10 பிப்., 2011

சூரியின் டைரி-46: காரைக்குடி புத்தகத் திருவிழா 2011 தொடக்க விழா


நேற்று செக்காலை  சிவன் கோவிலுக்குச் சென்றிருந்தேன்.  வாசலில்   காரைக்குடி புத்தகத் திருவிழா 2011 பற்றிய பெரிய அளவிலான விளம்பரத்தைக் கண்டேன் (படம் மேலே). கோவிலுக்குச் சென்று திரும்பியதும் நண்பர் அலெக்சிடமிருந்து  அலைபேசி அழைப்பு வந்தது.  என்னிடம் சில முகவரிகளைக் கேட்டார்.  அவற்றைத் தந்தபின் அவை எதற்காக என்று கேட்டபோது சொன்னார், புத்தகத் திருவிழா தொடக்கவிழா அழைப்பிதழ்களை சில முக்கியமானவர்களிடம்  சேர்க்கும் பொறுப்பு, செயற்குழு உறுப்பினர் என்ற முறையில் அவரிடம் தரப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

அவரிடம் ஆவலுடன் தொடக்கவிழா நிகழ்ச்சி நிரல் பற்றி கேட்டேன்.  அவர் கூறிய தகவல்களின் படி,  நாளை, பிப்ரவரி 11-ம்   நாள் மாலை 5.30 மணிக்கு  கம்பன் மணிமண்டபத்தில் தொடக்க விழா நடைபெறவிருப்பதையும், அதில் தவத்திரு குன்றக்குடி அடிகளார், தினமணி ஆசிரியர் (பெயர் மறந்து விட்டது), பலகலைக் கழக துணைவேந்தர் ஒருவர் (பெயர் மறந்து விட்டது), செக்ரி  இயக்குனர் முனைவர் வெ.யக்ஞராமன், செக்ரி இணை இயக்குனர் முனைவர் ந.பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதைத் தெரிவித்தார்.

இன்று அழைப்பிதழின் நகல் ஒன்றை இரவலாகப் பெற்று அதை ஸ்கேன் செய்து இங்கே பதிவு செய்யலாம் என்று முயன்றேன்.  முடியவில்லை.

நாளை மாலை தொடக்கவிழாவில் பார்வையாளராகக் கலந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்தும், பேசப்படும் முக்கிய கருத்துகளைக் குறித்துக் கொண்டும் வருவது,  பின்னர் அவற்றை இங்கே பதிவு செய்யலாம் என்று எண்ணியுள்ளேன்.    

கருத்துகள் இல்லை: