7 ஆக., 2008

எனக்குப் பிடித்த கவிதை-29: கண்ணீர் வங்கி!

எனக்குப் பிடித்த கவிதை-29: கண்ணீர் வங்கி!

காடு விளைந்து வாழ்வு சிறக்கும்
என நம்பினேன் மண்ணை!
புன்னகை மட்டுமல்ல,
பொன்னகையும் போனது - அடகுக்கடையில்.
நெல்மணியுடன் பொன்மணியும்
வந்துசேரும் என பூரித்த வேளையில்,
புயலுடன் வந்த மழையில் - மூழ்கியது
பயிர்கள் மட்டுமா? - எங்கள்
வாழ்க்கையும் அன்றோ?
கந்துவட்டியின் பிடியில் எங்களிடம்
எஞ்சியிருப்பது கண்ணீர் மட்டுமே.
கண்ணீருக்கு உண்டா வங்கி?
அடமானம் வைப்பதற்குத்தான்.

- செல்வி நளினி
நன்றி: தினமலர், மதுரை, ஜூலை 27, 2008

கருத்துகள் இல்லை: