5 செப்., 2011

எனக்குப் பிடித்த கவிதை-63: கொங்குவேள் கவிதை

குரங்குமாய் நண்டுகட்டித் தேளும் கொட்டிக்
குடியாத மதுக்குடித்துப் பேயு மேறி
இரங்கவரும் காஞ்சொறியின் பொடியும் தூவி
இஞ்சிதின்று கொள்ளிபிடித் தெழுந்தாற் போலத்
தருங்கருணை இல்லாத புல்லர் வாழ்வில்
தண்டிகையின் மீதேறிச் சம்பத் தேறிக்
கருங்கைமதக் களிறேறிக் கழுவி லேறிக்
காடேறி நாடேறித் திரிவார் கண்டீர்.


- கொங்குவேள் 

கருத்துகள் இல்லை: