5 ஜூலை, 2008

எனக்குப் பிடித்த கவிதை-25 : தெரு மணம் - பூர்ணா

எனக்குப் பிடித்த கவிதை

தெரு மணம் - பூர்ணா

பலகடை ஏறி இறங்கி
எடுக்கப்பட்டது
பட்டுப்புடவை.

உரசிப் பார்த்து
வாங்கப்பட்டது
நகை.

தட்டிப் பார்த்து
எடுக்கப்பட்டது
பாத்திரம்.

நசுக்கிப் பார்த்து
வாங்கப் பட்டது
காய்கறி.

மாப்பிள்ளையை மட்டும்
கண்ணை மூடிக்கொண்டு
பார்த்து விட்டார்கள்.

நன்றி : தாமரை, மே-ஜூன் 2008

கருத்துகள் இல்லை: