் உறைந்து
நரைக்க, நரைக்க
நாட்கள் பறக்க
இறைக்க, இறைக்க
ஓடிக்கொண்டிருந்தேன்.
ஒருநாள் எனக்கு
உண்மை புரிந்தது -
பந்தயம் என்றோ
முடிந்து போனது
நான் வெறும்
பழக்க தோஷத்தில்
ஓடிக் கொண்டிருக்கிறேன்!
- தஞ்சாவூர்க் கவிராயர்
நன்றி: கல்கி, டிசம்பர் 28, 1997.

கருத்துகள் இல்லை: