25 ஜன., 2024

நூல்நயம்

*மதிப்புரை*
"அருஞ்சுரம்" என்ற இந்த நாவலில், இதை எழுதிய அதியமான், பிழைப்புக்காக சவூதி அரேபியா சென்று அங்கு தான் பெற்ற அனுபவங்களை, துயரங்களை, வலிகளை வார்த்தைகளாக்கித் தந்திருக்கிறார். எவ்விதப் பாசாங்கும் இல்லாத எழுத்து. நாவலின் வடிவம், உத்தி குறித்து எல்லாம் கவலைப்படாமல் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை எழுதிச் செல்கிறார். இவ்வாறு எழுதுவதன் மூலம் அதியமான் நம்மை நெக்குருக வைக்கிறார். வாழ்வின் குரூரத்தைக் கண்டு ஏதும் செய்ய முடியாத ஒரு சாமானிய மனிதனின் கையறு நிலையை கண்முன்னே காட்டுகிறார். தமிழுக்கு கிடைத்துள்ள அசலான படைப்பாக நான் அருஞ்சுரத்தை மதிக்கிறேன். வெளிநாடுகளுக்கு பிழைப்பின் நிமித்தமாக செல்ல நேரும் தொழிலாளர்கள் கையில் இருக்க வேண்டிய எச்சரிக்கை மணியாக "அருஞ்சுரம்" இடம்பெற வேண்டும். 
-தஞ்சாவூர்க்கவிராயர்

நன்றி  :

தஞ்சாவூர்க்கவிராயர்
மற்றும்
முகநூல் 

கருத்துகள் இல்லை: