22 ஏப்., 2021

குட்டிக்கதை

⚡ ஒரு அரசர் அவர் பேரும், புகழும், படையும், பலமும் கொண்டு விளங்கினார்

ஆனாலும் ஏதோ ஒன்று அவரை நிறை மனமாக இருக்கு முடியாமல் செய்தது

அதற்கு அவருடைய அமைச்சர் புத்தரை கண்டால் நிறைவு கிடைக்கலாம் என்று  ஒரு யோசனை சொன்னார்

அரசரும் அதை ஏற்றுகொண்டார்

ஒரு முறை பக்கத்துக்கு கிராமத்தில் புத்தர் இருப்பதாக செய்தி கிட்டியது

உடனே அரசர் தான் மட்டும் செல்லவதாக கூறி கிராமத்துக்கு சென்றார்

போகும் வழியில் ஒரு ஆற்றை கடக்க நேரிட்டது

அது மிகவும் அகலமாகவும், ஆர்பரிப்போடும் கூடிய அலைகளோடு காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது

அதை கண்டு அஞ்சிய அரசர் படகோடியிடம் தன்னை அக்கரையில் கொண்டு விடுமாறு கேட்டார் 

அதற்கு படகோட்டி....

யாரைப் பார்க்க போவதாக கேட்டார் 

அரசர் புத்தரை பார்க்க வேண்டும் என்றார்

இதை கேட்ட படகோட்டி 

நான் மட்டும் இல்லை 

யாருமே உதவிக்கு வரமாட்டார்கள் என்று கூறினார்

ஏன் என்று அரசர் கேட்டதற்கு 

படகோட்டி இதுவரை அக்கரைக்கு புத்தரை பார்க்க போனவர்கள் 

யாருமே திரும்பி வரவில்லை. என்று கூறினார்

உடனே அரசர் மிகுந்த ஆர்வம் கொண்டு நீந்தி கரையை கடக்க முயற்சித்தார்

பாதி ஆற்றை கடக்கும் தருவாயில் 

நீந்த முடியாமால் மிகவும் தத்தளிதுக் கொண்டிருந்தார் 

அவர் அங்கேயே புத்தரை நினைத்தார்

தூரத்தில் ஆற்று வெள்ளத்தில் ஒரு பிணம் தன்னை நோக்கி வருவதை கண்டார்

அருகில் வந்த உடன் தான் தெரிந்தது வந்த பிணத்துக்கும் தன் முகம் இருப்பதை கண்டு மிகவும் பயந்து போனார்

அப்போது அந்த பிணத்துடன் 

அரசரின் பேரும், புகழும், செல்வமும், படையும், பலமும், அதிகாரமும், அரசாட்சி திறமும்,  வல்லமையும், சேர்ந்து போவதை பார்த்தார்

அவைகள் யாவும் அழுகிய நிலையில் தன மேல் மோதி மிகவும் நாற்றத்துடன் சென்றது

அதை கண்ட அரசர் அங்கிருந்து கரைக்கு வந்தார்

வந்தும் தன் ஆணவம், மற்றும் அகம்பாவம்

தான் ஒரு அரசன் என்ற நிலை மாறி 

தான் ஒரு ஞானியாக திகழ்ந்தார்

புத்தரை காண சென்ற அரசர்  

புத்தரை காணும் முன்பே ஞானம் பெற்றார் 

எதுவெல்லாம் என்னுடையது என்று எண்ணி 

இத்தனை நாள் அரசர் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தாரோ

அதுவெல்லாம் என்றோ ஒரு நாள் அழுகி நாற்றமெடுத்து நம்மை விட்டு போகும்

அதுவாக போகும் முன் 

நாமே கலையே வேண்டும் என்ற ஞானம் பெற்று 

தன்முனைப்பு நீங்கி ஞானியாக மனநிறைவுடன் வாழ்ந்தார் 

ஆக 

ஒருவன் ஞானம் அடைய வேண்டும் என்றால் 

ஞானியைக் கண்டு தான் ஞானம் பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை

தன்னையும், தன் உடமைகளையும் 

மாயை என்று புரிந்து கொண்டு 

இழக்க தயாராகும் போதே 

அவன் ஞான நிலைக்கு தயாராகிவிட்டான் என்பதே உண்மை 

மாயையும், பற்றும், ஞானமும் அனைத்தும் நம்மிடத்தே தான் இருக்கிறது

"விட வேண்டியதை விட்டுவிட்டால்  

பெற வேண்டியது அங்கேயே இருப்பது தெரிய வரும்"  
~ வேதாத்திரி மகரிஷி ~

"சுயமாய் சிந்தித்தே தெளிவோம்"

வாழ்க வளமுடன் ⚡

கருத்துகள் இல்லை: