17 ஆக., 2012

கம்பன் கவிதை-2:


முல்லையைக் குறிஞ்சியாக்கி  மருதத்தை முல்லையாக்கிப்
புல்லியநெய்தல்  தன்னைப்  பொருவருமருதம் ஆக்கி
எல்லையில்  பொருள்கள்எல்லாம்  இடைதடுமாறு  நீரால்
செல்லுறுகதியிற்  செல்லும்  வினையெனச்  சென்றதன்றே.


உயிர்களை வினை பலவகைப்  பிறப்புகளாக மாற்றுவது போலச்,  சரயு நதி தன் ஓட்டத்தால் முல்லையைக் குறிஞ்சியாகவும்,  மருதத்தை முல்லையாகவும்,  நெய்தலை மருதமாகவும்  மாற்றி, அந்த நிலங்களின் பொருட்களை எல்லாம் இடம் மாறச்செய்தது.

கருத்துகள் இல்லை: