4 டிச., 2008

இன்று ஒரு தகவல்-14: "மதுரையில் யுவான் சுவாங்"

சீனப்பயணி யுவான் சுவாங் பற்றி வரலாற்றுப் புத்தகத்தில் வாசித்திருப்போம். சீனாவில் கி.பி.600-ல் பிறந்த இவர், தன் இருபதாம் வயதில் புத்த பிட்சுவானார். அங்கிருந்த சீனத்து புத்தமத புத்தகங்களில் திருப்தியடையாத அவர், அந்நாட்டு மன்னர் டைட்சங்கின் எதிர்ப்பையும் மீறி, புத்தர் பிறந்த பூமியான இந்தியாவிற்கு கிபி 629-ல் வந்தார். காஷ்மீரத்தில் கிபி 632 வரையிலும், கன்னோசியில் கிபி 636 வரையிலும், நாலந்தாவில் கிபி 637 வரையிலும், ஆந்திராவில் கிபி 639 வரையிலும், கிபி 640-ல் காஞ்சியிலும், கிபி 641-ல் மஹாராஷ்ட்ராவிலும், மீண்டும் 642 முதல் 643 வரை நாலந்தாவில் ஹர்ஷருடனும் இருந்தார்.

யுவான் சுவாங் தென்னாட்டில் காஞ்சி மாநகர் வந்தபோது நரசிம்ம வர்மன் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. பின்னர் திருவதிகை வழியாக யுவான் சுவாங் மதுரைக்கு வந்தார். மதுரையில் சடைய வர்மன் செழியன் சேந்தன் இறந்து, அவரது மகன் சீர் நின்ற நெடுமாறன் முடிசூடும் தருணத்தில்தான் யுவான் சுவாங் வந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. சீனப்பயணி யுவான் சுவாங்கை தேடி வர வைத்திருப்பதிலிருந்து மதுரையின் தொன்மைச் சிறப்பை அறியலாம்.
நன்றி: தினகரன், நாளிதழ், டிசம்பர் 1, 2008 ("தகவல் களம்")

கருத்துகள் இல்லை: